இடுகைகள்

கடிதங்களின் தொகுப்பு 2012 -2013

படம்
  முருகானந்தம் அவர்களுக்கு அன்பரசு சண்முகம் எழுதிய ஓராண்டு கடிதங்கள் சில இத்தளத்தில் வெளியிடப்படும்.  அனுமதியளித்த இரு நண்பர்களுக்கும் நன்றி. அதன் அட்டைப்படம் இதுதான்.

payonin pakkaM

படம்
எனக்கு பிடித்த எழுத்தாளர்  நல்லவனாக இருப்பதன் சோகங்கள் Posted on  May 31, 2013 Woodcutter/cut my shadow./Deliver me from the torture/of beholding myself fruitless. -  Federico Garcia Lorca இப்போதெல்லாம் வாழ்க்கையின் பெரும்பகுதி முழுவதும் ரகசியமாக மனம் புழுங்கிக் கிடப்பதிலேயே கழிகிறது. குற்றவுணர்வைவிடக் கொடிய நரகம் ஒன்று உண்டென்றால் அது இன்னும் அதிக குற்றவுணர்வுதான். எப்படி நான் மட்டும் இவ்வளவு நல்லவனாக இருக்கிறேன்? எத்தனையோ பேர் இருக்கையில் நான் மட்டும் ஏன்? கசாப்ளாங்கா கதையாக இருக்கிறதே. என்னிடம் அப்படி என்ன விசேசம்? நான் அடைந்திருக்கும் உயரம்கூட என்னைக் கீழிறக்கவில்லையே? தடுக்கி விழும் இடமெல்லாம் கைகொடுத்துத் தூக்கிவிடுபவர் அயோக்கியராக இருக்கிறார். பவுடர் பூசிக்கொள்ளக் கண்ணாடியைப் பார்க்க முடியவில்லை. என் தெய்வாம்சம் என் கண்களையே குருடாக்கிவிடும் நிலைமை. நான் இவ்வளவு நல்லவனாக இருப்பதால்தான் மற்றவர்கள் எல்லோருமே அயோக்கியர்களாக இருக்கிறார்களா, அல்லது அது தனியா? எனக்கென்னவோ தவறு என் மீதுதான் என்று தோன்றுகிறது. நான் அடைந்திருக்கும் உயரம் – அது எனக்கே பெரும் பாரம். இ

translation

படம்
MY TRANSLATION BOOK இந்த புத்தகம் தான்  முதலில் மொழி பெயர்த்தது .
படம்
ம ண்டைக்காரன் சி ந்தனைகள் வர்ஷன் 3.0 ஈரோட்டான்    சிறந்த செவ்வியல் தன்மை ஆக்கங்களின் கவனிப்பு கொண்ட வாசகர்களின் உளப்பாங்கினை உரமேற்றும் இந்த எழுத்துக்கள் இந்திய இலக்கிய உலகில் அரிதாக நிகழும் ஒரு அதிசயமென இதனை வாசிக்கும் யாரும் உணர்ந்து கொள்ளமுடியும் .   எலிப்புழுக்கை காயுதுன்னா எலி ஸ்டே வாட்? பத்திரிக்கையில் வேலைக்கு சேர்வதற்கான முயற்சியில் சற்றும் மனம் தளராத நிக்கிற மாதித்தனாக ‘கிளப்ஸ் டுடே’ பத்திரிக்கைக்கு தொடர்பு கொண்டேன். காதே செவிடாகி அவிந்ததோ என பயப்படும்படி நடிகர்திலகம் பாவனையில் டிஎம்.எஸ் எட்டு கட்டையில் இந்தியநாடு எனப்பாட அடிவயிற்றில் உஷ்ணபேதிக்கான அறிகுறிகள் சடுதியில் உருவாகின. நான் கேட்கிறேன் உங்களுக்கு பிடித்த பாட்டை நீங்கள் கேட்டால் சரி. அடுத்தவரையும் கேட்கவைப்பது காது தாண்டிய பயங்கரவாதம் இல்லையா? ஏம்ப்பா..ஏய் இதெல்லாம் பாட்டா? இல்லை நூல்மில்லில் ஊதுகிற சங்கா? பெரிய வேறுபாடுகளெல்லாம் இல்லை.   கடுமையான வேலைபளுவில் இருந்துவிட்டாற்போலும். வாழ்வின் ஆயாசம் என் காதருகே கேட்டது. ‘’ம் யாரு ஆவ்… ம்.. சொல்லுங்க…ஹாவ்வ்வ்…வ்(ஆயாசத்தால் அயர்ந்துவிட்டார்).கூட ம

