இடுகைகள்

வளர்ச்சி லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

தொழில்நுட்பத்தில் மேற்கு நாடுகளை மிஞ்சும் சீனா! - எப்படி சாத்தியமாகிறது?

படம்
  தொழில்நுட்பத்தில் சிறந்த சீனா! சீன அரசு, தானியங்கி தொழில்நுட்பங்களை உருவாக்கி தனது நாட்டில் உற்பத்தி திறனை அதிகரித்து வருகிறது.   2010ஆம் ஆண்டு சீனாவில் தொழில்துறை சார்ந்த ரோபோக்களின் எண்ணிக்கை ஐம்பதாயிரமாக இருந்தது. ஆனால் இன்று அதன் எண்ணிக்கை எட்டு லட்சத்திற்கும் அதிகம். உலகில் மூன்றில் ஒரு ரோபோ என்ற கணக்கில் சீனா, உற்பத்திதிறனில் முன்னிலையில் உள்ளது. உற்பத்திதிறனை தொடர்ச்சியாக அதிகரிப்பதன் வழியாக சீனா, செல்வச்செழிப்பான நாடாக வளர்ந்து வருவதோடு பணியாளர்களின் ஊதியமும் கூடி வருகிறது.  முன்பு ஆண்டிற்கு ஆயிரம் டாலர்கள் என்றிருந்த பணியாளர்களின் ஊதியம், இன்று பத்து மடங்காக அதிகரித்துள்ளது. தானியங்கி தொழில்நுட்பங்களின் வரவால், பணியாளர்களின் எண்ணிக்கை குறைந்து ரோபோக்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. சீன அதிபர் ஜின் பிங், இந்த முறையில் உற்பத்தி திறனை அதிகரிக்கலாம் என்பதை அடையாளம் கொண்டு கொள்கைகளை  உருவாக்கி செயல்படுத்தி வருகிறார்.  பொருளாதார வளர்ச்சியில் மூன்று அடிப்படைகள் உள்ளன. ஒன்று, எத்தனை பணியாளர்கள் வேலை செய்கின்றனர், முதலீடு செய்யப்பட்டுள்ள தொகை, பணியாளர்களின் உற்பத்திதிறன் எவ்வளவு

இந்தியாவின் தொழில்துறை வளர்ச்சியை ஊக்குவித்த அறிவியல் அமைப்பு! - இந்தியா 75

படம்
  இன்று அறிவியல் அமைப்புகள் அதில் சேர்க்கப்படும் பல்வேறு முட்டாள்களால் உலகளவில் அவமானப்பட்டுக்கொண்டிருக்கிறது. விலங்கின் கழிவுப்பொருளில் என்ன வேதிப்பொருட்கள் இருக்கிறது என ஆராய்ந்துகொண்டிருக்கிறார்கள். ஒருகாலத்தில் இந்திய அறிவியல் கழகம் நிறுவப்பட்டதால்தான், இந்தியாவின் தொழில்துறை சிறப்பான வளர்ச்சியைப் பெற்றது என்பது உண்மை. இந்தியன் இன்ஸ்டிடியூட்ஆப் சயின்ஸ் எனும் அமைப்பு தொழில்துறைக்கான பல்வேறு ஊக்கத்தை கண்டுபிடிப்புகளை வழங்கியது. பொதுத்துறை நிறுவனங்கள் இந்திய மண்ணில் வேரூன்ற, இந்த அறிவியல் அமைப்பின் பங்களிப்பு மிக முக்கியமானது. அதைப்பற்றித்தான் இங்கே நாம் படிக்கப் போகிறோம்.  இந்திய அறிவியல் கழகத்தை உருவாக்குவதற்கான ஐடியாவைக் கொடுத்தவர் சுவாமி விவேகானந்தர். இவர், ஜப்பானில் இருந்து சிகாகோவுக்கு ஜாம்ஷெட்ஜி டாடாவுடன் ஒரே விமானத்தில் பயணித்தார். அப்போது அவர், மேற்குலகில் இருக்கும் அறிவியல் அமைப்புகளை போல இந்தியாவில் ஒன்றை அமைக்க வேண்டும். அப்போதுதான் இந்தியர்களின் திறமையை உள்நாட்டிலேயே பயன்படுத்திக்கொள்ள முடியும் என்று வலியுறுத்தினார். இதற்குப்பிறகுதான் 1898ஆம் ஆண்டு நவ.23 அன்று தனது முடிவை

ஆய்வகத்தில் தயாரிக்கலாம் பாலை....

