இடுகைகள்

வீட்டில் இருந்து வேலை செய்வதால் மனநலன் சார்ந்த பிரச்னைகள் அதிகரிக்கும்! - டான் ஸ்வாபெய்

படம்
எதிர்கால வேலை என்பது டிஜிட்டலாகவே இருக்கும்! எழுத்தாளர் டான் ஸ்வாபெய் ஆங்கிலத்தில்: மாலினி கோயல் டான் ஸ்வாபெய் எழுத்தாளர் என்பதோடு மனிதவளத்துறை ஆலோசகர் மற்றும் வொர்க்பிளேஸ் இன்டலிஜென்ஸ் நிறுவனத்தின் இயக்குநராகவும் பணியாற்றுகிறார். ஆரக்கிள், அமெரிக்கன் எக்ஸ்பிரஸ், ரான்ஸ்டாட் ஆகிய நிறுவனங்களில் பணியாற்றியுள்ளார். வீட்டிலிருந்து பணியாற்றுவது இப்போதைய நிலைமையாக இருக்கிறது. இதில் பணியாளர்கள் அதிகம் உணர வாய்ப்பிருக்கிறதே? உலகில் இப்போதைய நிலைமையில் லட்சக்கணக்கான தொழிலாளர்கள் தனிமையில் இணையம் சார்ந்துதான் பணியாற்றி வருகின்றனர். நேருக்கு நேராக சந்தித்து பேசுவது என்பதற்கு இணையம் வழியாக சந்தித்து பேசுவது மாற்று கிடையாது. இன்றுள்ள டிஜிட்டல் கருவிகள், மூளையில் டோபமைனை சுரக்க வைக்கும் தன்மையைக் கொண்டுள்ளன. ஆனால் பெருந்தொற்று சூழ்நிலையில் இருநபர்களுக்கான சந்திப்பும் கூட வேறுபட்டுத்தான் அமைய வாய்ப்புள்ளது. உலகம் முழுவதும் வீட்டிலிருந்தே பணி செய்வதற்கான ஏற்பாடுகள் மெல்ல இயல்பாகிவருகிறது. இந்த பணித்தன்மைக்கு எதிர்காலத்தில் என்ன வாய்ப்பு இருக்கிறது? எதிர்காலத்தில் வேலைவாய்ப்புகள் என்பது ஆட

கோவிட் -19 நோய்த்தொற்றால் மும்பையில் குற்றங்கள் குறைந்துவிட்டன! - மும்பை கமிஷனர் பரம்பீர் சிங்

படம்
மும்பை போலீஸ் கமிஷனர் பரம்பீர் சிங் நகரில் குற்றவாளிகளைப் பிடிக்கும் உங்களது நோக்கம் இப்போது மாறியுள்ளது போல உள்ளதே? 26- 11 காலகட்டத்தில் தீவிரவாதிகளின் தாக்குதல், அவர்களை எப்படி முடக்குவது என்பதை யோசித்தோம். கோவிட்-19 பிரச்னையைப் பொறுத்தவரை எதிரியை நம்மால் அடையாளம் காணமுடியவில்லை. எனவே தினசரி சானிடைசர், முக கவசங்களை காவல்துறையினருக்கு வழங்குவதுமாக பணி செய்கிறோம். இதுவரை பணியின்போது பலியான காவல்துறையினரின் குடும்பங்களுக்கு ஐம்பது லட்சம் ரூபாய் வழங்கியுள்ளோம். மேலும் காவல்துறை பவுண்டேஷன் மூலம் பத்து லட்ச ரூபாய் அளித்துள்ளோம். இது மட்டுமன்றி ஆக்ஸிஸ் வங்கியின் ஐந்து லட்சரூபாய் காப்பீடும் வழங்கப்படுகிறது. காவல்துறையினர் கோவிட் -19 தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனரா? இரண்டு இணை கமிஷனர்கள், இரண்டு கூடுதல் கமிஷனர்கள் கோவிட் -19 தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் 3600 காவல்துறையினர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். 900 பேருக்கு கோவிட் -19 நோய்த்தொற்று உறுதியாகியுள்ளது. இதில் 250 பேர் குணமாகி பணிக்கு திரும்பியுள்ளனர். இவர்கள் குணமாகி வரும் சதவீதம் அதிகரித்துள்ளது. உங்களுக்கு வயது 58 ஆகிறது.

