இடுகைகள்

காங்கிரஸ் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

மதவாத குழுக்களுக்கு கேரளத்தில் எந்த வரவேற்பும் கிடைக்காது! கேரள முதல்வர் பினராயி விஜயன்

படம்
          பினராயி விஜயன் கேரள முதல்வர் உங்கள் இடதுசாரி அரசை மோசமாக காட்சிபடுத்துவதோடு , அதனை பலவீனப்படுத்தவும் மத்திய அரசு முயற்சிக்கிறது என்று கூறிவருகிறீர்கள் . ஏன் அப்படி கூறுகிறீர்கள் ? எங்கள் அரசு மீதான தாக்குதல் 2020 ஆம் ஆண்டு ஜூலை மாதம் தொடங்கியது . அப்போது பஞ்சாயத்து தேர்தலில் இடதுசாரி அரசு வெற்றி பெற்றிருந்தது . ஊடகங்களை விலைக்கு வாங்கிய பாஜக தலைவர்கள் அரசு மீது குற்றச்சாட்டுகளை வீசத் தொடங்கினர் . மத்திய ஏஜென்சிகளை பயன்படுத்தி மாநில அரசின்போது பல்வேறு வழக்குகளைத் தொடுத்தனர் . என்மீது புகார் கொடுத்தவர் தற்போது அதனை மறுத்துவருகிறார் . அவரின் பெயரை நான் கூற விரும்பவில்லை .    தங்க கடத்தல் வழக்கு பற்றி முன்னதாகவே பிரதமருக்கு எழுதியிருக்கிறேன் என்று சொன்னீர்கள் . வழக்கு விசாரணை எங்கு தவறாகிப்போனதுழ பிரதமருக்கு கடிதம் எழுதியது உண்மைதான் . தங்கத்தை சட்டவிரோதமாக கடத்துவது என்பது பொருளாதாரத்திற்கு ஆபத்தானது . விசாரணை தொடங்குவதற்கு ஆதரவாக நின்றேன் . ஆனால் மெல்ல மத்திய அரசின் விசாரணை எங்கள் அரசின் கொள்கைகளுக்கு எதிராக திரும்பிவிட்டது . நீங்கள் முன்னர் காங்

ஆர்எஸ்எஸ்ஸின் நிழலுடன்தான் எதிர்க்கட்சிகள் போரிட்டு வருகின்றன! - பத்ரி நாராயணன், சமூக வரலாற்று அறிஞர்

படம்
            பத்ரி நாராயணன் சமூக வரலாற்று அறிவியலாளர் பத்ரி நாராயணன் , ஆதி திராவிடர் மற்றும் இந்துத்துவா பற்றி பல்வேறு கட்டுரைகளை நூல்களை எழுதியுள்ளார் . அண்மையில் ரீபப்ளிக் ஆப் இந்துத்துவா என்ற நூலை எழுதியுள்ளார் . இதில் எப்படி இந்துத்துவா தன்னை மறுகட்டமைப்பு செய்து உலகம் முழுவதும் பரவி வருகிறது என்பதைக் கூறியுள்ளார் . இன்று ஆர்எஸ்எஸ் அமைப்பை எதிர்ப்பவர்கள் , அதன் நிழலுடன்தான் போரிடுகிறார்கள் . இந்துத்துவ தத்துவத்தின் கர்ப்பகிரகம் என ஆர்எ்ஸ்எஸை நீங்கள் கூறியுள்ளீர்களே ? தொண்ணூறுகளுக்குப் பிறகு உலகமயமாக்கம் , தாராளமயமாக்கம் அறிமுகமானது . அப்போதிலிருந்தே ஆர்எஸ்எஸ் அமைப்பை நவீன காலகட்டத்திற்கு ஏற்றபடி தனது கொள்கைகளையும் செயல்களையும் சிந்தனைகளையும் மாற்றி அமைத்து வருகிறது . இன்று ஒருவர் பல்வேறு சமூக பிரச்னைகள் சார்ந்து ஆர்எஸ்எ்ஸ் அமைப்பை கேள்விகள் கேட்டாலும் அதனிடம் அதற்கான பதில்கள் உள்ளன . அண்மையில் கூட அதன் தலைவர் மோகன் பகவத் , கோல்வால்கரின் பேச்சுகள் அடங்கிய தொகுதியில் கூற்ப்பட்ட சில கருத்துகளை நாம் மறக்க வேண்டும் என்று கூறியுள்ளார் . காலமும் , மக்களும் ம

