இடுகைகள்

கடிதம் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

மனநோயாளிகளோடு ஒரு போர் - கடிதங்கள் - கதிரவன்

படம்
  மனநோயாளிகளோடு நேருக்கு நேர் ! அன்புள்ள நண்பர் கதிரவனுக்கு , வணக்கம் . நலமாக இருக்கிறீர்களா ? உடல்நலனோடு மனநலனைப் பராமரிப்பது கடினமாக இருக்கிறது . நான் அமைதியாக இருந்தாலும் அலுவலகத்தில் உள்ள உளவியல் பிரச்னை கொண்டவர்கள் ஏதாவது பிரச்னையை செய்துகொண்டே இருக்கிறார்கள் . நமக்கு தொடர்புடையவர்கள் இதனால் பாதிக்கப்படுகிறார்கள் . இதன் பொருட்டு சில சமயங்களில் நமக்கே பாதகமான முடிவுகளைக் கூட நாம் எடுக்கவேண்டியுள்ளது . அண்மையில் அலுவலகத்தில் சேர்ந்தவர் , கணிதப்பக்கத்தைக் கவனிக்கிறார் . அவர் , இதுபோல குறைபுத்தி கொண்டவர்களால் பாதிக்கப்பட்டார் . என்னோடு டீ குடிக்க வருவதால் அவரை கார்னர் செய்தனர் . எனவே , அலுவலக நண்பரை விட்டு தனியாக பிரிய முடிவெடுத்துள்ளேன் . ஆசையா , நிம்மதியா என்றால் நான் நிம்மதியைத் தான் தேர்ந்தெடுப்பேன் . நன்றி ! அன்பரசு 7.12.2021 மயிலாப்பூர் ------------------------------------------------------------------------------- ------------------------------------------------ என்னமோ ஏதோ ... அன்பு நண்பர் கதிரவனுக்கு , வணக்கம் . நலமா ? எங்கள் நாளிதழ் ஜனவரி தொடங்குவதாக கூறியிருக்கிறார்கள் . கட்

உடைந்துபோன திருமண உறவு - கடிதங்கள் - கதிரவன்

படம்
  பிரேக் இல்லாத வண்டியை இயக்குவது போல ... அன்புள்ள நண்பர் கதிரவனுக்கு , வணக்கம் . நலமாக இருக்கிறீர்களா ? எனது லினக்ஸ் கணினி பழுதானதால் இதுவரை எழுதிவந்த , எழுதி வைத்து சேமித் கோப்புகள் தானாகவே அழிந்துவிட்டன . சோதித்ததில் சில கோப்புகளை குப்பைத்தொட்டியில் பார்த்தேன் . மீட்க முடியவில்லை . அதை மீண்டும் எழுத வேண்டும் . லினக்ஸ் கணினியில் காணாமல் போன கோப்பைத் தேடுவது கடலில் கலந்துவிட்ட ஆற்று நீரை தனியாக பிரிப்பது போல கடினமாக இருக்கிறது . லினக்ஸ் அமைப்பு முறையை முழுமையாக கற்காமல் அதை பயன்படுத்துவது தவறு என இப்போது எனக்குத் தோன்றுகிறது . கணியம் சீனிவாசன் சார் உதவினாலும் கூட கோப்பை எளிதாக மீட்க முடியவில்லை . பேக்அப் எடுத்து வைத்திருக்கவேண்டும் என அரிய அறிவுரையைச் சொன்னார் . நல்ல அறிவுரை . ஆனால் அதற்கான காலம் கடந்துவிட்டது . பிரேக்கிற்கு இணைப்பு கொடுப்பதற்கு முன்னரே வண்டியை சாவி போட்டு இயக்கியாயிற்று . வண்டி இப்போது சேட்டாவின் டீக்கடை நோக்கி வேகமாக நகர்ந்துகொண்டிருக்கிறது . இந்த நிலையில் லபோதிபோ என கத்துவது , ட்விட்டரில் போடும் அட்வைஸ்களை சொல்லி என்ன செய்வது ... இனி க்ளவுட்டில் கோப்பைச் சேமித்து வ

மழையிலும் தொடரும் வழிகாட்டுதல் சேவை!

படம்
  அடாத மழையிலும் விடாத சேவை ! அன்புள்ள நண்பர் கதிரவனுக்கு , வணக்கம் . நலமா ? இன்று எங்கள் மயிலாப்பூர் பகுதியில் நல்ல மழை . மழை இடைவேளை விட்டு விட்டு பெய்தது . இதனால் சாலைகள் குட்டைகளாகவே மாறிவிட்டன . சாப்பிட அறைக்கு வரும்போது , பேன்ட் முழங்கால் அளவுக்கு நனைந்துவிட்டது . அடைமழை பெய்யும் நேரத்தில் கூட பெண் ஒருவர் குடை பிடித்துக்கொண்டு என்னிடம் வந்து ஏவிஎம் ராஜேஸ்வரி மண்டபம் செல்ல வழி கேட்டார் . ஆச்சரியம் ... வழி சொல்லிவிட்டுத்தான் நகர்ந்தேன் . அடாத மழையிலும் என்னுடைய தேவை உலகிற்கு இருக்கிறது என நினைத்துக்கொண்டேன் . எங்கள் நாளிதழ் இன்னும் தொடங்கப்படவில்லை . இப்போதெல்லாம் ஆபீசுக்கு வருவதே சிலசமயம் எதற்கு என மறந்துபோய்க் கொண்டிருக்கிறது . உதவி ஆசிரியர் எழுத்தாளர் பாலபாரதி டெங்குவால் பாதிக்கப்பட்டு மீண்டிருக்கிறார் . அலுவலகத்தில் அதற்குள் இன்னொருவர் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு விடுமுறை எடுத்துவிட்டார் . மழைக்கால காய்ச்சல் என நினைக்கிறேன் . ஷோபாடே எழுதிய நூலை தொடர்ச்சியாகப் படித்துக் கொண்டிருக்கிறேன் . மத்திய அரசு , அரிசியில் இரும்புச்சத்து சேர்ப்பது பற்றிய கட்டுரை ஒன்றை ஃபிரன்ட்லைனில் பார்த்த

