இடுகைகள்

தடுப்பூசி லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

நீரிழிவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு கோவிட் -19 சிகிச்சை செய்வது கடினம்!

படம்
                    நிகில் தாண்டன் பேராசிரியர் , எய்ம்ஸ் கோவிட் -19 பாதிப்பு ்நீரிழிவை பாதிப்பை உருவாக்குகிறதா ? ஒருவருக்கு கோவிட் நோய்த்தொற்று ஏற்பட்டிருக்கும்போது அவருக்கு ஹெச்பிஏ 1 சி என்ற சோதனையை செய்யவேண்டும் . இதன் மூலம் ஒருவரின் ரத்தத்தில் உள்ள குளுக்கோஸ் அளவை அளவிடலாம் . பாதிப்பு ஏற்பட்ட மூன்று மாதத்தில் அவரின் குளுக்கோஸ் அளவு உயர்ந்திருந்தால் அவருக்கு நீரிழிவு நோய் ஏற்பட்டுள்ளது என அறியலாம் . முதலில் ஒருவருக்கு நீரிழிவுநோய் இருந்து அவருக்கு குளுக்கோஸ் அளவு உயர்ந்தால் உடனே அவருக்கு வழங்கப்படும் ஸ்டீராய்டு சிகிச்சைகளை நிறுத்தவேண்டும் . குளுக்கோஸ் அளவுகள் இயல்பான நிலையில் இருந்தால் அவருக்கு ஸ்டீராய்டு சிகிச்சையை தொடரலாம் . ஆனால் சர்க்கரை அளவு கூடியிருந்தால் அதே நேரம் ஸ்டீரா்ய்டு சிகிச்சை காரணமாக நீரிழிவு பாதிப்பு கூடவும் வாய்ப்புண்டு . உறுதியாக இதனை கூறலாமா ? நீரிழிவு என்பது அறிகுறிகள் இல்லாமல் பலருக்கும் ஏற்படும் நோய் . எனவே அவர்கள் தங்களுக்கு சர்க்கரை நோய் இருப்பது தெரியாமலேயே இருப்பார்கள் . இந்தியாவில் 50 சதவீத மக்களுக்கு தங்களுக்கு சர்க

நோயிலிருந்து ஒருவரைக் காப்பாற்ற ஒரு டோஸ் தடுப்பூசி போதும்!

படம்
                      ஒரு டோஸ் போதும் ! இங்கிலாந்தில் தடுப்பூசி செலுத்துவதற்கான அமைப்பின் தலைவர் கேட் பிங்காம் , ஒரு முறை தடுப்பூசியை உடலில் செலுத்திக்கொண்டால் போதும் . அதுவே பெருந்தொற்றிலிருந்து ஒருவரைக் காப்பாற்றும் என்று கூறினார் . மருத்துவர் பால் ஸ்டோபில்ஸ் ஒருமுறை செலுத்திக்கொள்ளும் தடுப்பூசியை அவசியமானது என்று கூறியதோடு , இரண்டாவது பூஸ்டர் ஷாட்டை போட்டுக்கொள்வது கொரோனாவிலிருந்து ஒருவரைக் காக்கும் என்று கூறினார் . இருமுறை தடுப்பூசியை போடவேண்டுமென்று கூறிவந்த இந்தியா , இப்போது தடுப்பூசி இல்லாத நெருக்கடியில் ஒரு டோஸ் மட்டும்தான் மக்களுக்கு வழங்கி வருகிறது . மருத்துவமனைகளிலும் கூட இரண்டாவது டோஸை இல்லையென்று சொல்லிவரும் நிலை உள்ளது . ட்விட்டரில் இதுதொடர்பாக விவாதங்கள் நடந்தன . இறுதியாக நிதி ஆயோக்கின் உறுப்பினரான டாக்டர் விகே பால் கோவிஷீல்டு மருந்து மக்களுக்கு இரண்டு டோஸாக வழங்கப்படுவது உறுதி . அதில் மாற்றமில்லை என்று கூறியிருக்கிறார் . இங்கிலாந்தில் முதலில் தடுப்பூசியை ஒருமுறை மட்டுமே வழங்க ஏற்பாடானது . அப்போதைய நிலையில் ஏராளமான உயிர்கள் பறிபோய்கொண்டிருந்தன

தொழில்நுட்பம், தகவல்பாதுகாப்பு, வங்கித்துறை, சமூக செயல்பாடு ஆகியவற்றில் சாதனை செய்யும் பெண்கள்!