மத்திய அரசின் வளர்ச்சி திட்டங்களை திமுக, காங்கிரஸ் தடுத்துக்கொண்டே இருக்கிறது! - எல்.முருகன், பாஜக

படம்
  எல்.முருகன்- TOI எல். முருகன் பாஜக தலைவர் உங்கள் கட்சி சமூக விரோதமான பல்வேறு விஷயங்களை செய்துள்ளதாக செய்தி வெளிவந்துள்ளதே? எங்கள் கட்சியில் உறுப்பினராக சேர ஒருவர் மிஸ்டுகால் கொடுத்தாலே போதும். இதன் காரணமாக உறுப்பினர் தவறான காரியங்களில் ஈடுபட்டிருக்க வாய்ப்புண்டு. நாங்கள் குற்றத்தொடர்பு கொண்டவர்களோடு பணியாற்றவில்லை.  கடந்த மக்களவைத் தேர்தலில் மோடிக்கு எதிரான அலை இருந்ததே? இன்று அந்த விஷயம் மாறியுள்ளது. அதனால்தான் மீனவர்கள், நடிகர்கள் எங்கள் கட்சியில் இணைந்து வருகிறார்கள். வெறுப்பு பிரசாரத்தை திமுகவும், காங்கிரசும் திட்டமிட்டு செய்துவருகிறார்கள். இனிமேல் இந்த வெறுப்பு பிரசாரம் மக்களிடையே செல்லாது.  எத்தனை தொகுதிகளில் வெல்வோம் என நினைக்கிறீர்கள்? இருபது தொகுதிகளை வெல்வோம். அதிமுக தலைமையிலான கூட்டணியில் பாஜக முத்திரை பதிக்கும். வெல்வதைப் பொறுத்து ஆட்சியில் பங்கேற்பதை மேலிடம் முடிவு செய்யும்.  நடக்கவிருக்கும் தமிழக தேர்தலை தேசப்பற்று கொண்டவர்களுக்கும் தேச விரோதிகளுக்குமான போர் என்று  கூறியது எதற்காக? இலங்கையில் நடந்த போரில் லட்சக்கணக்கான தமிழர்களை கொல்ல துணைநின்றது திமுகதான். அப்போது ஆட்ச

சீனப்பெயர் உள்ள பழங்களின் பெயர்களைச் சொல்லுங்கள்! - விஜய் ரூபானி, குஜராத் முதல்வர்

படம்
நேர்காணல்  குஜராத் முதல்வர் விஜய் ரூபானி 2016ஆம் ஆண்டு குஜராத் முதல்வரானபோது, அவரைச் சுற்றி இருந்தவர்களுக்கே விஜய் ரூபானி தொடர்ச்சியாக இருக்கையில் இருப்பாரா என்று தெரிவில்லை. ஆனால் அமித் ஷாவின் அருளாசியைப் பெற்றவரை இதுவரை யாரும் அசைக்க முடியவில்லை. கோவிட்- 19 பிரச்னையை படுமோசமாக கையாண்ட முதல்வர் என்ற பெருமையைப் பெற்றுள்ளவரிடம் பேசினோம் அடுத்துவரவிருக்கும் தேர்தலில் ஜெயிக்க என்ன திட்டம் வைத்துள்ளீர்கள்? உள்ளாட்சி தேர்தல், சட்டமன்ற தேர்தல் என இரண்டையும் சமாளிக்க திட்டங்களுடன் உள்ளோம். காங்கிரஸ் கட்சி மாநில, மாவட்ட அளவில் என எதிலும் வெல்லுவதற்கான திறனின்றி உள்ளது. குஜராத்தில் 17 ஆயிரம் கோடி ரூபாய் கடனை விவசாயிகளுக்கு வழங்கியுள்ளோம். இதற்கு வட்டி கிடையாது. 1.6 லட்சம் பேருக்கு நாங்கள் வேலைவாய்ப்பு கொடுத்துள்ளோம். மோடியில் ராமர்கோவில் கட்டும் திட்டம், இன்னும் பல்வேறு திட்டங்கள் காரணமாக மக்கள் எங்களுக்கு வாக்களிப்பார்கள். எங்கள் மாநிலத்தில் வேலையின்மை அளவு 3.4 சதவீதமாக உள்ளது.  குஜராத்தில் உங்கள் கட்சி 25 ஆண்டுகளாக ஆண்டு வருகிறது. எதிர்ப்புகள் வரவில்லையா? இல்லவே இல்லை. நாங்கள் மக்களுக்கான வளர