படம்
  பால் மற்றும் முட்டை ஆகிய உணவுப்பொருட்களை ஆய்வகத்தில் தயாரித்து விற்பனை செய்வதற்கான முயற்சிகள் நடைபெற்று வருகின்றன.   அமெரிக்காவிலுள்ள பர்ஃபெக்ட் டே என்ற நிறுவனத்தைத் தொடங்கிய உயிரி பொறியாளர் ரியான் பாண்டியா, சோயாவிலிருந்து பால் பொருட்களைத் தயாரித்து வருகிறார். இந்த பாலில் எதிர்பார்க்கும் அனைத்து ஊட்டச்சத்துக்களும் உள்ளது. இப்போது வரை க்ரீம் சீஸை தயாரிக்க முடியாவிட்டாலும் ஐஸ்க்ரீமை உருவாக்கி சாதனை படைத்துள்ளார். இந்த வகையில் விலங்குகளுக்கு மாற்றாக தாவரங்களின் புரதங்களிலிருந்து உணவுப்பொருட்களைத் தயாரிப்பது புதிதல்ல. ரியானின் நிறுவனத்தைப் போலவே அங்கு வேறு பல நிறுவனங்களும் பால் பொருட்களைத் தயாரித்து வருகின்றன.  இதில் புதுமையான விஷயம்,நொதிக்க வைக்கும் முறையில்  நுண்ணுயிரிகளிடமிருந்து குறிப்பிட்ட வேதிப்பொருளை பெற்று அதிலிருந்து பால் போன்ற பொருட்களை தயாரிக்கும் முயற்சிதான்.  இதனை புதிய முறை என்று கூறமுடியாது. பல நூறு ஆண்டுகளுக்கு முன்பிருந்தே ரொட்டி, யோகர்ட், சீஸ், மதுபானங்கள் நொதிக்க வைக்கப்பட்டு தயாரிக்கப்படுகின்றன.  தொண்ணூறுகளில் அமெரிக்காவில் உணவு மற்றும் மருந்து கட்டுப்பாட்டு அமைப்பு(F

சிறந்த முறையில் செயல்படும் மாநிலம் தமிழ்நாடு- இந்தியா டுடே ஆய்வு!

படம்
  தொழில்துறை வளர்ச்சி, கல்வி ஆகியவற்றில் சிறந்த மாநிலமாக தமிழ்நாடு வளர்ந்துள்ளது. எனவே, அனைத்து இந்திய மாநிலங்களையும் முந்தி ஆல்ரவுண்டர் மாநிலமாக முன்னிலை பெற்றுள்ளது.  உள்மாநில உற்பத்தி மதிப்பு 21.6 லட்சம் கோடியாக உள்ளது. இந்த வகையில் இந்திய மாநிலங்களில் தமிழ்நாடு இரண்டாவது இடத்தில் உள்ளது. தமிழக முதல்வர் ஸ்டாலின் இதனை இன்னும் மேம்படுத்தி ட்ரில்லியன் டாலர் பொருளாதாரமாக மாற்ற முயன்று வருகிறார்.  மாநிலங்களிலேயே முதல் மாநிலமாக பொருளாதார கௌன்சில் ஒன்றை தமிழக முதல்வர் அமைத்துள்ளார். அதில் உலகின் முக்கியமான பொருளாதார வல்லுநர்கள் உள்ளனர். 28,508  கோடி ரூபாய்க்கான 49 ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளன. இதன்மூலம் வேலைவாய்ப்பு 83 ஆயிரம் பேருக்கு கிடைக்கும்.  மாநில அரசு விவசாயத்திற்கு உதவும் வகையில், தண்ணீரை சேமித்து பயன்படுத்தும் திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. இந்த வகையில் ஆக்கிரமிப்பில் உள்ள ஆறுகள், ஏரிகள், குட்டைகள் ஆகியவை மெல்ல மீட்கப்பட்டு வருகின்றன. அதேநேரம் மாநிலத்தின் நிதிநிலைமை வெளிப்படையாக வெள்ளை அறிக்கை வெளியிடப்பட்டு கூறப்பட்டுவிட்டது. முந்தைய ஆட்சியை குறை சொல்லி பேசினாலும் இப்போதைய

