இடுகைகள்

ரத்தம் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

நுரையீரலும் எலும்பும் உடலுக்கு செய்யும் பணிகள் என்ன?

படம்
            மூச்சு அமைப்புகள் காற்றிலுள்ள வாயுக்களை சுத்திகரித்து ரத்தத்தில் தூய ஆக்சிஜனை சேர்க்க உதவுகிறது . இந்த அமைப்பு இல்லாதபோது , ஒருவர் தேவையான ஆக்சிஜன் கிடைக்காமல் உயிருக்கு் போராடும் நிலை ஏற்படும் . பிறந்த குழந்தை பத்தாவது நொடியில் பூமியில் முதல் மூச்சை இழுக்கத் தொடங்குகிறது . கருப்பையில் இருந்த திரவங்கள் மெல்ல வெளியேற்றப்பட காற்று நுரையீரலில் நிரம்புகிறது . இனிமேல் அந்த குழந்தை வளர்ந்து முதியவராக இறக்கும் வரை நுரையீரல் ஆக்சிஜனை ரத்தத்தில் சேர்த்தும் , கார்பன் டை ஆக்சைடை வெளியேற்றியும் வேலை செய்யும் . இந்த வேலை எப்போதும் நிற்காது . ஒரு நிமிடத்திற்கு இருபது முறை என எண்ணற்ற முறை நுரையீரல் துடிக்கிறது . ஆறு நிமிடங்கள் உடலுக்கு ஆக்சிஜன் போகவில்லையென்றால் உடனே செல்களில் உள்ள நச்சு உடலில் பரவுகிறது . மூளை மற்றும் இதயம் மெல்ல செயலிழக்கத் தொடங்குகிறது . உடலில் நடைபெறும் மூச்சு தொடர்பான பணிகள் அனைத்துமே மூளையால் தன்னிச்சையாக செயல்படுத்தப்படுகிறது . அதேசமயம் , மூச்சை செய்யும் வேலைக்கு ஏற்ப ஒழுங்குபடுத்திக்கொள்ள முடியும் . நீச்சலடிக்கும்போது இதனை ஒருவர்

சிறுநீரக அமைப்பு எப்படி செயல்படுகிறது? - அறியாத புதிய தகவல்கள்

படம்
            சிறுநீர் அமைப்பு எப்படி செயல்படுகிறது ? உடலில் அறுபது சதவீதம் நீர் உள்ளது . அப்படி நீர் இருப்பதுதான் உடல் வெப்பத்தை கட்டுப்படுத்த உதவுகிறது . ரீனல் அமைப்புதான் உடலில் உள்ள நீரின் தன்மையைக் கட்டுப்படுத்தி தேவையில்லாத கழிவுகளை சிறுநீராக வெளியேற்ற உதவுகிறது . இந்த அமைப்புதான் சரியான அளவில் சிறுநீரை வெளியேற்றி உடலிலுள்ள நீரின் அளவை கண்காணிக்கிறது . இதில் பாதிப்பு ஏற்படும்போது மனிதர்களுக்கு கழிவுநீர் ரத்தத்தில் கலக்கும் ஆபத்து உள்ளது . சிறுநீர்ப்பையில்தான் பெரும்பாலான கழிவுநீர் தேக்கப்பட்டிருக்கும் . இதன் கொள்ளளவு எட்டும்போது சிறுநீர் கழிப்பதற்கான உந்துதல் தோன்றும் . இதன் வேகம் அதிகரிக்கும்போதுதான் முட்டுச்சந்து என்றால் உடனே ஜிப்பை இறக்கி ஆக்ரோஷத்தை தணிக்கிறோம் . சிறுநீரகத்தில் நெப்ரான்கள் உள்ளன . இவற்றில் உள்ள ஃபில்டர்தான் , குளோமெருலஸ் . இதில் ரத்த நாளங்களின் வலையமைப்பு உள்ளது . இவற்றில் உள்ள சுவர் போன்ற அமைப்பு , கழிவுகளை வடிகட்டுகிறது . இப்படி வடிகட்டிய நீர் ட்யூபில் என்ற இடத்திற்கு செல்கிறது . சோடியம் , பொட்டாசியம் , புரதம் ஆகியவை உறிஞ்சப்பட்டு கழிவ

தசைகளுக்கு எப்போதும் பயிற்சி அவசியம்!

