இடுகைகள்

பால் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

திரில்லர் படங்களை பார்ப்பது ஆரோக்கியத்துக்கு பாதிப்பு ஏற்படுத்தும்! - ரீலா? ரியலா?

படம்
    ரியலா ? ரீலா ? 1. திகில் , திரில் திரைப்படங்களைப் பார்க்கும்போது நம் உடலிலுள்ள ரத்தம் உறையும் . ரியல் : திகில் , திரில் நிறைந்த படங்களை இரவில் பார்த்திருப்பீர்கள் . அப்போது உங்களை அறியாமல் இதயத்துடிப்பு அதிகரிக்கும் . வியர்க்கும் . ஆனால் உங்கள் ரத்தத்தில் ஏதாவது மாற்றங்கள் நடந்திருக்கும் என யோசித்திருக்கிறீர்களா ? திரைப்படக்காட்சி வழியாக படத்தோடு ஒன்றிப்போகும்போது , நம் உடலில் மாற்றங்கள் ஏற்படுகின்றன . அதன் விளைவாக ரத்தத்தில் உள்ள புரதமான ஃபேக்டர் 7 மாறுதலுக்கு உள்ளாகிறது . இதன் விளைவாக ரத்தம் தற்காலிகமாக ஜெல் போல மாறுகிறது என்கிறார்கள் ஆராய்ச்சியாளர்கள் . படங்கள் பார்ப்பவர்களுக்கு மட்டும்தான் என்றில்லை . பங்கி ஜம்ப் விளையாட்டை மேற்கொள்கிறவர்களுக்கும்கூட உடலில் இந்த மாற்றம் ஏற்படுகிறது என ஆய்வில் கண்டுபிடித்துள்ளனர் . ஆபத்து ஏற்படும்போது உடல் தன்னைக் காத்துக்கொள்ளும் வழிமுறைதான் இது . வேறொன்றுமில்லை . 2 . உயரமான கட்டடத்திலிருந்து சில்லறைகளை கீழே வீசி , மனிதர்களின் தலையில் விழுந்தால் அவர் இறந்துவிடுவார் . ரியல் : முட்டாள்கள் தின கண்டுபிடிப்புகளில் இதுவும் ஒன்று

வெயிலை சமாளித்து வாழும் கிரிஸ்பிஆர் எடிட்டிங் செய்யப்பட்ட பசுக்கள்!

படம்
          சுற்றுச்சூழலை தாங்கும் மரபணு மாற்றப்பட்ட பசுக்கள்! கிரிஸ்பிஆர் தொழில்நுட்பம் மூலம் மரபணு மாற்றப்பட்டு பசு ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது. இதன் மரபணு குறைவான வெயிலை ஈர்க்கும்படி உருவாக்கப்பட்டுள்ளது. வெப்பமயமாதல் பாதிப்பு அதிகரித்து வருவதால், மரபணுக்களை கிரிஸ்பிஆர் மூலம் மாற்றுவது, அவற்றின் பாதிப்பை குறைக்க உதவும். இம்முறையில் கால்நடைகள் வெப்பத்தை எதிர்க்கமுடியும். அதன் நிறத்தை நீர்த்துப்போன முறையில் அமைப்பதன் மூலம் சுற்றுச்சூழலை தாக்குப்பிடிக்க முடியும் என்கிறார் நியூசிலாந்தைச் சேர்ந்த கோய்ட்ஸ் லைபிள். இவர் ஏஜி ரிசர்ச் என்ற ஆய்வுமையத்தைச் சேர்ந்தவர். இப்போது நியூசிலாந்தைச் சேர்ந்த பசுக்கள் 20 சதவீதம் வெப்பத்தால் பாதிக்கப்பட்டு கருவுறுதல் பாதிக்கப்பட்டுள்ளது. ஆண்டுக்கு ஒரு கன்று ஈனுவதோடு அவற்றின் பால் உற்பத்தியும் பண்ணைக்கு தேவைப்படுகிறது. வெயில் நேரத்தில் கன்று ஈனுவது கடினமாகி வருகிறது. கருப்பு நிறத்திலுள்ள கால்நடைகள் வெப்பத்தினால் அதிகம் பாதிப்பு அடைகின்றன. எனவே நிறத்தின் அடர்த்தி குறைந்த கால்நடைகள் இருப்பது அவசியம் என்று ஆராய்ச்சியாளர்கள் கருதினர். எனவே இதற்கு  காரணமான பிஎம்இஎல

