இடுகைகள்

மரபணு லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

சீரியல்கொலைகாரர்கள் புத்திசாலிகளா இல்லையா?

படம்
            சைக்கோ டைரி சீரியல் கொலைகாரர்கள் பிறக்கிறார்களா அல்லது உருவாக்கப்படுகிறார்களா ? இப்படி ஒரு கேள்வியை கேட்டு தொடங்கிய விவாதத்திற்கு இன்றுவரை முடிவே இல்லாமல் சென்று கொண்டிருக்கிறது . இயற்கையா அல்லது வளர்ப்பு முறையா என்று கூட கேள்வியை நாம் அமைத்துக்கொள்ளலாம் . கொடூரமான கொலைகள் வல்லுறவு சித்திரவதை என ஒருவன் செய்யவேண்டுமானால் உறுதியாக அவன் மூளையில் ஏதோ பாதிப்பு ஏற்பட்டிருக்கவேண்டும் . அதுவும் அவனது மரபணுரீதியான சிக்கல்தான் இப்படி ஒரு வன்முறையை உருவாக்குகிறது என பேசுகிறார்கள் இதற்கு மறுதரப்பு , அப்படி கூற முடியாது . ஒருவனது பிறப்பிலிருந்து அவன் பார்க்கும் மோசமான விஷயங்கள்தான் அவனை இப்படி தவறான வழிக்கு மடைமாற்றுகிறது . இன்னொரு குழு , மேற்சொன்ன இரண்டின் கலப்புதான் கொலைகார ர்களை உருவாக்குகிறது என நம்புகிறார்கள் . அறிவியல் முறைப்படி யாரும் பிறக்கும்போது தீயசக்தி கொண்டு மரபணுக்களோடு பிறப்பதில்லை . சூழலையும் இதற்கு குறைசொல்லமுடியாது . ஆனால் வன்முறை , வறுமை , சித்திர்வதை நிறைந்த சூழல்கள் ஒருவரை கடுமையாக மனதளவில் பாதிக்கும் என்பது உண்மை . இவை இரண்டின் கலப்புதான் கொலைகாரர்கள்

மனிதர்களின் முன்னோடி விலங்குகளின் பழக்கம், வாழ்க்கைமுறை!

படம்
                              முன்னோர்களின் பழக்கங்கள்… . பாலூட்டி இனத்தைச் சேர்ந்த மனிதர்கள் , தங்களது பழக்கவழக்கங்களை எப்படி பெற்றார்கள் ? இதற்கான விடையை மானுடவியலாளர்கள் பல்வேறு ஆய்வுகளின் வழியாக தேடி வருகிறார்கள் . சிம்பன்சி , ஏப் , உராங்குட்டான் , கொரில்லா . போனபோ ஆகிய விலங்குகளின் நம்மின் மரபணுக்களோடும் , பழக்கங்களோடும் ஓரளவு நெருக்கமாயிருக்கின்றன . சாப்பிடுவது , தூங்குவது , குடும்பத்தலைவர் , அதற்கு கீழ் உள்ள அதிகாரப் படிநிலை , குழுக்களின் செயல்பாடு , தினசரி வாழ்க்கை சவால்கள் என பலதையும் இதில் நாம் பார்க்கலாம் . சிம்பன்சி வம்சாவளிப்பிரிவில் நெருங்கிய உயிரினமாக உள்ளது . நாம் இந்த விலங்கின் மரபணுக்களோடு 98 சதவீதம் ஒத்துப்போகிறோம் ., தனது ஐம்பது ஆண்டுகால வாழ்க்கையில் குட்டிகளை பராமரிப்பதிலும் பெரும் குழுக்களாக வாழ்வதிலும் திறன் பெற்றவைகளாக உள்ளன . பதிமூன்று வயது தொடங்கி சிம்பன்சிகள் கருத்தரிக்கத் தொடங்குகின்றன . குட்டிகளை இரண்டு வயது வரை கண்ணும் கருத்துமாக தோளில் தூக்கி வைத்து பராமரிக்கின்றன . ஆண் சிம்பன்சிகள் முதிர்ச்சியடைய அதிக காலம் எடுத்துக்கொள்கின்றன . இவ

மரபணுக்கள் ஏற்படுத்தும் பரம்பரை நோய்களை உணவு, உடற்பயிற்சி மூலம் தடுக்கலாம்!

