இடுகைகள்

வாகனத்துறையை மாற்றியமைத்த செயற்கை நுண்ணறிவு!

படம்
  செயற்கை நுண்ணறிவு ஆதிக்கம் – வேலையை பாதிக்குமா? 2005ஆம் ஆண்டு வெளியான பேட்மேன் பிகின்ஸ் ஆங்கிலத் திரைப்படத்தில், நாயகன் அதிநவீன கணினியைப் பயன்படுத்தி ரிமோட் முறையில் பேட்மொபைலை கட்டுப்படுத்துவார். தனது குரல் மூலம் அதனை இயக்கி செயல்படுத்துவார். அறிவியல் புனைகதை படங்களில் இந்த படம் முக்கியமானது. நடைமுறையில், 2023ஆம் ஆண்டில் கூட மெஷின் கன்களை, புவிஈர்ப்புவிசைக்கு எதிராக பயன்படுத்துவது கடினமானது. இன்றுவரையில் கூட இந்த தொழில்நுட்பம் உருவாகி வளரவில்லை. செயற்கை நுண்ணறிவு பல்வேறு தகவல் தொழில்நுட்பங்களிலும் ஓட்டும் வாகனங்களிலும் கூட செயல்பாட்டிற்கு வந்துவிட்டது. இந்த வகையில் எதிர்காலத்தில் நீங்களும் டிஜிட்டல் பொருட்களை பேட்மேன் போல பயன்படுத்த வாய்ப்புள்ளது. செயற்கை நுண்ணறிவு மூலம் தானியங்கி முறையில் கார்களை குரலைப் பயன்படுத்தி கட்டுப்படுத்த முடியும். அப்படித்தான் இன்று கார்கள் தயாரிக்கப்பட்டு வருகின்றன. மனிதர்களின் தலையீடு இன்றி, ஸ்டீயரிங், ஆக்சிலேட்டர், பிரேக் ஆகியவற்றை டெஸ்லா, கடிலாக் ஆகிய கார்கள் கட்டுப்படுத்த தொடங்கியுள்ளன. இதற்கு இந்த நிறுவனங்கள், செயற்கை நுண்ணறிவை தங்களது கார்கள

கொலை வழக்குகளைக் கண்டுபிடிக்க காவல்துறைக்கு உதவும் பல்கலைக்கழக மாணவன்! டோன்ட் கால் இட்ஸ் எ மிஸ்ட்ரி!

படம்
  டோன்ட் கால் இட்ஸ் எ மிஸ்ட்ரி ஜப்பான் டிவி தொடர் சீசன் 1 இந்த டிவி தொடர் முழுக்க உளவியல் தொடர்பானது. குற்றங்களை கண்டுபிடிக்க ஒருவர் எப்படி உளவியல் கோட்பாடுகளை பயன்படுத்தி வெற்றி பெறுகிறார் என்பதை பல்வேறு வழக்குச் சம்பவங்கள் வழியாக விளக்குகிறது. அதிரடியான திருப்பங்கள், துப்பாக்கித் தோட்டாக்கள் என்று தொடரில் ஏதுமில்லை. அனைத்தும் நிதானமாக நடைபெறுகிறது. அதை பல்கலைக்கழக மாணவர் டோட்டனோ குன் கண்டுபிடிக்கிறார். பல்கலைக்கழகத்தில் படிக்கும் டோட்டனோ குன், சமூகத்தின் விதிகளுக்கு அதிகம் பொருந்தாத ஆள். அகவயமானவர் என்பதால், நூல்களை வாசிப்பது, பிடித்த உணவுகளை சமைத்து ரசித்து சாப்பிடுவது, ஓவியக் கண்காட்சிகளுக்கு செல்வது என வாழ்ந்து வருகிறார். அவருக்கு நண்பர்களே கிடையாது. பெண் தோழியும் இல்லை. இப்படி வாழ்பவர் வாழ்க்கையில் கொலை வழக்கு குற்றச்சாட்டு வருகிறது. ஒருநாள் தனது. அறையில் சமைத்து சாப்பிடத் தயாரானவரை காவல்துறையினர் வந்து அவரது பல்கலையில் படிக்கும் வசதியான மாணவரை கொலை செய்துவிட்ட குற்றத்திற்காக கைது செய்கிறார்கள். முறையான அரஸ்ட் வாரண்ட கூட கிடையாது. கூட்டிபோய் மிரட்டி அவரை குற்றவாளி என

கிரியேட்டிவிட்டி பற்றி சாதனையாளர்கள் கூறும் கருத்துகள்!