மதம் சார்ந்து மக்களை புறக்கணித்தால் பொருளாதார வளர்ச்சி கிடைக்காது! ப.சிதம்பரம்

படம்
  ப.சிதம்பரம் எம்.பி. ராஜ்ய சபா காங்கிரஸ் அரசு முப்பது ஆண்டுகளுக்கு முன்னர் பொருளாதார சீர்திருத்தங்களை அமல் செய்தது. இப்போது அதன் நிலை பற்றி தங்கள் கருத்து என்ன? கடந்த முப்பது ஆண்டுகளாக பொருளாதார சீர்த்திருத்தங்களால் நிறைய ஏற்ற இறக்கங்கள் நடைபெற்றுள்ளன. முக்கியமான சீர்திருத்தங்கள் வந்துள்ளன. சில மோசமான முடிவுகளால் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். 2004-2010 காலகட்டத்தில் பொருளாதார வளர்ச்சி சிறப்பாக ஏற்பட்டுள்ளது. 2018-2021 வரையிலான காலகட்டத்தில் வளர்ச்சி தடைபட்டுள்ளது. நான் சீர்த்திருத்தங்கள் பற்றிய கலவையான எண்ணங்களைக் கொண்டுள்ளேன். அரசு இப்போது பொருளாதார வளர்ச்சி மீது கவனம் கொள்ளவில்லை என்று நினைக்கிறேன்.  இப்போதுள்ள மத்திய அரசு தேர்தலுக்காக மக்களை பிரிப்பது, பிரிவினைவாத த்தை ஆதரிப்பது என செயல்பட்டு வருகிறது. மக்களை எடுத்துக்கொண்டால் அவர்கள் அரசு பொருளாதார சீர்திருத்தங்களை செய்யவேண்டாம் என நினைக்கிறார்கள். முழு நாட்டில் உள்ள மக்களுமே வறுமை சூழலில் பயத்துடன் புறக்கணிப்பட்டவர்களாக  வாழ்ந்து வருகிறார்கள்.  கடந்த முப்பது ஆண்டுகளில் வருமானம் அதிகரித்துள்ளது. அதேசமயம் குவிகிற செல்வத்தினால் பாகுப

