இடுகைகள்

ஜிடிபி பற்றி தெளிவாக புரிந்துகொள்வோம் வாங்க! - எது உண்மை, எது பொய்?

படம்
  மொத்த உள்நாட்டு உற்பத்தி (GDP) என்றால் என்ன? ஒரு நாட்டின் எல்லைக்குள், குறிப்பிட்ட கால வரம்பிற்குள் உற்பத்தி செய்யப்படும் பொருள், வழங்கப்படும் சேவைகளின் பண மதிப்பு அல்லது சந்தை மதிப்பு, மொத்த உள்நாட்டு உற்பத்தி எனலாம். மொத்த உள்நாட்டு உற்பத்தி என்பது, நாட்டின் பொருளாதார நலத்தைப் புரிந்துகொள்ள உதவும் மதிப்பெண் அட்டை போல…. பொதுவாக மொத்த உள்நாட்டு உற்பத்தியை ஆண்டுதோறும் அல்லது காலாண்டு அடிப்படையிலும் கணக்கிடுகிறார்கள். எடுத்துக்காட்டாக அமெரிக்காவில், காலாண்டு அடிப்படையில் ஆண்டு முழுக்கவுமான மொத்த உள்நாட்டு உற்பத்தியை கணக்கிடுகிறார்கள். இப்படி பெறும் தகவல்களில் பணவீக்கத்திற்கு ஏற்ப பொருட்களின் விலைகளில் சற்று மாறுதல்கள் செய்யப்படுகின்றன. மொத்த உள்நாட்டு உற்பத்தியைப் புரிந்துகொள்வது எப்படி? அரசு செய்யும் செலவுகள், முதலீடுகள், வெளிநாட்டு நிறுவனங்களின் முதலீடுகள், செலுத்தப்பட்டுவிட்ட கட்டுமானச் செலவுகள், தனியார் நிறுவனங்களின் சரக்குகள், மக்களின் நுகர்வு, ஏற்றுமதி பொருட்களின் மதிப்பு ஆகியவை நாட்டின் ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தியில் சேர்க்கப்படும். இறக்குமதி  செய்த பொருட்களின் மதிப்பு கழிக்க

பயம் ஏற்படுத்தும் மோசமான விளைவுகள் - ஜே.கிருஷ்ணமூர்த்தி

படம்
  ஜே கிருஷ்ணமூர்த்தி தி ரைட் கைண்ட் ஆஃப் எஜூகேஷன் நூலில் இருந்து… தமிழாக்கம் வெற்றியும் பயமும் பள்ளி, கல்லூரியை நிறைவு செய்பவர்கள் அதுவரை படித்துக்கொண்டிருந்த நூல்களை தூக்கிப் போட்டுவிடுவார்கள். இனிமேல் எதையும் படிக்கவேண்டாம் அல்லது கற்க வேண்டாம் என மனதில் நினைக்கிறார்கள். மீதியுள்ளவர்கள் பிறர் என்ன சொல்கிறார்கள் என்பதை அறிய புத்தகங்களைப் படித்து அறிவுக்கே அடிமையாகிறார்கள். எவ்வளவு நாட்கள் ஒருவர் அறிவைத் தேடுகிறாரோ அந்தளவு அவர் வெற்றியை நோக்கி செல்கிறார். போட்டியிடும் மனப்பான்மை உருவாக, வேகமாக   முன்னே செல்கிறார். இதனால் மக்களுக்கு இடையில் உணவைப் பெறுவதற்கான கடும் போராட்டம் தொடங்குகிறது. வெற்றி பெறுவதுதான் நமது இலக்கு என நினைக்கும் வரை நம் மனதிலுள்ள பயத்தை நம்மால் அழிக்க முடியாது. வெற்றி பெறுவதற்கான வேட்கை ஏற்படுவதே தோல்வி பயத்தால்தான். எனவே, இளைஞர்கள் வெற்றி பெறுவதைக் குறிக்கோளாக கொள்ளக் கூடாது. வெற்றி பெறும் நோக்கம் என்பது பல்வேறு வடிவங்களைக் கொண்டது. அது டென்னிஸ் விளையாடும் மைதானம் தொடங்கி தொழில்துறை, அரசியல் என மாறிக்கொண்டே இருக்கும். நாம் அனைவரும் வரிசையில் முதலிடத்தை பி

சுலைமான், உதயபுரம் மாளிகையின் தம்புராட்டியை காதலித்தால்... - உதயபுரம் சுல்தான் - திலீப், ப்ரீத்தா

