உரிமைகளைக் காக்கும் இன்டர்நேஷனல் வக்கீல் குழு! -ச.அன்பரசு
மக்களின் அடிப்படை உரிமைகளைக் காக்கும் இன்டர்நேஷனல் வக்கீல் குழு ! - ச . அன்பரசு கர்நாடகாவின் காகல் கிராமம் . கடந்தாண்டு மே மாதம் 16 ஆம் தேதி கடற்கரையில் சிலிகா மணல் தொழிற்சாலையை சிலர் உருவாக்கி , மணல் அள்ளத்தொடங்கினார் . முதலில் குறைவாகவும் பின்னர் டன் கணக்கிலும் அள்ளத்தொடங்கினர் . சும்மாயிருக்குமா கடல் ? , மெல்ல ஊருக்குள் தலைகாட்டத் தொடங்கியது . கடலையொட்டி வாழ்ந்து வந்த துர்க்கி நாயக் என்ற பெண்மணி உட்பட ஆறு குடியிருப்புவாசிகளுக்கு என்ன செய்வதென்றே தெரியாத நிலை . அப்போதுதான் உதவிக்கு வந்தார் நமதி சூழல் சட்ட அமைப்பைச் சேர்ந்த வினோத் பட்கர் . பரபரவென சட்டவிரோத மணல் நிறுவனத்தைப் பற்றி ஆதாரங்களை திரட்டி நகர கமிஷனருக்கு அனுப்ப , கள விசாரணை நடந்ததோடு ஏற்படுத்திய சூழல் கேட்டிற்கான அபராதம் 6.3 லட்சம் அபராதம் கட்ட உத்தரவானது . " கிராமத்து மக்களின் ஒத்துழைப்பினால் பாதிப்பை கண்டறிந்து தடுக்க முடிந்தது " என மலர்ச்சியாகப் பேசுகிறார் சட்ட ஆலோசகர் வினோத் . தற்போது மணல் அள்ளப்பட்ட பகுதிகளி