தடைபடாத காலம்: முடிவில்லாத தன்மையும் ஒருநாளும் 3 - தியோ ஏஞ்சலோ பவுலோஸ்
இத்திரைப்படம் கிரேக்கப்புனைவுகளை அடிப்படையாக அல்லது அதனைக் மென்மையாக கூறிச்செல்கிறதா? எழுத்தாளர் மற்றும் கவிஞர் என வார்த்தைகளை உருவாக்கும் அதனோடு உறவு கொண்டிருக்கும் இவர்களையே படம் அடிப்படையாக கொண்டிருக்கிறது என்பதுதான் உண்மை. படத்தில் அலெக்ஸாண்டர் சிறுவனுக்கு கவிஞர் ஒருவரைப்பற்றிக் கூறுகிறார். அவர் கிரீசில் புகழ்பெற்ற ஒரு மனிதராவார். டையோனிஸியோஸ் சாலமோஸ் ஸ்கின்டோஸ் இல் பிறந்தவர். இத்தாலியில் வளர்ந்தவர். சில காலத்திற்கு பிறகு தன் கீரிக் அடையாளத்தை தேடுகிறார். இத்தாலியிலிருந்து திரும்பும்போது தனக்கு தெரியாத கிரீக் வார்த்தைகளை மக்களிடம் வாங்குகிறார். 22 வயது ஆகும்போது தனது தாய்நாட்டிற்கு கிரீக்கில் கவிதைகள் எழுத முயல்கிறார். 1818 எனும் அக்காலகட்டத்தில் துருக்கியர்களுக்கு எதிரான புரட்சிப்போராட்டத்தில் தனது கவிதைகளின் வழியாக பங்கேற்க முடிவு செய்து, செயல்படும் அவரது ஆளுமையான நாட்டுப்பற்று கொண்ட காலப்பகுதி தொடங்குகிறது. சிறிய குறிப்பேட்டில் அவர் கேட்கும் வார்த்தைகளின் உலகத்தில் நுழைகிறார். இது தாந்தே – எஸ்க்யூ என்பவர்களின் சிந்தனையான கிரீஸ் மொழியை மறு இணைப்பு செய்த