படம்
                சாதனைப் பெண்கள் புருகல்ப சங்கர் துணை நிறுவனர் , அட்லான் இவர் பெரு நிறுவனங்கள் தங்கள் தகவல்களை பாதுகாப்பதற்கான வழிமுறைகளை கற்றுக்கொடுத்து வருகிறார் . சிங்கப்பூரிலுள்ள நான்யாங் டெக்னிகல் பல்கலைக்கழகத்தில் படித்து பட்டம்பெற்றவர் இவர் . அங்கே இவரோடு படித்த வருண் பங்கா என்பவரோடு இணைந்து சோசியல் காப்ஸ் என்ற நிறுவனத்தை தொடங்கினார் . அதன் மூலம் அரசு , தனியார் நிறுவனங்களின் தகவல்களைப் பாதுகாக்க விரும்பினார் . பல்வேறு நாடுகளில் இதுதொடர்பாக ஆலோசனைகளை வழங்கி செயல்பட்டுள்ளனர் . இந்தியாவில் உள்ள அரசு அமைப்புகளுக்கான தகவல் தளமான திஷா என்பதை உருவாக்கியது இவர்கள்தான் . இதனை அட்லான் என்ற தகவல் பாதுகாப்பு நிறுவனம் மூலம் சாத்தியப்படுத்தினர் . இவர்கள் மத்திய அரசின் உஜ்வாலா திட்டத்திற்கான அமைப்பை உருவாக்கியதுதான் முக்கியமானது . இப்போது கிட்அப் , மைக்ரோசாப்ட் அசூர் , அமேசான் வெப் சர்வீஸ் ஆகிய சேவைகளைப் பயன்படுத்தி வாடிக்கையாளர்களுக்கு சேவை புரிந்து வருகின்றனர் . சோனல் சிங் இயக்குநர் , துணை நிறுவனர் ஃபிட்டர் ஆப் கையில் இருநூறு பவுண்டுகள்தான் இருக்கி்ன

தடுப்பூசி விலை நிர்ணயித்தல் விவகாரத்தில் மத்திய அரசு தவறு செய்துவிட்டது! - அமர்த்தியா லகிரி

படம்
                அமர்த்தியா லகிரி பேராசிரியர் , பிரிட்டிஷ் கொலம்பியா பல்கலைக்கழகம் பொதுமக்கள் மத்திய அரசின் தடுப்பூசி திட்டம் மீது நம்பிக்கை இழந்துள்ளனர் . ஏப்ரல் மாதத்தில் தடுப்பூசிகளை மாநிலங்கள் பெறும்படி மத்திய அரசு உத்தரவிட்டது விமர்சனத்திற்குள்ளாகி வருகிறது . இதில் என்ன பிரச்னை இருக்கிறது என்று நினைக்கிறீர்கள் ? இந்தியாவின் தடுப்பூதி திட்ட முறை கடுமையான தேக்கத்தை சந்தித்துள்ளது . தொடக்கத்திலேயே இந்திய அரசு தேவையான தடுப்பூசிகளை தயாரிக்க ஆர்டர் கொடுக்கவில்லை . இந்தியாவுக்கு இரண்டு பில்லியன் டோஸ்கள் மருந்து தேவை . இதில் ஒட்டுமொத்த மக்கள்தொகையில் 12 சதவீதத்தினர் மட்டுமே முதல் டோஸ் மருந்தைப் பெற்றுள்ளனர் . அரசு இப்போதுதான் கோவிஷீல்டு மருந்திற்கான நூறு மில்லியன் டோஸ் ஆர்டர்களை அளித்துள்ளது . சீரம் இன்ஸ்டிடியூட்டின் மருந்து தயாரிப்புத் திறன் 700 மில்லியன் டோஸ்களாக உள்ளது . பாரத் பயோடெக் நிறுவனத்தின் திறன் 150 மில்லியன் டோஸ்களாக உள்ளது . இங்கு கூறியிருப்பது நிறுவனங்களில் ஆண்டு தயாரிப்பு . ஆனால் மத்திய அரசு பற்றாக்குறையைப் போக்க மருந்துகளை இறக்குமதிசெய்வதற்கான முயற்

இரண்டாவது அலையை கணிக்க தவறியது மத்திய அரசின் குற்றம்தான்! - பூபேந்திரசிங் பாதல் -சத்தீஸ்கர் முதல்வர்

படம்
              பூபேந்திரசிங் பாதல் சத்தீஸ்கர் முதல்வர் - காங்கிரஸ் உங்கள் மாநிலத்தில் தடுப்பூசிக்கான தட்டுப்பாடு உள்ளதா ? நாங்கள் இரண்டு நாட்களில் ஐந்து லட்சத்திற்கும் அதிகமான மக்களுக்கு தடுப்பூசி வழங்கியுள்ளோம் . 45 முதல் 60 வயது கொண்ட 63 சதவீத மக்களுக்கு நாங்கள் தடுப்பூசியை செலுத்தியுள்ளோம் . அனைவருக்கும் தடுப்பூசியை வழங்க வயது வரம்பை தளர்த்த மத்திய அரசிடம் கூறியுள்ளோம் . கொரோனா நோய்த்தொற்று வயது வரம்பின்றி அனைத்து மக்களையும் பாதித்துள்ளது . தற்போது உள்ள இரண்டு தடுப்பூசிகளை மட்டுமே வைத்து மக்களை பாதுகாக்க முடியாது . முன்னாள் பிரதமரான மன்மோகன்சிங் கூறியபடி வெளிநாட்டு தடுப்பூசிகளை இறக்குமதி செய்வதோடு , உ்ள்நாட்டு தடுப்பூசிகளையும் உற்பத்தி செய்யவேண்டும் . அப்போதுதான் தடுப்பூசியை மக்கள் அனைவருக்கும் வழங்க முடியும் . மன்மோகன்சிங் எழுதிய கடிதத்தைக்கூட நீங்கள் குறிப்பிட்டுள்ளீர்கள் . அவருடைய கடிதத்திற்கு ஹர்ஷ்வர்த்தன் காங்கிரஸ் தலைவர்கள் , முதல்வர்களை தாக்கி பதில் கூறியிருக்கிறாரே ? இங்கே பாருங்கள் . ஹர்ஷ்வர்த்தன் மரியாதைக்குரிய பதவியில் இருக்கிறார் . அதற்க