பழங்குடிகளின் விற்பனைப் பொருட்களுக்கான குறைந்த பட்ச விலையை அதிகரித்துள்ளோம்! --அர்ஜூன் முண்டா

படம்
telegraph அர்ஜூன் முண்டா, பழங்குடிகள் நலத்துறை அமைச்சர் பழங்குடிகள் விற்கும் 45 பொருட்களுக்கான குறைந்த பட்ச விலையை மத்திய அரசு உயர்த்தியுள்ளது. பொது முடக்க காலத்தில் பொருட்களை குறைவான விலைக்கு பழங்குடிகள் விற்கும் சூழல் நேர்கிறது என்பதால் இந்த அறிவிப்பா? பொதுமுடக்க காலத்தில் வறுமைக்கோட்டிற்கு கீழேயுள்ளவர்களையும் பழங்குடிகளையும் காப்பது அரசின் கடமை. பழங்குடிகள் விற்கும் வனம் சார்ந்த பொருட்கள் 50 இன் குறைந்தபட்ச விலையை நாங்கள் உயர்த்தி அறிவித்துள்ளோம். மேலும் இந்த பட்டியலில் முப்பது பொருட்கள் மீதமிருக்கின்றன. இதுபற்றி அனைத்து மாநில முதல்வர்களுக்கும் செய்தியை தெரிவித்துள்ளோம். இந்த அறிவிப்பு மூலம் பழங்குடிகளின் பொருட்களுக்கு சந்தையில் சரியான விலை கிடைக்க வாய்ப்பிருக்கிறது. பழங்குடிகளுக்கான உணவுப்பொருட்களை எப்படி வழங்கி வருகிறீர்கள்? பழங்குடிகள் நலத்துறை இதுபற்றி அனைத்து மாநில அரசுகளிடமும் பேசி வருகிறது. அவர்கள் விற்கும் பொருட்களின் விலையை உயர்த்துவது இதற்கான முக்கியமான முயற்சி. உணவுப்பொருட்களை பழங்குடிகளுக்கு வழங்குவதற்கான செயல்பாட்டில் அரசும், தன்னார்வத் தொண்டு நிறுவனங்களும் கைகோ

அப்பாவின் பாசமா? காதலனின் நேசமா? முடிவெடுக்க தடுமாறும் மகள் - லவ்லி

படம்
youtube லவ்லி 2012 telugu இயக்கம் – ஜெயா இசை – அனுப் ரூபன்ஸ் ஒளிப்பதிவு – அருண்குமார் எஸ் அப்பாவின் வெறித்தனமான மகள் மீதான பாசம், அவளது காதல் வாழ்க்கையை எப்படி கோக்குமாக்காக மாற்றுகிறது என்பதுதான் கதை. அப்பாக்களுக்கு மகள் மீது தீவிரமான பற்றுதல் இருக்கும். இது அம்மாக்களுக்கு பையன்கள் மீது இருக்கும் ஆசையைப் போலத்தான். ஆனால் இந்த ஆசை, பிரியம் எல்லை தாண்டினால் என்னாகும்? என்பதுதான் கதை. மகாரதி என்ற தொழிலதிபரின் மகள் லாவண்யா. மகாரதி தன் மகள் எப்படி வளரவேண்டும். எங்கு படிக்கவேண்டும், எப்படி திருமணம் ஆக வேண்டும் என்பதையெல்லாம் கனவு கண்டு டைரியில் எழுதி வைத்தபடி இருக்கிறார். அவள் வாழ்க்கை தான் நினைத்தபடி இருக்கவேண்டும் என நினைக்கிறார். வாழ்க்கை நாம் நினைத்தபடியே இருக்கவேண்டும் என்றிருக்க என்ன அவசியம் வந்தது?  அப்படித்தான் அவளுக்குத் தோழியாக வாய்த்தவளான லல்லி மூலம் ஃபேஸ்புக் நண்பர் ஒருவர் பழக்கமாகிறார். தோழி தனது ஆண் நண்பரைப் பார்க்க நினைக்கிறாள். ஆனால் அவளுக்கு திடீரென தயக்கம் தோன்ற, தனக்கு பதில் லாவண்யாவை அனுப்புகிறாள். லாவண்யாவும் ஹோட்டலில் சென்று காத்திருக்கிறாள். அங்கு அவளை சந்

