இடுகைகள்

சீனாவின் விண்வெளி ஆராய்ச்சியை உயரத்திற்கு கொண்டு சென்றவர்! - ஸாங் கெஜியன்

படம்
ஸாங் கெஜியன் - யூட்யூப் ஸாங் கெஜியன் விண்வெளி ஆராய்ச்சியில் அமெரிக்கா, ரஷ்யா என்ற இரு நாடுகள் மட்டுமே ஆதிக்கம் செலுத்தி வந்தன. அதற்குப்பிறகு குறிப்பிடத்தக்க முயற்சியை எடுத்த நாடுகள் குறைவு. இதில் சீனா கடந்த ஆண்டுதான் தனது செயல்பாடுகளைத் தொடங்கியது. அதற்கு ஸாங் கெஜியனின் பணிகள் முக்கியமானவை. சீனா விண்வெளி ஆராய்ச்சி மையத்தில் இயற்பியலாளராக பணியாற்றுகிறார் ஸாங். இவரின் முயற்சிகளால் புவியின் வட்டப்பாதையில் பல்வேறு செயற்கைக்கோள்களை செலுத்த தொடங்கியது சீனா. 2019ஆம் ஆண்டு நிலவின் மறுபுறத்திற்கு சாங் 4 என்ற விண்கலத்தை அனுப்பியது சீனா. இதுதான் உலக நாடுகளுக்கு சீனா வளர்ந்துவரும் தன்மையை எடுத்துக்காட்டியது. சீன விண்வெளி ஆராய்ச்சி மையம், இப்போது டஜன் கணக்கிலான விண்வெளித்திட்டங்களை குறித்து வைத்துக்கொண்டு பரபரவென வேலை பார்த்து வருகிறது. செவ்வாய், வியாழனுக்கு அனுப்பும் விண்கல பணிகளும் செயல்பாட்டில் உள்ளன. ஸாங்கின் முயற்சியால் அமெரிக்காவின் நாசாவின் ஒத்துழைப்பு கிடைக்கும் வாய்ப்பு உள்ளது. நாசாவின் தொழில்நுட்ப உதவி கிடைத்தால் உலக நாடுகளுக்கும் அது முக்கியமான உதவியாக இருக்கும். ஸ்காட் கெல்லி

சூழலைக் காக்க உலக நாடுகளை தூண்டிய சிறுமி! - கிரேட்டா துன்பெர்க்

படம்
பொல்சனாரோ -பத்திரிகை ஜெய்ர் பொல்சனாரோ பிரேசிலைச் சேர்ந்த வலதுசாரி கருத்தியலைக் கொண்ட தலைவர். தனது முதல் மூன்று மாதங்களில் ஊழல்களை ஒழிப்பதற்கான முயற்சிகளை செய்துள்ளார். வாங்கியுள்ள கடன்களை அடைப்பதற்காக பல்வேறு சீர்திருத்தங்களை செய்து வருகிறார். முன்னாள் ராணுவ வீரரான இவர் சுற்றுச்சூழல் பாதிப்பு போன்றவற்றுக்கு எதிரான கருத்துகளைக் கொண்டவர். எப்போதும் மக்களின் கருத்துக்கு எதிரான கருத்துகளை பேசும் குழப்பமான குணங்களைக் கொண்டவர். பிரேசில் ஜனநாயக நாடாக இதுவரை இருந்துள்ளது. இனிமேலும் அப்படி இருக்கமுடியுமா என்பதை பொல்சனாரோ தீர்மானிப்பார் என்றே தெரிகிறது. இருந்தாலும் அவரை மக்களே தேர்ந்தெடுத்து இருப்பதால், இச்சோதனையின் விளைவை மக்கள்தான் ஏற்கவேண்டும். இயான் பிரம்மர் கிரேட்டா துன்பெர்க் - தினமலர்  கிரேட்டா துன்பெர்க் ஸ்வீடனைச் சேர்ந்த கிரேட்டா துன்பெர்க், பள்ளிக்கு விடுப்பு எடுத்துக்கொண்டு சூழலுக்கு எதிராக போராடி பிரபலமானார். இப்படியெல்லாம் போராடலாம் என்று உலகு முழுக்க சூழல் போராட்டங்கள் நடைபெற காரணமாக இருந்தார். அரசின் விதிகளை மாற்றாமல் நாம் சூழல் பாதிப்பை குறைக்கமுடியாது என்று தில்லாக ப

தியேட்டரில் கிடைக்கும் அனுபவத்தை வீட்டில் பெறமுடியாது! - வி.செந்தில்குமார், க்யூப் டெக்னாலஜி

