நியூஸ் ரூம்: நின்ஜாக்களின் வாழ்க்கை முறையை ஆய்வு செய்து பட்டம் பெற்ற உலகின் முதல் மாணவர்
நின்ஜா படிப்பில் முதுகலை பெற்ற முதல் மாணவர் நியூஸ் ரூம் ஆஹா! பழங்குடிகளுக்கான பள்ளி! தெலங்கானா மாநிலத்தில் உள்ள முலுகு காட்டுப்பகுதியில் 150 பழங்குடி குடும்பங்கள் வசிக்கின்றனர். இவர்களின் 40 பிள்ளைகளுக்கு, நீலம் தோகு என்ற பெயரில் கல்வி கற்பிக்கும் மையத்தை உஸ்மானிய பல்கலைக்கழக மாணவர் எஸ்ரம் சந்தோஷ் ஸ்வாரோ என்ற மாணவர் தனது நண்பர்கள் இருவருடன் சேர்ந்த தொடங்கியுள்ளார். பொதுமுடக்கத்தின்போது, பழங்குடிகளுக்கு உணவுப்பொருட்களை வழங்கியவர், குழந்தைகள் கல்வி கற்கும் அவசியத்தை உணர்ந்து இப்பள்ளியைத் தொடங்கியுள்ளார். நியூஸ் மினிட் அடச்சே! மரணதண்டனை பிரான்ஸில் வாழ்ந்து வந்த பத்திரிகையாளர் ரூஹோலாஸாமுக்கு ஈரானிய அரசு மரணதண்டனை விதித்துள்ளது. ஊழல் செய்தார் என்ற குற்றச்சாட்டில் கைதானவர் இவர். 2017-18ஆம் ஆண்டில் ஈரானில் நடைபெற்ற புரட்சி போராட்டங்களை ஊக்கப்படுத்தியதாக இவர் நடத்திய அமாத் நியூஸ் என்ற இணைய செய்தி நிறுவனம் மீது குற்றஞ்சாட்டப்பட்டது. கடந்த ஆண்டு ஈரான் அரசால் ஸாம் கைதானார். இதனை ஸாம் சட்டவிரோதமாக கடத்தப்பட்டார் என நாடுகடந்த பத்திரிகையாளர்கள் கூட்டமைப்பு விமர்சித்தது. சிஎன்எ