குருவைக் கொல்ல கையில் வாளெடுக்கும் சீடன் - முதல் யுத்தம் -பாலகுமாரன்

படம்
ஜிபி முதல் யுத்தம் பாலகுமாரன்.   சேரதேசத்தில் இருந்து அருண்மொழிப்பட்டன் சோழதேசத்திற்கு குதிரையில் வரும்போது கதை தொடங்குகிறது. காந்தளூர்க் கடிகைச்சாலையில் ஐந்து ஆண்டுகள் போர்ப்பயிற்சியும், ஓராண்டு ஆசிரியப் பயிற்சியும் முடித்துவிட்டு தஞ்சைக்கு வருகிறான். உபதளபதி தகுதியில் அவனுக்கு பதவி கிடைக்க வாய்ப்பிருக்கிறது. ஆனால் அவனுக்கு அதைவிட அவனது காதலி சுந்தரியைப் பார்த்துவிட்டு தன் அம்மாவைப் பார்க்கவேண்டும் என்பதுதான் ஆசை. ஆனால் வாழ்வில் நாம் எதிர்பார்க்கும் அனைத்தும் கிடைத்துவிடுகிறதா என்ன? இதற்கான விஷயங்கள் அவனது குரு குஞ்சன் நம்பூதிரியிடமிருந்தே கிடைத்துவிடுகிறது. அவன் கையில் வெள்ளிக்கேயூரம் கட்டப்பட்டு வெளியேறும்போது, நாம் அனைவரும் விதியின் கைப்பாவைகள். நீயும் நானும் கையில் வாளோடு எதிரெதிராக நிற்கும் சூழல் இருந்தால் என் உடலை அங்கஹீனம் செய்யாமல் நெஞ்சில் வாளைப் பாய்ச்சி கொன்றுவிடு என்று கேட்டுக்கொள்கிறார். முதலில் நமக்கு இதைப்ப்படிக்கும்போது அதிர்ச்சியாக இருந்தாலும், அடுத்த சில பகுதிகளைப் படிக்கும்போது, அந்த வார்த்தை எதிர்காலத்தை ஏறத்தாழ கணித்தபடியே குரு   கூறியிருக்கிறார் என்று உணர

சயாம் பூனை மிரட்டல் தலைவனை கண்டுபிடிக்கும் சங்கர்லால் - நியூயார்க்கில் சங்கர்லால் - தமிழ்வாணன்

