இடுகைகள்

தி கிரேட் லோக்கல் டிவி வழங்கும் ரீல் 23

படம்
ஜானி விக் என்றால் விக் வைத்துக்கொண்டெல்லாம் கீனு ரீவ்ஸ் நடிக்கவில்லை. நீளமயிர்சிகையோடு கையில் துப்பாக்கியோடு சுட்டிருக்கிறார். உதைத்திருக்கிறார். குத்தியிருக்கிறார். குதிக்கிறார். மறுபடியும் சொல்கிறேன். இது அத்தனையின் போதும் துப்பாக்கி கையிலேயே இருக்கிறது. இன்னொன்றை சொல்ல வேண்டுமா வண்டி ஓட்டும் போதும் கூட கூடவே  வைத்திருக்கிறார். நடிக்கவில்லையா என்றெல்லாம் கேட்கவே கூடாது. கதை என்னன்னா கீனு ரீவ்ஸ்டோட சம்சாரம் நோய் வந்து கணவரை வருத்தப்படற வீடியோ புடிச்சு வச்சுட்டு படக்குனு ஒரு நாளு இறந்தர்றாங்க. அப்ப புடிச்சு நம்ம ஜானி மூஞ்சி செவத்துல அப்புன சாணி மாரியே படம் முடியறவரையும் இருக்குது ஏம்ப்பான்னு கேட்ட முருகேசனோட கேள்விக்கு பதில் கெடச்சிருச்சில்ல. செம லாஜிக் இல்ல. படம் தொடங்குன கொஞ்ச நேரம் இறந்துபோன ஜானி சம்சாரம் வீடியோவுல என்ன பண்ற ஜானி? ன்னு படம் பார்க்க வந்த நாம கேட்கற கேள்வியையே கேட்கறாங்க. ஜானி உடம்புல எக்கச்சக்க குளுக்கோஸ் பற்றாக்குறை ஆன மாதிரியே படம் முழுக்க வர்றாரு. காரணம் என்னன்னு மறுபடியும் கேட்காதீங்க சென்றாயன்களே! செத்த சம்சாரம் நம்மை புதைத்த ஈரம் காயறக்குள்

கிறுகிறுவானம்: தீராத கதைகளின் வானம்

படம்
கிறுகிறுவானம் எஸ்.ராமகிருஷ்ணன் பாரதி புத்தகாலயம் விலை ரூ. 25 புக்ஸ் ஃபார் சில்ரன் வெளியிட்டுள்ள கிறுகிறுவானம் குழந்தைகளுக்கான கதைப்புத்தகமாக நேர்த்தியாக 10 அத்தியாயங்களைக் கொண்டுள்ளது. இது முழுக்க கிராமத்து சிறுவனின் தினசரி வாழ்க்கை, ஏக்கங்கள், தவிப்பு, ஆசை, கஷ்ட நஷ்டங்களைப் பேசுகிறது.  எஸ்.ராமகிருஷ்ணன்தான் அந்த குழந்தையாக மாறி எழுதுவது என்பது சில விவரிக்கும் செயல்பாடுகளில் தெரிகிறது எ.கா: சுடு சோறும், முட்டைப்பொரியலும் சாப்பிட்ட சக மாணவனின் கையை நக்குவது, பக்கத்துவீட்டில் சாப்பிடும்போது இரண்டாவது தோசையைக் கேட்பது என்பதைக் குறிப்பிடலாம்.  குழந்தைகள் பேருந்துகள், ரயில்வே என எங்கும் பேசிக்கொண்டே இருப்பார்கள். இதிலும் ஓட்டப்பல்லு என்றழைக்கப்படும் சிறுவன் தொடர்ந்து பேசிக்கொண்டே இருக்கிறான். தனக்கு பிடித்தவர்களைப் பற்றிக் கூறும் போது தன் வீட்டில் இருக்கிற ஆடு, கோழியையும் எளிமையாக வகைப்படுத்தி தன்னோடு சேர்த்து ஓர் உயிராக  பார்க்கும் பார்வை வசீகரம்.  சாப்பாடும் கூப்பாடும்,  கைநிறைய பொய், அழுவேன் உருள்வேன் எனக்கு மிகப்பிடித்த பகுதிகளாக கூறுவேன். இவற்றில் அவர் எப்போதும் எழுதும்

