பல முக மன்னர்கள்!
வரலாற்று சுவாரசியங்கள் பல முக மன்னர்கள் ! ரா . வேங்கடசாமி 1815 ஆம் ஆண்டு பிறந்த ஃபிளின்ட் ஜாக் , இங்கிலாந்தின் யார்க் ஷையர் வாரிசு . இயற்பெயர் எட்வர்டு சிம்சன் தன் பதினான்கு வயதில் வரலாற்று பேராசிரியர் ஜார்ஜ் யங்கிடம் வேலைக்குச் சேர்ந்த ஜாக் , அவருடன் சேர்ந்து பல்வேறு அகழ்வாராய்ச்சிகளில் ஈடுபட்டான் . திடீரென பயணம் சென்று காட்டுக்குள் கூடாரம் போட்டு தேடுதல் வேட்டை நடத்திவிட்டு வருவது ஜார்ஜ் யங்கின் வழக்கம் . டாக்டர் இறந்தபின் அவரின் தொழிலுக்கு வாரிசாக மாறினான் ஜாக் . பல கலைப்பொருட்களை கண்டுபிடித்து வியாபாரம் செய்யத்தொடங்கினார் ஜாக் . அப்போது உடைந்த அம்பு முனையைக் கொண்டுவந்த வியாபாரி ஒருவர் . அதைப்போலவே மற்றொன்று செய்து தரமுடியுமா என்று கேட்டார் . அதை சவாலாக ஏற்ற சிம்சன் செய்த போலி அம்பு கச்சிதமாகவும் ஒரிஜினலைப்போலவும் இருந்தது . பின் பழங்கால மண்ஜாடிகளை போலி செய்யத்தொடங்கினார் ஜாக் . புதிய ஜாடிகளை செதுக்கி மண்ணில் புதைத்து வைத்து அரியது பழையது என வியாபாரம் செய்து வந்தார் ஜ