இடுகைகள்

சைக்கோ கொலைகாரர்கள் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

இதயமற்ற சாத்தான் - டெட் பண்டி

படம்
டெட் பண்டி - தேவ அசுரன்! அசுரன் என்ற பெயர் இங்கு தீவிரத்தன்மையைக் குறிக்க மட்டுமே பயன்படுத்தப்படுகிறது. டெட் பண்டிக்கு விநோத பழக்கமிருந்தது. பெண்கள் கல்லூரி பக்கம் வண்டியை விட்டு ஏதோ உதவி கேட்பது போல நடித்து காருக்குள் மயக்கமுறச்செய்து தள்ளுவான். அவ்வளவுதான் அவர்களுக்குத் தெரியும். பிறகு நடக்கும் சித்திரவதை அவர்கள் உயிர்பிரியும் கடைசி நொடிவரை மறக்க முடியாது. நல்ல இரும்பு ராடால் அடித்து வீழ்த்துவான். பிறகு வேட்கையோடு செக்ஸ் வைத்துக்கொண்டு பின்னர் கொல்லுவான். ஆளற்ற மரங்கள் நிறைந்த இடத்தில் உடலை புதைப்பான். அதேசமயம் செக்ஸ் ஆசை தோன்றினால் புதைத்த பிணங்களைத் தோண்டிக்கூட செக்ஸ் வைத்துக்கொண்டிருக்கிறான். அப்படி ஒரு வெறியாட்டம். கேட்டவுடனே போலீசுக்கே தலை கிறுகிறுத்தது. மேலே நீங்கள் பார்க்கும் பெண்கள் எல்லாரும் டெட்டால் பொட்டலமாக கட்டி தூக்கி எறியப்பட்டவர்கள். செக்ஸ் முடிந்ததும் உருக்குலைக்கப்பட்டு கொல்லப்பட்டவர்கள். டெட் பண்டிக்கு பெண்களின் மீது ஆசையும் வெறியும் தணியவேயில்லை. பசிஃபிக் நார்த்வெஸ்ட் பகுதியில் மட்டும் டெட் பண்டி தன் பீட்டில் கார்களை நிறுத்தி மாதம் ஐந்து பெண்களை வேட

அசுரகுலம் - சிறுமி எங்கே?

படம்
 காதலி ... காதலே அழி! 2001 ஆம் ஆண்டு ஜூன் மாதம். இங்கிலாந்தைச் சேர்ந்த  டேனியல்லா ஜோன்ஸ், அன்று மாலை வீடு திரும்பியிருக்க வேண்டும். ஆனால் வரவில்லை. நேரம் ஆக ஆக அவரின் அம்மா லிண்டாவுக்க பதற்றம் அதிகரித்தது.தன் கணவர் ஆண்டனியிடம் புலம்பியவர்,  மகளின் தோழிகளுக்கு போன் போட்டு பேசியவர், ஒருகட்டத்தில் போலீசில் புகார் கொடுக்க முடிவு செய்தார். பள்ளி முடிந்து  கிளம்பிய டேனியல்லா பள்ளி அருகே இருந்த பஸ் ஸ்டாப்பில் நின்றிருந்தார். அப்போது அங்கு வந்த நீல நிற வேன் அருகே நின்று ஒருவரிடம் பேசியிருப்பதை போலீசார் கண்டுபிடித்தனர். யார் அவர் என்று பார்த்தால், அவர் டேனியல்லாவின் மாமா, ஸ்டூவர்ட் கேம்ப்பெல். போலீஸ் அங்கே இங்கே தேடியும் நானோ அளவுகூட ஆதாரம் கிடைக்கவில்லை. ஸ்டூவர்ட்டின் ஹிஸ்டரியை அப்போது கூட போலீஸ் தோண்டவில்லை. நமது போலீஸ் போல காதலா, கள்ளக்காதலா என டாஸ் சுண்டிப்போட்டு பார்ப்பதற்குள் சித்திரவதைக்குள்ளான டேனியல்லா பரலோகம் போயிருந்தார். அதை உறுதிப்படுத்தக்கூட போலீசுக்கு பெண்ணின் உடல் கிடைக்கவில்லை. அங்கும் இங்கும் தேடிப்பார்த்த போலீஸ் ஒருகட்டத்தில் ஸ்டூவர்ட்டின் மீது சந்தேகம் வந்து அ

சைக்கோ கொலைகாரர்களின் உளவியல் என்ன?