பசுவைக் காக்க படாதபாடு படும் இந்தியா அரசு! - அமலுக்கு வரும் அவசியமான விதிகள்!

படம்
      cc     கால்நடைகள் விரைவில் முறைப்படுத்தப்படவிருக்கின்றன. வாயில்லாத ஆனால் பாலை பாக்கெட் நிறைய கொடுக்கும் ஜீவன்களை காப்பதுதானே இந்திய ஜனநாயகத்தின் மகத்துவம். கால்நடைகளைப் பற்றிய சிறிய டேட்டா இதோ! 13.6 கோடி கால்நடைகள் இந்தியாவில் உள்ளன. இதில் 2.4 லட்சம் கால்நடைகள் தலைநகர் டில்லியில் வாழ்கின்றன. பசுக்கள் தினசரி தலா 15-30 கிலோ அளவில் சாணியையும் சிறுநீரையும் வெளித்தள்ளுகின்றன. இவை பெரும்பாலும் குப்பையில் வீசப்படுகின்றன. இல்லையெனில் பாவம் தீர்க்கும் கங்கையின் பாகமாக இவையும் மாறுகின்றன. இக்கழிவிலிருந்து அம்மோனியா, சல்பைடு, ஹைட்ரஜன், மீத்தேன் ஆகிய வாயுக்கள் வெளியாகின்றன. புதிய விதிகள் பசுவின் சாணி, சிறுநீரை சாக்கடையில் அள்ளி வீசக்கூடாது. நகராட்சி மாநகராட்சி இதற்கென தனி இடங்களை உருவாக்கி அதில் அவற்றை கொட்டுவார்கள். இதிலிருந்து வறட்டி, எரிவாயு தயாரிக்கும் புதிய ஐடியாக்கள் உருவாக்கப்பட்டுள்ளன. ஒரு கால்நடைக்கு 150 லிட்டர் நீர் மட்டுமே என ரேஷனில் அரிசி நிறுப்பது போல அளவிட்டு வழங்கப்படும். கழிவுகள் நிலத்தடி நீரில் கலப்பதை தடுக்கும் ஏற்பாடுகள் செய்யப்படும். கோசாலைகள் குடியிருப்புகளிலிருந்து 200

சோயா பால் குடித்தால் ஹார்மோன் மாறுமா?

மிஸ்டர் ரோனி சோயாபீன்ஸ் பயன்படுத்தினால் பெண்களைப் போன்ற உடல் அமைப்பு ஆண்களுக்கு வருமா? பசுவிலிருந்து பெறும் பாலுக்கு மாற்றாக சோயா பாலை ஆரோக்கிய வல்லுநர்கள் பரிந்துரைக்கின்றனர். சோயா பாலை அதிகம் பயன்படுத்தினால் உடலில் ஹார்மோன் மாற்றம் ஏற்படும் என்பது உண்மைதான். ஆனால் நாம் நினைப்பது போல பெண்களுக்கான மார்பகங்கள் ஆண்களுக்கு உருவாகி விடாது. உணவுதான் உடலை உருவாக்குகிறது. எனவே அது சோயா உணவுகளுக்கும் பொருந்தும். பிற உணவுகளை விட அதிக புரதம் கொண்டது சோயா. நாம் சாதாரணமாக சமைத்து சாப்பிடும் பீன்ஸ் எடமாமே என்று ஜப்பானில் அழைக்கப்படுகிறது. இது முதிர்ச்சியடையாத பீன்ஸ். முதிர்ச்சி அடைந்த பீன்ஸ் மூலம்தான் டோபு, பால், சாஸ் உள்ளிட்டவை பெறப்படுகிறது. முதிர்ச்சியடைந்த பீன்ஸ் மஞ்சளும் பழுப்பும் கலந்த நிறத்தில் இருக்கும். பழமையான முறையில் தயாரிக்கப்படும் சோயா சாஸில் ஆன்டி ஆக்சிடன்கள் அதிகம். இன்று நவீன முறையில் பல படிமுறைகளைத் தவிர்த்துவிட்டு சந்தைக்காக வேகமாக தயாரிக்கின்றனர். இதனால் அவற்றில் சத்துகள் குறைவு. அடிப்படையான முறையில் தயாரிக்கப்படும் சோயா சாஸிலுள்ள ஆன்டி ஆக்சிடன்களின் அளவு