படம்
  கிரியேட்டிவிட்டி பற்றி பிரபலங்கள் கூறிய கருத்துகள்… உங்களின் உள்ளுணர்வை நம்புங்கள். நான் பிறர் கூறுவதை கவனமாக கேட்பேன். ஆனால் நாளின் இறுதியில், என்னுடைய   முடிவை   நானே தீர்மானிப்பேன். இப்படி செயல்படுவது, பின்னாளில் நீங்கள் உருவாக்காத முடிவுக்காக வருத்தப்படுவதை விட சிறந்ததுதான். -உடை வடிவமைப்பாளர் பீட்டர் டூ சில சமயங்களில் நமக்குள்ளிருந்து இயற்கையாக, வேகமாக வெளியே வரும் விஷயங்களை சிறந்த படைப்பு என கொள்ளலாம். அதுதான் உங்களுக்கு கிடைத்த பரிசு. அதை நம்புங்கள். -பத்திரிகையாளர் ஜோ ஹோல்டர் உங்களின் உள்ளுணர்வை நம்பி சவால்களை எதிர்கொள்ளுங்கள். அது அன்றைய சூழலுக்கு எதிராக கூட இருக்கலாம்.   பரவாயில்லை. நீங்கள் வேலை செய்யும் முறையைக் கவனியுங்கள். அங்குதான் உண்மையான மாயம் நடக்கிறது. வேலையின் முடிவை விட அதன் செயல்முறையில் கவனம் வைத்தால் நாம் இலக்கை நோக்கிய பயணத்தை விரைவில் அடையும் வழிகள் கிடைக்கும். -யூரி சோய், துணை நிறுவனர், சவில் ரோ டெய்லர் யூரி அண்ட் யூரி உங்கள் உள்ளுணர்வை ஓட்டியிருங்கள். நான் ஆராய்ச்சி செய்யும்போது சுதந்திரமாக அதை செய்யும்போதுதான் சிறப்பாக இயங்கியிருக்கிறேன்.

கேம்ஸாப், ஏத்தர் வெற்றிக்கதை - 40 அண்டர் 40 பார்ச்சூன் பட்டியல்!

படம்
  தருண் மேத்தா, இயக்குநர், ஏத்தர் ஸ்வப்னில் ஜெயின், தருண் மேத்தா, ஏத்தர் யாஸாஸ் அகர்வால், கௌரவ் அகர்வால், கேம்ஸாப் கேம்ஸாப் கேம்ஸாப் யாஷாஸ் அகர்வால் கௌரவ் அகர்வால் கௌரவ், புதிர்களைத் தீர்ப்பதில் ஆர்வம் கொண்டவர். யாஸாஸ் அகர்வாலுக்கு மொபைலில் விளையாட்டுகளை விளையாடுவதில் ஆர்வம் உண்டு. இதுதான் கேம்ஸாப் நிறுவனம் தொடங்குவதற்கான விதை. இந்திய நாட்டிலுள்ள 65 சதவீத மக்கள் தொகையினர் 35 வயதினராக இருக்கிறார்கள். தொழிலுக்கு இதை விட நல்ல விஷயம் என்ன வேண்டும்? பல்வேறு விளையாட்டுகளை டெவலப்பர்களிடம் பேசி உரிமம் பெற்று வாங்கி அதை பிரபலமான ஆப்கள், வலைத்தளங்களில் இணைத்துவிடுவதே கேம்ஸாப்பின் வேலை. இப்படி செய்து கடந்த ஆண்டு 42 கோடி ரூபாய் வருமானம் பெற்றுள்ளனர். இதில், அவர்களோடு இணைந்துள்ள வலைத்தளம், ஆப்களுக்கு 50 சதவீத தொகையை ஒப்பந்த தொகையை வழங்கிவிட்டனர். கேம்ஷாப்பின் இயக்குநர், யாஸாஸ் அகர்வல். கேம்ஸாப் வேலை செய்யும் என்று தெரிந்தவுடன் கௌரவ், தான் பெய்ன் கன்சல்டன்சியில் பார்த்து வந்த வேலையைக் கைவிட்டார். அட்வெர்கேம் டெக்னாலஜிஸ் பி. லிட் என்பதே கேம்ஸாப்பின் தாய் நிறுவனம். இன்று கேம்ஸாப்பின் விளையாட

உடல் எடையைக் குறைக்க உதவும் உணவுப்பொருட்கள்!

