காணாமல் போன பெண் தொழிலாளர்கள்! - ஜிடிபி சரிவுக்கு முக்கியக் காரணம்!
foreign relation council மாருதி, ஹோண்டா, பஜாஜ் கம்பெனிகள் பற்றி கவலைப்பட்ட அளவுக்கு நாம் பெண் தொழிலாளர்கள் பற்றி கவலைப்படவில்லை. காரணம், பெண்களுக்கான வேலைவாய்ப்புகள் தொடர்ந்து குறைந்துவரும் காலகட்டம் இது. பெண் தொழிலாளர்களை பார்ப்பது அரிதாகி வருகிறது. என்ன காரணம்? பெண்கள் பெருமளவு கல்வி அறிவு பெற்றுள்ளார்கள். இதனால் பாமர பெண்கள் பார்க்கும் வேலைகளைச் செய்யத் தயங்குகிறார்கள். கிராமத்து பெண்கள் கூட சற்றே ரிஸ்க் எடுத்து நகருக்கு வந்தால், அவர்கள் நல்ல வேலையில் சேருவார்களே தவிர காட்டு வேலைக்கோ, கட்டட வேலைக்கோ போவது சாத்தியமில்லை. கிராம ப்புறத்தில் கூட குறைந்தபட்சம் பிஹெச்டி வரை படித்து விடுகிறார்கள் பெண்கள். காரணம், கல்விக்கட்டணம் குறைவு. மற்றொன்று கருத்தாகப் படிப்பதும்தான். பெண்கள் வேலைக்குச்சென்றாலும் கல்வித்தகுதி சார்ந்தே யோசிக்கிறார்கள். ஆனால் திருமணம் என்று வரும்போது, பெரும்பாலும் வேலையைக் கைவிடும் முடிவை அவர்களே எடுக்கிறார்கள். காரணம், குடும்பத்திற்கான நேரத்தை செலவிடுவதுதான். சென்னை போன்ற மாநகரங்களில் இருவரும் வேலைக்கு செல்வது அவசியம். பெரும்பாலும் அதனை புகாரின்