இடுகைகள்

தடைபடாத காலம்: முடிவில்லாத தன்மையும் ஒருநாளும் 3 - தியோ ஏஞ்சலோ பவுலோஸ்

படம்
இத்திரைப்படம் கிரேக்கப்புனைவுகளை அடிப்படையாக அல்லது அதனைக் மென்மையாக கூறிச்செல்கிறதா?       எழுத்தாளர் மற்றும் கவிஞர் என வார்த்தைகளை உருவாக்கும் அதனோடு உறவு கொண்டிருக்கும் இவர்களையே படம் அடிப்படையாக கொண்டிருக்கிறது என்பதுதான் உண்மை. படத்தில் அலெக்ஸாண்டர் சிறுவனுக்கு கவிஞர் ஒருவரைப்பற்றிக் கூறுகிறார். அவர் கிரீசில் புகழ்பெற்ற ஒரு மனிதராவார். டையோனிஸியோஸ் சாலமோஸ் ஸ்கின்டோஸ் இல் பிறந்தவர். இத்தாலியில் வளர்ந்தவர். சில காலத்திற்கு பிறகு தன் கீரிக் அடையாளத்தை தேடுகிறார். இத்தாலியிலிருந்து திரும்பும்போது தனக்கு தெரியாத கிரீக் வார்த்தைகளை  மக்களிடம் வாங்குகிறார். 22 வயது ஆகும்போது தனது தாய்நாட்டிற்கு கிரீக்கில் கவிதைகள் எழுத முயல்கிறார். 1818 எனும் அக்காலகட்டத்தில் துருக்கியர்களுக்கு எதிரான புரட்சிப்போராட்டத்தில் தனது கவிதைகளின் வழியாக பங்கேற்க முடிவு செய்து, செயல்படும் அவரது ஆளுமையான நாட்டுப்பற்று கொண்ட காலப்பகுதி தொடங்குகிறது. சிறிய குறிப்பேட்டில் அவர் கேட்கும் வார்த்தைகளின் உலகத்தில் நுழைகிறார். இது தாந்தே – எஸ்க்யூ என்பவர்களின் சிந்தனையான கிரீஸ் மொழியை மறு இணைப்பு செய்த

தடைபடாத காலம் மற்றும் முடிவில்லாத தன்மையும் ஒரு நாளும் 2

படம்
பின் எவ்வாறு திரைப்படத்தை நிறைவு செய்தீர்கள்?       என்னால் அது இயலுவதில்லை. என்னுடைய படங்களைப் பார்த்தீர்கள் என்றால் தெரியும் அவை உண்மையில் நிறைவுறுவதில்லை. அவை தொடர்ந்து நடைபெற்றுக்கொண்டே இருக்கிற நிகழ்வுகள் என்றே கூறுவேன். எ.கா: கட்டப்படும் கட்டிடங்கள் போல. நான் ஒரே படத்திற்கு எத்தனை முறை கதை எழுதியிருக்கிறேன் தெரியுமா? 16 வது முறை ஒரே கதையையே வேறு ஒரு கோணத்தில் படமாக்க எழுதிக்கொண்டிருக்கிறேன். படப்பிடிப்பு நடந்துகொண்டு இருக்கிறது. கூட்டல் கழித்தல் என கதையினை சிதைக்காமல் மாற்றிக்கொண்டு இருக்கிறேன். படப்பிடிப்பு நடைபெறும்போது மெல்ல வாழ்க்கையில் அதனைக் கொண்டு வந்து அதனை மேம்படுத்தல்களை செய்கிறீர்களா? இது ஒரு மாயச்செயல்முறை போலானதா?       நீங்கள் மிக எளிதாக கூறிவிட்டீர்கள். மாயை என்று. மாயை என்பதற்கான பொருள் என்ன? இரவில் மாயம் என்பதை எப்படி விவரிப்பீர்கள்? அதனை எப்படி மொழிபெயர்ப்பீர்கள்? படப்பிடிப்பின் போது அதனை விளக்க என்ன படத்தினை பயன்படுத்துவீர்கள்? இதில் முக்கியமான கேள்வி என்பது ‘படத்தினை தேர்ந்தெடுப்பது ’ . வார்த்தைகளை படங்களாக மாற்றுவது – படமாக்குதல