படம்
ஜிபி நியூயார்க்கில் சங்கர்லால் தமிழ்வாணன்   தமிழ்வாணனின் அதிரடியான துப்பறியும் நாவல். டோக்கியோ சென்றிருக்கும் சங்கர்லால் அமெரிக்காவுக்கு பமேலா என்ற பணக்கார பெண்ணின் அழைப்புக்காக வருகிறார். ஆனால் அதற்குள் அவர் வருவதைப் பற்றிய செய்தி சட்டவிரோத குழுவின் தலைவனான பூனை என்கிற ஜாக்சனுக்கு கிடைக்கிறது. இதனால் சங்கர்லால் வந்தால் தனக்கு கிடைக்கிற பணம் கிடைக்காது என்பதால் அவரைக் கொல்வதற்கான ஒத்திகைப் பயிற்சியை நடத்த முயல்கிறான். இதில் அநியாயமாக ஜங்கிள்ஜான் என்பவன் உயிரை விடுகிறான். போலீசார் இந்த வழக்கில் பெரிய ஆர்வம் காட்டுவதில்லை. அவர்களுக்கும் சங்கர்லால் துப்பறிவதில் பெரிய ஆர்வம் இல்லை. அவரோடு போட்டியிட்டு அவரை அவமானப்படுத்த நினைக்கிறார் நியூயார்க் காவல்துறை தலைவர் வில்லியம்ஸ். சங்கர்லால் பமேலாவுக்கு வந்த மிரட்டல் கடிதத்தைப்படித்துவிட்டு அவரை கவனமாக பாதுகாக்க நினைக்கிறார். ஆனால் அதற்குள் பூனை ஜாக்சன் முந்திக்கொள்ள நினைக்கிறான். பமேலாவைக் கொல்ல குறிப்பிட்ட நாளில் திட்டமிடுகிறான். ஆனால் அதற்குள் சங்கர்லாலைக் கொல்ல திட்டமிட்டு, அது நடக்காமல் போக அவனது அடியாள் ஆல்பர்ட்டை கொல்ல ஜாக்சன் உத்தர

காதலா, நட்பா குழப்பத்தில் பயணிக்கும் சொந்தக்காரப் பையன்! - சுட்டாலப்பாயி 2016

படம்
தெலுங்கு பன்ச் சுட்டாலப்பாயி ஆதி, நமீதா பிரமோத் இயக்கம்: வீரபத்ரம் சௌத்ரி ஒளிப்பதிவு: எஸ். அருண்குமார் இசை: எஸ். தமன் போலீஸ் கமிஷனரின் தங்கை காவ்யா, அண்ணனின் திருமண ஏற்பாடுகள் பிடிக்காமல் தன் தோழியுடன் உதவியுடன் வீட்டை விட்டு ஓடுகிறாள். அப்போது அவளால் பாதிக்கப்பட்டு அவளது அண்ணனின் கோபத்திற்கு ஆளாகும் பாப்ஜி, மன்னிப்பு கேட்க அங்கு வருகிறான். ஆனால் சூழ்நிலை சிக்கலால், காவ்யாவின் அண்ணன் பாப்ஜிதான் தன் தங்கையை கூட்டிக்கொண்டு செல்கிறான் என இரண்டாவது முறையும் தவறாக புரிந்துகொண்டு அவர்களைப் பிடிக்க போலீஸ் படையை ஏவுகிறார். இருவரும் போலீசில் சிக்கினார்களா? பிரச்னை இல்லாமல் நினைத்த இடங்களுக்கு சென்றார்களா? பாப்ஜி உண்மையில் காவ்யாவை காதலிக்கவில்லையா என்பதுதான் மீதிக்கதை. ஆஹா ஆதி முதல் காட்சியில் ஆச்சரியப்படுத்தினாலும் அதற்குப்பிறகு வரும் காட்சிகளில் நடிப்பதற்கான நிறைய வாய்ப்புகள் கிடைக்கவில்லை. பாடல்கள் வரும்போது மட்டும் துடிப்பாக இருக்கிறார். நமீதா பிரமோத துள்ளலாக நடித்து நடனமாடியிருக்கிறார். பாச அண்ணன் தங்கை கேட்டால் எதற்கு மறுக்க போகிறார்? திடீரென அவர் வீட்டை விட்டு ஓடுவது பொருந்