படம்
சைக்கோ கொலைகாரர்கள் யார் இவர்கள்? சைக்கோ கொலைகார ர்கள் நிச்சயம் யாரோ என்று கூற முடியாது. அப்படி ஒரு காலகட்டம் இது. உங்கள் அருகிலுள்ளவராக, ஏன் நீங்களே கூட இருக்கலாம். சிறுவயதில் ஏற்படும் ஆளுமை சார்ந்த குழப்பங்கள், சமூக புறக்கணிப்பு, மரபணு ரீதியான வன்முறைத் தூண்டல் ஆகியவையும் இதில் முக்கியமானவையாக மருத்துவர்கள் குறிப்பிடுகின்றனர். அதற்காக செல்வ ராகவன் படத்தில் வருவது போலவே, பாலா படத்தில் டை அடித்துக்கொண்டு கழுத்து சங்கைக் கடிப்பவர்கள் போலவோ உளவியல் பாதிப்புள்ளவர்கள் இருக்க மாட்டார்கள். போ டை கட்டிக்கொண்டு பாந்தமாக பேசியபடியும் பிறரை ஈர்க்கும்படியும் கூட இருப்பார்கள். இப்படித்தான் இருப்பார்கள் என்று நான் இங்கு கூறுவது கூட பொய்தான். இதுவும் மாறும். நான் கூறுவது அனைத்தும் மருத்துவர்கள் தொகுத்தளித்த ஆய்வுகளின் அடிப்படையிலான உண்மைகளின் படி கூறுகிறேன். குணங்கள் இவர்கள் எந்த பொறுப்பினையும் ஏற்பது சிரமம். எந்த தவறு ஏற்பட்டாலும் பிறர்தான் பொறுப்பு என்று சொல்லி கிளம்பிவிடுவார்கள். அதேசமயம் செய்யும் விஷயங்களில் கிடைக்கும் லாபம் தனக்குத்தான் என்பதில் மாறவே மாட்டார்கள். இவர்களுக்க

சைக்கோ கொலைகாரர்கள் - 3 (நிலமெங்கும் ரத்தம்)

படம்
Add caption சைக்கோ கொலைகாரர்கள் 3 ரேணுகா ஷிண்டே - சீமா கவிட் ரேணு - சீமா இருவருமே தாய் அஞ்சனாபாயினால் திருட்டு பழகினர். பின்னர் குழந்தைகளை வைத்து திருடினர், ஏதாவது இடத்தில் சிக்கினாலும் தப்பிக்க கேடயம் குழந்தைகள்தான். இதற்காகவே குழந்தைகளை கடத்த தொடங்கினார்கள். சிக்கல் அங்குதான் உருவானது. 1990 - 96 முதல் ஆறு குழந்தைகளை போட்டுத்தள்ளினர். ஏம்மா கொன்னீங்க என்று கேட்டதற்கு, எத்தனைப் பேரை கொன்றோம் என எண்ணிக்கை தெரியவில்லை என கைகளின் அத்தனை விரல்களையும் விரித்தனர் கொலைகார சகோதரிகள்.தற்போது மரணதண்டனை விதிக்கப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டு விட்டனர். தக் பேஹ்ராம் 1840 ஆம்ஆண்டு தூக்கிலிடப்பட்டு கொல்லப்பட்ட கொள்ளையர். மத்திய இந்தியா வரையில் பயணித்த இக்கொள்ளையரின் ஒரே ஹாபி, வழியில் உள்ள பயணிகளை கர்ச்சீப்பினால் கழுத்தை இறுக்கி நொடியில் கொன்றுவிட்டு பொருட்களை கொள்ளையடிப்பது. இப்படி கொன்றவர்களின் எண்ணிக்கை 931(1790-1840). ஆனால் இவர் ஒப்புக்கொண்டது 125 மட்டுமே. கிளாசிக் கொலைகாரர் என சொன்னால் இவரைத்தான் சொல்லவேண்டும். ராஜேந்திர ஜாக்கல், திலிப் சுதார். சாந்தாராம் கன்ஹோஜி ஜக்தப், ம

இந்தியாவில் மறக்கப்பட்ட சைக்கோ கொலைகாரர்கள்

படம்
pinterest சைக்கோ கொலைகாரர்கள்! உலகத்தில் குறிப்பாக அமெரிக்காவில் மட்டுமல்ல இந்தியாவிலும் சைக்கோ கொலைகாரர்கள் உண்டு. பதறவைக்கும் அவர்களின் பயோடேட்டா இதோ! நிதாரி கொலைகாரன் சுரேந்தர் கோலி, மொனிந்தர் சிங் பாந்தரிடம் வேலை செய்த ஆள். நொய்டாவில் வாழ்ந்தவர்களை போலீஸ் சுற்றிவளைத்து கைது செய்தது. நிதாரி கிராமத்தைச் சேர்ந்த நிறைய குழந்தைகளைக் காணவில்லை என்று புகார். நதிமூலம் தேடினால், நிறைய மண்டை ஓடுகளை மொனிந்தர் சிங்கின் வீட்டிலிருந்து எடுத்தனர். கற்பழிப்பு, நரமாமிசத்தை சாப்பிடுகிறார்களா, கடத்தல்காரர்களா என பல்வேறு கருத்துகள் எழுந்தன.  ஐந்து கொலைகளுக்காக சுரேந்தர் கோலி மரணதண்டனைக்காக காத்திருக்கிறார். சிங், பதினொரு கொலை வழக்குகளின் தீர்ப்புக்காக காத்திருக்கிறார். சார்லஸ் சோப்ராஜ் 1975-76 ஆம் ஆண்டு தென் கிழக்கு ஆசியாவை பதறவைத்தவர் சோப்ராஜ். கொலை செய்பவர்களை கொள்ளையடித்துவிட்டு செல்வது சோப்ராஜ். சுற்றுலா பயணிகள் உட்பட பலரிடமும் நம்பிக்கை சம்பாதித்து பின்னர் அவர்களை போட்டுத் தள்ளுவதுஊ இவரின் ஸ்டைல்.    போலீசில் பிடிபட்டவர், 1976 -97 வாக்கில் ஆயுள் தண்டனையை அனுபவிக்க நேர்ந்தத

