பிணத்துடன் உறவுகொள்வதும், உடலை துண்டாக வெட்டுவதும் எதற்காக?
பிணத்துடன் உடலுறவு நான் அவளது பிராவையும் பேண்டீசையும் அகற்றி அவளுடன் உறவுகொண்டேன். எனது வாழ்க்கையில் பிணத்துடன் உறவுகொண்ட இந்த நிகழ்ச்சி முக்கியமானது என்று சீரியல் கொலைகாரர் ஹென்றி லூகாஸ் கூறியிருக்கிறார். இது ஒருவகையில் உடலை அவமானப்படுத்துவது என தியரியாக சொல்லலாம். இறந்த உடலை உடனே புதைத்து அல்லது எரித்துவிடுவது என்பதே மரபு. அப்படியல்லாமல் அதனை தலையை வெட்டுவது, உடல் உறுப்புகளை வெட்டுவது, நிர்வாணப்படுத்தி கழுகுகளுக்கு இரையாக்குவது என்பது குரூரமான புத்திக்கு உதாரணமாக கூறலாம். சீரியல் கொலைகார ர்களைப் பொறுத்தவரை பிணங்களுடன் உறவு கொள்வது என்பது ஒருவகைப் பிரிவினர் மட்டுமே. இவர்கள் ஒருவரை சித்திரவதை செய்து கொல்வதை உடலுறவுக்கு முன்னர் ஆண், பெண் இருவரும் செய்யும் முன்விளையாட்டாக எடுத்துக்கொள்கின்றனர். மற்றொரு காரணம், இறந்தவர்கள் எதிர்ப்பு காட்ட மாட்டார்கள். எனவே, விரும்பியதை செய்யலாம். இதனால்தான் இறந்து உடல் நாறாதவர்களிடம் சீரியல் கொலைகார ர்கள் உடலுறவு கொள்கிறார்கள். சிலர் செத்து நாறிய உடலை எடுத்து பாதுகாத்து வேண்டியபோது உறவு கொள்வார்கள். எப்படி ப்ரோ சாத்தியம் என கேட்காதீர்கள். கனவை நினைவாக்க