இடுகைகள்

சைக்கோ லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

கொலை செய்யப்பட ஆரோக்கிய ஆட்கள் தேவை என விளம்பரம் கொடுத்து கொலை செய்த கொலைகாரன்!

படம்
              எளிதில் கிடைக்காத வாய்ப்பு கொலை செய்வதற்கான தூண்டுதல் எப்படி கிடைக்கிறதமோ அதேபோல்தான் அதனை செயல்படுத்துவதற்கான தருணம் கிடைப்பதும் கூட சில தொடர் கொலைகார ர்கள் ஆண் , பெண் , குழந்தை , முதியவர் என யார் கிடைத்தாலும் கொல்வதுதானே திட்டம் ? என கொன்று கொண்டு போய்க்கொண்டே இருப்பார்கள் . ஆனால் வரலாற்றில் முக்கியமான கொலைகா ர்களாக அறியப்பட்டவர்கள் குறிப்பிட்ட இயல்பினைக் கொண்ட ஆண்களை , பெண்களை மட்டுமே கொல்லுவார்கள் . அது அவர்களின் அம்மாவை நினைவுபடுத்தலாம் . அல்லது பவுன் நிறமுள்ள முடி , குறிப்பிட்ட சாயல் கொண்ட பெண்கள் மட்டும் என்று கூட வைத்துக்கொள்ளலாம் . கொலைகார ர்களுக்கு கிடைக்கும் திடீர் வாய்ப்புகளில் அதிகம் உயிரிழந்தவர்கள் என ஆப்பிரிக்க அமெரிக்கர்கள் , விலைமாதுக்களை கூறலாம் . பொதுவாக இந்த இரண்டு பிரிவினருமே காணாமல் போனால் , இறந்துபோனால் கூட கவலைப்பட அதிக ஆட்கள் கிடையாது . அரசு எந்திரமும் கண்துடைப்பாக சில காட்சிகளை நடத்தும் . இதனால் பெரும்பாலானோரின எளிய இலக்காகவே இவர்களே இருப்பார்கள் . கேரி ஹெய்ட்னிக் என்பவர் இந்த வகையில் தனது பண்ணைக்கு கொலை செய்வதற்கான இரையை கொண்

எல்லாம் சாத்தான் செயல்! - சாத்தான் காதில் சொன்னதால் கொலை செய்தேன்!

படம்
          devian art       எல்லாம் சாத்தான் செயல் கொலைகளை நிதானமாக செய்துவிட்டு வம்பு , வழக்குகள் என்று வரும்போது எனது காதில் சாத்தானின் குரல் கேட்டது . அதனால்தான் குற்றங்களை செய்தேன் என புதுமையாக வழக்கு வழக்கு விசாரணையில் குற்றவாளிகள் பேசுவது மத்திய காலத்தில் தொடங்கியது . இதனை முதலில் தொடங்கியவர் டேவிட் பெர்க்கோவிட்ஸ்தான் . எனக்குள் நான் பிறந்த காலம்தொட்டே சாத்தான் உள்ளது என்று வாக்குமூலம் கொடுத்தார் . அடுத்து ஹெர்பர்ட் என்பவர் , நிலநடுக்கம் ஏற்படுத்துபவர்கள் என்று அச்சப்பட்டு எட்டுபேரை அடுத்தடுத்து கொன்றார் . அவர்களுக்குள் சாத்தான் நுழைந்துவிட்டான் எனவே , அவர்கள் செய்யவிரும்பாத விஷயங்களை கூட செய்தார்கள் என்று கூறினார் . அமெரிக்காவில் இந்த விவகாரம் 1950 களில் தொடங்கியது . எல்லாம் சாத்தான் செயல் என்று சொல்லி வழக்கு உளவியல் பக்கம் திருப்பி பலரும் தப்பிக்க முயல்கின்றனர் . ஆனால் அது எல்லா நேரத்திலும் எடுபடாது . இப்படித்தான் எலிபாசி என்ற கொலைகாரர் , பதினைந்து சிறுவர்களை வேலை தருகிறேன் என்று கூட்டிச்சென்று கோடாரியால் வெட்டிச்சாய்த்தார் . காவல்துறையில் மாட்டியபிற