நுரையீரலும் எலும்பும் உடலுக்கு செய்யும் பணிகள் என்ன?
மூச்சு அமைப்புகள் காற்றிலுள்ள வாயுக்களை சுத்திகரித்து ரத்தத்தில் தூய ஆக்சிஜனை சேர்க்க உதவுகிறது . இந்த அமைப்பு இல்லாதபோது , ஒருவர் தேவையான ஆக்சிஜன் கிடைக்காமல் உயிருக்கு் போராடும் நிலை ஏற்படும் . பிறந்த குழந்தை பத்தாவது நொடியில் பூமியில் முதல் மூச்சை இழுக்கத் தொடங்குகிறது . கருப்பையில் இருந்த திரவங்கள் மெல்ல வெளியேற்றப்பட காற்று நுரையீரலில் நிரம்புகிறது . இனிமேல் அந்த குழந்தை வளர்ந்து முதியவராக இறக்கும் வரை நுரையீரல் ஆக்சிஜனை ரத்தத்தில் சேர்த்தும் , கார்பன் டை ஆக்சைடை வெளியேற்றியும் வேலை செய்யும் . இந்த வேலை எப்போதும் நிற்காது . ஒரு நிமிடத்திற்கு இருபது முறை என எண்ணற்ற முறை நுரையீரல் துடிக்கிறது . ஆறு நிமிடங்கள் உடலுக்கு ஆக்சிஜன் போகவில்லையென்றால் உடனே செல்களில் உள்ள நச்சு உடலில் பரவுகிறது . மூளை மற்றும் இதயம் மெல்ல செயலிழக்கத் தொடங்குகிறது . உடலில் நடைபெறும் மூச்சு தொடர்பான பணிகள் அனைத்துமே மூளையால் தன்னிச்சையாக செயல்படுத்தப்படுகிறது . அதேசமயம் , மூச்சை செய்யும் வேலைக்கு ஏற்ப ஒழுங்குபடுத்திக்கொள்ள முடியும் . நீச்சலடிக்கும்போது இதனை ஒருவர்