இடுகைகள்

விண்வெளியை ஆக்கிரமிக்கும் செயற்கைக்கோள்!

படம்
  புவி வட்டப்பாதையில் சுற்றி வரும் செயற்கைக்கோள்கள் அதிகரித்து வருகின்றன.  செயல்படாத செயற்கைக்கோள்களின் மோதலைத் தவிர்க்கவும், அதன் போக்குவரத்தைச்  சீர்படுத்தவும் பல்வேறு விண்வெளி ஆராய்ச்சி அமைப்புகளும், தனியார் நிறுவனங்களும் முயன்று வருகின்றன.  தற்போது உலக நாடுகளில் ஆய்வுக்காகவும், இணையச்சேவை சார்ந்தும் ஏராளமான செயற்கைக்கோள்கள் ஏவப்பட்டு வருகின்றன. ஆனால் புவி வட்டப்பாதையில் ஏராளமான செயற்கைக்கோள்கள் சுற்றி வருவதால், புதிய செயற்கைக்கோள்களுக்கு இடமேயில்லை என்ற சூழ்நிலை உருவாகிவருகிறது. உலகநாடுகளில் உள்ள விண்வெளி ஆய்வு மைய பொறியாளர்கள் விண்வெளியில் இயங்கும், செயல்படாத செயற்கைக்கோள்களின் போக்குவரதை ஒழுங்கு செய்ய பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர்.  கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம், 22ஆம் தேதி சர்வதேசி விண்வெளி மையத்திற்கு எச்சரிக்கை ஒன்று வந்தது. பூமிக்கு 400 கி.மீ . தொலைவுக்கு மேலே செயற்கைக்கோளின் பாகம் ஒன்று,  விண்வெளி நிலையத்தை தாக்க வருவதாக ஆய்வாளர்கள் கூறினர். உடனே நிலையத்திலிருந்த ராக்கெட்டை உசுப்பி ஆய்வாளர்கள் மோதலிலிருந்து தப்பினர். 1999ஆம் ஆண்டு தொடங்கி சர்வதேச விண்வெளி நிலையத்தி

கண்ணாடிக்கு மாற்றாக இயற்கையில் கிடைக்கும் மர இழை நுட்பம்!

படம்
  கண்ணாடிக்கு மாற்றாக பசுமைத் தீர்வு! அமெரிக்காவின் மேரிலேண்ட் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள், கண்ணாடியைப் போன்ற  ஒளி ஊடுருவும்  தன்மையில்  இருக்கும் மர இழைகளை  உருவாக்கியுள்ளனர்.  தற்போது, நவீனமாக கட்டும் கட்டடங்களுக்கு மெருகூட்டுவதாக கண்ணாடியே பயன்படுகிறது. இதனை ஜன்னல்களுக்கு மட்டுமல்லாமல் கட்டடம் முழுக்கவே பயன்படுத்தி புதுமையாக கட்டுமானங்களை உருவாக்கி வருகின்றனர். அழகாக இருந்தாலும் ஆற்றல் அதிகமாக செலவழித்து உருவாக்கப்படுவதும், எளிதாக மறுசுழற்சி செய்யமுடியாத தன்மையும் இதன் முக்கியமான பாதக அம்சங்கள்.  அமெரிக்காவிலுள்ள மேரிலேண்ட் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் இதற்கான தீர்வை மரத்திலிருந்து கண்டுபிடித்துள்ளனர். கண்ணாடியைப் போன்றே  ஒளி ஊடுருவும் மர இழைகளை  சோதனையில் கண்டுபிடித்துள்ளனர். இந்தச் சோதனை மூலம் இயற்கைச் சூழலுக்கு பாதிப்பு வராதபடி மர இழைகளை பக்குவப்படுத்தி கண்ணாடி போலாக்கி வீடுகளில் பொருத்த முடியும். கண்ணாடியில் ஒளி ஊடுருவும். ஆனால் மரத்தில் ஒளி ஊடுருவமுடியாதே அதனை எப்படி கண்ணாடியாக பயன்படுத்துவது என பலரும் நினைப்பார்கள். இதற்கு முக்கியமான காரணம், மரத்திலுள்ள லிக்னின், செல்லுலோஸ்