படம்
வி.செந்தில்குமார் துணை நிறுவனர், க்யூப் சினிமா டெக்னாலஜி ஆஸ்கார் விருது குழுவின் உறுப்பினராக அழைப்பு விடுக்கப்பட்டிருப்பதை கேள்விப்பட்டோம். எப்படியிருக்கிறது இந்த அனுபவம்? பொதுவாக சினிமாவின் உருவாக்கத்தில் நாங்கள் பங்குபெறுவதில்லை. அதனை பார்க்கும் அனுபவத்தை மாற்றித்தரும் தொழில்நுட்பம் சார்ந்து வேலை செய்கிறோம். எனவே, இதற்கான பிரிவில் எனது பெயர் பரிந்துரைக்கப்பட்டு அழைத்திருக்கிறார்கள். பொதுவாக படத்தில் கூட எங்கள் தொழில்நுட்பத்திற்காக அங்கீகாரம் வழங்கப்படாது. கொரோனா பாதிப்பால் படங்கள் வெளியாக தியேட்டர்கள் திறக்கப்படாத நிலைமை. இதனால் பலரும் ஓடிடி தளங்கள் படத்தை வெளியிடத்தொடங்கியுள்ளனர். இச்சூழ்நிலையை நீங்கள் எப்படி பார்க்கிறீர்கள்? ஆகஸ்ட் மாத மத்தியில் தியேட்டர்கள் திறக்கப்பட்டு பழைய படங்கள் ஓடும் வாய்ப்பு உள்ளது. அப்படி சூழல் மாறினால் செப்டம்பர் மாதம் முதல் புதிய படங்கள் தியேட்டர்களில் திரையிடப்படும். ஆனால் கோவிட் -19 நோய்த்தொற்று எண்ணிக்கை குறையாமல் பரவினால் அடுத்த ஆண்டு மார்ச்சில்தான் தியேட்டர்கள் திறக்கும் வாய்ப்பு உள்ளது. சினிமா தியேட்டர்களை விட ஓடிடி தளங்களில் வெளியிட பண

மரியாதையான பொறுப்புமிக்க நீதிபதி! - பிரெட் கவனாஃப்

படம்
  பிரெட் கவனாஃப் ஆன்டனி கென்னடிக்குப்பிறகு அதிபரின் விருப்பத் தேர்வாக பிரெட் கவனாஃப் தேர்ந்தெடுக்கப்பட்டார். இவரின் கல்வித்தகுதி, வழக்குரைஞர் அனுபவம் ஆகியவற்றை நாம் இதில் கருத்தில் கொண்டாலும் மரியாதையான பொறுப்புமிக்க நீதிபதி பதவியைப் பெற தகுதியானவர்தான். உச்சநீதிமன்ற நீதிபதியாக வருபவருக்கு தான் செய்யும் பணிமீதான அக்கறையும் பொறுப்புடமையும் இருக்கவேண்டும். இந்த அம்சங்களை பிரெட்டிடம் எளிதாக காண முடியும். நாட்டின் மீது கொண்டுள்ள வேட்கைக்கு சமமாக குடும்பம், நண்பர்கள் ஆகியோரிடம் அன்பும், நட்பும் கொண்டவர் இவர்.    

மக்கள் சேவகனையும், பொட்டீக் டிசைனரையும் ஒன்றாக சேர்க்கும் கோதாவரி! - கோதாவரி

படம்
கோதாவரி ஆற்றில் நடக்கும் மென்மையான காதல் கதை கோதாவரி 2006 இயக்கம்: சேகர் கம்முலா ஒளிப்பதிவு விஜய் சி குமார் இசை கே.எம். ராதாகிருஷ்ணன் கோதாவரி ஆற்றில் படகில் பயணம் செய்யும்போது சந்திக்கும் இளைஞனுக்கும், இளம்பெண்ணுக்கும் உருவாகும் உறவுதான் கதை.  1973இல் வெளியான அந்தால ராமுடு படம்தான் கோதாவரிக்கு இன்ஸ்பிரேஷன் என இயக்குநர் சேகர் கம்முலா கூறியிருக்கிறார். அமெரிக்காவில் பொறியியல் படித்துவிட்டு இந்தியாவுக்கு வருகிறான் ஸ்ரீராம். அவனுக்கு ஒரு விஷயம்தான் மனதில் உள்ளது. மக்களுக்கு ஏதாவது நல்ல விஷயங்களைச் செய்யவேண்டும். அதற்கு என்ன செய்யவேண்டும் என்று தெரிவதில்லை. இதனால் அரசியல் கட்சியில் சேரலாம் என்று நினைக்கிறான். ஆனால் அவர்கள் இவனிடம் பணம் கேட்கிறார்கள். செல்வாக்கை நிரூபிக்க சொல்கிறார்கள். குழப்பத்தில் இருக்கிறான். இந்த நேரத்தில் அவன் விரும்பும் மாமன் மகள் ராஜிக்கு வரன் பார்த்து முடிவு செய்கிறார்கள். இது ராமுக்கு பெரும் அதிர்ச்சியாக இருக்கிறது. இதுபற்றி தன் மாமாவிடம் கேட்கும்போது, அவனது கருத்தும், லட்சியமும் வேலைக்கு உதவாது என்பதோடு அவனிடம் பணமும் கிடையாது என்று கூறிவிடுகிறார்.  ராஜி சொந்தக்கார