பால் எலும்புகளை வலுப்படுத்தும் என்பது உண்மையா?

படம்
பால் எனும் அமுதம்! மனிதர்கள் பாலூட்டி விலங்கினங்களிலேயே பால் குடிக்கும் பருவம் தாண்டியும் அதனை குடித்து வருகின்றனர். பால், தூக்கத்தை வரவைக்கும் சிறப்பு கொண்டதாகவும், பல்வேறு சத்துகள் நிரம்பியதாகவும் உள்ளதாக மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். அது பற்றி பார்ப்போம். பால் குடிப்பது காய்ச்சல் காலத்தில் மட்டுமல்ல, பிற நாட்களிலும் நல்லதுதான். இதிலுள்ள கால்சியம், பாஸ்பேட் எலும்புகளின் வளர்ச்சிக்கு உதவுகிறது. இப்போது பால் சார்ந்த பொருட்களின் மேல் குழந்தைகளுக்கு ஒவ்வாமை ஏற்பட்டு வருகிறது. இதன்காரணமாக பாலுக்கு பதிலாக வேறு பொருட்களை சாப்பிட்டு சத்துக்களை நாம் ஈடுகட்ட முடியும். பாலில் விட்டமின் சி, ஃபைபர், இரும்புச்சத்து ஆகியவை இல்லை. புரதம், சர்க்கரை, கொழுப்பு நிரம்பியுள்ளது. பசும்பாலில் 3.7 சதவீதம் கொழுப்பு, 3.4 சதவீதம் புரதம், 4.8 சதவீதம் லாக்டோஸ், 87.4 சதவீதம் நீர் உள்ளது. 1860ஆம் ஆண்டு பிரெஞ்சு நாட்டைச் சேர்ந்த லூயி பாஸ்டர், நுண்ணுயிரிகளை குறிப்பிட்ட வெப்பநிலையில் அழித்து பொருட்களைப் பதப்படுத்தலாம் என்று கண்டுபிடித்தார். அதன் அடிப்படையில் இன்று பால் தொழிற்சாலைகள் பாலை பதப்படுத்தி

குழந்தைகளுக்கு ஏற்படும் அலர்ஜி! - பாதிப்புகளை எப்படி குறைப்பது?

