ஜெனரிக் மருந்துகளை பரிந்துரை செய்வது மிக கடினமான ஒன்று!
ஜெனரிக் மருந்துகளை பரிந்துரை செய்வது மிக கடினமான ஒன்று ! நேர்காணல் : டாக்டர் . தேவி பிரசாத் ஷெட்டி தமிழில் : ச . அன்பரசு அண்மையில் இந்திய மருத்துவக்கழகம் (MCI), மருத்துவர்கள் அனைவரும் இனி நோயாளிகளுக்கு ஜெனரிக் மருந்துகளையே பரிந்துரைக்க அறிவுறுத்தியுள்ளது . இந்திய அரசு , மருந்துகள் மற்றும் அழகுப்பொருட்கள் சட்டத்தில் ஜெனரிக் மருந்து விதியை இணைக்க முடிவு செய்துள்ளது . இது குறித்து நம்மோடு உரையாடுகிறார் நாராயணா ஹிருதாலயா மருத்துவமனையின் மருத்துவர் தேவி பிரசாத் ஷெட்டி . தரமான விலைகுறைந்த மருந்துகள் மக்களுக்கு கிடைக்கச்செய்யும் இந்திய அரசின் இந்த உத்தரவுக்கு யாரும் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை . ஆனால் மத்திய அரசின் நோக்கத்திற்கும் , இந்திய மருத்துவக்கழகத்தின் விதிகளுக்கும் நிறைய முரண்பாடு உள்ளதே ? அரசு ஜெனரிக் மருந்துகளைப் பயன்படுத்த எடுத்த முடிவை வரவேற்கிறேன் . இதனை அரசு முன்னமே செயல்படுத்தியிருக்கவேண்டும் . ஆனால் இதனை செயல்படுத்துவதில் நிறைய சிக்கல்கள் உள்ளன . 30 ஆயிரம் நிறுவனங்கள் மருந்துகளை உற்பத்தி செய்து டன் கணக்கில் தள்ளுகின்றன . நோயாளிக்கு பொதுவாக ஜெனரிக் மரு