உரையாடல் போல அமைதியும் அர்த்தம் கொண்டதுதான் தொடர்ச்சி 2

படம்
1999 ஆம் ஆண்டினை படத்தில் அதிக இடங்களில் குறிப்பிடுகிறீர்கள். அது என்ன முக்கியமான விஷயத்தை கூறவருகிறது? அது ஒரு புனைவாக ஒன்று. மூடுபனிநிலம் படத்தில் சிறுவர்கள் ஜெர்மனி சென்று சேர முயலும் புனைவியல் தன்மையைக் கொண்டுள்ளது. இந்த ஆண்டு 1999 புதிய தலைமுறையின் தொடக்கமாக, தனிப்பட்ட, சிறிய வலிமையற்ற வன்முறையும் நிரம்பிய இன்றைய நாள் போல இல்லாமல் இதற்கு பதிலாக உலகம் முழுவதும் ஒரு கனவை அனைவருமாக பகிர்ந்துகொள்வதுபோல் இருக்கவேண்டும். மக்கள் செர்ப்ஸ், க்ரோட்ஸ், துர்க்ஸ், அல்லது வேறு இதுபோன்ற கனவுகளைக் கொண்டிருக்கும் வேறு யாராக இருந்தாலும் அவர்களை ஒன்றிணைக்கலாம். பல ஆண்டுகளுக்கு முன்பு செர்பிய மனிதனும் கொசோவோ பகுதியைச்சேர்ந்த முஸ்லிம் பெண்ணுக்கும் நிகழும் காதல் உறவு குறித்த கதை கொண்ட யூகோஸ்லேவ் திரைப்படம் ஒன்றைப் பார்த்தேன் (ஸ்ட்ஜன் கரனோவிக்கின் ‘ஃபிலிம் வித் நோ நேம் ’ ) இது போலவே அமைந்திருந்த இஸ்ரேலியர் ஆண் ஒருவரும்  அரேபிய பெண் ஒருவரும் காதலிப்பது போன்ற கதையில் அமைந்த இஸ்ரேலியப் படம் ஒன்றையும் பார்த்தேன்(நிஸிம் தயனின் ‘எ வெரி நேரோ ப்ரிட்ஜ் ’ ) இது போன்ற கொள்ளை நோயிடமிருந்

நவாஸூதின் சித்திக் நேர்காணல்

படம்
வாழ்வின் கடினமான தருணங்களே என்னை பக்குவப்பட்ட  மனிதனாக மாற்றியது                                     - நவாஸூதீன் சித்திக் மான்ஞ்சி திரைப்படம் நவாஸூதின் சித்திக்கை பாலிவுட்டின் மிகச்சிறந்த நடிகராக ஏன் அவர் இருக்கிறார் என்பதை அனைவருக்கும் உணர்த்தியிருக்கிறது. அவர் நம்மோடு தன் வாழ்வின் போராட்ட காலங்களில் நான்கு ஐந்து நண்பர்களோடு தங்கி வாய்ப்புக்காக போராடி வந்த காலங்களில் வறுமையின் விளைவாக தான் கற்றதும் பெற்றதுமான அனுபவங்களே தான் யார் என்பதை உணர்த்தியதாக கூறுகிறார். ஒவ்வொரு படத்திலும் வித்தியாசமான வேடங்களை ஏற்று நடிக்கும் உங்களை காண்பதற்காக மக்கள் திரையரங்கிற்கு ஆவலாக வருவது குறித்து எப்படி உணர்கிறீர்கள்?    மக்கள் என் மீது நம்பிக்கை வைத்திருப்பது நல்ல விஷயம். ஏனெனில் அதுதான் என்னை வாழ வைக்கிறது. ஒவ்வொரு படமும் சிறு கீறல் போல தொடங்கியவைதான். பாராட்டு என்பது அவற்றினை எளிதில் திசைதிருப்பி விட முடியும். எனவே நான் இந்த பாராட்டுக்களை பெரிதாக நினைக்காமல் தவிர்த்துவிட்டு வேலையில் கவனமாக இருக்க முயல்கிறேன்.  எப்படி அதனை செயல்படுத்துகிறீர்கள்?  நான் என்னுடைய பழைய நண்பர்களை சந

உரையாடல் போல் அமைதியும் பொருள் கொண்டதுதான் தி சஸ்பெண்டட் ஸ்டெப் ஆப் தி ஸ்டோர்க்

படம்
உரையாடல் போல் அமைதியும் பொருள் கொண்டதுதான் தி சஸ்பெண்டட் ஸ்டெப் ஆப் தி ஸ்டோர்க் எட்னா ஃபைனாரு – 1991 ஆங்கிலத்தில்: டேன் ஃபைனாரு தமிழில்: லாய்ட்டர் லூன் தற்போது நீங்கள் ஒரு தொலைக்காட்சி நேர்காணலை நிறைவு செய்திருக்கிறீர்கள் – அதாவது தொலைக்காட்சி நிருபராக இருக்கும் முக்கிய கதாபாத்திரம் ஒருவர் குறித்து உருவாகியிருக்கும் உங்களது படத்தினைக் குறித்து உரையாடலாம். தொலைக்காட்சி பார்ப்பது என்பதில் உங்களுக்கு பெரிய ஆர்வம் இல்லை என்றே படுகிறது.       ஒரு உண்மையைச் சொல்லட்டுமா? அண்மையில் தி பேட்டில்ஷிப் பொடம்கின் படத்தை தொலைக்காட்சியில் பார்க்க முனைந்தேன். ஆனால் அது விரைவிலேயே இயலாத ஒன்றாக மாறிவிட்டது. பெர்க்மன் படம் தொலைக்காட்சியில் பார்க்க பொருத்தமாக இருக்கும். வலிமையான உணர்ச்சிகள், ஏராளமான அண்மைக்காட்சிகள் என உள்ளே உள்ள விஷயங்களை அவை தொலைக்காட்சிக்கு மாற்றப்பட்டாலும் எதுவும் இழக்கப்படாது உயிர்பிழைக்கும் வாய்ப்புகள் இதில் அதிகம். ஆனால் ஒரு படம் மிகுதியான அளவு அமைதியை நீண்ட நேரம் கொண்ட இயற்கைக் காட்சிகளை வசனங்களுக்கு இணையா க கொண்டிருக்கும் படத்திற்கு தொலைக்காட்சி முழுமையாக நி