படம்
இன்று குழந்தைகளுக்கு ஆறுமாதங்களுக்கு தாய்ப்பால் மட்டுமே உணவாக கொடுக்கும் பழக்கம் பின்பற்றப்படுவதில்லை. கிராமம், நகரம் இரண்டிலும் அதிகரித்துள்ள பொருளாதார தேவை, குழந்தை வளர்ப்பையும் பாதித்துள்ளது. இதனால் குழந்தைகளுக்கு ஆறுமாதங்களுக்கு உள்ளாக தாய்ப்பால் புகட்டுவதை தவிர்த்து திட  உணவுகளை தரத் தொடங்குகின்றனர். இதனால் குழந்தைகளின் உடல், மன வளர்ச்சியை பாதிக்கும் குறைபாடுகள், நோய்கள் ஏற்படுகின்றன. இதில் முக்கியமானது ஒவ்வாமை. இன்று பல்வேறு உணவுகளில் சேர்க்கப்படும் வேதிப்பொருட்கள் காரணமாக ஒவ்வாமை பாதிப்பு ஏற்பட்டு வருகிறது. இப்பிரச்னை குழந்தைகளுக்கும் ஏற்படுகிறது. எக்சிமா என்பது இதில் முக்கியமான பாதிப்பு. இதனை குணப்படுத்த முடியாது. கட்டுப்படுத்த மட்டுமே முடியும். ஆங்கில மருத்துவமுறையில் ஆயின்மென்டுகள் மூலம் தீர்ப்பதாக கூறினாலும், அது இருக்கின்ற இடத்தில் அதனை உள்ளே அழுத்தி மறைப்பதே.. ஒவ்வாமை ஏற்படுவதற்கான முக்கிய காரணிகளாக இருப்பவை பால் பொருட்கள், வேர்க்கடலை, பாதாம் பருப்பு உள்ளிட்டவை. இவற்றை நேரடியாக எடுத்துக்கொண்டாலும் அல்லது உணவின் பகுதிப் பொருட்களாக இருந்தாலும் ஒவ்வாமை பாதிப்

விவசாயத்திற்கு உதவும் ஸ்டார்ட்அப் நிறுவனங்கள் - ஒரு பார்வை!

படம்
செல்வக்குமார் வரதராஜன்- இடதிலிருந்து இரண்டாவதாக.. விவசாயத்திற்கு உதவும் ஸ்டார்ட்அப் நிறுவனங்கள் தொன்மையான விதை, பூச்சிக்கொல்லி நிறுவனங்களிலிருந்து ஸ்டார்ட்அப் நிறுவனங்கள் மாறுபடுவது, மக்களின் தேவைகளை எளிதாக தீர்த்து வைப்பதில்தான். இதனால் அவை வெற்றிகரமான நிறுவனங்களாக மாறுகின்றன.  பிரதமர் மோடி விவசாயிகளின் வருமானத்தை 2022க்குள் இரட்டிப்பாக்கும் திட்டத்தை அறிவித்துள்ளார். அவரின் நம்பிக்கைக்கு ஊக்கமூட்டும் விவசாய நிறுவனங்கள் இதோ... VilFresh 2016ஆம் ஆண்டு கோவையைச் சேர்ந்த செல்வக்குமார் வரதராஜன் தொடங்கிய ஸ்டார்ட்அப் நிறுவனம் இது. கிராம மக்களிடம் இருந்து பால் பொருட்களைப் பெற்று நகரங்களில் விற்று, அம்மக்களுக்கு உதவுகிறது. இம்முறையில் நேரடியாகவும், மறைமுகமாகவும் இரண்டாயிரம் பேர்களுக்கு மேல் வேலைவாய்ப்பு கிடைக்கிறது. தனது சிறப்பான செயற்பாடு காரணமாக, அண்மையில் 1.15 கோடி ரூபாய் முதலீட்டைப் பெற்றுள்ளது.  விவசாயிகளை மேம்படுத்துவதும், கிராமத்து இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புகளை வழங்குவதும், நகரத்தினரை எங்களது பொருட்களின் மூலம் ஆச்சரியப்படுத்துவதும்தான் எங்கள் நோக்கம் என்றார் செல்வக்குமார்.

ஆன்டிபயாடிக் அபாயம்! - மக்களை பலிகொள்ளும் துயரம்!