தெருக்களில் பெண்களை தாலிபன்கள் அடிப்பது உறுதி! - ஸார்கோனா ராஸா

படம்
            ஸார்கோனா ராஸா பிரிட்டிஸ் ஆப்கன் பெண்கள் சங்கம் காந்தகாரில் பிறந்தவரான ராஸா , 1994 ஆம் ஆண்டு ஆப்கானிஸ்தானிலிருந்து தப்பி இங்கிலாந்திற்கு அடைக்கலம் தேடி குடும்பத்தோடு இடம்பெயர்ந்துவிட்டார் . 2004 ஆம் ஆண்டு தொடங்கி ஆப்கானிஸ்தானுக்கு வந்து சென்றுகொண்டிருக்கிறார் . ஆப்கனிலுள்ள பெண்களின் நிலை இனி என்னவாகும் என்று அவரிடம் பேசினோம் தற்போது ஆட்சிக்கு வந்துள்ள தாலிபன்கள் பெண்கள் விவகாரத்தில் முன்னர் நடந்துகொண்டது போல கடுமையாக நடந்துகொள்ளவில்லையே ? நீங்கள் இதனை நம்புகிறீர்களா ?   முன்னர் தாலிபன்கள் நடந்துகொண்டதை விட இப்போது மென்மையாக பெண்கள் விவகாரத்தில் நடந்துகொள்வதாக நான் நம்பவில்லை . காரணம் இன்று ஊடகங்கள் நிறைய வந்துவிட்டன . அவர்களிடம் நேர்மறையாக தங்களை காட்டிக்கொள்ள வேண்டியிருக்கிறது . முஸ்லீம் நாடுகளில் பெ்ணகள் தலையை மறைக்காமல் டிவியில் வந்திருக்கிறார்களா என்று சொல்லுங்கள் . ஆண்களும் , பெண்களும் கலந்து படி்த்த பல்கலைக்கழகங்ளில் பெண்க்ள் மட்டும் தனியாக படிக்கவேண்டும் என தாலிபன்கள் கூறுவார்கள் . தாலிபன்கள் ஆட்சிக்கு வரும் முன்னர் பெண்கள் தலையை மறைக்காமல

கிளப் ஹவுஸ் வரவால் அதிகரிக்கும் ஆடியோ சமூக வலைத்தளங்கள்! - கட்டுப்பாடுகள் கூடுகிறதா? குறைகிறதா?

படம்
              கிளப் ஹவுஸ் என்பது வெறும் கேன்வாஸ்தான் . இதில் பயனர்கள் இல்லையென்றால் அதன் பயன் ஒன்றுமே இல்லை என்று அதன் துணை நிறுவனர் பால் டேவிட்சன் கூறினார் . கடந்த ஆண்டு மார்ச்சில் ஆப்பிள் ஐஓஎஸ்ஸில் அறிமுகப்படுத்தப்பட்ட கிளப்ஹவுஸ் பின்னர் ஆண்ட்ராய்டிலும் வெளியானது . கடந்த மேயில் அறிமுகமாகி மக்களின் ஆதரவைப் பெற்று வருகிறது . உலகம் முழுக்க இருபத்தைந்து மில்லியன் பேர் இந்த ஆப்பில் இணைந்துள்ளனர் . இந்த ஆப்பில் ஒருவர் இணைந்து தனக்கென ஒரு அறையை உருவாக்கிக்கொண்டு என்ன வேண்டுமோ அதனைப் பேசலாம் . பிறர் பேசும் விஷயங்களை பின்பற்றலாம் . அரசியல் , சினிமா , செக்ஸ் , ஆன்மிகம் என எதையும் இங்கே பேசலாம் . பல்வேறு துறை ஆட்களும் இங்கே குழுமி தங்களது துறை சார்ந்த விஷயங்களை பகிரலாம் . பத்திரிகையாளர்கள் இதிலுள்ள அறைகளைப் பயன்படுத்தி செய்திகளைக் கூட திரட்ட முடியும் . கிளப் ஹவுஸ் மட்டுமே ஆடியோரூம் வசதியைக் கொண்டிருக்கவில்லை . வேறு நிறுவனங்களும் இதேபோல வசதியை தங்களது சேவையில் கொண்டு வரவிருக்கின்றன . பேஸ்புக்கில் லைவ் ஆடியோ ரூம் வசதி வரவிருக்கிறது . ட்விட்டரில் ஸ்பேசஸ் எனும் வசதி உள்ளது .

அனைத்து இன மக்களையும் இணைத்து பொருளாதார ஏணியில் ஏற்றிய மாமனிதர் ! லீ குவான் யூ - எஸ்.எல்.வி மூர்த்தி

