வேலை இழப்பால தவிக்கும் காஷ்மீர்!
விடுதி மேலாளர் குலாம் ஜிலானி ஆகஸ்ட், 5, 2019 அன்று இந்திய அரசு காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்தது. சட்டத்திற்கு எதிரான போராட்டம் மாநிலமெங்கும் நடத்தப்பட்டது. இதனைக் கட்டுப்படுத்த 135 நாட்கள் இணையம் தடை செய்யப்பட்டது. இதன் விளைவாக இங்கு வரும் சுற்றுலா பயணிகள் பலரும் தம் பயணத்தை ரத்து செய்தனர். மாநிலம் முழுவதம் ராணுவம் சூழ்ந்து நிற்க, திறந்தவெளி சிறைச்சாலை போன்ற சூழலை அரசு வலிந்து உருவாக்கியது. இதன் விளைவாக அங்கு 1 லட்சத்து 44 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வேலைவாய்ப்புகள் இழக்கப்பட உள்ளன. தற்போது நீதிமன்ற தலையீட்டால 2ஜி இணைப்புகள் மட்டும் வேலை செய்யத் தொடங்கியுள்ளன. இணையதளங்கள் முழுக்க செயல்படத்தொடங்கவில்லை. குறிப்பிட்ட அரசு ஏற்ற பட்டியலில் உள்ள வலைத்தளங்கள் மட்டுமே செயல்பாட்டில் உள்ளன. தால் ஏரி அருகில் உள்ள விடுதியில் குலாம் ஜீலானி என்பவர் மேலாளராக உள்ளார். இங்கு சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்ட தினத்தில் இருந்து அங்கு புக் செய்யப்பட்ட அனைத்து பயணிகளும் தம் இடங்களை ரத்து செய்துவிட்டனர். தற்போது மூன்று பேர் மட்டுமே அறை எடுத்து உள்ளனர். அதற்கு முன்பு 88 பேர் இங்கு தங்கியிருந்