இடுகைகள்

பெண் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது
படம்
  சிவா முத்தொகுதி -  மெலூகாவின் அமரர்கள் அமிஷ் திரிபாதி தமிழில்  - பவித்ரா ஸ்ரீனிவாசன் வெஸ்ட்லேண்ட் பதிப்பகம் ராமர் இறந்தபிறகு நடக்கும் கதை. அயோத்யா, தேவகிரி ஆகிய நாடுகளை சந்திரவம்சி, சூரியவம்சி ஆகியோர் ஆளுகின்றனர். இதில் சூரியவம்சி ஆண்மைய சமூகம். சந்திர வம்சி, பெண் மைய சமூகம். இவர்களை நல்வழிப்படுத்துவதற்காக அவதரிப்பவரே நீலகண்டவர். ஆனால் இவரை இரு இனத்தாரும்தான் கண்டுபிடிக்கவேண்டும். யாராவது ஒருவர் புறம் நீலகண்டர் நின்றால், மற்றொரு சமூகம் அழிந்துவிடும்.  இது  முத்தொகுதியின் அடிப்படையான கதை.  மெலூகாவின் அமரர்கள் கதை, மானசரோவரில் வாழும் ழங்குடி இனமான குணாக்களிலிருந்து சிவன் என்பவர் மெலூகர்களின் நகரிற்கு வருவதில் தொடங்குகிறது. குணாக்களை வழிநடத்தும் இனக்குழு தலைவன் சிவா. இவர்களை ஒழித்துக்கட்ட நினைக்கும் எதிரிகளை எதிர்த்து போரிட்டுக்கொண்டே மெலூகாவிற்கு வந்து சேர்கிறார்கள். பழங்குடிகள் என்றால் எப்படி, வேட்டையாடிய விலங்குகளின் தோலைத்தான் அணிந்திருக்கிறார்கள். மது, மரிஜூவானா ஆகியவற்றை பயன்படுத்துகிறார்கள். இவர்களை மெலூகாவிற்கு நந்தி ராணுவ தளபதி அழைத்து வருகிறார். எதற்காக பழங்குடிகளை அழைத்து வந்

பெண்கள் தங்கள் கனவை எப்போதும் விட்டுக்கொடுத்துவிடக்கூடாது! ஃபர்கா சையத், ஃபேஷன் டிசைனர்

படம்
  ஃபர்கா சையத் ஃபேஷன் டிசைனர் சிறுவயதிலிருந்து பொம்மைகளுக்கு துணிகளை பொருத்திப் பார்த்து தைத்துக் கொண்டிருந்தவர், இன்று ஃபேஷன் டிசைனராக மாறியிருப்பதில் எந்த ஆச்சரியமும் இல்லைதான். சிறிய நிறுவனமான தனது தொழிலைத் தொடங்கியவர் இன்று எஃப் எஸ் குளோசட் என்ற நிறுவனமாக வளர்ந்திருக்கிறார். உள்நாடு மற்றும் வெளிநாடுகளில் தனது ஃபேஷன் நிகழ்ச்சிகளை நடத்தியிருக்கிறார் ஃபர்கா.  தனது திறமையால் இன்று இந்தி திரைப்பட உலகிலும் நுழையவிருக்கிறார். அவரிடம் பேசினோம்.  ஃபேஷன் டிசைனிங் துறைக்குள் வர உங்களைத் தூண்டியது எது? எனக்கு சிறுவயதில் இருந்தே இத்துறையில் ஆர்வம் இருந்தது. எனது டிசைன் சார்ந்த வணிகத்தை 2018இல் தொடங்கினேன். எனக்குப் பிடித்ததை சரியாக செய்யவேண்டும் என்பதுதான் லட்சியம். எனது பிராண்டை பிரபலப்படுத்த நான் நிறைய நிகழ்ச்சிகளில் பங்கேற்றிருக்கிறேன். இன்று என்னுடைய பிராண்ட் பலருக்கும் தெரியும் விதமாக மாறியிருக்கிறது.  இத்துறையில் உங்களுக்கு ஊக்கம் கொடுத்தது யார்? சிக்கலான சவால்களை சமாளித்து தங்களை காத்துக்கொள்ள முன்னிலைப்படுத்திக்கொள்ள போராடும் அனைத்து பெண்களுமே எனக்கு ஊக்கம் கொடுத்தவர்கள் தான். அவர்கள் த