இந்திய சைக்கோ கொலைகாரர்கள்! - சிறுகுறிப்பு

படம்
freevectors மூளையில் ஏற்படும் கீறலா, அல்லது பாதிப்பா என்று எதையும் கூறிவிடமுடியாது. இளமையில் ஏற்படும் சிறிய பாதிப்பு மனதில் கிளைவிட்டு குற்றம் குறித்த பயம் அகற்றும்போது, சமூகத்திற்கு பெரும் பிரச்னையாக அவர் மாறுகிறார். அவரைத்தான் சட்டமும் சமூகமும் சைக்கோ கொலைகாரர் என அழைக்கிறது. அவருக்கு பின்னணியாக இருந்த விஷயங்கள், தூண்டுதல் கொடுத்த ஆட்கள், பாதிப்பு என்ன என்பது பற்றி நாம் பலரும் யோசித்தது இல்லை. பாதிப்புக்கு காரணம் என்றால், உடனே தூக்கு அல்லது அந்த இடத்திலேயே என்கவுண்டர் என்பது தீர்வாக போலீஸ் தருகிறது. இதனை மக்களும் போலீசாரின் புஜவலிமையாக ஏற்றுக்கொண்டு விட்டனர். ஆனால் இறப்பு என்பது முடிவு அல்ல. அது ஒரு புதிய தொடக்கம். கருத்தாக தான் செய்வது பற்றி(துப்பாக்கிச்சூட்டை ) ஃபேஸ்புக் லைவில் ஒருவர் பதிவிடுகிறார் என்றால் அவர் எதற்கும் துணிந்தவர்தானே! அவரை நீங்கள் மின்சார நாற்காலியிலேயே உட்காரவைத்து கொன்றாலும் என்ற பயன் கிடைத்துவிடப்போகிறது? ஏறத்தாழ அவரின் குரூரத்தில் ஐம்பது சதவீத்தை நம்மிடையே விட்டுவிட்டு போகிறார் என்றுதானே ஆகிறது. ஆட்டோ சங்கர் சென்னை, திருவான்மியூரில் இளம் வய

சைக்கோ கொலைகாரர்கள் அசுரர்களா?

படம்
dahmeraesthetics\pinterest குழந்தைகளை கற்பழித்துக் கொன்று, உடலையும் எரித்துவிட்டு எந்த குற்றவுணர்வும் இல்லாமல் ஒருவரால் இருக்க முடிகிறது. பின்னர் போலீஸ் அவரை கைது செய்துவிட, பெயிலில் வந்தவர் அவர் செய்த குற்றத்தைப் பற்றி பேச கோபம் வருகிறது. அம்மாவையும் அடித்தே கொல்கிறார். இந்த செய்தியை நாளிதழில் படித்திருப்பீர்கள். இப்போது உங்கள்மனதுக்குள் என்ன விஷயம் ஓடுகிறது? இவன் மனிதனே அல்ல, மிருகம். என்பதோடு அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளில் உள்ள சைக்கோ கொலைகாரர்களின் சிக்னேச்சர் கொலைமுறைகள் கூட மனதில் ஓடலாம். ஆனால் இவர்களின் மூளை எப்படி செயல்படுகிறது என யோசித்தால்,  உங்கள் ஐக்யூவிற்கு வாழ்த்துகள் சொல்லலாம். 49 சைக்கோ கைதிகளின் மூளை செயல்படும் விதத்தை அறிய மருத்துவர், ஜோஸ்வா பக்ஹோல்ட்ஸ் முயற்சித்தார். நாம் சைக்கோ கொலைகாரர்கள், உடலிலும் உள்ளத்திலும் உணர்ச்சிகளே அதிர்வுகளே இல்லாதவர்கள் என நினைக்கிறோம் . அது தவறு என்று தில்லாக அறிவித்தே ஆராய்ச்சியைத் தொடங்கினார். டெமோ இதுதான். கைதிகளுக்கு, சிறியளவு பணத்தைக் கொடுத்து  அதை எப்படி செலவு செய்ய முடிவெடுக்கிறார்கள் என்பதுதான் சோதனை. இ