இடுகைகள்

காவல்துறை லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

பட்டியலினத்தவர்கள் மீது தாக்குதல் - ராஜஸ்தான் முதலிடம்

படம்
கடந்த பத்தாண்டுகளில் பட்டியலினத்தவர்கள் மீது அதிகளவு தாக்குதல்கள் நடத்தப்பட்ட விவரம் வெளியாகியுள்ளது. கரகோஷத்துடன் முதல் இடத்தை ராஜஸ்தான் மாநிலம் பெற்றுள்ளது. கடந்த ஆண்டில் மட்டும் 8,591 வழக்குகள் எஸ்சி, எஸ்டி இனத்தவர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல்களுக்காக பதியப்பட்டுள்ளது. 2014ஆம் ஆண்டு இத்தாக்குதல்களின் அளவு 8,451ஆக பதிவு செய்யப்பட்டுள்ளது. அண்மையில் நாகர் மாவட்டத்தில் நடைபெற்ற தலித்துகள் மீதான தாக்குதலில் ஒருவரின் ஆசனவாயில் ஸ்க்ரூ ட்ரைவரை செருகியுள்ளனர். இவர்கள் திருடியதாக குற்றம்சாட்டப்பட்டு இப்படி ஒரு குரூரமான தண்டனை அளிக்கப்பட்டுள்ளது. பாஜக ஆட்சி செய்த முந்தைய காலத்திலும் தலித்துகள் மீதான தாக்குதல் குறையவில்லை. 2018ஆம் ஆண்டைவிட 2019ஆம் ஆண்டில் 50.67 சதவீதம் பட்டியலினத்தவர்கள் மீதான தாக்குதல் அதிகரித்துள்ளது. 2018 இல் காவல்துறை பதிவுகள்படி 5,702 வழக்குகள்தான் பதிவாகியுள்ளன. இதில் 47 சதவீத தாக்குதல்கள் தலித்துகள் மீது நடத்தப்பட்டுள்ளது. குற்றச்சம்பவங்கள் நடக்கும் வேகமும் 31 சதவீதம் அதிகரித்துள்ளது. குற்றவழக்குகள் அதிகரிப்புக்கு முக்கியக்காரணம், காவல்நிலையத்திற்கு

சிங்கப்பூர் - 70 ஆண்டு சாதனை

படம்
Women's News Agency காவல்துறையில் பெண்கள் - 70 ஆண்டு சாதனை சிங்கப்பூர் காவல்துறை மிகச்சிறப்பான சாதனையை சத்தமில்லாமல் செய்துள்ளது. ஆம். இங்கு பெண்கள் பணியாற்றத் தொடங்கி 70 ஆண்டுகள் நிறைவாகியுள்ளது. நூர் ஹஃபிஸா ஹருன், வேகமாக காரில் வந்தவரை தடுத்து நிறுத்தினார். அவர் கேட்ட முதல் கேள்வி, பெண் ஆஃபீசரா என்பதுதான். ஏன் பெண் ஆஃபீசர் பைக்கில் ட்ராஃபிக் போலீஸ் வேலை பார்க்க கூடாதா?  என்ற ஹருன், அபராதத்தை எழுத தொடங்கினார். ஆச்சரியம்தான். இருபத்தெட்டு வயதில் ஹருன் ஸ்டாஃப் செர்ஜென்டாக உள்ளார்.  இதுபோல பெண் ஆஃபீசரா என்ற கேள்விகளைக் கேட்டு அலுத்துப் போய்விட்டேன்.  ஏன் பெண்கள் பைக் ஓட்டக்கூடாதா, முடியாதா? முடியாது என்றால் அது பொய். ஆண்களைப் போலவே நாங்களும் பயிற்சி பெற்று பைக் ஓட்டுகிறோம் என்கிறார். சிங்கப்பூர் காவல்துறையில் 19 சதவீத பெண்கள் பணிபுரிகின்றனர். மொத்தம் 1,800 பேர்.  பெண்களை காவல்துறையில் பணி அமர்த்துவது என்பது தொடங்கிய ஆண்டு 1949. பரிசோதனை முயற்சிதான். ஆனால் மகத்தான வெற்றி பெற்றிருக்கிறது. மக்களிடையே அவ்வளவு புரிந்துணர்வு இல்லையென்றாலும் அரசு பெண்களுக்கு கொட