படம்
                மரபணுவை வெ்ல்ல முடியுமா ? ஒருவரால் அவரது குடும்பம் காரணமாக ஏற்படும் நோய்களிலிருந்து தப்பிக்க முடியாது . ஆனால் அதற்கேற்ப உணவுப்பழக்கம் , உடற்பயிற்சி அமைவது அவசியம் . ஒருவரது குடும்பம் சார்ந்து மாரடைப்பு ஏற்படும் வாய்ப்பு , புகைப்பிடிப்பது , அதிக கொழுப்பு , உடல் பருமன் , நீரிழிவு நோய் , அதிக ரத்த அழுத்தம் ஆகியவை ஏற்படலாம் . சிலர் பிறக்கும்போது ரத்தத்தில் கொழுப்பு அதிகமாக இருக்கும் , ரத்த தட்டுகளில் அழற்சி உருவாகியிருக்கும் . இவர்களுக்கு இதயத்தசை சார்ந்த நோய்கள் ஏற்பட அதிக வாய்ப்புள்ளது . முறையான உடற்பயிற்சி , உணவுமுறை ஆகியவற்றை ஒருவர் கையாளும்போது மரபணு ரீதியான பிரச்னைகளை ஓரளவுக்கு சமாளிக்க முடியும் . பழங்கள் , காய்கறிகளை தினசரி உணவில் சேர்த்துக்கொள்வதோடு கொழுப்பு குறைவான உணவுகளையும் பானங்களையும் சாப்பிடலாம் . இதில் உப்பும் , சர்க்கரையும் கவனிக்க வேண்டியது ஒவ்வொருவரின் பொறுப்பு . உடற்பயிற்சி பொதுவாக முக்கியத்துவமானது . இதயத்தை வலுவாக்கும் என்று சொல்லும்படியான பயிற்சிகள் ஏதும் இல்லை . எனவே இதயத்தின் ஆர்டரியில் உள்ள கொலாட்டரலில் ரத்தவோட்டத்தை அதிக

உணவு, வாக்கு, உடல்பருமன், தூக்கம் என அனைத்தையும் தீர்மானிப்பது மரபணுக்கள்தான்! - பழக்கங்களின் தொடர்ச்சி

படம்
              இயற்கையான முறையும் , சூழலின் தாக்கமும் இந்த இரண்டு வார்த்தைகளும் இப்போது அனைத்து இடங்களிலும் புழங்கி வருகிறது . இன்று கிறிஸ்பிஆர் முறையில் மரபணுவைக் கூட வெட்டி ஒட்டி பிறப்புக்குறைபாடுகளை மாற்றிக்கொள்ளமுடியும் . இதற்கான ஆராய்ச்சிகள் தடுப்பூசிகள் தயாரிப்பிலும் கூட பயன்படுகின்றன . பொதுவாக ஒருவரின் குணம் , ஆளுமை , சாப்பிடும் பழக்கம் , திறன் ஆகியவற்றிலும் கூட அவரின் பரம்பரை , சூழல் என இரண்டின் தாக்கமும் உண்டு . இதனை பலரும் மாற்றி மாற்றி விவாதம் செய்வதுண்டு . அதாவது , அவரின் பரம்பரை அப்படி அதனால் திறமையுடன் இருக்கிறார் . மற்றொன்று , பரம்பரையாக இல்லையென்றாலும் சூழலின் அழுத்தத்தில் ஒருவர் தனது திறன்களை வளர்த்துக்கொள்வது . இது இன்றுவரை முடிவில்லாத விவாதமாக செல்கிறது . ஒருவரின் ஆரோக்கியம் , உணவின் முறை என அனைத்துமே மரபணுக்களின் தாக்கம் பெற்றுள்ளது . குற்றவியல் துறையில் பல்வேறு குற்றவாளிகளைத்தான் இந்தவகையில் ஆராய்ந்தனர் . அடிக்கடி குற்றம் செய்பவர்களின் மனநிலையையும் அவர்களின் குடும்ப பாரம்பரியத்தையும் ஆராய்ந்து பல்வேறு உண்மைகளை ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்தனர்

நியாண்டர்தால் மனிதர்களிடமிருந்து நவீன மனிதர்கள் பெற்ற பழக்கவழக்கங்கள்!

படம்
        நாம் தினசரி செய்யும் செயல்பாடுகளை கவனித்துப் பார்த்திருக்கிறீர்களா ? அதில் ஒரு தொடர்புத்தன்மை உண்டு . காலையில் எழுவது பல் துலக்காமல் டீ குடிப்பது , பதற்றத்தில் நகம் கடிப்பது , யோசிக்கும்போது ஆட்காட்டி விரலுக்கு அடுத்த நீ்ண்ட விரலை மேசையில் தட்டுவது , தோளை அடிக்கடி குலுக்குவது , கண்களை விரித்து பார்ப்பது , அணிந்துள்ள பிரெஸ்லெட்டை ஜெபமாலை ஆக்குவது இப்படி பலரது மேனரிசங்கள் நெடுங்கால பழக்கத்தில் உருவானவைதான் . இவை ஒருநாளில் உருவாகிவிடவில்லை எனவே மூளையிலிருந்து இதனை நீக்குவதும் கடினம் . நியாண்டர்தால் மனிதர்கள் என்பதை பல்வேறு அகழாய்வு செ்ய்திகளில் படித்திருப்பீர்கள் . இதற்கு நியாண்டர் பள்ளத்தாக்கில் வாழ்ந்த மனிதர்கள் என்று பொருள் . இந்தப்பகுதி ஜெர்மனியின் மேற்குப்பகுதியில் உள்ளது . நவீன மனிதர்களுக்கு நெருக்கமானவர்களாக இருந்தவர்கள்தான் நியாண்டர்தால் மனிதர்கள் . இவர்கள் ஐரோப்பாவில் 40 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்து வந்ததாக கூறப்படுகிறது . இவர்களின் மரபணுக்களில் இருந்துதான் நமது டிஎன்ஏ மாறுதல் ஏற்பட்டு தோலின் நிறம் , முடியின் நிறம் , உறக்கம் , மனநிலை , புகைபி

