இடுகைகள்

தோல் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

குளிரான குளத்தில் ஏரியில் குளித்தால் ஆபத்தா?

படம்
                ஜில்லென்ற குளத்தில் குளிக்கலாமா ? இன்று உலகம் முழுக்க உள்ள வினோதமான துணிச்சல் கொண்ட மனிர்கள் என்ன செய்கிறார்கள் தெரியுமா ? மிகவும் குளிர்ச்சி கொண்ட குளத்தில் ஏரியில் குதித்து குளித்து மகிழ்ச்சியுடன் ஏறி வருகிறார்கள் . எதற்கு இப்படி செய்கிறார்கள் என்றால் அப்படி செய்யும்போது எனது மூளை அமைதியாக உள்ளது . நான் எனது உடல் மீது கவனம் செலுத்த முடிகிறது என்று கூறுகிறார்கள் . புதிதாக விளக்கம் இருக்கிறதல்லவா ? இங்கிலாந்தைச் சேர்ந்த பெண்டில்டன் இந்த வினோதமான பழக்கத்தை செய்பவர்தான் . இவர் , அன்டார்டிக் பகுதியில் கடந்த ஆண்டு ஒரு கி . மீ . தூரம் ரத்தத்தை உறைய வைக்கும் நீரில் நீந்தியுள்ளார் . இதற்கு ப்ரீசரில் தினசரி உட்கார்ந்து பயிற்சி வேறு எடுத்துள்ளார் . இன்று கொரோனா பிரச்னை காரணமாக உலகமெங்கும் உள்ள பல்வேறு ஏரி குளங்களில் செல்லுவதற்கு மக்களுக்கு அனுமதி கிடையாது . சரியான டைம் கிடைச்சிருச்சேய் என பல லட்சம் மக்கள் ஜில் குளங்களுக்கு குளிக்க சென்று வருகிறார் . அதிலும் இந்த எண்ணிக்கை இங்கிலாந்தில் அதிகம் . இதற்கென வின்டர் ஸ்விம்மிங் அசோசியேஷனும் கூட உண்டு . சீனா

ஆர்க்டிக் பகுதியில் வாழும் பனிக்கரடி உறையாமல் இருப்பது எப்படி?

படம்
                பனிக்கரடிகளின் சிறப்பம்சங்கள் பனிக்கரடிகளின் உடலில் 4 அங்குல அளவிற்கு கொழுப்பு நிறைந்துள்ளதால் , அதன் உடல் எப்போதும் கதகதப்பாக இருக்கிறது . அடுத்து , அதன் உடலிலுள்ள இரண்டு அடுக்கு முடிக்கற்றைகள் . சிறிய முடிக்கற்றைகள் காற்றை உள்ளே அனுமதித்து உடல் வெப்பத்தை பராமரிக்க உதவுகிறது . நீண்ட முடிக்கற்றை , நீரில் வேட்டையாட கரடிகள் செல்லும்போது உடலுக்குள் நீர் செல்லாமல் வாட்டர் ப்ரூப்பாக உதவுகிறது . பனிக்கரடிகள் இடைவேளை இன்றி , நூறு கி . மீ . தூரம் துணிச்சலாக நீந்தும் . இதன் கண்களிலுள்ள கூடுதலான இமைகள் கடலில் இரையை வேட்டையாடும்போது தெளிவாக பார்க்க உதவுகிறது . எப்படியென்றால் , பனிப்புயல் வீசும்போது கூட தனது இரையைத் தெளிவாக பார்க்கும் திறன்கொண்டது . கரடியின் மூக்கு பார்க்க சாதாரணமாக இருந்தாலும் மோப்பம் பிடிப்பதில் சிறந்தவை . 30 கி . மீ தொலைவுக்குள் சீல்கள் இருந்தால் உடனே அதனை அறிந்துவிடும் . இதன் முடியில் மற்றொரு ஸ்பெஷல் உள்ளது . அதுதான் அதன் ஹாலோ தன்மை . இதனால் கிடைக்கும் சூரியனின் வெப்பத்தை எளிதாக உடலுக்கு கடத்திக் கொள்ளமுடியும் . இதன் பா

விமானத்தில் ஜன்னல்கள் வட்டமாக இருப்பது ஏன்?