மார்க்கெட்டைப் புரிந்துகொண்டு வளர வேண்டும்! - ஐஸ்வர்யா ரெட்டி, கென்சு

படம்
  ஐஸ்வர்யா ரெட்டி, கென்சு ஐஸ்வர்யா ரெட்டி நிறுவனர், கென்சு ஐஸ்வர்யா, இந்திய வடிவமைப்பில் சற்று நவீனத்துவத்தை குழைத்து பல்வேறு நாற்காலிகள் மற்றும் உள் அலங்காரங்களை செய்து வருகிறார். இவரது வடிவமைப்பு மூலம் தொன்மையான இந்திய வடிவமைப்பில் அமைந்த பொருட்கள் நவீனத்துவ அழகுடன் மிளிர்கின்றன. 2019ஆம் ஆண்டில்தான் கென்சு என்ற சொகுசு பொருட்களுக்கான நிறுவனத்தை தொடங்கியிருக்கிறார்.  உங்கள் தொழிலில் முக்கியமான ஊக்கம் என்ன? எனது தந்தை நாகராஜ் ரெட்டி, எனக்கு பெரும் ஊக்கம் தருகிறார். குறிப்பிட்ட காலத்தில் வணிகம் செய்யும் நாகராஜ் பல்வேறு சவால்களை சந்தித்து தொழிலை செய்தவற்கான ஊக்கத்தை எனக்கு கொடுத்திருக்கிறார்.  நீங்கள் கற்றுக்கொண்ட பாடம் என்ன? மார்க்கெட்டை புரிந்துகொண்டு காலத்திற்கேற்ப மாறி வளர்ச்சி பெறவேண்டும் என்பதைத்தான் கற்ற பாடம் என்பேன்.  தொழில்முனைவோராக நீங்கள் கூற நினைக்கும் அறிவுரை என்ன? பொறுமை விடாமுயற்சி தொழிலுக்கு முக்கியம். எதுவுமே இல்லாமல் அடிப்படையின்றி முன்னேறி வளர்வது எளிதல்ல. நமக்கான நெட்வொர்க்கை நாம் உருவாக்கிவிட்டால் தொழிலை எளிதாக  செய்ய முடியும். வாடிக்கையாளர் கொடுக்கும் கருத்துகளை திற

நிறுவனங்களின் இயக்குநர்களாக இந்தியர்கள் நியமிக்கப்பட என்ன காரணம்?

படம்
  pixabay சாதிக்கும் இந்திய இயக்குநர்கள்! அண்மையில் இந்தியரான லீனா நாயர், சானல் பிரெஞ்சு நிறுவனத்தின் முதல் பெண் இயக்குநராக பதவியேற்றார். இதன் மூலம், பெப்சிகோவின் இயக்குநராக இருந்த இந்திரா நூயிக்கு அடுத்ததாக பெண் இயக்குநர் என்ற பெருமையைப் பெற்றிருக்கிறார்.  இந்தியர்கள் இப்போது பெரும் பன்னாட்டு நிறுவனங்களுக்கு இயக்குநராக மாறிவருகிறார்கள். மைக்ரோசாஃப்டின்  சத்யா நாதெள்ளா, ஆல்பபெட்டின்  சுந்தர் பிச்சை ஆகியோர் இதில் குறிப்பிடத்தக்கவர்கள். ஐபிஎம், நோவர்டிஸ், அடோப், ட்விட்டர், ஹார்மன், விமியோ ஆகிய நிறுவனங்களிலும் இந்தியர்கள் இயக்குநர்களாக உள்ளனர். ”பிறப்பு, கல்வி, வேலை என அனைத்து விஷயங்களுக்கும் இந்தியர்கள் போராடி வளர்வதால் இயற்கையாகவே அவர்கள் சிறந்த மேலாளர்களாக இருக்கிறார்கள்” என்றார் டாடா சன்ஸ் நிறுவனத்தின் முன்னாள் தலைவரான ஆர்.கோபாலகிருஷ்ணன். பியூ நிறுவன ஆய்வுப்படி(2016படி), 77 சதவீத இந்தியர்கள் குறைந்தப்பட்சம் ஒரு பட்டம் அல்லது அதற்கு மேற்பட்ட பட்டங்களை இந்தியர்கள் பெற்றுள்ளனர் என கண்டறிந்தது. இந்த வகையில் 31 சதவீத அமெரிக்கர்கள் மட்டுமே பட்டம் பெற்றவர்கள். ”தொழிலை நடத்திச் செல்ல புதுமைத்