படம்
  natashapehrson.com உடல் எடையைக் குறைக்க உதவும் உணவுப்பொருட்கள் இன்று ஏராளமான டயட்கள் நடைமுறையில் உள்ளன. நீங்கள் எந்த டயட்டை பின்பற்றினாலும் சில உணவுப்பொருட்களுக்கு உரிய தனித்தன்மைகள் உண்டு. அந்த வகையில் அவை ஒருவரின் உடலை மெலிதாக்குகிறது. பழக்கமாக்கிடுங்க என விளம்பர பாணியில் கூற முடியாது. ஆனால் வாய்ப்பு கிடைத்தால் மறக்காமல் வாங்கி சாப்பிடுங்கள் என்று வைத்துக்கொள்ளுங்களேன். யோகர்ட் யோகர்ட்டை சூப்பர் மார்க்கெட்டில் வாங்கி சாப்பிட்டிருக்கிறீர்களா? இல்லையென்றால் பழக முயற்சிக்கலாம். அதில், குறைந்தபட்சம் இரண்டுக்கும் மேற்பட்ட பாக்டீரியாக்கள் அதில் இருக்க வேண்டும். லாக்டோபேசில்லஸ் பல்கேரியஸ், ஸ்ட்ரெப்டோகாகஸ் தெர்மோபிலஸ் ஆகியவை பாக்டீரியாக்களுக்கு உதாரணம். யோகர்டை சாப்பிட்டால் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதோடு, ஜிம்மில் செய்யும் தசை அழகு பயிற்சியை ஆதரித்து வளப்படுத்தும். யோகர்ட்டை பிளெயின் என்ற வகையில் வாங்கி பயன்படுத்தவேண்டும். குறிப்பிட்ட ஃபிளேவர் வகையில் வாங்கினால் அதில் சர்க்கரை அளவு அதிகமாக இருக்கும். யோகர்டில் சர்க்கரைக்கு பதிலாக பழங்களை இனிப்புக்காக சேர்த்து சாப்பிடலாம். கால

குறிப்பிட்ட பகுதியில் உள்ள கொழுப்பை மட்டும் குறைக்க முடியுமா? - மிஸ்டர் ரோனி

படம்
  உடலின் குறிப்பிட்ட பகுதியில் உள்ள கொழுப்பை மட்டும் குறைக்க முடியுமா? இணையத்தில், நாளிதழில் கூறப்படும் செய்திகளை அடிப்படையாக வைத்து பலரும் இந்த கேள்வியைக் கேட்கிறார்கள். லிப்டன் டீ விளம்பரத்தில் கூட வயிற்றில் உள்ள கொழுப்பை குறைக்க டீ அருந்தினால் போதும் என கூறுகிறார்கள். ஆனால் இதற்கு அறிவியல்ரீதியாக எந்த   ஆதாரமும் இல்லை. உடலில் கொழுப்பு சேகரிக்கப்படுவது, பின்னாளில் தேவைப்படும்போது எடுத்து பயன்படுத்திக்கொள்ளத்தான். வயிறு, தொடை, மார்பு என அதை தனி மனிதர் தீர்மானிக்க முடியாது.   குறிப்பிட்ட இடத்தில் கொழுப்பைக் குறைத்து அந்த இடத்தில் தசை அழகை கூட்ட நிறையப் பேர் முயல்கிறார்கள். கொழுப்பு குறைந்து உடல் ஒல்லியாவது அல்லது குறிப்பிட்ட கட்டமைப்பிற்குள் வருவது உடல் முழுக்க நடைபெறும் ஒத்திசைவான செயல்பாடு. உடல் எடை குறைப்பு இந்த வகையில் நடைபெற்றால்தான் ஆரோக்கியமானது. எடை குறைப்பு என்பது குறிப்பிட்டளவில் நின்றுவிட்டால், ஒருவர் தான் சாப்பிடும் உணவு முறையை மாற்ற வேண்டுமா? உணவுமுறையில் காய்கறிகள், குடிக்கும் நீர் அளவைக் கூட்டவேண்டும். உடல் எடை குறையாதபோது குறிப்பிட எடையில் நிலைத்து இருக்க ஏற்றபட

கிரியேட்டிவிட்டியை அடையாளம் காண்பது எப்படி? - சில அறிவுறுத்தல்கள்....