படம்
                            லீ குவான் யூ சிங்கப்பூரின் சிற்பி எஸ் . எல் . வி மூர்த்தி கிழக்கு தீவு நகரமான சிங்கப்பூர் எப்படி பல்வேறு இன , மத தகராறுகளை சமாளித்து பொருளாதார வளர்ச்சி பெற்றது என விவரிக்கிறது இந்த நூல் . சிறு நகரம்தானே என பலரு்ம் நினைத்தாலும் நாட்டில் ஒழுங்கை எப்படி லீ ஏற்படுத்தினார் என்பது நிர்வாகரீதியாக நிறைய விஷயங்களைக் கற்றுக்கொள்ள உதவுகிறது என்றே கூறவேண்டும் . 1819 இல் உருவான சிங்கப்பூர் ராபிள்ஸ் என்ற ஆங்கில அதிகாரியால் வடிவமைக்கப்பட்டது . அவரைப் பற்றிய தகவலும் , நகரைப் பற்றிய தொலைநோக்கு கொண்டவரை அரசியல் சதிகளால் எ்ப்படி வீழ்த்தினார்கள் என்பதை அறியும்போது வேதனையாக உள்ளது . இன்று சிங்கப்பூரில் ராபிள்ஸ் உரு்வாக்கிய பல்வேறு கல்வி , கலாசார நிறுவனங்கள் செயல்பட்டு வருகிறது என்பது சிங்கப்பூர் மக்களின் நன்றியறிதலுக்கு சான்றாக உள்ளது என்ற தகவல் மட்டுமே ஆறுதலாக உள்ளது . சிங்கப்பூர் வரலாற்றில் ராபிள்ஸூக்கு பிறகு அதேபோன்ற இடத்திற்கு வருபவர்தான் லீ . சீனராக இருந்தாலும் கூட அனைவரையும் அரவணைத்துச் செல்லும் குணம் தொடக்கத்திலேயே இருந்தது அ

நல்ல பழக்கங்களை குழந்தைகள் பின்பற்ற பரிசு கொடுங்கள்!

படம்
            குழந்தைகளின் மூளை வளர்ச்சி வேகம் ! குழந்தைகளின் மூளை வளர்ச்சி முதல் ஐந்து ஆண்டுகளில் வேகமாக இருக்கிறது . ஆனாலும் கூட அவர்கள் உலக அனுபவங்களைப் பெற்றும் முதிர்ச்சி அடையும் வரை அவர்களால் உணர்வுகளைக் கட்டுப்படுத்த முடியாது . இதனால்தான் தனக்கு வேண்டும் என்பதை பிடிவாதம் பிடித்து அழுவது , கோபம் கொள்வது , வருத்தப்படுவது , பொறாமையுறுவது ஆகியவற்றை வெளிப்படையாக காண்பிக்கிறார்கள் . இதே விஷயங்கள் முதிர்ச்சியுள்ள மனிதர்களுக்கு உண்டுதான் . ஆனால் ஏன் வெளிப்படுவதில்லை ? காரணம் அப்படி வெளிப்படுவது நமது சமூக அந்தஸ்துக்கு பொருத்தமானதில்லை எனநம்புகிறோம் . குழந்தைகள் தங்களுக்கு ஏற்ற அல்லது வெளியிடங்களில் பார்க்கும் , கேட்கும் , பேசும் விஷயங்களை கவனிக்கிறார்கள் . அதனை கற்றுக்கொள்வதை இன்டக்டிவ் லேர்னிங் என்று கூறுகிறார்கள் . குழந்தைகளின் மூளைவளர்ச்சி பெறாத நிலையில் வெடிக்கும் எரிமலை போல உணர்ச்சிகளை கொட்டுவார்கள் . ஆனால் அவர்களின் வயது மூன்று அல்லது நான்கு என ஆகும்போது , கவனம் , உணர்ச்சிகளை கட்டுப்படுத்துதல் ஆகியவற்றில் கட்டுப்பாடு இருக்கும் . நினைவுகளை கையாள்வதும் பின்னாளில்

இடம்பெயரும் யானைகள்!