வரலாற்றை திருத்தி எழுதி அதனை அரசியலுக்க சில கட்சிகள் பயன்படுத்துகின்றன! - பேராசிரியர் உபீந்தர் சிங், வரலாறு, அசோகா பல்கலைக்கழகம்

படம்
  உபீந்தர் சிங் உபீந்தர் சிங் பேராசிரியர் வரலாற்றுத்துறை அசோகா பல்கலைக்கழகம் நீங்கள் எழுதியுள்ள நூலில் தொன்மை இந்தியா பற்றி பேசியுள்ளீர்கள். அதில் மதங்களுக்கு இடையில் பன்மைத்தன்மை இருப்பதோடு மதரீதியான வன்முறைகளும் இருப்பதைக் கூறியுள்ளீர்கள்.  தொன்மைக் காலத்தில் நடந்த நிகழ்ச்சிகளை நீங்கள் புரிந்துகொள்ளவேண்டுமென்றால், அதற்காக நிறைய நேரத்தையும் ஆற்றலையும் செலவழித்துதான் ஆக வேண்டும். அகிம்சை, வன்முறை, கடவுள் நம்பிக்கை, நாத்திகம், சமூக பாகுபாடு பற்றி நான் நூலில் எழுதியுள்ளேன். இன்று மத வேறுபாடுகள் உருவாக்கப்படுவதைப் போலவே அன்றும் மத சம்பந்தமாக பிரச்னைகள் இருந்தன. அசோகர் பௌத்தத்தைப் பின்பற்றினார். மதம் தொடர்பான பன்மைத்துவத்தை கோட்பாடு அளவில் உருவாக்கினார். ஆனால் பிற அரசர்கள் இந்த அளவு யோசிக்கவில்லை. அவர்கள் இருக்கும் மத அமைப்புகளை அப்படியே பராமரித்தனர். மதங்களை பின்பற்றுவதில் பன்மைத்தன்மை நிலவியது.  அதேசமயம் மதரீதியான வன்முறைகளும் நடைபெற்றுக்கொண்டிருந்தன. பௌத்த நூலான சூலவம்சத்தில் இதுபற்றி கூறப்பட்டுள்ளது. பல்லவர்களின் ராணுவம் இலங்கையில் உள்ள அனுராதபுரத்தின் புத்த சிலைகளை கொள்ளையடித்தது பற்ற

மாமியார் காமிக்ஸ் கதை சொதப்பல்கள்!