அனிமேஷன் உலகம் - சுதந்திரமாக இயங்கும் உலகில் சாதிக்கும் இயக்குநர்கள்

படம்
  லவ்விங் வின்சென்ட் இயக்குநர்கள் வெல்ச்மேன் - கோபியலா டேஷ் ஷா தனது திரைப்படத்திற்கு ஒரு சிறிய காட்சிக்கு தேவையான நடிகரை தேடிக்கொண்டிருந்தார். இவர் அமெரிக்காவில் வசிப்பவர். கிராபிக் நாவலை எழுதுபவர் இப்போது திரைப்படங்களை எடுத்து வருகிறார். சிறிய காட்சிக்கான நடிப்பை இவரது நட்பு வட்டத்தில் உள்ள ராஜ் என்பவரே கொடுத்திருக்கிறார்.  ராஜின் முழுப்பெயர், ராஜேஷ் பரமேஷ்வரன். இவர் இந்திய அமெரிக்க எழுத்தாளர். சென்னையை பூர்விகமாக கொண்டவர், ஐ யம் எக்சிகியூஸ்னர் என்ற நூலை எழுதியிருக்கிறார். ஷாவின் படம் 34 ஆவது டோக்கியோ திரைப்பட விழாவில் திரையிடப்பட்டிருக்கிறது.  ஷா தனது படங்களுக்கு தேவையான நடிகர்களை அதற்கென உள்ள நடிப்பு குழுக்கள், நண்பர்கள் வட்டாரம் ஆகியவற்றிலிருந்து தேர்ந்தெடுத்து வருகிறார். இன்று எடுக்கும் பல்வேறு அனிமேஷன் படங்கள் அனைத்துமே தொழில்நுட்ப வளர்ச்சியால் சிறப்பாக உருவாக்கப்பட்டு வருகின்றன. தனி உலகமாக சிறந்த முறையில் சுதந்திரமாக செயல்படுகிறது என்பது முக்கியமானது.  பாம்பே ரோஸ், லவ்விங் வின்சென்ட் போன்ற கடுமையான உழைப்பை கோரும் படங்கள் முதல் டிஸ்னியால் எடுக்கப்படும் டாய் ஸ்டோரி, இன்சைட் அவுட்

ரஷ்யாவின் பெருமைக்குரிய ஹீரோ! - யூரி ககாரின்

படம்
  யூரி ககாரின் யூரி ககாரின் பலரும் அமெரிக்க வீரர் நீல் ஆம்ஸ்ட்ராங் நிலவில் கால் வைத்ததைப் பற்றி பேசுகிறார்கள். அவ்வளவு ஏன் பாடல் கூட எழுதிவிட்டார்கள். ஆனால் யூகி க காரின் அவருக்கு 8 ஆண்டுகளுக்கு முன்னதாகவே விண்வெளிக்கு சென்று சாதித்தவர். அவர் ரஷ்யாவில் பிறந்தார் என்பதற்காகவே ஒதுக்குகிறார்களோ எனும்படி இருக்கிறது ஊடகங்களின் செய்திகள்.  விண்வெளி காலம் என்பது நீல் ஆம்ஸ்ட்ராங் கால் வைத்த காலத்திற்கு முன்னதாகவே தொடங்கிவிட்டது. ரஷ்ய விண்வெளி வீரர் யூரி, 1961ஆம் ஆண்டு ஏப்ரல் 12 அன்று 9.07 மணிக்கு வோஸ்டாக் 1 என்ற விண்கலத்தில் விண்வெளிக்கு சென்றார்.  சோவியத் யூனியனின் குளுசினோ எனும் நகரில் 1934ஆம் ஆண்டு பிறந்தவர் யூரி. இவரது பெற்றோர்கள் அன்றைய நடைமுறையான கூட்டுப்பண்ணையில் வேலை செய்துகொண்டிருந்தார்கள். இவர்களுக்கு பிறந்த நான்கு குழந்தைகளில் யூரி மூன்றாவது ஆள்.  இரண்டாம் உலகப்போர் தொடங்கியது. அதில் ஜெர்மனி சோவியத்திற்குள் முன்னேறி வந்தது. அவர்களிடம் குளுசினோ நகரம் பிடிபட்டது. இதனால் குடும்பத்தின் பண்ணையும் அவர்களின் கைக்கு போய்விட்டது. வீர ர்களுக்கு உணவிட யூரியின் பெற்றோர் வற்புறுத்தப்பட்டனர். யூர

கிரிப்டோகரன்சியை எப்படி வாங்குவது?

படம்
  கிரிப்டோகரன்சியை இரண்டு வழிகளில் வாங்கலாம். ஒன்று, அதனை விற்கும் நிறுவனங்களிடமிருந்து வாங்கலாம். அல்லது புதிய கரன்சிகளை நாமே உருவாக்குவது.  இதில் எளிதானது பரிவர்த்தனை மூலம் வாங்குவதுதான். இந்த முறையில் இந்தியாவில் வாசிர்எக்ஸ், காயின்டிசிஎக்ஸ், காயின்ஸ்விட்ச் கியூபர், ஸெப்பிளே, பிட்பிஎன்எஸ், ஜியோட்டஸ் ஆகிய நிறுவனங்களைப் பயன்படுத்தி கரன்சிகளை வாங்கலாம்.  இதில் வணிகம் செய்ய அல்லது முதலீடு செய்ய ஏதேனும் ஒரு நிறுவனத்தில் உங்களைப் பற்றி நோ யுவர் கஸ்டமர் தகவல்களை பதிவு செய்துகொள்ள வேண்டும். ரூபாயைப் பயன்படுத்தி கரன்சிகளை வாங்கலாம். முதன்முதலில் கரன்சிகளை வாங்குபவர் ஐஎன்ஆர் ரூபாய்களை வாலட்டில் நிரப்பி வைத்திருக்கவேண்டும். அப்போதுதான் கிரிப்டோகரன்சியை எளிதாக வாங்க முடியும்.  கிரிப்டோகரன்சி வாலட்டில் ஒருவருக்கு தனித்துவமான எண்கள் வழங்கப்படும். இ வாலட், ஆன்லைன் வங்கி பரிவர்த்தனை முறையில் ஒருவர் வாலட்டில் பணத்தை  நிரப்பலாம்.  இந்திய அரசு கிரிப்டோவை மறைமுகமாக அங்கீகரித்து வரி போட்டாலும் கூட நேரடியான அனுமதியை வழங்கவில்லை. எனவே வங்கி மூலம் நீங்கள் பணத்தை இ வாலட்டில் நிரப்ப முடியாது. இப்போதைக்கு மொப

