விநோதரச மஞ்சரி - ரோனி ப்ரௌன்
விநோதரச மஞ்சரி- ரோனி பைக்கை மீட்க 1 கி . மீ சேசிங் ! சரக்கு அடித்துவிட்டு படுத்துவிடும் அப்பிராணிகளை விடுங்கள் . ஆனால் தொண்டை வரை குடித்துவிட்டு அப்படியே சாலையில் இறங்கி ஊருக்கே பீதிதரும் பிரகஸ்பதிகள் பற்றி கதை உலகெங்கும் உண்டுதானே ! கர்நாடகாவின் குடிமகன் ஒருவர் கூட செமபோதையானார் . ஆனால் பரவசத்தில் என்ன செய்தார் தெரியுமா ? கர்நாடகாவைச் சேர்ந்த குடிமகன் ஒருவர் , மூக்குமுட்ட குடித்து பரவசம் தளும்ப தள்ளாடி வந்தவர் , ட்ராஃபிக் போலீசின் பைக்கைப் பார்த்ததும் சிறிது கூட யோசிக்கவில்லை . உடனே சாவி போட்டு எஞ்சின் உசுப்பி கிளப்பிவிட்டார் ; அதுவும் பைக்கின் மீதிருந்து போலீசின் தொப்பியை தலையில் மாட்டிக்கொண்டு . உடனே குடிமகனை சேஸ் பண்ணிப்போனால் , ஏறத்தாழ 1 கி . மீ போய் வளைத்துத்தான் பைக்கை மீட்டிருக்கிறார் பரிதாப போலீஸ்காரர் . ஆனால் குடிபோதை பரவசத்தில் கர்நாடக மனிதர் சிரிப்பதை நிறுத்தவேயில்லை . அதுதான் ஊரே சிரிச்சிருச்சே ! மகள்களே இனி மாடுகள் ! இந்தியாவில் மாநில அரசின் கடன் தள்ளுபடி அனுசரணையைத் கடந்து , விவசாயம் செய்வது இடியாப்ப சிக்கலாகி வருகிறது என்பதற்கு மத்தியப்