திருமண வல்லுறவு பற்றி விவாதித்துத்தான் தீர்வு காண முடியும்! - டாக்டர் உபேந்திர பக்ஷி
நேர்காணல் உபேந்திர பக்ஷி வார்விக் பல்கலைக்கழக சட்டத்துறை பேராசிரியர் மதுரா வல்லுறவு வழக்கு ஒன்றில் வல்லுறவு தொடர்பான சட்டத்தை உருவாக்க உச்ச நீதிமன்றத்திற்கு பகிரங்க கடிதம் எழுதியவர்களில் உபேந்திராவும் ஒருவர். அண்மையில் சத்தீஸ்கர் உயர்நீதிமன்றம் திருமண உறவில் கணவர் வற்புறுத்தி உறவு கொண்டால், அது சட்டத்திற்கு புறம்பானது அல்ல. வல்லுறவு கிடையாது என கூறியுள்ளது. இதுபற்றி உங்கள் கருத்து என்ன? அந்த நீதிபதி அப்படி கூறியுள்ளதற்கு சட்டம் முக்கியமான காரணம். ஏனென்றால் கணவர் மனைவியை உறவுக்கு கட்டாயப்படுத்தினால் அதனை குற்றமாக பார்க்க சட்டப்பிரிவுகள், ஏன் சட்டமே கிடையாது. அவர் அப்படி கூறியதில் தவறு ஏதும் கிடையாது. இதற்காக காவல்துறை வழக்குப்பதிவு செய்யவேண்டியதில்லை. மக்களின் குடியுரிமை பற்றியது. திருமணமான பிறகு நடக்கும் வன்முறை, வல்லுறவு பற்றி நம்மிடையே சட்டம் இல்லாத து நீதிபதியின் குற்றம் அல்ல. நீதிமன்றங்கள் இதில் மாறுபட்ட கருத்துகளை கொண்டுள்ளது ஏன்? உச்சநீதிமன்ற சட்டப்படி பதினெட்டு வயதிற்கு கீழுள்ள பெண்களோடு உறவு கொள்வது, வல்லுறவு என்றே புரிந்துகொள்ளப்படுகிறது. வழக்குரைஞர் செய்ய முடியாததை நீதிமன