நிழலின் அருகாமையில் · எழுத்தாளர்களின் கடிதங்கள் திரு. ஜெயமோகன் அவர்களின் ‘நிழல்வெளிக்கதைகள்’ எனும் சிறுகதைகளைப் படித்துவிட்டு, நான் ஒரு குழந்தை முதலில் பேசிப்பழகும் அர்த்தமற்ற வார்த்தைகளை ஒத்து அரைகுறையான அவரது நூலைப்பற்றிக் குறைவாகவும், என்னைப்பற்றி அதிகமாக விவரித்து நான்கு பக்க கடிதம் ஒன்றை எழுதினேன். அதற்கு பதிலாக வந்த கடிதம்தான் இது. பொக்கிஷமாகப் பாதுகாத்து வரும் இந்தக் கடிதம்தான் என் பிற்கால வாசிப்பிற்கு வாயிலாக அமைந்தது என்று பெருமையுடன் கூறுவேன். 14.2.2008 அன்புள்ள அன்பரசு அவர்களுக்கு, தாங்கள் எழுதிய கடிதம் கிடைத்தது. நன்றாக இருக்கிறீர்கள் அல்லவா? தொடர்ந்து நீங்கள் நாவல்களைப் படிப்பது உற்சாகம் அளிக்கிறது. பல வருடங்களுக்கு முன்பு சுந்தர ராமசாமி எனக்கு ஓர் அறிவுரை கூறினார். நாம் ஒவ்வொரு முறை தேர்வு செய்யும் புத்தகமும் நமக்கு படிப்பதற்கு ஒரு சவாலை அளிக்க வேண்டும். நம்மை ஓரளவாவது அடுத்த கட்டம் நோக்கிக் கொண்டு செல்ல வேண்டும். நமக்குத் தெரிந்த விஷயங்களைச் சொல்ல