நிழலின் அருகாமையில்

படம்
             நிழலின் அருகாமையில்   ·          எழுத்தாளர்களின் கடிதங்கள்        திரு. ஜெயமோகன் அவர்களின் ‘நிழல்வெளிக்கதைகள்’ எனும் சிறுகதைகளைப் படித்துவிட்டு, நான் ஒரு குழந்தை முதலில் பேசிப்பழகும் அர்த்தமற்ற வார்த்தைகளை ஒத்து அரைகுறையான அவரது நூலைப்பற்றிக் குறைவாகவும், என்னைப்பற்றி அதிகமாக விவரித்து நான்கு பக்க கடிதம் ஒன்றை எழுதினேன். அதற்கு பதிலாக வந்த கடிதம்தான் இது. பொக்கிஷமாகப் பாதுகாத்து வரும் இந்தக் கடிதம்தான் என் பிற்கால வாசிப்பிற்கு வாயிலாக அமைந்தது என்று பெருமையுடன் கூறுவேன்.                                                   14.2.2008 அன்புள்ள அன்பரசு அவர்களுக்கு,         தாங்கள் எழுதிய கடிதம் கிடைத்தது. நன்றாக இருக்கிறீர்கள் அல்லவா? தொடர்ந்து நீங்கள் நாவல்களைப் படிப்பது உற்சாகம் அளிக்கிறது.         பல வருடங்களுக்கு முன்பு சுந்தர ராமசாமி எனக்கு ஓர் அறிவுரை கூறினார். நாம் ஒவ்வொரு முறை தேர்வு செய்யும் புத்தகமும் நமக்கு படிப்பதற்கு ஒரு சவாலை அளிக்க வேண்டும். நம்மை ஓரளவாவது அடுத்த கட்டம் நோக்கிக் கொண்டு செல்ல வேண்டும். நமக்குத் தெரிந்த விஷயங்களைச் சொல்ல
படம்
குக்கூ நண்பர்கள் குழு பலரைப்பற்றியும் பின்னர் எழுதுவேன். புகைப்படம் இருக்கும் இருவரைப்பற்றி முக்கியமாக கூறவேண்டியே இந்தப் பதிவு. இவர்கள் இருவரும்தான் எந்த அடையாளமும் இன்றி குக்கூவின் செயல்பாடுகளை வடிவமைத்து நெறிபடுத்துபவர்கள். குக்கூவின் அனைத்து செயல்பாடுகளையும் மிக நேர்த்தியாக, திட்டமிட்டு  வேறு கோணத்தில் பார்த்து செம்மையுறச்செய்வதில் பீட்டர் அண்ணனுக்கு நிகர் வேறு யாருமில்லை. இவரது தங்கை பெனிட்டா மிகச்சிறந்த ஓவியர் என்பதை கூகுளில் தட்டச்சு செய்து பார்த்தால் அறிந்துகொள்ளலாம். குக்கூவின் கலைசெயல்பாடுகளில் நீக்கமற நிறைந்திருப்பது அண்ணனே. குக்கூவின் முகமாக வெளியே தெரிவதே அண்ணன் சிவராஜ்தான். ஏறத்தாழ சித்தர் பெருமான் என்று நாங்கள் அழைத்து பெருமைப்படுத்துவதால் அண்மையில் பேண்ட் அணியத்தொடங்கியிருக்கிறார். இவரின் கவிதைத் தொகுப்பு கூழாங்கற்களின் தினம் படித்திருக்கிறீர்களா? குக்கூவிற்கான வாசகங்கள் அனைத்தும் அண்ணனின் தணிக்கைக்குப் பின்தான் வெளியிடப்படும். வெகு நேர்த்தியான புத்தகங்கள் வானகத்திலிருந்து வெளிவருகிறது என்றால் அதற்கு சித்தர்தான் காரணம்.