இடுகைகள்

பழங்குடி லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

அழியும் நிலையிலுள்ள மொழியை காப்பாற்ற வேண்டிய தேவை! - பதில் சொல்லுங்க ப்ரோ

படம்
            வீடியோ சாட்டிங் செய்யும்போது மூளையில் என்ன நடக்கிறது ? பொதுவாக ஒருவருடன் நடைபெறும் உரையாடலில் 80 சதவீதம் முகத்திலுள்ள உணர்ச்சிகள் மூலமாகத்தான் நடக்கிறது . ஒருவருடன் பேசும்போது புன்னகை , இமைகளை உயர்த்துவது , உதடுகளில் ஏற்படும் மாற்றம் , கண்கள் பெரிதாவது ஆகிய விஷயங்கள் நடக்கும் . 2013 இல் நடைபெற்ற ஆய்வில் , வீடியோ சாட்டிங்கில் ஒருவர் அதிகளவு உணர்ச்சிகளை வெளிப்படுத்தியது தெரியவந்துள்ளது . இதனை சைபர்சைக்காலஜி பத்திரிகை வெளியிட்டுள்ளது . பொதுவாக பேசுவது , குறுஞ்செய்திகளை அனுப்புவது ஆகியவற்றை விட உணர்ச்சிகளை வெளிப்படுத்துவது இதில் அதிகம் நடக்கிறது . நாம் பயன்படுத்தும் பிளாஸ்டிக்குகள் எங்கே போகின்றன ? பெரும்பாலும் ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக்குகளில் 8 சதவீதம் மட்டுமே மறுசுழற்சியாகின்றன . மற்றவை எல்லாம் கழிவாகவே தேங்குகின்றன . அமெரிக்காவில் இருந்து சீன நிறுவனங்கள் 7 லட்சம் டன்கள் பிளாஸ்டிக் கழிவுகளை இறக்குமதி செய்து வருகின்றன . இதனால் அமெரிக்காவில் பிளாஸ்டிக் கழிவுகள் தேங்குவதில்லை . சீன நிறுவனங்கள் இதனை இருபது ஆண்டுகளாக செய்து வருகின்றன . 20

புதிய டெக்ஸின் அதிரடி! - புதிய கதைக்களம் - புதிய முகம்!

படம்
segio bonelli ஒரு தலைவன் ஒரு சகாப்தம் லயன் காமிக்ஸ் - தீபாவளி மலர் விலை. ரூ. 150 ப்ளூமூன் எனும் கமான்சே குழுக்கள், நவஹோ எனும் தங்களின் எதிரியான பழங்குடிகளை தாக்கி கொன்றுவிடுகின்றனர். அங்கு அடைக்கலமாகி வந்த பெண் ஒருவரையும் தூக்கிக்கொண்டு வந்துவிடுகின்றனர். அவர்களை வேரறுக்க டெக்ஸ் வில்லர் செல்கிறார். நீதியை நிலைநாட்டி அவர்களை இடதுகையால் சமாளித்து தோட்டாக்களையும் கோடாரிகளையும் பரிசளித்து, குருதியால் பூமியை குளிப்பாட்டுகிறார். இறுதியில் ப்ளூமூனோடு ஒற்றைக்கு ஒற்றையாக மோதி வென்று தன் சவாலில் சாதிக்கிறார். எப்படி என்பதுதான் காமிக்ஸின் கதை. கதை தொடங்குவதும் முடிவதும் செம ட்விஸ்ட். கதையை சொல்வது டெக்ஸ் வில்லரின் ஆயுள்கால சகாவான கார்சன். ஏறத்தாழ நினைவிழப்பு நோய்க்கு ஆளாகியது போல உள்ள கார்சன், தனது நண்பரின் கதையை சொல்கிறார். நண்பர்தான் டெக்ஸ் வில்லர். இக்கதையில் டெக்ஸ் வில்லர் சற்று வேறுபட்டு தோன்றுகிறார். இதுவரையில் நாம் பார்த்த டெக்ஸ் வில்லர் இவர் கிடையாது. அழகாய் ஒரு அதிரடி ரேஞ்சர்களில் ஒருவரான ஜாரியூ என்பவர் சக ரேஞ்சர்களால் முதுகில் சுடப்பட்டு கொல்லப்படுகிறார்