ராகுல்காந்தி ஜல்லிக்கட்டை பார்க்க வந்ததில் எந்த அரசியல் நோக்கமுமில்லை! கே.எஸ். அழகிரி, காங்கிரஸ் கமிட்டி தலைவர்

படம்
                    தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே . எஸ் . அழகிரி ராகுல்காந்தி மதுரையில் நடைபெறும் ஜல்லிக்கட்டு விழாவுக்கு வந்துள்ளது பல்வேறு சர்ச்சைகளுக்கு இடமளித்துள்ளதே ? ஐக்கிய முற்போக்கு கூட்டணி காலத்தில்தான் ஜல்லிக்கட்டு தடை செய்யப்பட்டது ..? ஜல்லிக்கட்டிற்கு பிரச்னை வந்தது 2014 இல்தான் . உச்சநீதிமன்றம் இதற்கான தடை ஆணையை பிறப்பித்தது . பின்னர் இத்தீர்ப்பை எதிர்த்து மனுவும் பதியப்பட்டது . ஐக்கிய முற்போக்கு கூட்டணி தமிழர் விளையாட்டு தொடர்வதற்கான முயற்சிகளை செய்தது . அவர்கள் தொடர்ந்து ஆட்சியில் இருந்திருந்தால் தமிழர் விளையாட்டிற்கு தடை விதிக்கப்பட்டிருக்காது . ஆனால் முன்னாள் அமைச்சரான ஜெய்ராம் ரமேஷ் இதற்கு எதிர்ப்பதமாக கருத்துகளை கூறுகிறாரே ? இந்த விவகாரத்தில் அரசுக்கு பல்வேறு கருத்துகள் இருந்தன . 1960 இல் உருவாக்கப்பட்ட விலங்குகளை துன்புறுத்தும் சட்டம் தொடர்பானவை அவை . ஜெயராம் ரமேஷ் கூறிய கருத்துகள் சட்டத்தின்பாற்பட்டவை . கேபினட் கமிட்டி ஜல்லிக்கட்டை தடை செய்யும் விஷயத்தை ஆதரிக்கவில்லை . இதற்கு காரணம் திமுக , மாநில அரசிடமிருந்து வந்த அழுத்தங்கள்த

உங்களால் முடிந்த பெஸ்டை கிடைக்கின்ற வாய்ப்புகளில் கொடுத்தால் போதும் ஜெயித்துவிடலாம்! சசி தரூர் - அரசியல்வாதி, எழுத்தாளர், அறிவுஜீவி

படம்
            சசிதரூர் பிரபல எழுத்தாளர் , காங்கிரஸ் கட்சி தலைவர்களுள் ஒருவர் . 2009 இல் தான் அரசியலில் காலடி எடுத்து வைத்தார் தரூர் . அதற்கு முன்னர் 1997-2007 வரை ஐ . நாவில் தகவல்தொடர்பு தொடர்பான பணியில் இருந்தார் . கேரளத்தை பூர்விகமாக கொண்டவர் , திருவனந்தபுரத்தில் நின்று வென்று மக்களவை உறுப்பினரானார் .   வெளிநாடுகளைப் பற்றிய கட்டுரை நூல்கள் , நாவல் , தத்து வம் என டஜன் கணக்கிலான நூல்களை எழுதி குவித்துள்ளார் . டிவிட்டர் இவர் எழுதும் பல்வேறு கருத்துகளை எட்டு லட்சத்திற்கும் அதிகமான மக்கள் படிக்கின்றனர் . விவாதிக்கின்றனர் . 2006 இல் சசி தரூரை ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஐ . நா தலைவராக்க பரிந்துரைத்தது . ஆனால் அத்திட்டம் நிறைவேறவில்லை . 22 வயதில் ஐ . நாவில் அதிகாரியாக இணைந்து பணியாற்றிய அனுபவத்தில் , ஐ . நா தலைவர் போட்டியில் இருந்து பின்வாங்கினார் . இந்த பதவி முழுக்க பல்வேறு நாடுகளின் அரசியல்போட்டியை உள்ளடக்கியது என்று கூறினார் . 50 வயதில் அடுத்து நான் என்ன செய்வது என யோசித்துக்கொண்டிருந்தேன் . அப்போது ஒரு வேலையைத் தேடுவது என்பது சரியான முடிவல்ல . நான் எடுத்த முடிவு சரிதா