படம்
  புதுமைத்திறன் உலகம் கிரியேட்டிவிட்டியை உருவாக்கிட பிறருக்கு தெரியாத கலை வடிவம் ஏதும் கிடையாது என எழுத்தாளர் ரிக் ரூபின் கூறுகிறார். இவர் இதுபற்றி, தி கிரியேட்டிவ் ஆக்ட் – எ வே ஆஃப் பீயிங் என்ற நூலை எழுதியிருக்கிறார்.’’ நீங்கள் கிரியேட்டிவிட்டியை நாடகம் போல எடுத்துக்கொண்டு முன்னேறி செல்லுங்கள். நிஜ உலகைப் போலவே அனைத்து விஷயங்களையும் உருவாக்குங்கள். அது சிறியதாக அல்லது   வினோதமாக கூட இருக்கலாம். புதிய பரிசோதனை முயற்சிகளை செய்து பாருங்கள். உங்கள் நண்பர்களுக்கு நீங்கள் உருவாக்கியதை காட்ட நினைத்தால் உலகில் அதை வெளியிடலாம்.’’ என்பது இவரது கருத்து. தனி பார்வை ‘’உங்களுக்கென தனி பார்வையை உருவாக்கிக்கொள்ளுங்கள்’’ என ஒளிப்பதிவாளர் ரோஜர் டீக்கின்ஸ் கூறுகிறார். இவர் 50 திரைப்படங்களைப் பார்த்து அதன் வழியாக தனக்கான கிரியேட்டிவிட்டி பாதையை உருவாக்கிக்கொண்டார். தன்னை வழிநடத்திய திரைப்படங்களாக எ பியூட்டிஃபுல் மைண்ட் தொடங்கி 1917 என்ற திரைப்படங்கள் வரை குறிப்பிடுகிறார்.’’யாரையும் நகல் செய்யாதீர்கள்’’ என்றும் குறிப்பிட மறக்கவில்லை. ஆற்றலின் பிரதிபலிப்பு ‘’நான் திரைப்படங்களுக்கான நடிகர்களை அடைய

மைண்ட்ஃபுல்னெஸ் ஈட்டிங் - உணவை ஐம்புலன்களால் உள்வாங்கி உண்ணும் முறை!

படம்
    கவனம் ஒருமித்த உணவு உண்ணும் முறை – மைண்ட்ஃபுல்னெஸ் ஈட்டிங் காலை, மதியம், இரவு என மூன்று வேளைகளிலும் உணவு உண்கிறோம். ஆனால் உணவை எந்தளவு கவனித்து உண்கிறோம் என்பதில்தான் சிக்கல் எழுகிறது. இதனால், ஒரு வாரத்தில் என்னென்ன வகையான உணவுகளை எப்போது, எந்தளவில் சாப்பிட்டோம் என்று தாளில் எழுதச்சொன்னால் நினைவுபடுத்த முடியாமல் தவித்துப்போய்விடுவோம். இதற்கு காரணம், சாப்பிடும்போது டிவி அல்லது ஓடிடியில் படம் பார்ப்பது, ஸ்பாடிபையில் பாடலை ஒலிக்கவிட்டு சாப்பிடுவது, நூல்களை படித்துக்கொண்டே சாப்பிடுவது   என நிறைய கவனத்தை சிதைக்கும் விஷயங்கள் உள்ளன.   இதன் விளைவாக, உணவு உண்ணும் அளவு அதிகரிக்கிறது. மன அழுத்தம் அதிகமாக இருக்கும்போது, உணவின் அளவு கூடி, நாளடையில் உடல்பருமன் ஏற்படுகிறது. இதன் விளைவாக, நீரிழிவு நோய், இதயநோய் பிரச்னைகள் எழுகின்றன. கவனம் ஒருமித்த உணவுமுறையில் உணவை எப்படி சாப்பிடுவது?, தட்டில் உணவை எடுத்து வைத்துக்கொண்டு அதன் வாசனையை முகர்ந்து பார்ந்து மிக நிதானமாக அதை உண்ணவேண்டும். இந்த நேரத்தில் ஒருவர் உணவைப் பற்றி மட்டுமே சிந்திக்கவேண்டும். ஐம்புலன்களாலும் உணவை உணர்ந்து சாப்பிட்டால்,