மனிதர்களின் உலகைப் புரிந்துகொள்ளும் டிராகுலா! - டிரான்சில்வேனியா 4

படம்
  டிரான்சில்வேனியா 4 டிரான்சில்வேனியா 4 சோனி அனிமேஷன் டிரேக் தனது ஹோட்டலை தனது மகள் மாவிஸ், மருமகன் ஜானியிடம் கொடுக்க நினைக்கிறார். ஆனால் மருமகன் மனிதன் என்பதால், அவனை டிரேக்கிற்கு பிடிப்பதில்லை. மேலும், ஜானி உற்சாகப்பட்டு செய்யும் பல்வேறு அட்டகாசங்களால் ஹோட்டலை அவனிடம் கொடுக்க மறுத்து டிராகுலா சட்டம் என ஒன்றை சொல்கிறார். இதனால் ஏற்படும் பின்விளைவுகள்தான் கதை.  படம் தொடங்கும் டைட்டில் கார்டு தொடங்கி அனிமேஷன் படத்திற்கான கொண்டாட்டம் தொடங்கிவிடுகிறது. இந்த கொண்டாட்டமான மனநிலை படத்தின் இறுதி வரை தொடர்கிறது.  டிரேக் தனது ஹோட்டலில் விழாவை ஏற்பாடு செய்திருக்கிறார். அங்கு வரும் ஜானி, விழாவை படு உற்சாகமாக மாற்றுகிறார். ஆனால் அது மாமனார் டிரேக்கிற்கு பிடிக்கவில்லை. ஜானி உற்சாக மிகுதியில் செய்யும் விஷயங்களை மாற்றி இயல்பாக நடக்க வைக்கிறார். தனது மனைவியிடம் ஹோட்டலை அவனிடம் ஒப்படைக்கப் போவதாக கூறுகிறார். ஆனால் இறுதியில் நிலைமை மாற தான் சொன்னதை மாற்றிக்கொள்கிறார். இதற்கு பதிலாக ஜானி, மான்ஸ்டர் கிடையாது என்பதை சொல்கிறார்.  டிரான்சில்வேனியா 4  இதனால், மனம் உடையும் ஜானி தன்னை மான்ஸ்டராக மாற்றிக்கொள்ள வ

நவீன ஒலிம்பிக்ஸ் தொடங்கி 126 ஆண்டுகள் ஆகிறது!

படம்
  நவீன ஒலிம்பிக் போட்டிகள்  தொன்மையான ஒலிம்பிக் போட்டிகள் தொடங்கியது கி மு 7766 ஆம் ஆண்டு தொடங்கியது பிறகு கி பி 393 வரை அப்படியே தொடர்ந்தது.  கிரீஸின் ஒலிம்பியாவில் நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை போட்டிகள் நடைபெற்றன.  நவீன ஒலிம்பிக் போட்டிகள் 1896ஆம் ஆண்டு தொடங்கின. இந்த போட்டிகள் நடைபெற 1503 ஆண்டுகள் தேவைப்பட்டன. இதற்கான ஐடியாவின் சூத்திரதாரி பிரெஞ்சு நாட்டைச் சேர்ந்த பாரோன் பியர் டி கூபெர்டின். இவர்தான் நவீன ஒலிம்பிக் போட்டிக்கான ஐடியாவை எடுத்து வந்தார். அந்த ஆண்டு, 1894. 1896ஆம் ஆண்டு  ஏப்ரல் மாதம் 6 முதல் 15 வரை கிரீசின் ஏதேன்ஸில் நடைபெற்றது.  14 நாடுகளைச் சேர்ந்த வீர ர்கள் இதில் பங்கேற்றனர். பெரும்பாலான வீர ர்கள் கிரீஸ், ஜெர்மனி, பிரான்ஸ்,  பிரிட்டிஷ் நாடுகளைச் சேர்ந்தவர்கள்தான் அதிகம் கலந்துகொண்டனர்.  43 போட்டிகளில் பெரும்பாலான வீர ர்களாக கலந்துகொண்டது ஆண்கள்தான். நீச்சல், ஜிம்னாஸ்டிக்ஸ், எடை தூக்குவது, மல்யுத்தம், டென்னிஸ், துப்பாக்கிச்சூடு ஆகிய போட்டிகள் இதில் உள்ளடங்கும். வெளிநாட்டு வீரர்களை வரவேற்க ஏராளமான மக்கள் திரண்டிருந்தனர். ஏறத்தாழ 60 ஆயிரம் பேர். கிரீஸைச் சேர்ந்த அரச குட