மக்களுக்காக உருவான சட்டத்தை மக்கள் தங்களை உயிரைக்கொடுத்து காப்பாற்றிக்கொண்டு வருகிறார்கள்! - நிகில் தே, ஆர்டிஐ செயற்பாட்டாளர்

படம்
                  தகவல் அறியும் உரிமைச்சட்டம் அரசின் செயல்பாட்டையே மாற்றியது நிகில் தே அனுபமா கடகம் பிரன்ட்லைன்    15 ஆண்டுகளுக்கு முன்னர் ஆர்டிஐ சட்டம் நிறைவேற்றப்பட்டது உண்மையிலேயே முக்கியமானது . ஆனால் அண்மைய காலங்களில் மெல்ல அச்சட்டம் முடக்கப்பட்டு வருவதைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள் ? இதற்கான முயற்சிகள் 30 ஆண்டுகளாக இருந்ததால் ஆர்டிஐ சட்டம் அமலுக்கு வந்தது . ஏராளமான போராட்டங்கள் , பேரணிகள் என மக்கள் போராடியதால்தான் இச்சட்டம் நாடு முழுக்க நடைமுறைக்கு வந்தது . இதனை மக்களுக்கான சட்டம் என்று கூட சொல்லலாம் . எனவேதான் நாடு முழுக்க பரவலாக பயன்பட்டு வருகிறது . இந்த சட்டத்தின் வெளிப்படைத்தன்மை தற்போது கேள்விக்குறியாகி வருகிறது . ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சிக்காலத்தில் தகவல் அறியும் உரிமைச்சட்டத்தின் வலிமையைக் குறைப்பதற்கான செயல்பாடுகள் தொடங்கிவிட்டன . முதலில் சட்டத்தை அமலாக்க போராடிய செயல்பாட்டாளர்கள் இப்போது அதனை நீர்த்துப்போகாமல் பாதுகாக்க போராடவேண்டியுள்ளது . இந்தியாவில் தகவல் அறியும் உரிமைச்சட்டத்தை தினசரி எட்டு லட்சத்திற்கும் அதிகமான மக

பாஜகவின் பிளவுவாத அரசியலையும் மாண்டுவிட்ட சட்டம் ஒழுங்கையும் காங்கிரஸ் மீட்கும்! ஜிதின் பிர்சாதா, மேற்கு வங்கம்

படம்
                ஜிதின் பிர்சாதா காங்கிரஸ் பொறுப்பாளர் , மேற்கு வங்கம் இடதுசாரி கட்சிகளுடன் இணைந்து கூட்டணியை அறிவிப்பதில் தாமதம் எதற்கு ? காங்கிரஸ் இந்த முடிவில் தெளிவாக உள்ளது . நாங்கள் இடதுசாரி கட்சிகளுடன் பேச்சு வார்த்தை நடத்தி வருகிறோம் . இறுதிமுடிவை கட்சித்தலைவரான சோனியா எடுப்பார் . நாங்கள் இப்போது கட்சியில் பல்வேற கட்டரீதியாக பேச்சுவார்த்தை நடத்தி வருகிறோம் . நீங்கள் இப்போது எதிர்ப்பது திரிணாமூல் காங்கிரஸ் அல்லது பாஜகவையா ? இப்போது காங்கிரஸ் இரண்டு வித போட்டிகளை சமாளிக்கவேண்டியுள்ளது . ஒன்று மக்களை இனரீதியாக பிரிக்கும் பாஜக , அடுத்து சட்டம் ஒழுங்கு பிரச்னைகளை உள்நாட்டில் ஏற்படுத்தும் திரிணாமூல் காங்கிரஸ் . பாஜக அரசு வளர்ச்சி திட்டங்கள் பற்றி கவலைப்படாமல் பிரவினை அரசியலை நாட்டில் விரிவுபடுத்தி வருகிறது . இதனால் சுகாதாரம் , கல்வி , அடிப்படை கட்டமைப்பு வசதிகள் மேம்பாடு இன்றி உள்ளன . இப்போது தேர்தல் பிரசாரத்தில் கூட குடியுரிமைச்சட்டம் , தேசிய குடியுரிமை பதிவேறு பற்றி விவகாரங்கள் பேசப்படுகின்றன . இதில் காங்கிரசின் நிலை என்ன ? காங்கிரஸ் நாட

காங்கிரஸ் கட்சியின் அடுத்த தலைவராக வாய்ப்புள்ளவர் யார்?