மாஃபியா கேங்கின் கொலை முயற்சியைத் தடுத்து காதலியைக் காக்கும் ராணுவ அதிகாரி! மிஸ்டீரியஸ் லவ் - சீன டிவி தொடர்

படம்
  மிஸ்டீரியஸ் லவ் (2021) சீன டிவி தொடர் பதினாறு எபிசோடுகள் ருவான் நினான் சூ என்ற நாடக நடிகைக்கும், ராணுவ வீரனுக்கும் உருவாகும் காதல் நிறைவேறியதா இல்லையா என்பதே கதை. ருவான் என்ற நாடக நடிகைக்கு ஐந்து ஆண்டுகளுக்கு முன்னர் நடந்த சம்பவம் அடிக்கடி கனவாக வந்துகொண்டிருக்கிறது. அந்த நேரத்தில், ருவான் மாஃபியா கும்பலால் கடத்தப்படுகிறார். அவரை, அந்த குழுவில் கருப்பு ஆடாக இருந்த ராணுவ அதிகாரி லீ, காப்பாற்றுகிறார். அதேசமயம் கப்பலில் நடைபெறும் விபத்தில் அவர் இறந்துபோகிறார். அதாவது, ருவான் அப்படி நினைத்துக்கொள்கிறார்.   ருவானுக்கு, ராணுவ அதிகாரி தன்னைக் காப்பாற்றிய காரணத்தால் அவரை எப்போதும் நினைத்துக்கொண்டே இருக்கிறார். அவர் தனக்கு கொடுத்த பூச்செடியை தொட்டியில் வைத்து ஐந்து ஆண்டுகளுக்கு மேல் பராமரிக்கிறார். இறந்துபோய்விட்டார் என மனது சொன்னாலும், அதே மனதின் இன்னொருபகுதி அப்படி நடந்திருக்காது என கூறுகிறது. பின்னாளில் ருவான், தனது வெய் குழுவினரின் நாடகத்திற்காக முன்னணி விளம்பர மாடல் ஒருவரை அழைக்கப் போகும்போது அவருக்கு பாதுகாவலராக இருப்பவர், ராணுவ அதிகாரி லீ சாயலில் இருப்பதைப் பார்க்கிறாள்.

இயற்கைப் பாதுகாப்பு சட்டங்களை நடைமுறைப்படுத்த வலிமையான அரசியல் தலைமை தேவை - பெலிண்டா ரைட் , சூழலியலாளர்

படம்
  பெலிண்டா ரைட், சூழலியலாளர் பெலிண்டா ரைட், சூழலியலாளர்  பெலிண்டா ரைட் தலைவர், வைல்ட்லைஃப் புரடக்‌ஷன் சொசைட்டி ஆஃப் இந்தியா இந்தியா, புலிகள் பாதுகாப்பில்,   50 ஆண்டுகளைக் கடந்திருக்கிறது. இதை எப்படி பார்க்கிறீர்கள்? இத்தனை ஆண்டுகள் கழித்தும் காடுகள் அழியாமல் இருக்கின்றன. அதில் வாழ்ந்த புலிகளின் எண்ணிக்கையும் அதிகரித்து வந்துள்ளது என்ற செய்தி அதிசயமாகவே உள்ளது. புலிகளின் வாழிடத்திற்கு அருகில் வாழ்ந்து வந்த மக்களின் சகிப்புத்தன்மை, புலிப்பாதுகாப்பு திட்டத்தின் சிறப்பான அணுகுமுறை ஆகியவற்றை பற்றி இந்தியா நிச்சயமாக பெருமைப்படலாம். ஆனால், எதிர்காலத்தில் இந்தியா மனிதர் விலங்கு மோதல் என்ற பெரிய சவாலை சந்திக்கவேண்டியுள்ளது. மக்களிடம், காடுகளில் உள்ள புலிகளைப் பாதுகாப்பதில் முன்னர் காட்டிய சகிப்புத்தன்மை மெல்ல மறைந்து வருகிறது. அரசின் எரிவாயுவிற்கான மானியம் குறையும்போது காட்டில் உள்ள விறகுகளைத் தேடி மக்கள் வருவார்கள், நகர கட்டுமானத்திற்கான சட்டவிரோத மணல் குவாரிகள், காட்டு விலங்குகளைத் தடுக்கும் சட்டவிரோத மின்சார வேலிகள் ஆகியவற்றை நாம் அடையாளம் காண வேண்டும். காட்டுத்தீ மற்றும் காட்டில்