படம்
  இடம்பெயரும் யானைகள்! நகர்ப்புற வளர்ச்சி மற்றும் விவசாய நிலங்கள் அதிகரிப்பு ஆகியவற்றால் யானைகளின் வாழிடம் சுருங்கிவருகிறது. இதன் விளைவாக ஆசிய யானைகள் (Elephas maximus), இமாலய மலைகளுக்குச் செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது என அறிவியல் இதழ் டைவர்சிட்டி அண்ட் டிஸ்ட்ரிபூஷன் தகவல் வெளியிட்டுள்ளது.  இந்தியா மற்றும் நேபாளத்தில் ஆசிய யானைகளில் 60 சதவீதம் பாதுகாக்கப்பட்டு வருகின்றன. 26,330 முதல் 37,770 வரையிலான யானைகள் இந்தியாவில் காணப்படுகின்றன. இந்தியாவில் யானைகள் வாழ்ந்து வந்த 2,56,518 ச.கி.மீ வனப் பரப்பு (41.8%) அழிக்கப்பட்டுவிட்டது. மனிதர்களுக்கும் யானைகளுக்குமான மோதல் அதிகரித்துவருவதோடு, பஞ்சமும் அடுத்த சவாலாக எதிரே நிற்கிறது. எனவே, யானைகள் நீர், உணவுக்கு பிரச்னை இல்லாத மலைகளுக்கு இடம்பெயர்ந்து வருகின்றன. யானைகள் நடமாடும் 101 பகுதிகளிலுள்ள மனிதர்கள், உணவு தேடிவரும் யானைகளை கண்டு திகிலில் உள்ளனர்.  தகவல்: DowntoEarth

இந்தியா ஆர்சிஇபி ஒப்பந்தத்தில் பங்கேற்காதது பொருளாதார வளர்ச்சிக்கு பாதகமே! - ஷியாம் சரண்

படம்
              சியாம் சரண் , முன்னாள் வெளியுறவுத்துறை செயலாளர் இந்தியா ஆர்சிஇபி ஒப்பந்தத்தில் சேர இன்னும் கூட கதவு திறந்திருக்கிறத . இதனை எப்படி பார்க்கிறீர்கள் . இந்த ஒப்பந்தத்தில் இந்தியா இணையவேண்டிய தன்மையைப் புரிந்துகொள்ள இந்த அம்சத்தை முக்கியமானதாக கருதலாம் . இதனை வெறும் வணிக ஒப்பந்தம் என்று மட்டும் புரிந்துகொள்ளமுடியாது . முக்கியமான அரசியல் நிலைப்பாடு எனவும் கொள்ளலாம் . இதில் இந்தியா இணையவில்லை என்பது சரியான பார்வை அரசுக்கு இல்லை என்பதையே காட்டுகிறது . இதில் உள்ள தவறுகளை போதாமைகளை வெளியில் இருந்து கொண்டு கூறுவதை விட உள்ளே சென்று கூறுவது சரியாக இருக்கும் . உலகளவில் நடைபெறும் வணிகத்தில் இந்தியா சிறப்பாக செயல்பட்டு வருகிறது . இந்த வணிகம் முக்கியமான வணிக ஒப்பந்தங்கள் அடிப்படையில் நடைபெறுகிறது . நாம் இதுபோன்றவற்றில் அங்கம் வகிக்காதபோது , நமது சந்தையின் பங்கு விரிவடையாது . இது பிரச்னைக்குரியது . இந்தியா ஜப்பான் மற்றும் ஆசியான் அமைப்பிலுள்ள பிற நாடுகளிடையே வியாபார ஒப்பந்தங்களை செய்துள்ளதே ? அப்புறமென்ன ? பிராந்திய ஒப்பந்தம் என்பதோடு இதனை நீங்கள் ஒப்பிடமு

பீகார் அரசியல், சாதியிலிருந்து விலகி மேம்படவேண்டும் என்பதுதான் என்னுடைய நோக்கம்! - முகேஷ் சாஹ்னி