மரபணு மாற்றப்பட்ட பொருட்கள் உடலுக்கு ஆபத்தானவையா? உண்மையும் உடான்ஸூம்

படம்
            உண்மையும் உடான்சும்! பசு , தன்னுடைய குரல் மூலம் கன்றுகளை தொடர்புகொள்கிறது ரியல் : உண்மைதான் . எப்படி விலங்குகளின் வால் அசைவுகளுக்கு பொருள் உள்ளதோ , அதேபோல பசுவின் குரலுக்கும் பொருள் உண்டு . பசுக்களை பராமரிப்பவர்கள் பசு எழுப்பும் ஒலியை வைத்தே அதன் தேவை என்னவென்று உணர்வார்கள் . இது அனுபவத்தால் ஏற்படுவது . 2014 ஆம் ஆண்டு லண்டனைச்சேர்ந்த ராணிமேரி பல்கலைக்கழகம் , நார்த்திங்டன் பல்கலைக்கழகம் செய்த பத்து மாத ஆய்வில் பசுவின் குரலுக்கு பல்வேறு அர்த்தம் உண்டு என கண்டறிந்தனர் . மாலைவேளையில் உடலின் ஆற்றல் குறையும் ரியல் : உடலிலுள்ள உயிரியல் கடிகாரத்தின் (Circadian Rhythm) இயக்கத்தைப் பொறுத்தே இந்நிலை அமையும் . இதனை மூளையிலுள்ள சுப்ராஸ்மேடிக் நியூக்ளியஸ் (SCN) எனும் பகுதி கட்டுப்படுத்துகிறது . இதன் காரணமாக மதிய உணவை நீங்கள் சாப்பிட்ட பிறகு 2-4 மணிக்குள் தூக்கம் உங்களை சொக்க வைக்கிறது . தூக்கத்திற்கு மூலமான மெலடோனின் சுரப்பு உடலில் சுரப்பதே இதற்கு காரணம் . உயிரியல் கடிகாரத்தின் இயல்போடு , அதிக மாவுச்சத்து சேர்ந்த உணவுகள் , இரவில் போதிய தூக்கமின்மை ஆகியவையும் மாலையில் உடல

மரபணுமாற்று செடிகளுக்கான ஆய்வு விரைவில் தொடங்கவிருக்கின்றன! ஏன்? எப்படி?எதற்கு ?

படம்
            வேகமெடுக்கும் மரபணுமாற்று ஆய்வுகள் ! விரைவில் மரபணுமாற்று காய்கறிகளுக்கான கள ஆய்வுகள் பல்வேறு மாநிலங்களில் நடைபெறவிருக்கின்றன . மகாராஷ்டிரத்தைச் சேர்ந்த பீஜ் ஷீட்டல் ஆராய்ச்சி நிறுவனம் ஜனக் , பிஎஸ்எஸ் 793 என்ற இரு மரபணுமாற்ற கத்தரி விதைகளை சோதித்துப் பார்க்க அனுமதி கோரியிருந்தது . இக்கோரிக்கையை ஆராய்ந்த மரபணுமாற்ற கமிட்டி (GEAC), அனுமதி வழங்கிவிட்டது . விரைவில் தமிழ்நாடு , பீகார் , ஒடிஷா , மேற்குவங்கம் , கர்நாடகம் , மத்தியப்பிரதேசம் , ஜார்க்கண்ட் , சத்தீஸ்கர் ஆகிய மாநிலங்களில் மரபணுமாற்ற ஆராய்ச்சி நிறுவனம் சோதனைகளைத் தொடங்கவுள்ளது . இந்திய விதைகள் ஃபெடரேஷன் அமைப்பின் தலைவர் ராம் கௌன்டின்யா , அரசின் முடிவை வரவேற்றுள்ளார் . ’' இந்திய விவசாய அமைப்பு , மரபணுமாற்ற தொழில்நுட்பத்தை வடிவமைத்துள்ளது . இந்திய நிறுவனமான பீஜ் ஷீட்டல் நிறுவனம் சோதனைகளை நடத்துவதற்கான முயற்சிகளில் உள்ளது . சுயசார்பு இந்தியாவுக்கு பொருத்தமான முடிவு '’ என உற்சாகமாக பேசினார் ராம் கௌன்டின்யா . மத்திய அரசு முடிவு செய்தாலும் மாநில அரசுகள் மரபணுமாற்ற பயிர் சோதனைகளுக்கு ஆட்சேபம் தெரிவ