படம்
  உதயபுரம் சுல்தான் - திலீப், ப்ரீத்தா உதயபுரம் சுல்தான் -மலையாளம் உதயபுரம் சுல்தான் மலையாளம் திலீப், ப்ரீத்தா, ஹரிஶ்ரீ அசோகன், ஜெகதி ஶ்ரீகுமார், அம்பிகா அவிட்டம் நாராயண வர்மா உதயபுரம் மாளிகையைச் சேர்ந்தவர். அரச வம்சம். இவரது குடும்பத்தில் இருந்து மாளவிகா என்ற பெண், அப்துல் ரஹ்மான் என்ற முஸ்லீம் காதலனை நம்பி வீட்டை விட்டு சென்றுவிடுகிறார்.   இந்த திருமணத்தால் மாளவிகாவின் அண்ணன்மார்கள் அப்துல் ரஹ்மானின் கால்களை அடித்து சிதைக்கிறார்கள். இதனால் உருவான பகை, தீர்வதாக இல்லை. மாளவிகாவின் சொத்து தொடர்பாக, வழக்கு போடப்பட்டு   நீதிமன்ற படியேறுகிறது. அதில் மருமகன் ரஹ்மான் வெல்கிறார். மாமனார் வர்மா தரப்பு தோற்கிறது. அதேசமயம், ரஹ்மான் - மாளவிகாவின் மகன் சுலைமான், வாய்ப்பாட்டு கலைஞன். சந்தர்ப்ப சூழல் காரணமாக தனது தாத்தாவின் வீட்டுக்கு உதயபுரம் மாளிகைக்கு வருகிறான். அங்கு, ஒரே பெண் வாரிசான கோபிகாவுடன் காதலாகிறது. இதனால் ஏற்படும் விளைவுகள் என்ன என்பதே கதை. திலீப், ஜெகதி ஶ்ரீகுமார், இன்னொசன்ட் இருக்கும்போது காமெடிக்கு என்ன குறை…. கொச்சி ஹனீபாவும் முரட்டுத்தனமாக புத்திசாலியாக நகைச்சுவையை சலீம்

ஆவணப்படங்களை தரமாக உருவாக்கி விருதுகளைப் பெறும் இந்தியர்கள்!

படம்
  ஆவணப்பட இயக்குநர் ஆனந்த் பட்வர்தன் உலக அளவில் கவனம் பெற்ற இந்திய ஆவணப்படங்கள் தி சினிமா டிராவலர்ஸ் ஷிர்லி ஆப்ரஹாம் – அமித் மாதேஷியா சிறப்பு தங்க கண் விருது, கேன்ஸ் 2016 விவேக் – ஆனந்த் பட்வர்த்தன் சிறந்த ஆவணப்பட விருது- 2018ஆம் ஆண்டு   ஐடிஎஃப்ஏ, நெதர்லாந்து எ நைட் ஆஃப் நோயிங் நத்திங் பாயல் கபாடியா சிறந்த ஆவணப்படம், தங்க கண் விருது கேன்ஸ் 2021 ஆம்ப்ளிஃபை   வாய்சஸ் விருது, 2021 ரைட்டிங் வித் ஃபயர் ரின்டு தாமஸ் – சுஸ்மித் கோஷ் உலக சினிமா ஆவணப்படம் – பார்வையாளர்கள் விருது, தாக்கம் மற்றும் மாற்றத்திற்கான விருது, சிறப்பு ஜூரி விருது, சண்டேன்ஸ் விழா 2021, பார்வையாளர்கள் விருது, ஐடிஎஃப்ஏ தி நெதர்லாந்து 2021, சிறந்த ஆஸ்கர் விருதுக்கான பரிந்துரை செய்யப்பட்ட ஆவணப்படம் 2022 வொய்ல் வீ வாட்ச்டு வினய் சுக்லா ஆம்ப்ளிஃபை வாய்சஸ் விருது டிஐஎஃப்எஃப் 2022 ஆல் தட் பிரீத்ஸ் சௌனாக் சென் உலக சினிமா ஆவணப்படம் – கிராண்ட் ஜூரி விருது, சண்டேன்ஸ் விழா 2022, சிறந்த ஆவணப்படம், தங்க கண் விருது, கேன்ஸ் 2022, சிறந்த ஆவணப்பட விருதுக்கான பரிந்துரை, ஆஸ்கர் விருது, 2023 தி எலிபன

பேராசை பூதம் 2 - மின்னூல் அட்டைப்படம் வெளியீடு

படம்
  முதல் பகுதி பேராசை பூதம் 1 என வெளியாகிவிட்ட நிலையில், இந்த நூல் இரண்டாவது பகுதியாக வெளியாகவிருக்கிறது.  இந்த நூலில் பங்குசந்தை மோசடி, நிலக்கரி ஏற்றுமதி இறக்குமதியில் வரி ஏய்ப்பு, மக்களின் மின்கட்டணத்தை அரசு விதிகளைப் பயன்படுத்தியே நூதனமாக உயர்த்தியது, பத்திரிகையாளர்களை மிரட்டி அதட்டி வழக்கு போட்டு ஒடுக்குவது என நிறைய விஷயங்கள் பேசப்படுகின்றன.

