வீட்டில் இருந்து வேலை செய்வதால் மனநலன் சார்ந்த பிரச்னைகள் அதிகரிக்கும்! - டான் ஸ்வாபெய்
எதிர்கால வேலை என்பது டிஜிட்டலாகவே இருக்கும்! எழுத்தாளர் டான் ஸ்வாபெய் ஆங்கிலத்தில்: மாலினி கோயல் டான் ஸ்வாபெய் எழுத்தாளர் என்பதோடு மனிதவளத்துறை ஆலோசகர் மற்றும் வொர்க்பிளேஸ் இன்டலிஜென்ஸ் நிறுவனத்தின் இயக்குநராகவும் பணியாற்றுகிறார். ஆரக்கிள், அமெரிக்கன் எக்ஸ்பிரஸ், ரான்ஸ்டாட் ஆகிய நிறுவனங்களில் பணியாற்றியுள்ளார். வீட்டிலிருந்து பணியாற்றுவது இப்போதைய நிலைமையாக இருக்கிறது. இதில் பணியாளர்கள் அதிகம் உணர வாய்ப்பிருக்கிறதே? உலகில் இப்போதைய நிலைமையில் லட்சக்கணக்கான தொழிலாளர்கள் தனிமையில் இணையம் சார்ந்துதான் பணியாற்றி வருகின்றனர். நேருக்கு நேராக சந்தித்து பேசுவது என்பதற்கு இணையம் வழியாக சந்தித்து பேசுவது மாற்று கிடையாது. இன்றுள்ள டிஜிட்டல் கருவிகள், மூளையில் டோபமைனை சுரக்க வைக்கும் தன்மையைக் கொண்டுள்ளன. ஆனால் பெருந்தொற்று சூழ்நிலையில் இருநபர்களுக்கான சந்திப்பும் கூட வேறுபட்டுத்தான் அமைய வாய்ப்புள்ளது. உலகம் முழுவதும் வீட்டிலிருந்தே பணி செய்வதற்கான ஏற்பாடுகள் மெல்ல இயல்பாகிவருகிறது. இந்த பணித்தன்மைக்கு எதிர்காலத்தில் என்ன வாய்ப்பு இருக்கிறது? எதிர்காலத்தில் வேலைவாய்ப்புகள் என்பது ஆட