கட்டணசேவையில் காதலர்களைச் சேர்த்து வைக்கும் காதல் ஒருங்கிணைப்பாளன்! - அட்டா 2013

படம்
  அட்டா இயக்கம்: சாய் கார்த்திக் ஒளிப்பதிவு: அருண்குமார் இசை: அனுப் ரூபன்ஸ்   கல்யாணம் பதிவு செய்யும் சார்பதிவாளர் அலுவலகத்தில் பணி செய்யும் நாயகன் அபி, அங்கு வரும் காதல் தம்பதிகளுக்கு கட்டணசேவை அளித்து திருமணம் செய்து வைக்கிறான். ஆனால் அதிலும் அவர் நேர்மையைக் கடைப்பிடிக்கிறார். ஒருமுறை பணக்கார காதல் தம்பதியை பிரிக்க நினைக்கும்போது, ஏற்படும் சிக்கலால் அவரின் வாழ்க்கையே மாறுகிறது. அவரின் காதலி பிரியா, அவரை விட்டு பிரிகிறார். இருவரும் ஒன்றாக எப்படி சேர்கிறார்கள் என்பதுதான் கதை. ஆஹா சுஷாந்த் நன்றாக நடித்திருக்கிறார். சிலசமயங்களில் வாயில் பீடாவைக் குதப்பிக்கொண்டே வசனம் பேசுகிறாரோ என்று தோன்றுகிறது. ஷான்வி திமிரான பணக்காரி கதாபாத்திரத்திற்கு அம்சமாக பொருந்துகிறார். காதல் பாட்டு முதல் கிளப் பாட்டு முதல் தனக்கு என்ன வருமோ அத்தனை விஷயங்களையும் நம்முன் இறக்கி வைத்திருக்கிறார். ஐயையோ தன் அக்காவிற்கு எப்படி திருமணம் ஆனது என்பதை அவரின் தங்கை அறிய இவ்வளவு தாமதம் ஆகுமா என்று தெரியவில்லை. காதல் சோதனைகள் நீண்டுகொண்டே செல்வது அயர வைக்கிறது. மூத்த மகள் காதல் திருமணம் செய்துகொண்டதற்கே

அனுபவங்களின் அடிப்படையில் முடிவெடுப்பது எப்போதும் சரியானது அல்ல! - உளவியலாளர் பிரக்யா அகர்வால்

படம்
உளவியலாளர் பிரக்யா அகர்வால் நாம் குறிப்பிட்ட விஷயங்களில் முடிவெடுப்பதில் ஏன் தவறுசெய்கிறோம்? நாம் குறிப்பிட்ட விஷயத்தில் முடிவெடுக்க நிறைய தகவல்களை மூளையில் சோதித்தே செய்கிறோம். ஆனால் வேகமாக முடிவெடுக்கும் சூழலில் நாம் நமக்கு கிடைத்துள்ள தகவல்களை பகுத்தறியாமல் உடனே முடிவெடுத்து விடுகிறோம். இதனால் நிறைய பின்விளைவுகள் ஏற்படுகின்றன. இதில் முந்தைய நமது அனுபவங்களை கருத்தில் கொள்கிறோம். அவற்றை நமது பார்வைக் கோணத்தில் அணுகுவதால் முடிவுகள் எப்போதும் சரியாக இருக்கும் என்று சொல்ல முடியாது. இதில் நமக்கு எந்த லாபங்களும் கிடையாதா? ஏன் இல்லாமல். நீங்கள் சிறப்பங்காடிகளுக்கு செல்கிறீர்கள். ஊட்டச்சத்து பானங்களை பார்க்கிறீர்கள். நெஸ்லே, அமுல் என்றால் எது சிறப்பானது என உடனே முடிவு செய்து அமுலை தேர்ந்தெடுப்பீர்கள். இதில் நாம் கலோரியை ஆராய்ச்சி செய்து கொண்டிருந்தால் தேவையில்லாமல் நேரம் வீணாகும் அல்லவா? உணவுப்பொருட்கள் என்பதை தாண்டி இந்த சிந்தனை மக்களின் வாழ்க்கையை மாற்றவும் வாய்ப்பிருக்கிறது. சமூக வலைத்தளங்கள் இந்த விவகாரங்களில் என்ன பங்கை வகிக்கின்றன? அவை மனிதர்களின் ஆழமான ஈகோக்களை மோதி வெடிக்