தியோ ஏஞ்சலோ பவுலோஸ் சினிமா தத்துவம் நிறைவுப்பகுதி

படம்
தேனீக்காவலர் படம் காட்டெருமை தோன்றிய காட்சியின் பிறகு நிகழ்வுகள் பின்னோக்கிச் செல்கிறது என்னும் விதத்தில் அடையாளம் காட்டப்படுகிறது என்னும் விதத்தில் அவை குறித்து இரு கேள்விகள் உள்ளன. உலகளாவிய முக்கியமான நட்சத்திர நடிகர் ஒருவரைப் பயன்படுத்தியுள்ளீர்கள். மார்செலோ மாஸ்ட்ரோயன்னி ஒரு தனித்துவ அடையாளம் கொண்டவராக, தான் நடித்த படங்களை அனைத்தையும் மேம்பட்டதாக அமைத்துக்கொண்டவர். எப்படி அவரைப் புரிந்துகொண்டு பயன்படுத்தினீர்கள்? அதேநேரம் எப்படி அவரை படத்திற்காக மாறுதல்களைச் செய்யவைத்தீர்கள்? இரண்டாவது கேள்வி: எழுதப்பட்ட கதைக்கும் படப்பிடிப்பு தளத்தின் நடைமுறை விஷயங்கள் குறித்ததுமாகும். ஸ்பைரோஸின் வீடு, அவர் தங்கியுள்ள வீடு, அவரது சிறுவயது வீடு இதில் தேன்கூட்டையும் சேர்க்கலாம். பாடல் கேட்கும் பெட்டி, சோடா நிறுத்தி இவைகளை நான் குறிப்பிடவில்லை. இதனை முன் கூட்டியே திட்டமிடுவது மிகவும் சிக்கலான ஒன்று அல்லதுத இவை மேம்படுத்தப்படுவது படப்பிடிப்புத் தளத்தில்தானா எப்படி இந்த செயல்களை நிறைவேற்றுகிறீர்கள்? மாஸ்ட்ரோய்யன்னி வெளிக்காட்டிய அடையாளத்தை அதற்கு நேரெதிராக திருப்பவே எனது ஆற்றலை செ

தியோ ஏஞ்சலோ பவுலோஸின் சினிமா தத்துவம்

படம்
நீளமான காட்சி, தொடர்ச்சியான காட்சி, 360 கோணவாக்கிலான காட்சி என இந்த நிலைகள் அனைத்தும் பார்வையாளர்கள் அதனை குறிப்பிட்ட நேரத்திற்கு காண அனுமதிக்கிறது என்பது குறித்து இப்போது விவாதிப்போம். இந்தக்காட்சிகளில் நீங்கள் விரும்புவது இடைவெளி, காலம் குறித்தா அல்லது பார்வையாளரின் கவனம் குறித்து சிந்திப்பீர்களா? நாட்டின் கலாசார வரலாறு குறித்த மரபான கதாபாத்திரங்களை இதில் உருவாக்குவதோடு உண்மையான காரணம் என்றும் தொடர்புடையதுமாக உள்ளது என்று கூறலாமா?       பல ஆண்டுகள் சினிமா கண்டு வந்ததிலிலிருந்து கதாபாத்திரங்களின் தன்மைகளை நான் உருவாக்கிக் கொள்கிறேன். என்னை சுற்றி வெளிவரும் படங்களைப் பார்த்து அதிலுள்ள சுவாரசியமான அம்சங்களை குறித்து வைத்துக்கொள்வேன். பின்னர் நான் எழுதவும், படங்களை உருவாக்கத் தொடங்கியபிறகு, இவை அனைத்தையும் எனக்குள் கொண்டு வந்து எனது எழுத்தின் பாணியில் உருவாக்கத் தொடங்கினேன். நீளமான காட்சி தொடர்ச்சியான காட்சி என பொதுவாக இணை தொகுப்புக்கு உதவும் தன்மைகளை நான் ஏன் மறுத்தேன் என்பதற்கு அவை இழைபோல ஒன்றாகி உள்ளதை கூறவேண்டியுள்ளது. மான்டேஜ் காட்சிகளை வரலாற்றுக் காரணங்களு