தமிழன் முற்றத்து நாகரிகக் கொடிமரம்
தமிழன் முற்றத்து நாகரிகக் கொடிமரம் · அன்பரசு சண்முகம் இன்றைய சமகாலத்தில் வடமொழி, மூத்ததது என்று அதன்மேல் பற்றுகொண்டவர்கள் அந்த அதனை பரப்ப, பரவலாக்க முயன்றுவருகிறார்கள். ஆனால் குறிப்பிட்ட மேல்அடுக்கு மக்கள் மட்டுமே பயன்படுத்தவேண்டும் என்று கூறி கட்டுப்படுத்தப்பட்டு மக்கள் மொழி என்ற தகுதியை இழந்ததால் சமஸ்கிருதம் தன்னை தக்கவைத்துக் கொள்ளமுடியவில்லை என்ற உண்மையை இவர்கள் பேசாமல் திட்டமிட்டே மறைக்கிறார்கள். மக்களிடம் தொடர்ந்து புழங்கும் மொழிகள் மட்டுமே நிலைத்து நிற்கமுடியும் என்பது யதார்த்த உண்மை. தமிழ் பழங்குடி மக்களின் மொழியான தமிழ் மொழி குமரிக்கண்டத்தில் தோன்றியது ஐம்பதாயிரம் ஆண்டுகளுக்கு முன் எனவும், தமிழர் நாகரிகமும், தமிழ் இலக்கணவிலக்கியமும் தோன்றியது இருபதாயிரம் ஆண்டுகளுக்கு முன் எனவும், தேவநேயப்பாவாணர் தமிழ் வரலாறு நூலில் தெளிவுற கூறியுள்ளார். தமிழ்மொழி தேய்வதற்கு முக்கியகாரணமாக வடமொழிச்சொற்களைப் பேச்சில் கலப்பது, தெய்வ வழிபாட்டில் அர்ச்சனைகள் வடமொழியில் செய்வது, தமிழர்களின் பெயர்களில் வடமொழி கலப்பு என இவையே நம்மிடம் உள்ள குறைபாடுகளாக கூறலாம். இன்னொன்ற