படம்
            சாகச விளையாட்டு பற்றி சொல்லுங்கள் ? விங் சூட் என்ற ஒன்றைக் கேள்விப்பட்டிருக்கிறீர்களா ? இந்த வகை உடைகள் 1930 இல் உருவாக்கப்படத் தொடங்கிவிட்டன . ஹெல்மெட் , பறவைகளின் இறக்கை போன்ற அமைப்புகளுடன் ஹெலிகாப்டரிலிருந்து எட்டி குதித்தால் போதும் . இதில் ஒருவரின் வேகம் மணிக்கு 165 கி . மீ . ஆகும் . உடலை சரியானபடி அமைத்துக்கொண்டால் மணிக்கு 250 கி . மீ வேகத்தில் பறந்து நிலத்தை அடையலாம் . இன்றைய விங் சூட்டை பின்லாந்து நா்ட்டைச் சேர்ந்த ஜாரி குவாஸ்மா என்பவர்தான் உருவாக்கினார் . பாய்ண்ட்பிரேக் என்ற படத்தில் விங் சூட்டில் குழுவாக பறக்கும் காட்சி வரும் . அதைப் பார்த்தீர்கள் என்றால் அவர்கள் உடலை எப்படி கட்டுப்படுத்தி வேகத்தை குறைக்கவும் அதிகரிக்கவும் செய்கிறார்கள் என்பதை அறியலாம் . பறவைகள் காற்றில் பறப்பதற்கும் , அந்த திறமை இல்லாத மனிதர்கள் காற்றில் பறப்பதற்கும் நிறைய வேறுபாடுகள் உண்டு . விங் சூட்டின் வடிவத்தை ஏரோபில் என்று கூறு்வார்கள் . ஒலி வெவ்வேறு ஊடகங்களில் செல்லும்போது வேகம் மாறுபடுவது ஏன் ? ஊடகங்களில் அடர்த்தி மாறுபடும்போது ஒலியின் தன்மை மாறுபடுகிறது . ஒ

அலர்ஜியை ஏற்படுத்தும் சோடியம் லாரல் சல்பேட்! - அறிந்துகொள்ளுங்கள்!

படம்
pixabay சோடியம் லாரல் சல்பேட்டின் ஆபத்து என்ன? நாம் தினசரி பயன்படுத்தும் பற்பசை, முகத்திற்கு பயன்படுத்தும் க்ரீம்கள் என பெரும்பாலான பொருட்களில் இந்த வேதிப்பொருள் உள்ளது. எதற்கு? முகத்தை ஃபேஸ்வாஷ் போட்டு கழுவியதும் எண்ணெய் நீங்கியது போன்ற உணர்வு ஏற்படுகிறது அல்லவா அதற்குத்தான். முக்கியமாக, அழகு சாதனப் பொருட்களில் உள்ள எண்ணெய் பொருட்களையும் பிற பொருட்களையும் ஒன்றாக சேர்க்க சோடியம் லாரல் சல்பேட் அவசியம். பொதுவாக தோல் நமது உடலில் பல்வேறு நோய்களைத் தடுக்கும் விதமாக உள்ளது. இதனை பாதிப்பதில் முக்கிய வேதிப்பொருளாக சோடியம் லாரல் சல்பேட் உள்ளது. தோலின் அடுக்குகளை பாதித்து அவற்றின் நோய் தடுக்கும் திறனை அகற்றுகிறது. பின் அதில் ஓவ்வாமையை ஏற்படுத்துகிறது.  ஏன் இதனைப் பயன்படுத்துகிறார்கள் என்று உங்களுக்கு கேள்வி எழும். காரணம் இதன் விலை மிகவும் குறைவு. மேலும் இதன் அளவு 0.5 முதல் 2.5 கிராம் வரையில்தான் இப்பொருட்களில் இருக்கிறது. இதனை நீங்கள் உடலில் அதிகநேரம் வைத்திருப்பதில்லை என்பதால் இதன் பாதிப்பும் குறைவு. எனவே பல்வேறு நாடுகளில் இதன் அளவைக் குறைத்து பயன்படுத்தி வருகின்றனர். எக்

ஆரோக்கியம் பேணுவதற்கான சில டிப்ஸ்கள்!