பழங்குடித் தலைவரை கொன்ற சமூக விரோதிகள் - பிரேசில் அட்டூழியம்

படம்
பிரேசிலின் அமேசான் காடுகளைப் பாதுகாக்க போராடிய தலைவர்களில் ஒருவரான லோபோ நவ.1 அன்று கூலிப்படையால் படுகொலை செய்யப்பட்டுள்ளார். இதுவரை அங்கு 135 சூழலியலாளர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். குவாஜாஜரா எனும் பழங்குடி இனக்குழு தலைவராக இருந்த பாலோ பாலினோ குவாஜாஜரா என்ற 26 வயது இளைஞர், தற்போது கொல்லப்பட்ட சூழலியலாளர் பட்டியலில் இணைந்துள்ளார். அவரையும்  கொலைகார கும்பல் விட்டுவைக்காமல் கொன்றுவிட்டனர். அங்கு சட்டவிரோதமாக மரங்களை, விலங்குகளை வேட்டையாடும் கும்பல் லோபோவின் முகத்தில் சுட்டுக் கொன்றுள்ளது. அவரின் நண்பர் லேர்சியோவுக்கும் கடுமையான காயம் பட்டுள்ளது. லோபோ, கார்டியன் ஆப் தி ஃபாரஸ்ட் என்ற உதவிக்குழுவைத் தொடங்கி செயல்பட்டு வந்தார். அராரி போலா எனும் பாதுகாக்கப்பட்ட கானக இடத்தை இவர்கள் பாதுகாத்தனர். இதனை அழிப்பது சட்டவிரோத கும்பலுக்கு முக்கியமான லட்சியமாக இருந்தது. பிரேசில் அதிபர் பொல்சனாரோ தேர்ந்தெடுக்கப்படும் சமயத்தில் இக்கொலைகள் அதிகரித்து வந்தது தற்செயலான ஒன்று என நியூயார்க் டைம்ஸ் வஞ்சப் புகழ்ச்சியணியாக எழுதியுள்ளது. வலதுசாரி அதிபரான பொல்சனாரோ, காடுகளை அழிப்பதில் பேரார்வம் க

தூகு எனும் கொடிய வழக்கம்!

படம்
ozy.com நீங்கள் திருமணம் செய்வது சிறப்பான விஷயம். ஆனால் உங்கள் சொந்த கிராமத்தினருக்கு கிடா வெட்டி விருந்து வைத்தபின்தான் உங்கள் திருமணம் செல்லுபடியாகும் என்று சொன்னால், என்ன செய்வீர்கள்? 2016 ஆம் ஆண்டு புத்து நாக் என்பவர், நிகிதா சின்கா, என்ற சமூக செயற்பாட்டாளரை அணுகினார். ஒரே கோரிக்கைதான். இந்தியர்கள் வேறு என்ன கோரிக்கை வைப்பார்கள். நான் லவ் பண்ணுகிற பொண்ணை எனக்கு கல்யாணம் பண்ணி வைங்க என்றுதான். அப்புறம்தான் அவரின் பெற்றோரிடம் பேசினார் சிங். ஆனால் அவர்கள் கல்யாணமெல்லாம் பண்ண முடியாது மேடம் என்று சொல்லி விட்டனர். நிகிதா சின்கா அப்புறம் ஃபிளாஷ்பேக்கை கேட்டு ஷாக்கானார். கல்யாணம் பண்ணிவைக்கச் சொல்லி கேட்டவர் லிவ் இன் ரிலேசன்ஷிப்பில் இருக்கிறார். பத்து வயதில் பெண் குழந்தை வேறு இருக்கிறது. இதற்கு பெயர் தூகு(dhuku). பழங்குடிகளின் சமூகமான நாக், கல்யாணம் செய்தால் கட்டாயமாக முழு கிராமத்திற்கும் சோறு போட்டு விருந்து வைத்தே ஆக வேண்டும். பட்ஜெட் பத்மநாபனாக காசு இல்லையே என கையைப் பிசைந்தால் கல்யாணம் கிடையாது. பட் ஒண்ணாக வாழ தடையில்லை. இவர்களை கிராமத்தில் தூகு என்று குறிப