காதலுக்காக, காதலிக்காக எதையும் செய்வான் சார் இந்த காளி! ராராஜூ - கோபிசந்த், அவந்திகா, மீரா ஜாஸ்மின்

படம்
  ரா ராஜூ (2006) தெலுங்கு கோபிசந்த், மீராஜாஸ்மின், அவந்திகா, வேணு மாதவ், எம்எஸ் நாராயணா அதிகம் படிக்காத சவுண்ட் சர்வீஸ் கடை வைத்துள்ளவர், தான் விரும்பும் பெண்ணின் கல்விக்கு உதவுகிறார். பல்வேறு தடைகளைக் கடந்து அந்த பெண்ணை குடிமைப்பணி அதிகாரியாக்குகிறார். அவர் யார், எதற்கு இப்படி செய்கிறார் என்பதே படத்தின் கதை. வணிகரீதியான பல்வேறு அம்சங்களை படம் கொண்டிருக்கிறது. குறிப்பாக பெண் போலீசாக வரும் அவந்திகா, அவருக்கான கனவு பாடல்காட்சிகள். அதெல்லாம் விடுங்கள். படத்தில் வலிமையான பாத்திரங்கள். கோபிசந்தின் காளி, மீரா பாத்திரங்கள்தான். கட்டிலில் படுத்து தூங்கும் காளியின் அறிமுக காட்சியே சுவாரசியமாக இருக்கிறது. பொதுவாக இப்படி காட்சி வைப்பவர்கள் நாயகனை அடிதடி ஆள் என மிரட்டலாக யோசிப்பார்கள். ஆனால் இந்த படத்தில் அதை காமெடியாக மாற்றியிருக்கிறார்கள். நல்ல யோசனை சிறப்பாக வேலை செய்திருக்கிறது. ஒரே நேரத்தில் பயத்தையும் அன்பையும் ஊராருக்கு கொடுப்பவன். எதிர்மறையான விவரிப்புகளை காளி பாத்திரத்திறகு கொடுக்கும் இயக்குநர், பின்னர்தான் அந்த பாத்திரத்தின் நல்ல விஷயங்களைக் காட்டுகிறார். முன்கோபம் இருந்தாலும

மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் பணியாற்றும் மனிதர்களின் ஏற்றமும், வீழ்ச்சியும்! மருந்து - புனத்தில் குஞ்ஞப்துல்லா

படம்
  எழுத்தாளர் புனத்தில் குஞ்ஞப்துல்லா மருந்து - நாவல் மருந்து புனத்தில் குஞ்ஞப்துல்லா தமிழில் சு.ராமன் வாரணாசியில் உள்ள மருத்துவமனைக் கல்லூரியுடன் இணைந்த மருத்துவமனை. அங்கு பணியாற்றும் பல்வேறு மனிதர்களின் கதை. கதையின் தொடக்கத்தில் தேவதாஸ் என்ற இளைஞர், மருத்துவக் கல்லூரியில் சேர்வதற்காக வருகிறார். இப்படி தொடங்கும் கதை பிறகு, லெஷ்மி, டி குமார், ஹஸன், க்வாஜா, தனுஜா, மேட்ரன் ஹெலன், மேரி, குஞ்சம்மா, பியாரோலால் என நிறைய பாத்திரங்களைக் கொண்டதாக மாறுகிறது. இதில், குறிப்பிட்ட பாத்திரங்களை மையப்படுத்தி நகர்கிறது என எதையும் சொல்ல முடியாது. ஆனாலும் மேரிக்கான இடமும், அவளுக்கான விவரணைகளும் நன்றாக உள்ளன. பிறருக்கான வலி, வேதனைகளை அறிந்து மருந்து கொடுத்து அவர்கள் வாழ்வதற்கு தைரியம் தருபவர்கள் மருத்துவர்கள், செவிலியர்கள். அதேசமயம் அவர்களது தனிப்பட்ட தொழில் வாழ்க்கையிலும் பல்வேறு பிரச்னைகள், சீர்கேடுகள், மன உளைச்சல்கள் எழுகின்றன. அதை அவர்கள் எப்படி எதிர்கொள்கிறார்கள் என்பதை புனத்தில் தனது வசீகரமான மொழியில் கூறியுள்ளார். தேவதாஸ் –லெஷ்மி கதை, எப்போதும் போலான காதல் கதையாக மாறுவதற்கான அனைத்து வாய்ப்