படம்
            தசை அமைப்புகள்தான் எலும்புகளில் பொருந்தி நாம் உடலை அசைக்கவும் எழுந்து நிற்கவும் பல்வேறு வேலைகளை செய்யவும் உதவுகின்றன . வயிற்றுக்குள் உணவு செல்லவும் , நுரையீரலுக்கு காற்று செல்லவும் , ரத்தம் உடலெங்கும் செல்லவும் உதவுகின்றன . ஆனால் சரியான பயிற்சி இல்லாதபோது தசைகள் தங்கள் பலத்தை இழந்துவிடுகின்றன . புவியீர்ப்பு விசையும் தசைகளின் செயல்பாட்டில் குறிப்பிடத்தக்க தன்மையை ஏற்படுத்துகின்றன . ஒருவரின் உடல் எடையில் தசைகளின் பங்கு 40 சதவீதமாக உள்ளது . விபத்துக்குள்ளாகி அல்லது நோயில் ஒருவர் படுத்த படுக்கையாகி மீண்டும் எழும்போது உடலில் வித்தியாசத்தை உணரலாம் . அதாவது , உடல் நடக்கவும் , நிற்கவும் தடுமாறும் . இதற்குக் காரணம் , தசைகளுக்கு சிறிது காலம் எந்த பயிற்சியும் கொடுக்காமல் இருப்பதே . இதனை தொடர்ச்சியாக பயிற்சியில் ஈடுபடுத்திக்கொண்டே இருக்கவேண்டும் . இல்லையென்றால் அதனை இழந்துவிடுவோம் என்று பயமுறுத்துகிறார்கள் மருத்துவர்கள் . ஒருவர் வெய்ட் லிப்டிங் பயிற்சி செய்யும்போது அதில் 700 சிறு தசைகள் இணைகின்றன என்கின்றனர் . உடல் பல்வேறு வேலைகளை செய்யும்போது அதில் தசைகள் மு

விலங்குகளின் ஹார்மோன்களை மனிதர்களின் உடலில் செலுத்தி வினோத ஆராய்ச்சி!

படம்
              ஹார்மோன் மாயாஜாலம் ! உடலில் நடைபெறும் பல்வேறு மாற்றங்கள் , தனக்கான பாராட்டையும் அங்கீகாரத்தையும் ஏற்பது , பெண்களின் கூட்டத்தை ஆர்வமாக கவனிப்பது , குரல் உடைவது , நடவடிக்கையில் துணிச்சல் வருவது என கூறிக்கொண்டே போகலாம் . இன்று ஹார்மோன் என்றால் பெரும்பாலானோர்க்கு என்ன விஷயம் என்பதை எளிதாக புரிந்துகொள்ள முடிகிறது . நீரிழிவு அல்லது கருவுறுதலை தடுப்பதற்கு ஹார்மோன் மாத்திரைகளை எடுத்துக்கொள்வது தொடங்கியுள்ளது . எண்டோகிரைன் சுரப்பி மூலம் ரத்தத்தில் இணையும் இந்த வேதிப்பொருள் , உங்கள் உடலில் ஏற்படும் மாற்றங்கள் , மனநிலை என அனைத்தையும் கட்டுப்படுத்துகிறது . இருபதாம் நூற்றாண்டு வரை ஹார்மோன்கள் இருக்கிறதா இல்லையா எப்படிவேலை செய்கிறது என்பது பற்றிய எந்த கேள்விகளுக்கும் விடை தெரியாமல்தான் இருந்தது . மண்டையோடு , உடல் உறுப்புகள் , தசைகள் ஆகியவற்றில் உள்ளதாக தொடக்கத்தில் நம்பினர் . பத்தொன்பதாம் நூற்றாண்டில் ஹார்மோன்களை எண்டோகிரைன் சுரப்பி சுரக்கிறது என்பதை கண்டறிந்தனர் . ஆனாலும் கூட அதன் செயல்பாடு பற்றி முழுமை யாருக்கும் தெரியவில்லை . ஹார்மோன்களிடையே வேறுபாடு தெரிய

மாரடைப்பைத் தடுக்கும் புதிய வழிகள்!

படம்
                மாரடைப்பைத் தடுப்பது எப்படி ? மாரடைப்பைத் தடுக்க சிபிஆர் , டிபைபிரிலேட்டர் ஆகிய வசதிகளைப் பயன்படுத்துகிறார்கள் . அப்படி இல்லாமலும் நிறைய நுணுக்கங்கள் உள்ளன . கொழுப்பைத் தடுப்பது பொதுவாக ர்த்தத்தில் உள்ள கேடு தரும் எல்டிஎல் கொழுப்பு மாரடைப்பு ஏற்படும் வாய்ப்பை அதிகரிக்கிறது . இதனை தடுக்க பிசிஎஸ்கே 9 எனும் மருந்தை பயன்படுத்தலாம் . இந்த மருந்து கல்லீரலில் உள்ள புரதத்தை முடக்கி எல்டிஎல் கொழுப்பை குறைக்கும் பணியைச் செய்கிறது . அழற்சி இதயத்திலுள்ள ஆர்டரியில் ஏற்படும் அழற்சி , மாரடைப்பை தூண்டுகிறது என்பதை கடந்த பத்தாண்டுகளில் நடைபெற்ற ஆய்வுகளின் மூலம் கண்டுபிடித்துள்ளனர் . கனாகிநுமாப் எனும் மருந்தை ஆய்வாளர்கள் சோதித்தனர் . 2017 இல் நடைபெற்ற சோதனையில் மாரடைப்பை இந்த மருந்து 24 சதவீதம் குறைப்பது தெரிய வந்துள்ளது தொற்றுநோய் ஆபத்தை ஏற்படுத்துகிற , விலையுயர்ந்த மருந்து என்பதால் இதனை பொதுபயன்பாட்டுக்கு கொண்டு வர முடியவில்லை . மாரடைப்பு பற்றிய ஆராய்ச்சிக்கான வாசலை இந்த மருந்து பற்றிய சோதனை திறந்து வைத்துள்ளது என்று சொல்லலாம் . மாரடைப்புக்கு

