மரபணுக்கள் ஏற்படுத்தும் பரம்பரை நோய்களை உணவு, உடற்பயிற்சி மூலம் தடுக்கலாம்!

 

 

 

 

 

 Man, Woman, Composing, Dispute, Thoughtful, Problems

 

 

மரபணுவை வெ்ல்ல முடியுமா?


ஒருவரால் அவரது குடும்பம் காரணமாக ஏற்படும் நோய்களிலிருந்து தப்பிக்க முடியாது. ஆனால் அதற்கேற்ப உணவுப்பழக்கம், உடற்பயிற்சி அமைவது அவசியம். ஒருவரது குடும்பம் சார்ந்து மாரடைப்பு ஏற்படும் வாய்ப்பு, புகைப்பிடிப்பது, அதிக கொழுப்பு, உடல் பருமன், நீரிழிவு நோய், அதிக ரத்த அழுத்தம் ஆகியவை ஏற்படலாம்.


சிலர் பிறக்கும்போது ரத்தத்தில் கொழுப்பு அதிகமாக இருக்கும், ரத்த தட்டுகளில் அழற்சி உருவாகியிருக்கும். இவர்களுக்கு இதயத்தசை சார்ந்த நோய்கள் ஏற்பட அதிக வாய்ப்புள்ளது. முறையான உடற்பயிற்சி, உணவுமுறை ஆகியவற்றை ஒருவர் கையாளும்போது மரபணு ரீதியான பிரச்னைகளை ஓரளவுக்கு சமாளிக்க முடியும். பழங்கள், காய்கறிகளை தினசரி உணவில் சேர்த்துக்கொள்வதோடு கொழுப்பு குறைவான உணவுகளையும் பானங்களையும் சாப்பிடலாம். இதில் உப்பும், சர்க்கரையும் கவனிக்க வேண்டியது ஒவ்வொருவரின் பொறுப்பு.


உடற்பயிற்சி பொதுவாக முக்கியத்துவமானது. இதயத்தை வலுவாக்கும் என்று சொல்லும்படியான பயிற்சிகள் ஏதும் இல்லை. எனவே இதயத்தின் ஆர்டரியில் உள்ள கொலாட்டரலில் ரத்தவோட்டத்தை அதிகரிக்கும், ரத்தக்குழாய்களை செயல்பாட்டை சீராக்க தேவையான உடற்பயிற்சியை தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம். இதயத்தில் வால்வுகளை திறந்து மூடி ரத்தவோட்டத்தை சீர்படுத்தும் ஸ்பார்க் பிளக்காக சினோடரியல் நோடு பயன்படுகிறது. இதயத்திலுள்ள சேம்பர்களை இணைக்கும் பல்வேறு இணைப்புகள் இதில் உள்ளன. வண்டிகளுக்கே தேய்மான பாதிப்பு ஏற்படும்போது, இதயம் மட்டும் விதிவிலக்கல்ல. இதயத்திலுள்ள சுவர்கள் தடுமனாகி ரத்தவோட்டம் செல்வது தடைபட்டால் அதனை கார்டியோமையோபதி என்று அழைக்கின்றனர். இதயத்தின் துடிப்புகள் அதிகரிப்பது, குறைவது ஆகியவற்றுக்கு மின் சமிக்ஞைகள் முக்கியம். இதில் சமிக்ஞைகள் சரியானபடி உருவாக்கப்படாதபோது, அரைதைமியாஸ் பிரச்னை ஏற்படுகிறது.


பெரும்பாலான இதயநோய்கள் ஒருவரின் மரபணு, ரத்த அழுத்தம், வாழ்நிலை சூழல் ஆகியவை காரணமாகவே ஏற்படுகிறது. இதயத்தின் பாதிப்பு என்பது தடைபடுவது, தடுக்கப்படுவது என்ற இரு வகையில் நிகழ்கிறது. இங்கிலாந்தில் மட்டுமே 28 சதவீத மரணங்கள் இதய நோய்கள் தொடர்பாக ஏற்படுகின்றன. இவ்வகையில் பல லட்சம் பேர் பாதிக்கப்பட்டும் வருகின்றனர்.


மூளைக்கு தேவையான அளவுக்கு ஆக்சிஜன் செல்லாதபோது, ரத்தக்குழாய்களில் சிதைவு ஏற்படும்போது, ரத்தவோட்டம் தடைபடும்போது வாதம் ஏற்படுகிறது. மாரடைப்பு, ஒருவரின் ஆர்டரியில் ஆக்சிஜனைக் கொண்ட ரத்தம் தடைபடும்போது ஏற்படுகிறது. மார்புத்தசைகளை அழுத்தி சிபிஆர் செய்வதை பார்த்திருப்பீர்கள். அதுகூட இதயத்தில் மின்தூண்டல்கள் இருந்தால் மட்டுமே சாத்தியம். அப்படி இல்லாதபோது மரணம் நிகழும். சிபிஆர் முறையில் நுரையீரலிலிருந்து ரத்தம் இதயத்திற்கு வருவதால் இதயம் துடிக்க வாய்ப்புள்ளது. இதனை முறையாக அறிந்தவர்கள் செய்வது நல்லது. டீபிபிரிலேட்டர் என்பது இதயத்தசைகளுக்கு ஷாக் கொடுத்து அதனை மீண்டும் துடிக்க வைக்க உதவுகிறது.  

 இதயத்தின் தாறுமாறு துடிப்புகளை ஒழுங்குபடுத்தி முன்னர் சொன்ன ஸ்பார்க் பிளக்கை ஒழுங்காக்குகிறது. சிறியளவு மாரடைப்பு ஏறபட்டு உங்களால் சுவாசிக்க முடிந்தால் உடனே மருத்துவரை அணுகுவது அவசியம். இதயத செல்களைப் பொறுத்தவரை இருபது நிமிடங்களுக்கு ஆக்சிஜன் இல்லாமல் தாங்கும். ஒருமுறை இதயத்தசைகள் செயலிழந்துவிட்டால், அதற்குப்பிறகு அதனை மீட்பது கடினம். இதனால்தான் இதயத்தசைகளை செயற்கை முறையில் உருவாக்கி இயங்க வைக்க ஆராய்ச்சியாளர்கள் மெனக்கெடுகின்றனர்


சயின்ஸ்போகஸ்



கருத்துகள்