படம்
                  அடுத்த தலைவர் ? காங்கிரஸ் கட்சி தலைவர் இல்லாமல் தடுமாறி வருகிறது . உட்கட்சியில் ஏற்படும் பல்வேறு பிரச்னைகளுக்கு பொறுப்பேற்க யாரும் தயாராக இல்லை என்பதையே இந்த சூழ்நிலை காட்டுகிறது . சோனியா காந்தி உடல்நிலை சிக்கலால் அவதிப்பட , அடுத்த முழுநேர தலைவர் யார் என்று பலரும் அவரா இவரா என யோசித்து வருகின்றனர் . வாய்ப்புள்ள சிலரை பார்ப்போம் . பவன் பன்சால் இடைக்கால நிர்வாகி , பொருளாளர் . தலைவராக வாய்ப்புள்ளவர் . எளிமையான மனிதர் . அதுவேதான் பலவீனமும் கூட . அனைவரையும் இணைக்கும் திறமை போதாது . திக்விஜய் சிங் மேலவை உறுப்பினர் , காங்கிரஸ் கமிட்டி அழைப்பாளர் மூத்த தலைவர் . மூத்த அரசியல்வாதி என்பதால் இளைஞர்களால் ஏற்கப்படாமல் போக அதிக வாய்ப்புள்ளது . ஆதிர் ரஞ்சன் சௌத்ரி மக்களவை தலைவர் , மேற்கு வங்க காங்கிரஸ் கட்சி தலைவர் மேற்கு வங்க அரசியலில் வேர்பிடித்து வளர்ந்து வந்தவர் . மற்ற அரசியல் சமாச்சாரங்களை அதிகம் அறிந்தவர் அல்ல . முகுல் வாஸ்னிக் சோனியாகாந்திக்கு நெருக்கமான ஆறு உறுப்பினர்களில் இவரும் ஒருவர் . மத்திய

மகாராஷ்டிராவில் காங்கிரஸ் கட்சி மூன்றாவது சக்கரம் என்று கூறுபவர்களது கருத்து தவறு! - பாபாசாகேப் தோரத், காங்கிரஸ்

படம்
              நேர்காணல் பாலசாகேப் தோரத் மகாராஷ்டிரா காங்கிரஸ் சிவசேனா கட்சி காங்கிரஸ் முன்வைத்த நியாய் திட்டத்தை கிடப்பில் போட்டுள்ளது . ஆனால் சிவ போஜன் எனும் திட்டத்தை அவர்கள் மேம்படுத்தி நடைமுறைப்படுத்தியுள்ளனரே ? அனைத்து கட்சிகளும் ஒன்றுசேர்ந்துதான் சிவபோஜன் திட்டத்தை செயல்படுத்தியுள்ளன . ஒற்றை கட்சியாக இப்படி அடையாளப்படுத்துவது சரியல்ல . நாங்கள் மூன்று கட்சிகளும் திட்டங்கள் பற்றி ஆலோசித்து்த்தான் செயல்படுத்தியுள்ளன . ராகுல்காந்தி அறிமுகப்படுத்திய நியாய் திட்டம் பொருளாதார அறிஞர்களால் வடிவமைக்கப்பட்டது . ஆனால் மாநிலத்தில் பொருளாதார பிரச்னைகள் இருப்பதால் அத்திட்டம் தள்ளி வைக்கப்பட்டுள்ளது . காங்கிரஸ் கட்சி அத்திட்டத்தை நாடுமுழுக்க மத்திய அரசு செயல்படுத்தவேண்டும் என்ற கோரிக்கையை கொண்டுள்ளது . உங்கள் கட்சியில் ஒருங்கிணைப்பு ரீதியான பல்வேறு பிரச்னைகள் வருகின்றனவே . கேபினட் சந்திப்பிற்கு முன்னதாக நிதின் ராவத் அறிவித்த மின்சார கட்டண மானியம் என்பதை அசோக் சவான் தவறு என்று கூறியுள்ளாரே ? மின்சார கட்டண மானியம் பற்றி கேபினட்டில் முன்னரே விவாதிக்க