இனி மைதானங்களில் அமர்ந்து விளையாட்டுகளைக் காண்பது கடினம்!
இனி மைதானங்களில் அமர்ந்து விளையாட்டுகளைக் காண்பது கடினம் ! உதய் சங்கர் , ஸ்டார் , டிஸ்னி நிறுவன இந்திய இயக்குநர் , தி வால்ட் டிஸ்னி ஆசியா பசிபிக் தலைவர் பொது முடக்க காலம் எப்படி செல்கிறது ? பணிகளை செய்துவருகிறீர்களா ? பொதுமுடக்க காலம் கடினமாகத்தான் இருக்கிறது . முதலில் அலுவலகம் சென்று வேலை செய்து வந்தோம் . இப்போது வீட்டிலேயே வேலை பார்த்து வரும் சூழல் . வீட்டிலும் கவனச்சிதறல் இல்லாமல் பணியாற்ற முடிகிறதுதான் . ஆனால் வீட்டில் அலுவலக பணிகளைச் செய்யும்போது வீடு , அலுவலகம் என்ற இரு விஷயங்களும் அடிக்கடி மோதிக்கொள்கின்றன . மற்றபடி எங்கள் குழு உறுப்பினர்களை நான் டிஜிட்டல் முறையில் சந்தித்து வருகிறோம் . வேலைகளையும் செய்து வருகிறோம் . ரசிகர்களின் மனநிலையை வைத்தே நாம் விளையாட்டுகளை நடத்தி வருகிறோம் . பொதுமுடக்கம் , பெருந்தொற்று என சிக்கலான நேரங்களில் இதனை எப்படி சமாளிக்கிறீர்கள் ? மக்கள் எப்போதும் பழைய முறையில் விளையாட்டுகளை இனியும் காணமுடியாது . இன்று மக்கள் விளையாட்டுகளை காண்பதை விட அவர்களின் பாதுகாப்பு முக்கியம் . நாங்கள் ஆறு ஆண்டுகளுக்கு முன்னர் ஹாட்ஸ்டார் சேவை