சட்டம் என்பது கற்களில் பொறிக்கப்பட்டதல்ல; மக்கள் அதனை புரிந்துகொள்ள முடியும்

படம்
சட்டம் என்பது கற்களில் பொறிக்கப்பட்டதல்ல; மக்கள் அதனை புரிந்துகொள்ள முடியும் கோர்ட் பட இயக்குநர் சைதன்யா தம்ஹனே ஆங்கில மூலம்: மாணிக் சர்மா தமிழில்: வின்சென்ட் காபோ கோர்ட் படத்தில் நாராயண் காம்ளே எனும் சமூக செயல்பாட்டாளர் தன் அறுபது வயதில் மும்பை தெருக்களில் சிறுநாடக இசைக்குழுவிற்கு தலைமை தாங்கி நகரத்தின் தொழிலாளர்கள் பிரச்சனைகளை அனைவரும் அறியும் விதமாக செயல்பாடுகளை மேற்கொள்கிறார். காம்ளே தனது பாடல்களினால் மலமள்ளும் தொழிலாளர் ஒருவரை தற்கொலைக்கு தூண்டியதாக அவர் மீது குற்றம் சாட்டி வழக்கு பதிவுசெய்யப்படுகிறது. அடுத்து அவ்வழக்கின் விசாரணை, அதில் அதில் பங்கேற்கும் விசித்திரமான மனிதர்களான அரசு வழக்குரைஞர் (நியூடன்) நீதிபதி (சதவர்தே), பிரதிவாதி தரப்பு வழக்குரைஞர் (வினய் வோரா) ஆகியோரின் வாழ்க்கையை பின் தொடர்கிறது கதை. கடந்த ஒரு ஆண்டாக பல்வேறு விருதுகளையும், பாராட்டுக்களையும் பெற்றுவரும் கோர்ட் படமானது அண்மையில் தேசியவிருதினையும் வென்றுள்ளது. கோர்ட் படத்தினை உருவாக்கும் முன் என்ன செய்து கொண்டிருந்தீர்கள்?       ஆங்கிலப்பட்டதாரியான நான் எனது பதின

தடைபடாத காலம்- முடிவில்லாத தன்மை மற்றும் நாளும் - தியோ ஏஞ்சலோ பவுலோஸ்

படம்
14 தடைபடாத காலம்: முடிவில்லாத தன்மை மற்றும் நாளும் ஜிடியன் பாச்மன் – 1997 ஆங்கில மூலம்: டான் ஃபைனாரு ஆண்டிற்கு ஒருமுறை நாம் சந்திக்கிறோம். ஆனால் ஒவ்வொரு பத்தாண்டிற்கும் நாம் உரையாடலை பதிவு செய்து வருகிறோம். நவீன காலத்தில் தீர்க்க முடியாத பிரச்சனைகளாக எதனை கூறுவீர்கள்? தக்காளிச்செடி வளர்ப்பு, தேனீக்கள் வளர்ப்பு, தேனை அறுவடை செய்வது உள்ளிட்டவற்றை செய்யத்தெரியாத ஒருவரினால் படங்களை உருவாக்க முடியாது என்று 20 ஆண்டுகளுக்கு முன்பு கூறியிருந்தீர்கள். இன்று உங்களைப் பார்ப்பதை பத்து ஆண்டுகளுக்கு முன் மிகவும் நம்பிக்கை கொண்டவராக படப்பிடிப்பு அரங்கில் வேலை செய்து கொண்டு இருந்தீர்கள்.  தனிப்பட்ட மனிதராக, இந்த 20 ஆண்டுகளில் என்ன மாதிரியான வளர்ச்சியை பெற்றிருக்கிறோம் என்று கூற முடியுமா?       மிகவும் உறுதியான கருத்துக்களைப் பற்றிப் பேசுவதற்கு சரியான நேரம் நீங்கள் படத்தினை முழுமையாக நிறைவு செய்து முடித்திருக்கிற காலம்தான். நீங்கள் உங்களது கருத்துகளை சரியான வடிவத்தில் உருப்பெறச்செய்ய முயற்சி செய்து கொண்டிருக்கும்போது படப்பிடிப்பின் ஒரு பகுதியில் அதைப்பற்ற

அறிவின் பிரகாசம்: தயா - நூல்வெளி2 - ப்ராட்லி ஜேம்ஸ்

படம்
தயா எம்.டி.வாசுதேவன் நாயர் தமிழில்: உதயசங்கர் - சசிதரன் பாரதி புத்தகாலயம் ப.64 விலை ரூ.25 தயா எனும் இந்த நூல் சிறுவர் குறுநாவல் வகைப்பட்டது. பல்வேறு திருப்பங்களுடன் அனைவரும் வாசிக்கும் வண்ணம் இருப்பதே இந்த நூலின் சிறப்பு என்று கூறலாம். கதை : கையில் இருக்கும் பொருளின் மதிப்பு இழந்துவிடும் போதுதான் தெரியும் என்பது இதன் மையச்சரடு. பெரும் செல்வந்தர் ஒருவர் பலருக்கு தான தர்மம் செய்து வாழ்ந்து வருகிறார் என்றாலும் தனக்கு பின்னால் தன் பெயர் சொல்லும் விதம் பிள்ளை என்று நினைக்க ஒரு பிள்ளை பிறக்கிறது. அந்த சந்தோஷத்தோடு மனைவி இறந்த துக்கத்தையும் எதிர்கொண்டு சமாளித்து அவனை நல்லமுறையில் வளர்க்க முயற்சிக்கிறார். ஆனால் அவனுக்கு(மன்சூர்) என்ன முயற்சி செய்தாலும் கல்வியில் கவனம் செல்வதில்லை. இந்த நிலையில் வயது முதிர்ந்து தன் உயிர் பிரியும் வேளையில் மன்சூரின் தந்தை அவனிடம்  வாழ்வில் தான் கண்டறிந்த அனுபவ சொல் ஒன்றைச் சொல்லிவிட்டு இறந்துவிடுகிறார். இளம் வயதில் எல்லையில்லாத பணம் என்னவெல்லாம் செய்யுமோ அத்தனையும் மன்சூர் செய்கிறான். ஒரு நல்ல நாளில் அத்தனை பணமும் காலியாக குபீர் நண்பர்கள