படம்
  image- sadhguru.org எழுதுவதற்கான முயற்சிதான். வேறொன்றுமில்லை. 1 சற்றே பாழடைந்து கருமை பூக்கத் தொடங்கிய மாடிவீடு. மெல்லிய ஒளி ஜன்னலில் தெரிகிறது. படுக்கை அறை. அதில்தான் மேசை விளக்கு மஞ்சள் நிறத்தில் எரிகிறது.  அதன் அருகில் புகைப்படம், அலார கடிகாரம், ஸ்மார்ட் போன் வைகப்பட்டுள்ளது. அருகில் படுக்கையில் இருவர் படுத்திருக்கின்றனர். கணவரிடமிருந்து மெல்லிய குறட்டை ஒலி கேட்டுக்கொண்டிருக்கிறது. கவிதா, குறட்டை ஒலியால் தூக்கம் தடைபட்டு அவரின் இடது புறத்தில்  புரண்டுகொண்டிருக்கிறாள்.  இன்னும் நீ  எந்திரிக்கலையா?  நேரமே எந்திரிச்சாத்தானே புருஷனை வேலைக்கு அனுப்பிவிட்டு குழந்தையை ஸ்கூலுக்கு அனுப்ப முடியும்? கனவா நிஜமா என குழப்பமாகும் கவிதா எழும்போது அது கனவல்ல என்று தெளிவாகிறாள். இது அதே குரல்தான்.  2 சமையல் அறை, குக்கரில் விசில் அடித்துக்கொண்டிருக்க, கவிதா வேகமாக வேலை செய்துகொண்டிருக்கிறாள். காய்கறிகளை நறுக்கிக்கொண்டிருக்கிறாள். சிங்கில் குழாயிலிருந்து இருந்து நீர் கொட்டிக்கொண்டிருக்கிறது. அப்போது, திறந்த ஜன்னல் வழியாக சூரிய வெளிச்சம் அறைக்குள் வந்து கவிதாவின் முகம் மீது படுகிறது.  சூரிய ஒளியை நோக்

டிஸ்கோ - டேட்டா ஜங்க்ஷன்

படம்
 டிஸ்கோ - டேட்டா ஜங்க்ஷன் வெள்ளி நிற பந்து உருள, ஏராளமான வண்ணங்கள் பீய்ச்சியடிக்க ஆர்டிஎம் பாட்டு ஒலிக்க டிஸ்கோ கிளப்புகள் இயங்கி வந்தன. இதில்தான் எழுபதுகளில் சினிமா உலகமே வாழ்ந்தது. இன்று ரெக்கார்ட் செய்த பாடல்களைப் போட்டு டிஸ்கோ கிளப்புகள் செயல்படுவதில்லை. பலருகும் டிஸ்கோ கிளப்பிலுள்ள பாடல்கள், அதன் சூழல் என்பது இன்ஸ்பிரேஷனாக இருந்தது. இந்தியில் இப்படி உருவானவர்தான் பப்பி லகிரி. இவரது பாடல்களை கேட்கும்போது டிஸ்கோ கிளப் பாடல்களின் பீட்டில் இதயம் துடிக்கத் தொடங்கும்.  1976இல் மட்டும் அமெரிக்காவில் பத்தாயிரம் டிஸ்கோ கிளப்புகள் செயல்பட்டு வந்தன.  ஒரு நிமிடத்திற்கு 120 பீட்டுகளை டிஸ்கோ பாடல்கள் கொண்டிருக்கும்.  சாட்டர்டே நைட் ஃபீவர் என்ற பாடல் மட்டும் உலகம் முழுவதும் 40 மில்லியன் பிரதிகள் விற்றது. உலகிலேயே இரண்டாவதாக இந்தளவு விற்ற பாடல் இதுமட்டும்தான்.  பீ கீஸ்  குழுவின் நைட் ஃபீவர் என்ற பாடல் எட்டு வாரங்கள் பில்போர்ட் பட்டியலில் முதலிடத்தில் இருந்தது. 1978ஆம் ஆண்டு நடந்த சாதனையில் முக்கியமானது.  அன்றைய டிஸ்கோ பாடல்களில் இதுதான் இந்த சாதனையை செய்த ஒரே பாடல்.  டிஸ்கோ பாடல்களுக்கான ஒளி அமைப