படம்
மிஸ்டர் ரோனி வெப்பமயமாதலை ஆன்டிபயாடிக் அதிகரிக்கிறதா? பென்சிலின் எதிர் நுண்ணுயிரி என்று நீங்கள் அறிவீர்கள். அதன் பின்னரே காயங்கள் பட்டு இறக்கும் பல்லாயிரக்கணக்கான மக்கள் காப்பாற்றப்பட்டனர். நோய்த்தொற்று என்பது அவ்வளவு கொடுமையானதாக அன்று இருந்தது. இன்றும் கூட பல்வேறு உறுப்பு மாற்ற சிகிச்சைகள், முக்கியமான அறுவை சிகிச்சைகளில் எதிர் நுண்ணுயிரி மருந்துகளின் பங்கு இன்றியமையாததாக உள்ளது. ஆனால் தொட்டதற்கெல்லாம் இவற்றை நீங்கள் பயன்படுத்தினால் நம்மைத் தாக்கும் கிருமிகள் வலிமை பெற்று எழும். மீண்டும் இவை நம்மைத் தாக்கும்போது எதிர் நுண்ணுயிரி மருந்து வேலை செய்யாது. இதன் காரணமாக எதிர் நுண்ணுயிரி மருந்துகளை அதிகம் பயன்படுத்தாதீர்கள் என பிரசாரம் செய்து வருகின்றனர். தற்போது உலகில் பல நாடுகளிலும் நோய்த்தொற்று காரணமாக  ஏழு லட்சம் பேர் பலியாகி வருகின்றனர். இந்த எண்ணிக்கை இனி குறையாது. இன்னும் கோடிகளுக்கு மேல் பலியாகும் மக்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் என்கிறது உலக சுகாதார நிறுவனத்தின் அறிக்கை. ஆன்டி பயாடிக்கை நான் பயன்படுத்தவே இல்லை என்று யாரும் கூறமுடியாது. நாம் குடிக்கும் பாலில் ஏராளம

காலாவதி எனும் குழப்பம்! -பாலில் அச்சிடப்பட்டுள்ள வார்த்தைகள்!

படம்
செல் பை, யூஸ்டு பை, பெஸ்ட் இஃப் யூஸ்டு பை என பல தேதிகளை நிறுவனங்கள் தங்களது பால் பொருட்களின் மீது அச்சிடுகிறார்கள்.இது பெரும் குழப்பத்தை மக்களுக்கு ஏற்படுத்துகிறது. விளைவு? ஆகா பால் கெட்டுப்போச்சு என பால் பாக்கெட்டை ஃபிரிட்ஜிலேயே கடாசிவிட்டு செல்வதுதான். பெஸ்ட் பை  - சிறந்த தரத்தில் பாலைப் பயன்படுத்துவதற்கான நாள் யூஸ் பை - நல்ல தரத்தில் பொருட்கள் இருக்கும் நாள் செல் பை - இது கடைக்காரருக்கானது. சிறந்த தரத்தில் பால் உள்ள காலத்தைக் காட்டுகிறது. அமெரிக்காவில் மட்டும் 20 சதவீத பால் பொருட்கள் இதுபோன்ற லேபிள்கள் மூலம் வீணாவதாக புள்ளிவிவரங்கள் கூறுகின்றன. அமெரிக்காவிலுள்ள எஃப்டிஏ, கட்டாயமாக பால் பாக்கெட்டுகளில் அதன் காலாவதி நாட்களை குறிப்பிடக்கூறவில்லை. அதன் தரம் பற்றிய குறிப்புகளை மட்டும் அச்சிடக்கூறுகிறது. அமுல் கோல்டு என்றால் 180 நாட்கள் பயன்படுத்தலாம் என்று கூறுகிறார்களே அதுதான். பாஸ்ட்ரைஸ்டு என்று பாலில் அச்சிடப்பட்டிருக்கும். இதன் பொருள், பாலை சூடுபடுத்தி ஈகோலி, சால்மோனல்லா ஆகிய பாக்டீரியாக்களை அழித்திருப்பார்கள் என்பதே. அழிப்பது என்ற வார்த்தை தவறு. கட்டுப்படுத்தியிரு