படம்
          நேர்காணல் முகேஷ் சாஹ்னி விகாஷீல் இன்சான் கட்சி உங்கள் சாதி சார்ந்த சமூகம் பெரிதாக இல்லாத நிலையில் நீங்கள் அதிக சீட்டுகளை கேட்பது எப்படி சரியாக இருக்கமுடியும்? பொதுவான நம்பிக்கையாக குறிப்பிட்ட சாதி சார்ந்த ஆதரவு இருந்தால்தான் ஒருவர் பதவியில் இருக்க முடியும் என நினைக்கிறார்கள். ஆனால் அது உண்மையல்ல. 1990களுக்குப் பிறகுதான் இந்த எண்ணம் அதிகரித்துள்ளது. லாலுபிரசாத் யாதவ், ராம்விலாஸ் பாஸ்வான், நிதிஷ்குமார் ஆகியோர் இப்படி வென்று வந்தவர்கள்தான்.  என்னைப் பொறுத்தவரை அரசியல் என்பது விபத்துதான். நிதிஷ்குமார் ஆட்சியை நீங்கள் எப்படி மதிப்பிடுகிறீர்கள்? இன்னும் இந்த மாநிலத்திற்கு செய்யவேண்டிய வேலைகள் அதிகம் உள்ளன. பிற மாநிலங்களை ஒப்பீடு செய்தால் பீகார் இன்னும் கீழேதான் உள்ளது. தேஜஸ்வி யாதவை விட நிதிஷ்குமார் தெளிவான திட்டங்களை உடையவர். முதல்வர் பதவிக்கு சரியான தேர்வாகவும் இருப்பார். பீகாருக்கான உங்கள் பார்வை என்ன? 2015ஆம் ஆண்டு நான நிஷாத் என்ற எங்கள் இனம் சார்ந்து குரலை எழுப்பினேன். நாங்கள் அதிகாரத்திற்கு வந்தால், எங்கள் இனம் சார்ந்து பல்வேறு கோரிக்கைகளை தீர்க்க முயல்வேன். நீண்டகால நோக்கில்

பசுமைத்திட்டங்கள் நகரங்கள் பாதிப்பைக் குறைக்க வாய்ப்பிருக்கிறதா? பசுமை வளைய திட்டங்கள் தொடக்கம்

படம்
      பிக்சாபே         பசுமை பாதுகாப்பு வளையம் ! பருவச்சூழல் மாறுபாடுகளால் உலக நாடுகள் அனைத்தும் வெள்ளம் , புயல் , வறட்சி , சுனாமி , நிலநடுக்கம் ஆகிய இயற்கை பேரிடர்களால் பாதிக்கப்பட்டு வருகின்றன . இதற்கு முக்கியக்காரணம் , அதிகரிக்கும் மக்கள் தொகையும் அதன்விளைவாக வேகமாக அழிக்கப்படும் காடுகளும்தான் . தற்போது இந்தியாவில் காடுகளைப் பாதுகாக்கும் முயற்சிகள் தொடங்கப்பட்டுள்ளன . 2100 ஆம் ஆண்டில் மக்கள்தொகையில் 90 சதவீதம் பேர் பெரு நகரங்களில் வசிப்பார்கள் என்பதால் , நகரில் உள்ள பல்வேறு ஏரிகள் , குளங்கள் , சதுப்புநிலங்கள் ஆகியவற்றை பாதுகாக்கும் அவசியம் உருவாகி வருகிறது . ” மனிதர்களின் ஆரோக்கியம் இயற்கைச்சூழலோடு தொடர்புடையது” என்று ஐ . நா . அமைப்பின் தலைவர் அன்டானியோ குடாரெஸ் கூறியுள்ளார் . இயற்கைக் சூழல் பற்றி ஐ . நா அமைப்பு அறிக்கை ஒன்றை வெளியிட்டது . அதில் , இயற்கையின் பன்மைத்துவச்சூழல் அழியும்போது , நுண்ணுயிரிகள் விலங்குகளிடமிருந்து மிக எளிதாக மனிதர்களுக்கு பரவும் வாய்ப்புள்ளதாக குறிப்பிட்டது . தற்போது இந்தியாவில் உள்ள பல்வேறு நகரங்களில் இயற்கைச்சூழலை பாதுகாப்பதற்கான பணிகளை