ஏழு ஆண்டு கால ஆட்சியில் நோய்களும் மரணங்களும்!

படம்
                  ஏழு ஆண்டு கால ஆட்சியில் நோய்களும் மரணங்களும் ! ப . சிதம்பரம் இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் பாஜக கட்சி , 303 சீட்டுகள் வென்று ஆட்சியைப் பிடித்தது . கூட்டணியாக 353 இடங்கள் கிடைத்தன . இப்போது மூன்றாவது ஆண்டாக ஆட்சி செய்துகொண்டிருக்கிறது . அக்கட்சியில் என்ன விஷயங்கள் நமக்கு கிடைத்துள்ளன என்பதைப் பார்ப்போம் . உணவு , பாதுகாப்பு , வேலை , வீடு , சுகாதாரம் , கல்வி ஆகியவை மக்களுக்கு சரியான முறையில் கிடைத்திருக்க வேண்டும் . உலகிலேயே இந்தியாதான் அதிகளவில் பருப்பு , தானியங்கள் , பால் , காய்கறிகள் , மீன்களை உற்பத்தி செய்கிறது . அனைத்து மக்களுக்கும் தேவையான உணவு கிடைக்கச்செய்வது அவசியமானது . ஆனால் அப்படி கிடைக்கவில்லை . 2015-16 ஆண்டு குடும்பநலத்துறை ஆய்வு அறிக்கையில் 58.6 சதவீத குழந்தைகள் ஊட்டச்சத்து பற்றாக்குறையில் தவித்து வருகின்றனர் . இவர்களுக்கு ரத்தசோகை பாதிப்பு உள்ளது . இதில் உணவு வீணாக்கப்படும் பிரச்னையும் உள்ளது . 22 மாநிலங்களில் ஆய்வு செய்ததில் 18 மாநிலங்களில் உள்ள குழந்தைகளுக்கு ரத்தசோகை பாதிப்பு உள்ளது . 12 மாநிலங்களில் உணவு வீணாக்கப்படுவது நடந்து

கடந்த காலத்தில் இந்தியாவின் பெருமையைத் தேடிக்கொண்டிருந்தால் வருங்காலம் என்பதே நமக்கு இருக்காது! - சேட்டன் பகத்

படம்
                  போலித்தனமான அறிவியலே இந்தியாவின் வீழ்ச்சிக்கு காரணம் சேட்டன் பகத் நவராத்திரிக்கான ஏழுநாட்கள் விரதத்தை நான் கடைப்பிடித்து வருகிறேன் . கடந்த முப்பது ஆண்டுகளாக விழா காலங்களில் உண்ணாநோன்பை கடைபிடித்து வருகிறேன் . இப்போது இந்த கட்டுரையைக் கூட விரதத்தை முடித்தபிறகு எழுதிக்கொண்டிருக்கிறேன் . நான் கடைபிடிக்கும் மதத்தை நான் விரும்புகிறேன் . ஆனால் இந்த நேசம் சிலசமயம் புதிய மாற்றங்களை நிராகரித்து விடும் என்பது உண்மையே . பெருந்தொற்றுகாலம் இதுபோல நம்பிக்கை கொண்ட அறிவியலை நம்பாத இந்துகள் ஏராளமானோர் இங்கு உள்ளனர் . இவர்களைப் போன்ற அவ நம்பிக்கைவாதிகள் இருப்பதால்தான் நம்மை வெளியிலிருந்து வந்தவர்கள் பல நூற்றாண்டுகளாக ஆட்சி செய்தனர் . அமெரிக்கா , சீனா ஆகிய நாடுகளில் கூட இறப்புகளை தடுத்தபிறகும் இந்தியாவில் கொரானோவுக்கு பலியானவர்களின் எண்ணிக்கை அதிகரித்துவருகிறது . அங்கு நோயாளிகளின் எண்ணிக்கை குறைந்து பொருளாதார வளர்ச்சி மீண்டு வருகிறது . இதனை பலரும் ட்வீட் செய்வதற்குள் நான் சில விஷயங்களை கூறிவிடுகிறேன் . 1. நான் அனைத்து இந்துக்களையும் அறிவியல் மீது அவநம்ப