பெண்களைப் பற்றிய பார்வையில் என்ன பிழை இருக்கிறது? - கடிதங்கள்

படம்
               பெண்களைப் பற்றிய பார்வையில் என்ன பிழை? 19.10.2020 அன்புள்ள சபா , நன்றாக இருக்கிறீர்களா ? இக்கடிதம் உங்களை வந்து சேரும்போது கொரோனா பாதிப்பு குறைந்து அறைக்கு மீண்டிருப்பீர்கள் என்று நினைக்கிறேன் . நீங்கள் காதலித்த பெண்களைப் பற்றி பேசும்போது மனதில் ஒரு கேள்வி தோன்றியது . ஒரு பெண்ணுடன் கூடவா மனது ஒட்டவில்லையென . குறிப்பிட்ட தேவையைக் கருதித்தான் உறவை வளர்கிறார்களா என்றும் புரியவில்லை . நீங்கள் உங்கள் பார்வையில் பெண்களைப் பற்றி சொன்னீர்கள் . அவர்கள் பார்வையில் உங்களைப் பற்றி என்ன நினைத்தார்களோ ? மனிதர்களின் இருட்டான உளவியல் பக்கம் எப்போதுமே என்னை ஆச்சரியப்படுத்துகிறது . அதனால் , அசுரகுலம் நூலை எழுதியபோது , கொலை செய்த மனிதர்களின் மனநிலை என்னை பெரிதும் பார்த்தேன் . எனோலா ஹோல்ம்ஸ் என்ற படம் ஆங்கிலப்படத்தை பார்த்தேன் . துப்பறிவாளர் ஷெர்லாக் ஹோல்ம்ஸின் தங்கை பற்றிய படம் இது . எனோலா , தனது வாழ்க்கையை சுதந்திரமாக எப்படி வாழத் தொடங்குகிறாள் என்பதை படம் நகைச்சுவையாக விவரிக்கிறது . படத்தில் எனோலாவாக நடித்த நடிகைதான் இதன் தயாரிப்பாளரும் . கூட . போனில் கர ப

அணுகுண்டு தயாரிப்பு, கொரில்லா பாதுகாப்பு, ஹெச்ஐவி வைரஸ் கண்டுபிடிப்பு, டிஎன்ஏவின் உருவ அமைப்பு கண்டறிந்த சாதனைப் பெண்கள்!

படம்
                    சியன் சுங் வு இயற்பியல் ஆராய்ச்சியாளர் சீனாவைத் தாயகமாக கொண்ட அமெரிக்க இயற்பியலாளர் இவர் . அணு இயற்பியலாளராக உலகின் முதல் அணுகுண்டைத் தயாரிக்க பங்களிப்பை அளித்தவர் . 1949 ஆம் ஆண்டு சீனாவில் கம்யூனிச ஆட்சி ஏற்பட்டது . இதன் காரணமாக அமெரிக்கா , சீனா உறவு பாதிக்கப்பட்டது . 1973 ஆம் ஆண்டு வரையில் சியன் தனது தாய் நாட்டிற்கு திரும்பிச் செல்லமுடியாது தவித்தார் . சீனாவில் உள்ள நான்ஜியாங் என்ற பல்கலைக்கழகத்தில் கணிதம் , இயற்பியலை கற்றுத்தேர்ந்தார் . பிறகு அமெரிக்காவில் கதிர்வீச்சு பற்றி படிக்க சென்றார் . இவரது பேராசிரியர் எர்னஸ்ட் லாரன்ஸ் , அணு துகள்களை தூண்டும் கருவி ஒன்றை உருவாக்கினார் . சியன் அதனைப் பயன்படுத்தி அணுக்களை பிரித்து கதிரியக்க ஐசோடோப்புகளை உருவாக்கினார் . இவற்றில் புரோட்டான்கள் ஒரே எண்ணிக்கையிலும் நியூட்ரான்கள் வேறுபட்ட எண்ணிக்கையிலும் இருக்கும் . 1940 இல் சியன் தனது படிப்பை நிறைவு செய்தார் . கதிரியக்கம் பற்றி மேலும் அறிய அமெரிக்காவில் தங்கியிருந்தார் . அப்போதுதான் அவருக்கு மான்ஹாட்டன் எனும் திட்டத்தில் பங்கேற்க வாய்ப்பு கி