இரண்டு இந்தியாக்களைப் பற்றி பேசும் தனிக்குரல் கலைஞன்!

படம்
  உண்மை ஏற்படுத்தும் உறுத்தல் ! அன்புள்ள நண்பர் கதிரவனுக்கு , வணக்கம் . நலமா ? அலர்ஜிக்கான மருந்துகளை தொடர்ச்சியாக சாப்பிட்டு வருகிறேன் . ஃபிரன்ட்லைன் சந்தா முடிந்துவிட்டது . இதுவரை வந்த இதழ்களை முழுமையாக படிக்க முடியவில்லை . நிதானமாகத்தான் படித்து வருகிறேன் . இரண்டு இந்தியா பற்றிய மீம்களைப் பார்த்து இருப்பீர்கள் . வீர்தாஸ் என்ற தனிக்குரல் கலைஞர் அமெரிக்காவில் பேசியது சர்ச்சையாகி இருக்கிறது . தீக்கதிர் நாளிதழிலும் அதை செய்தியாக்கியிருந்தார்கள் . சமகால உண்மையைத்தான் பேசியிருந்தார் . வீர்தாஸ் பெண்கள் , சிறுபான்மையினர் மீதான தாக்குதலைப் பற்றி பேசி இருந்தார் . உண்மையைச் சொன்னால் பலரின் மனதுக்கு உறுத்துமே ? சங்கிகள் உடனே வரிந்துகட்டி கிளம்பிவிட்டனர் . இவர்களால் தேவையில்லாமல் கோர்ட்டின் நேரம் வீணாகிறது . வெட்டியாக ஒரு குற்றச்சாட்டு சொல்லி வழக்குகளை போட்டு வருகிறார்கள் . கடந்த 16 ஆம் தேதி பணமதிப்பு நீக்கம் செயல்படுத்தப்பட்டதை நினைவுகூரும் விதமாக தீக்கதிர் நாளிதழில் கட்டுரைகள் வெளியாகியிருந்தது . அதைப் படித்தேன் . இந்த செய்தியில் கார்ட்டூன் கதிரவனின் பிரமாதமான கார்ட்டூனும் இடம்பெற்றிருந்தது .

காந்தியின் பேச்சால் ஊக்கம் பெற்று உருவான தற்சார்பு பேனா மற்றும் இங்க்!

படம்
  காந்தி தன் வாழ்நாளில் எழுதியுள்ள கடிதங்களின் எண்ணிக்கை எவ்வளவு தெரியுமா ? மொத்தம் 31 ஆயிரம் கடிதங்கள் . தினசரி உலக நாடுகளில் இருந்து வெளிவரும் கடிதங்களுக்கு பதில் அளிப்பது காந்தியின் வழக்கம் . அவர் வார நாட்களில் திங்கள்கிழமை மட்டும் மௌனவிரதம் இருப்பது வழக்கம் . ஆனால் வார நாட்களில் எப்போதும் எழுத்துக்கு விடுமுறை கிடையாது . இப்படி எழுதித்தான் நூறு நூல்களுக்கு மேல் காந்தி எழுதிய கட்டுரைகள் , பேச்சுகள் தொகுக்கப்பட்டு உள்ளன . இந்திய சுயராஜ்யம் பற்றி பேசிய காந்தி , இந்தியாவின் உள்நாட்டுத் தேவை போகவே பொருட்களை ஏற்றுமதி செய்யவேண்டும் என்று கூறிவந்தார் . இவரது கருத்தால் ஊக்கம் பெற்றவர்கள் தான் நாட்டின் தனித்துவமான பேனா மற்றும் பேனாவிற்கான மையைத் தயாரித்தனர் . காந்தியின் சுய ராஜ்ய கனவால் உந்தப்பட்டவர்களில் ஒருவர்தான் ராஜ முந்திரியைச் சேர்ந்த கே வி ரத்னம் . இவர் , 1921 ஆம் ஆண்டு காந்தியை சந்தித்து சுயராஜ்ய லட்சியப்படி என்ன பொருளை உருவாக்க வேண்டுமென கேட்டார் . அதற்கு , காந்தி பின் முதல் பேனா வரையில் நிறைய பொருட்களை நாம் தயாரிக்கலாமே என்று சொன்னார் . இதன்படி , 1932 ஆம் ஆண்டு ரத்னம் பென் வொர்க்ஸ்