சீரியல்கொலைகாரர்கள் புத்திசாலிகளா இல்லையா?
சைக்கோ டைரி சீரியல் கொலைகாரர்கள் பிறக்கிறார்களா அல்லது உருவாக்கப்படுகிறார்களா ? இப்படி ஒரு கேள்வியை கேட்டு தொடங்கிய விவாதத்திற்கு இன்றுவரை முடிவே இல்லாமல் சென்று கொண்டிருக்கிறது . இயற்கையா அல்லது வளர்ப்பு முறையா என்று கூட கேள்வியை நாம் அமைத்துக்கொள்ளலாம் . கொடூரமான கொலைகள் வல்லுறவு சித்திரவதை என ஒருவன் செய்யவேண்டுமானால் உறுதியாக அவன் மூளையில் ஏதோ பாதிப்பு ஏற்பட்டிருக்கவேண்டும் . அதுவும் அவனது மரபணுரீதியான சிக்கல்தான் இப்படி ஒரு வன்முறையை உருவாக்குகிறது என பேசுகிறார்கள் இதற்கு மறுதரப்பு , அப்படி கூற முடியாது . ஒருவனது பிறப்பிலிருந்து அவன் பார்க்கும் மோசமான விஷயங்கள்தான் அவனை இப்படி தவறான வழிக்கு மடைமாற்றுகிறது . இன்னொரு குழு , மேற்சொன்ன இரண்டின் கலப்புதான் கொலைகார ர்களை உருவாக்குகிறது என நம்புகிறார்கள் . அறிவியல் முறைப்படி யாரும் பிறக்கும்போது தீயசக்தி கொண்டு மரபணுக்களோடு பிறப்பதில்லை . சூழலையும் இதற்கு குறைசொல்லமுடியாது . ஆனால் வன்முறை , வறுமை , சித்திர்வதை நிறைந்த சூழல்கள் ஒருவரை கடுமையாக மனதளவில் பாதிக்கும் என்பது உண்மை . இவை இரண்டின் கலப்புதான் கொலைகாரர்கள்