படித்த பெண்ணால் களேபரமாகும் கல்யாணம்! - வேரோட்டம் - கு.ப.ரா

படம்
  வேரோட்டம்  முற்றுப்பெறாத குறுநாவல் கு.ப.ராஜகோபாலன் சென்னையில் கல்லூரியில் படிக்கும் திருவெழுந்தூர் பையனும், தஞ்சாவூர் பெண்ணும் காதல் வலையில் விழுகிறார்கள். இருவருமே பிராமணர்கள்தான். ஆனால் திருமணம் செய்வதில் பிரச்னை எழுகிறது. அதனை இருவரும் எப்படி எதிர்கொண்டார்கள் என்பதுதான் கதை.  சந்திரசேகரன், கல்லூரியில் புகழ்பெற்ற ஆள். போட்டிகளில் கலந்துகொள்வது, படிப்பது என அனைத்திலும் முன்னணியில் நிற்பவன். அவன் மீது காதல் வயப்படும் பெண்களை அவன் பெரிதாக மதிப்பது கிடையாது. அப்படியிருந்தும் லலிதா என்ற பெண் அவன் போகும் இடமெல்லாம் வந்து என்னைப் பாரேன், என் அழகைப் பாரேன் என்று மௌனமாக மிரட்டுகிறாள்.  லலிதாவைப் பொறுத்தவரை கல்லூரில் உள்ள பெரும்பாலான ஆட்கள் தனது அழகுக்கு ரசிகர்களாக இருப்பதில் பெருமை. ஆனால் சந்திரசேகரன் இவளை கண்டுகொள்ளவே இல்லை என்றதும் அவளது ஈகோ காயம்படுகிறது. அப்படியென்ன அவனுக்கு ஆணவம் என அவனைப் பின்தொடர்கிறாள். இப்படி நாம் இருவரின் மனவோட்டத்தை புரிந்துகொள்வது கதாபாத்திரங்களில் பெயர்கள், அதற்குப்பிறகு மனவோட்டம் என எழுதப்பட்டுள்ளது.  தஞ்சாவூர், திருவெழுந்தூர் கல்யாண பஞ்சாயத்துகள் கடித வடிவில்

கல்வி, தொழில், ஊடகம் ஆகிய துறைகளில் சாதித்த பெண்கள்! - திவ்யா, மானசி டாடா, மசபா குப்தா, பிரஜக்தா கோலி

படம்
              ஆர்த்தி கில் துணை நிறுவனர் , ஆஸிவியா பெண்களுக்கு ஏற்படும் ஹார்மோனல் குறைபாடுகளை போக்குவதற்கான பொருட்களை தயாரித்து வருகிறார் . நடப்பு ஆண்டில் தனது நிறுவன வருமானத்தை 200 கோடியாக உயர்த்த உழைத்து வருகிறார் . உலகில் பலருக்கும் ஆசை இருக்கலாம் . ஆனால் அதனை தொடர்ந்து செல்வதற்கான உழைப்பு இருக்காது . ஆர்த்தி இதற்கு விதிவிலக்கான ஆள் . இவர் எம்பிஏ முடித்துவிட்டு ஃபிட்சர்க்கிள் என்ற ஆப்பைத் தொடங்கினார் . இதில் ஊட்டச்சத்துகளுக்கான பல்வேறு செய்திகளை வழங்கத் தொடஙகினார் . இவருடன் மிஹிர் கடானியும் இணைந்தார் . 2014 இல் இந்த நிறுவனத்தை இருவரும் தொடங்கினர் . என்னதான் ஆப்பில் உடல்நலத்திற்கான ஆலோசனைகளை வழங்கினாலும் கூட பிற நிறுவனங்களின் பொருட்களை பயனர்கள் வாங்க வேண்டியிருந்தது . இதில் பல்வேறு செயற்கைப் பொருட்கள் இருந்தன . எனவே , நாமே ஆரோக்கியமான பொருட்களை தயாரித்து விற்கலாமே என ஆர்த்தி முடிவெடுத்தார் . எனவே இருபது லட்சம் கடன் வாங்கி முதலில் புரத உணவு , ஆரோக்கிய பானம் ஒன்றைத் தயாரித்தனர் . இப்போது இந்த வரிசையில் பதினைந்து பொருட்கள் உள்ளன . இந்த குழந்தைகள் முதல் பெர