கர்ச்சீஃபை விட டிஷ்யூ தாள்களே சிறந்தவை! - மிஸ்டர் ரோனி பதில்கள்

படம்
மிஸ்டர் ரோனி விலங்குகளின் கண்மணி மாறுபட்டிருப்பதற்கு என்ன காரணம்? விலங்குகள் பெரும்பாலும் இரவில் வேட்டையாடும் பழக்கம் கொண்டவை. எனவே அதற்கேற்ப அதன் கண்கள் இரையைப் பார்க்கும் விதத்தில் அமைக்கப்பட்டிருக்கும். பாம்புகளுக்கு மட்டுமல்ல, எலிகளுக்கும் இதே போன்ற கண் அமைப்புகள் உண்டு. யார் விழிப்புணர்வாக இருக்கிறாரோ அவரே இந்த திறன் மூலம் வெல்வார். வென்றால் உலகில் வாழும் வாய்ப்பு கிடைக்கும். மனிதர்களின் கண்களில் இருக்கும் தசைகளை விட கூடுதலாக தசைகள் இதற்கு தேவைப்படுகின்றன. விலங்குகள் அதனால்தான் சிறப்பாக வேட்டையாட முடிகின்றது. தூங்கும்போது கனவில்தான் கிரியேட்டிவிட்டியான விஷயங்கள் கிடைக்குமா? பொதுவாக முக்கியமான கண்டுபிடிப்பாளர்கள், தங்களின் சாதனைகள் பற்றி பேசும்போது இப்படி சொல்லியிருக்க கூடும். கனவுகளில் வரும் விஷயங்களுக்கு பொதுவாக லாஜிக் கிடையாது. ஆனால் அதனை நீங்கள் லாஜிக்கோடு பொருத்தி யோசித்தால் ஜெயிக்க வாய்ப்பிருக்கிறது. எழுவதற்கும் தூங்குவதற்கும் இடைப்பட்ட ஹிப்னோஜோகிக் நிலையில்தான் பெரும்பாலும் கிரியேட்டிவிட்டி மடை உடைத்து பாய்கிறது.   ஃபிராங்கன்ஸ்டைன் நாவல் எழுதிய மேரி ஷெல்லி கூட   இந்த

தீப்பந்தம் - மொழிபெயர்ப்பு நேர்காணல் மின்னூலின் தரவிறக்க முகவரி இதோ!

படம்
நேர்காணல்களின் சிறப்பு, குறிப்பிட்ட ஒருவரிடம் பேசும்போது அவர் அந்தந்த சூழல்களின் என்ன நினைக்கிறாரோ அதை பேசவைத்து பதில்களை வாங்க வேண்டும் என்ற சவால் உள்ளது. இதன் காரணமாக கேள்விகளை சுருக்கி பதில்களை நிறைய பெறவேண்டும் என்பதே நேர்காணல்களின் அடிப்படை. இந்த நூல்களில் உள்ள 32 நேர்காணல்கள் இந்தியாவின் முன்னணி நாளிதழ்கள், மாத, வார இதழ்களில் வெளியானவை.  இந்த நேர்காணல்கள் அனைத்தும் கோமாளிமேடை வலைத்தளத்தில் வெளியானவை. வெளியானவற்றில் குறிப்பிட்ட நேர்காணல்கள் மட்டும் தேர்ந்தெடுக்கப்பட்டு அவற்றை செம்மை  செய்து மொழிபெயர்ப்பு நேர்காணல் நூலாக தொகுத்திருக்கிறோம். இந்த நூல் கொரோனா காலத்தில் இந்தியாவில் , உலகில் பல்வேறு துறைகளில் நடைபெற்ற மாற்றங்களை பதிவு செய்கின்றன. புனைவுகள் மட்டுமே காலம் கடந்தும் நிலைத்து நிற்கும் என்று என்னிடம் பேசிய சிறுகதை எழுத்தாளர் ஒருவர் ஏளனமாக சொன்னார். எது நிலைத்து நிற்கப் போகிறது என்பதை காலம் முடிவு செய்யும். நாம் செய்யவேண்டிய எழுத்துக்கு உண்மையாக அதனை எழுதுவதும், அதனை முறையான வழியில் பிறருக்கு பகிர்வதுமே ஆகும். இந்த நூலில் முக்கியமான நேர்காணல்களாக கருதுவது அண்மையில் புற்றுநோய்