மரபணுக்கள் ஏற்படுத்தும் பரம்பரை நோய்களை உணவு, உடற்பயிற்சி மூலம் தடுக்கலாம்!

படம்
                மரபணுவை வெ்ல்ல முடியுமா ? ஒருவரால் அவரது குடும்பம் காரணமாக ஏற்படும் நோய்களிலிருந்து தப்பிக்க முடியாது . ஆனால் அதற்கேற்ப உணவுப்பழக்கம் , உடற்பயிற்சி அமைவது அவசியம் . ஒருவரது குடும்பம் சார்ந்து மாரடைப்பு ஏற்படும் வாய்ப்பு , புகைப்பிடிப்பது , அதிக கொழுப்பு , உடல் பருமன் , நீரிழிவு நோய் , அதிக ரத்த அழுத்தம் ஆகியவை ஏற்படலாம் . சிலர் பிறக்கும்போது ரத்தத்தில் கொழுப்பு அதிகமாக இருக்கும் , ரத்த தட்டுகளில் அழற்சி உருவாகியிருக்கும் . இவர்களுக்கு இதயத்தசை சார்ந்த நோய்கள் ஏற்பட அதிக வாய்ப்புள்ளது . முறையான உடற்பயிற்சி , உணவுமுறை ஆகியவற்றை ஒருவர் கையாளும்போது மரபணு ரீதியான பிரச்னைகளை ஓரளவுக்கு சமாளிக்க முடியும் . பழங்கள் , காய்கறிகளை தினசரி உணவில் சேர்த்துக்கொள்வதோடு கொழுப்பு குறைவான உணவுகளையும் பானங்களையும் சாப்பிடலாம் . இதில் உப்பும் , சர்க்கரையும் கவனிக்க வேண்டியது ஒவ்வொருவரின் பொறுப்பு . உடற்பயிற்சி பொதுவாக முக்கியத்துவமானது . இதயத்தை வலுவாக்கும் என்று சொல்லும்படியான பயிற்சிகள் ஏதும் இல்லை . எனவே இதயத்தின் ஆர்டரியில் உள்ள கொலாட்டரலில் ரத்தவோட்டத்தை அதிக

புரிந்துணர்வு ஒப்பந்தங்களிலிருந்து சொட்டும் குருதி! - நொறுங்கிய குடியரசு- அருந்ததிராய்

படம்
                நொறுங்கிய குடியரசு அருந்ததிராய் தமிழில் க . பூர்ணச்சந்திரன் காலச்சுவடு பழங்குடி மக்களை மத்திய அரசு எப்படி நடத்துகிறது என்பதை நூலாசிரியர் ஏராளமான செய்திக்கட்டுரைகள் , நூல்கள் மற்றும் தனது நேரடியாக களத்திற்கு சென்று வந்த அனுபவம் மூலம் விளக்குகிறார் . 194 பக்கங்களை கொண்ட நூலை வாசிப்பவர்கள் யாரும் இதிலுள்ள அவல நகைச்சுவையை ரசிக்காமல் நூலை படிக்க முடியாது . படித்தவுடனே புன்னகைத்துவிட்டு அடுத்த நொடியே அதன் பொருள் உணர்ந்து வருத்தமும் படுவோம் . அந்தளவு தண்டகாரண்ய வனத்தில் நடக்கும் பல்வேறு கனிம வளங்கள் அகழ்ந்தெடுப்பு பணி பற்றிய புள்ளிவிவரங்களை நூலாசிரியர் முன் வைத்துள்ளார் . மன்மோகன்சிங் எப்படி மத்திய அரசில் அங்கம் வகிக்கும்படி சூழல் நேர்ந்தது , அவர் பிரதமரானவுடன் கனிம வளங்கள் அகழ்ந்தெடுக்கும் பணி வேகமெடுத்தது என பல்வேறு செய்திகளை முன்வைத்து பேசப்பட்டிருக்கிறது . அச்சமயம் உள்துறை அமைச்சர் பேசிய பேச்சுகளை எப்படி ஆழமாக புரிந்துகொள்வது என கூறப்பட்டுள்ள பகுதி முக்கியமானது . ஊடகங்கள் எப்படி அரசுக்கு ஆதரவாக பழங்குடி மக்களுக்கு ஆதரவாக போராடும் மாவோ