வாழ்வதற்கான உரிமை வேண்டிய நீண்ட போராட்டம்
வாழ்வதற்கான உரிமை வேண்டிய நீண்ட போராட்டம் சதினாத் சாரங்கி தமிழில்: ஃப்ரான்சிஸ் ரஞ்சா போபால் விஷவாயுவால் பாதிக்கப்பட்டவர்கள் தங்களுக்கான சட்டரீதியான தீர்வுக்காக முப்பது ஆண்டுகளுக்கு மேலாக காத்திருக்கிறார்கள். நிலத்தடி நீரில் கலந்துவிட்ட நச்சுக்களினால் பாதிக்கப்பட்ட மக்கள் 20 ஆண்டுகளுக்கும் மேலாக தங்களுக்கான உரிமைகளைப் பெற போராட்டத்தினை தொடர்ந்து மேற்கொண்டு நடத்தி வருகிறார்கள். 30 ஆண்டுகளுக்கு முன்பு போபாலில் உரத்தொழிற்சாலை ஒன்றிலிருந்து விஷவாயு கசிந்ததில், நடந்த பேரழிவை அறிந்து பலரும் அதிர்ச்சியடைந்திருப்போம். இன்றும் அதன் விளைவுகளை அம்மக்கள் தொடர்ந்து அனுபவித்து வருகிறார்கள். டிசம்பர் 1984 ல் நச்சுவாயுவினால் பாதிக்கப்பட்ட பலர் இறந்துவிட்டாலும், தொடரும் போராட்டம் ஆனது, தொடரும் நச்சுவாயுவின் கொடும் விளைவுகளால் இன்றுவரை 25000 பேரும் தொடர்ந்து இந்த எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. புற்றுநோய் மற்றும் மூச்சுக்குழல் புற்றுநோய், பிறக்கும்போதே குணப்படுத்த முடியாத உடல்நலக்கோளாறுகளுடனும், ஊனங்களுடனும் பிறக்கின்றனர். மேலும் ஒரு பேரழிவு ந