பேராசைக்கு எதிராக ஒரு குரல்: மயிலம்மா : போராட்டமே வாழ்க்கை

படம்
மயிலம்மா: போராட்டமே வாழ்க்கை ஜோதிபாய் பரியாடத்து தமிழில் - சுகுமாரன் எதிர் வெளியீடு விலை ரூ. 55 நாம் தொடர்ந்து இயற்கையின் கொடைகளைக் காப்பாற்றவேண்டிய தேவை இருந்துகொண்டே இருக்கிறது. பெரிய நிறுவனங்கள், அவர்களுக்காக தரகு வேலை செய்யும் இந்திய நிறுவனங்கள், பேராசை கொண்ட தனிப்பட்ட முதலாளிகள், அறியாமை கொண்ட பேராசையின் சார்பில் நிற்கும் மனிதர்கள் என நாம் தொடர்ந்து இயற்கையை சீரழிக்கும் பல தீய எண்ணங்களுக்கு எதிராக போராடிக்கொண்டே இருக்கும் சூழல் உருவாகிவருகிறது. ஆதிவாசிப் பெண்ணான மயிலம்மாவும் தனது கணவரற்ற சூழலில் ஆறு குழந்தைகளோடு வாழ போராடி அவர்களுக்கான வாழ்க்கைப் பாதையினை உருவாக்கி கொடுத்ததோடு நிற்காமல் தனக்கு ஆதரவளித்த இயற்கை தாயினை, அவளது மடியினை ஈரத்தை பிறரும் உணர வாய்ப்பு தரும் பொருட்டு பிளாச்சிமடை பகுதியில் தொடங்கப்பட்ட கோக கோலா நிறுவனத்தின் நீர் சுரண்டலுக்கு எதிராக நீதி கேட்டு போராடியதன் மூலம் புகழ் பெற்றவர். இந்த நூல் வெறும் போராட்ட வடிவத்தை மட்டும் பேசாமல் மயிலம்மா தன் வாழ்க்கை எப்படி இருந்தது என்று இயல்பான தன் மொழியில் கூறிச்செல்கிறார். அதனால்தான் இந்த எழுத்

மனிதர்களின் அனுபவ ஒன்றிணைவு நிறைவுப்பகுதி - தியோ ஏஞ்சலோ பவுலோஸ்

படம்
யாரும் உங்களை நம்பிக்கையாளராக கூறுவதில்லை. படத்தில் சரஜீவோ காப்பகம் சார்ந்த இவோலெவி கூறுவதாக ‘ ‘ நீங்கள் ஏற்றுக்கொண்டு செய்யும் பயணமானது ஒரு துண்டு படச்சுருளுக்கானது. இதில் முழுக்க நம்பிக்கை கொள்ளலாம். அல்லது முழுக்க விரக்தியுள்ள நிலைமையில் வீழலாம் ’’ என்று கூறுகிறார். இந்த நயமற்ற காட்சி வரும் நூற்றாண்டின் இறுதியில் விரக்தி அல்லது நம்பிக்கை என எதனை இக்காட்சி குறைந்தபட்சம் வெளிப்படுத்துகிறது?             நான் இந்த நம்பிக்கை அல்லது நம்பிக்கையற்ற என்ற விஷயங்களைப் பற்றியெல்லாம் கவலைப்படாமல் சமகாலத்தின் மீதான நேர்மையான பதிவுகளைத்தான் உருவாக்க முயற்சிக்கிறேன். நம்பிக்கையாளர்கள் உண்மைக்கு என்றும் முதுகு காட்டியே நிற்கின்றனர். நம்புகின்ற விஷயங்கள் மேம்படுத்தப்பட வேண்டும் என்று தவறான காரணங்களை அவர்கள் உருவாக்கிக்கொள்கிறார்கள். நம்பிக்கையற்றவர்களின் இறுதி முடிவாக தற்கொலை என்பது ஏற்றுக்கொள்ளப்பட்ட முடிவாக உள்ளது. எனது படத்தின் இறுதியில் கதாபாத்திரங்களின் பயணம் முடிவுறாது தொடர்கிறது என்று கூறுகிறார்கள். இதன் அர்த்தம் என்னவெனில் அவர்கள் தொடர்ந்து தமது வீட்டைத் தேடுவார்கள் என்