படம்
முன்னே நீங்கள் பார்த்த, படித்த கட்டுரையின் தொடர்ச்சி இது. வாசியுங்கள். நன்றி. தோல் நோய் பாதிப்புகளை உங்களுக்கு மட்டுமல்ல, ஊருக்கே சொல்வது தோல்தான். குடல் பாதிப்பு முதல் புற்றுநோய் வரையில் தோலில் பாதிப்புகளை எளிதாக பார்க்க முடியும். எனவே வெயில் பாதிப்பைக் குறைக்கும் சன்ஸ்க்ரீன் க்ரீம்களை உடலில் பூசலாம். மிதவெப்பநாடான இந்தியாவில் லேக்டோ கேலமைன் அல்லது வாசலின் போன்ற பெட்ரோலியம் ஜெல்லியை பூசுங்கள். இதெல்லாம் எண்பது, தொண்ணூறு ரூபாய் போட்டு வாங்கும் முன்பு வீடுகளில் பாட்டிகளைப் பாருங்கள். தேங்காய் எண்ணெயை தலைக்குத் தேய்த்துவிட்டு மிஞ்சியதை கைக்கும் கால்களுக்கும் பூசுவார்கள். அந்த பாரம்பரியம்தான் இப்போது இன்டென்சிவ் கேர் வாசலினுக்கு மாறியுள்ளது. க்ரீம்களிலுள்ள வேதிப்பொருட்கள் தோலைப் பாதித்தால் நீங்கள் சாதாரண தேங்காய் எண்ணெய்க்கு மாறுவதே நல்லது. பருப்புகளைத் தின்னுங்கள் கொழுப்பு என்றால் அதைப்பற்றி பெண்களிடம்தானே பேசவேண்டும். அதாவது தோலிலுள்ள கொழுப்பு. பருப்பு வகைகளை எலிபோல கொறித்து தின்பது இருபாலினத்தவருக்குமே நல்லது. இதில் புரதம், விட்டமின்கள் ஆகிய சத்துகள் உண்டு. இப்ப

யானையின் உடம்பில் சுருக்கங்கள் ஏன்?

படம்
ஏன்? எதற்கு?எப்படி? மிஸ்டர் ரோனி யானையின் உடம்பில் சுருக்கங்கள் ஏன்? ஆப்பிரிக்க யானை ஒன்றை ஸ்விட்சர்லாந்து ஆராய்ச்சியாளர்கள் ஆராய்ந்தனர். மைக்ரோஸ்கோப்பில் பார்த்தபோது, அதன் உடலில் சிறுசிறு பள்ளங்களாக தோல் அமைந்துள்ளதை வியந்தனர். இத்தன்மை உடலில் இருந்து நீர் ஆவியாவதைத் தடுக்கிறது. ஏறத்தாழ பிற யானைகளோடு ஒப்பிட்டால் பத்து சதவீதம் நீர் குறைவாக ஆவியாவதால் உடலின் வெப்பநிலை பிரச்னை இன்றி இருக்கும்.  சேறு, மழை என வாய்ப்பு கிடைக்கும்போதெல்லாம் யானை தன் கெட்டியான தோலின் மூலம் நீரைச்சேமித்து உடலின் வெப்பநிலையை அதிகரிக்காமல் பார்த்துக்கொள்கிறது.                  ஆசிய யானைகள் சற்று மென்மையான தோலினைக் கொண்டுள்ளதால் அவை ஈரப்பதமான சூழலிலேயே இருப்பதைக் கவனித்திருப்பீர்கள்.  நன்றி: சயின்ஸ் ஃபோகஸ்(படம்,தகவல்)- சார்லட் கார்னி

உடல் தன்னை புதுப்பித்துக்கொள்கிறதா?

படம்
உடல் ஏழு ஆண்டுகளுக்கு ஒருமுறை தன்னை புதுப்பித்துக்கொள்கிறதா? ஏழு ஆண்டுகளுக்கு பிறகு புதிய மனிதனாக புதிய செல், புதிய டிஎன்ஏ என பாம்பு போல சட்டை உரித்து வந்தால் நன்றாகத்தான் இருக்கும். ஆனால் இப்படிக்கூறுவது உண்மையாக என்று பார்ப்போம். நம் உடலிலுள்ள செல்கள் மிடோசிஸ் என்ற பெயரில் புதிய செல்களை உருவாக்கிக் கொள்கிறது. தானாக இச்செல்கள் தம்மை பிரதியெடுத்து புதிய செல்களை உருவாக்கிக் கொள்கின்றன. இரண்டாவது, ஸ்டெம் செல்களிலிருந்து புதிய செல்களை உருவாக்குவது.  இதில் ரத்த செல்கள் மற்றும் நரம்பு செல்கள் மட்டும் தன்னைத் தானே உருவாக்கிக் கொள்ள முடியாதவை. செல்களின் வாழ்நாளை எளிதாக கணிக்க முடியாது. நம் வயிற்றிலுள்ள செல்கள் இரு நாட்களுக்கு ஒருமுறை தன்னைப் புதுப்பித்துக் கொள்கிறது. உடலின் தோல் செல்கள் இரண்டு அல்லது மூன்று வாரங்களுக்கு ஒருமுறை இறந்து பிறக்கின்றன. ரத்த செல்கள் நான்கு மாதங்களுக்கு ஒருமுறை தன்னைப் புதுப்பித்துக் கொள்கிறது. வெள்ளை அணுக்கள் வாரத்திற்கு ஒருமுறை தன்னைப் புதுப்பித்து புதிதாக்கிக் கொள்கிறது. நம் உடலிலுள்ள எலும்புகள் பத்து ஆண்டுகளுக்கு ஒருமுறை புதிதாகிறது. நன