இயற்கையை பாதிக்காமல் வணிகம் செய்வதை ஊக்கப்படுத்தியவர் - ஹோஸங் லீ

படம்
போப் பிரான்சிஸ் - தமிழ்வெப்துனியா போப் பிரான்சிஸ் 2019ஆம் ஆண்டு போப்புக்கு, கத்தோலிக்க தேவாலயங்களில் பூதாகரமாக கிளம்பிய பாலியல் புகார்களை ஆராய்ந்து அதனை தீர்ப்பதற்கே நேரம் சரியாக இருந்தது. இப்புகாரில் குழந்தைகள் சிக்கியது பெரிய சிக்கலாக மாறியது. இதனால் தேவாலயம் சம்பந்தப்பட்டவர்களை அழைத்து உண்மையைக் கண்டறிய சந்திப்புகளை நடத்தினார். இனிமேல் குழந்தைகளிடம் எப்படி நடந்துகொள்ளவேண்டும் என்பது பற்றிய விதிகளை வகுக்கத் தொடங்கியுள்ளார். இந்த விவகாரத்தில் போப் பிரான்சிஸ் காட்டிய தீவிரம் அனைவரையும் வியக்க வைத்தது. பாதிப்பை ஏற்படுத்தியவர்களை விட பாதிக்கப்பட்டவர்களை இயேசுவாகவே கருதி நடத்தினார். இந்த சமூகத்தீமையான செயல்பாட்டிற்கான காரணத்தை இவர் விரைவில் கண்டுபிடிக்க வாய்ப்புள்ளது. தனது புத்தியைக் கடந்து இதயம் சொல்லுவதைக் கேட்டு செயல்படுபவராக போப் மக்களின் கண்களுக்கு காட்சிதருகிறார். இம்முறையில் பாதிக்கப்பட்டவர்களுக்கு மக்கள் மன்றத்தில் நீதிபெற்று தருவார் என நம்பலாம். ஜார்ஜ் சிசிகுலனா   ஹோஸங் லீ - கார்பன் ப்ரீப் ஹோஸங் லீ பருவச்சூழல் மாறுபாடு பற்றிய ஐபிசிசி அமைப்பின் தலைவராக உள்ளார் ஹோஸங்.

பல்லவ நந்தியின் கழுத்து அறுக்கப்பட்டது - அத்திமலைத்தேவனின் திருவிளையாடல் - அத்திமலைத்தேவன் 4

படம்
அத்திமலைத்தேவன் 4 - உடுமலை அத்திமலைத்தேவன் 4 காலச்சக்கரம் நரசிம்மா வானதி பதிப்பகம் ப.460 இந்த பாகத்தில் பல்லவ சாம்ராஜ்யத்திற்கு மன்னர் தேடி அலைந்து நந்திவர்மன் என்பவனை காம்போஜ நாட்டிலிருந்து இறக்குமதி செய்கிறார்கள். இவனை வேட்டையாட சாளுக்கியர்கள், பாண்டியர்கள் என அனைவரும் ஆட்களுடன் காத்திருக்க இவர்களை பல்லவ நாட்டு விசுவாசிகள் காப்பாற்றுகின்றனர். அரச பரம்பரை என்றாலும் யோசிப்பது, செயலாற்றுவது ஆகியவற்றில் நந்திவர்மன் சாமர்த்தியசாலி அல்ல. இதனை உணர்ந்த குந்தள நாட்டு அரசன் வயிரமேகன் மகன் உதயச்சந்திரன், பல்லவ அரசனுக்கு அரியணை கிடைக்க உதவுகிறான். ஒரு கட்டத்தில் பல்லவ நாட்டு தளபதி உதயச்சந்திரன் மக்களிடம் பெரும் புகழ் பெற, நந்திவர்மனுக்கு பொறாமைத்தீ வயிற்றில் மூள்கிறது. ஏறத்தாழ பல்வாளத் தேவனுக்கும் பாகுபலிக்குமான போர் போலவேதான். பல்லவ மன்னனைச் சுற்றியுள்ள காம்போஜ நாட்டுக்குழு அவனை உதயச்சந்திரனை விலக்கி வைத்து அல்லது கொன்றுவிட யோசனை கூறுகிறது. ஆனால் பல்லவ மன்னர் அப்படி செய்தால் மக்கள் புரட்சி செய்து அரசை கலைத்துவிடுவார்கள் என்பதால் சாதுரியமாக தளபதி பதவியிலிருந்து இறக்கி நாடு கடத்துகிறார்கள்.