இடுகைகள்

கவிதை லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

இசையை திட்டமிட்டு உருவாக்குவதில்லை! - ரோஜர் ராபின்சன்

படம்
ரோஜர் ராபின்சன் கவிஞர் ரோஜர் ராபின்சன், தனது கவிதைகளுக்காக (தி போர்ட்டபிள் பாரடைஸ்) டி.எஸ். எலியட் பரிசை வென்றிருக்கிறார். அவரிடம் அவருடைய படைப்பு பற்றி பேசினோம்.  பரிசு வென்றது எப்படியிருக்கிறது? நான் கவிதை எழுதிவிட்டு அதற்கு பரிசுகளை எல்லாம் எதிர்பார்க்கவில்லை. கிடைத்திருப்பது மகிழ்ச்சி. முடிந்தளவு என்னுடைய கவிதைகளை மக்கள் வாசிக்கவேண்டும் என்று விரும்புகிறேன். இப்பரிசு மூலம் கவனம் ஈர்க்கப்பட்டு மக்கள் கவிதைகளை வாசித்தால் நல்லது.  எலியட் கூட அமெரிக்காவில் பிறந்தவர்தான். ஆனால் அவர் வாழ்ந்தது முழுக்க இங்கிலாந்தில். அதேபோல நீங்கள் இங்கிலாந்தில் பிறந்து டிரினாட்டில் சிறுவனமாக இருக்கும்போது சென்றிருக்கிறீர்கள்.  பின்னர், இங்கிலாந்தில் வாழ்ந்து வருகிறீர்கள். படைப்புக்கு எந்த இடம் வசதியாக இருக்கிறது.  படைப்புக்கு டிரினாடுதான் சரியான இடம். ஆனால் இங்கிலாந்தில் வணிகச்சந்தை உள்ளது. பதிப்புக்கான பல்வேறு வாய்ப்புகள் இங்குள்ளன.  உங்களை கார்டியன் பத்திரிகை டப் கவிஞர் என்று அழைத்திருக்கிறதே? முன்னர் சில டப் ஆல்பங்களை நான் செய்திருக்கிறேன். அதனால் மக்கள் என்னை இப்பெயர

கவிதைகளை உயிர்ப்பிக்கும் டெக் வல்லுநர்!

படம்
பஞ்சாப் கவிதைகளை உயிர்ப்பிக்கும் பாக்.டெக் வல்லுநர்! அபிதின் பத்து வயதில் அவரது தந்தை அவருக்கு பஞ்சாபி சூபி நூல்களின் தொகுப்பை வாசிக்க கொடுத்தார். அதிலிருந்து கவிதைகள் அனைத்தும் படிக்கும் போதே அபித்துக்கு பெரும் பரவசத்தைத் தந்தன. அப்போது அவரின் வீட்டின் பெற்றோர் தங்களுக்குள் பஞ்சாபி பேசினாலும் குழந்தைகளிடம் உருதில் பேசினர். நாங்கள் பாகிஸ்தானில் வசிப்பதால், அங்கு பஞ்சாபியைப் பேசுவது மிக குறைவு. அப்படிப் பேசினாலும் அதனை சிலர் கொச்சையாக நினைக்கின்றனர். தற்போது பஞ்சாபி மொழிக்காக ஃபோக்பஞ்சாப் என்ற வலைத்தளத்தை உருவாக்கியுள்ளார். அதோடு இம்மொழிக்கான அகராதியையும் உருவாக்கியுள்ளார் அபித். நன்றி: தி டைம்ஸ்

லவ் இன்ஃபினிட்டி: நிஜம் சொல்லடி தோழி!

படம்
pinterest லவ் இன்ஃபினிட்டி குமார் சண்முகம் தொகுப்பு: அரசு கார்த்திக் நான் என்னைப் பற்றி நிறைய உனக்கு சொல்லிவிடணும்னு நினைக்கிறேன். ஆனால் என் மனசும் எழுத்தும் அதற்கு உதவுமான்னு எனக்கு தெரியல. நான் நிறைய உங்கிட்ட பேசணும்னு நினைச்சு College வந்தால் உன் முகத்தைப் பார்த்ததும்  I'm Gone. பொய்யில்லை. என்ன பேசணும்னு அத்தனையையும் மறந்து போயிடுறேன். ஆணும் பொண்ணும் ஒருத்தரையொருத்தர் புரிஞ்சிக்கிட்டு வெச்சிருக்கிற நட்பு காதலை விட புனிதமானதுன்னு நான் நம்புறேன். பிரிய தோழி! உன் கண்களில் கண்ணீர் வர நானும் ஒரு காரணம் என்பது வலிக்க வைக்கிறது. யாரோ சிலரால் நாம் பாதிக்கப்பட்டுவிட்டோம். ஆனாலும் இதற்கு நான் காரணம்னு நினைக்கும்போது குற்றவுணர்ச்சி கண்ணில் விழுந்த தூசியாக உறுத்துகிறது. இது உன் மனசுக்கும் தெரியும். அதனால்தான் என்கூட பேசுவதற்கு நீ மறுக்கிறாய். இல்லையா? அப்படியில்லையென்று சொல்லேன். Please. நீ அப்படி சொல்வாய் என்றுதான் வகுப்பில் உன் முகம் பார்த்தே உட்கார்ந்திருக்கிறேன். பாராமுகமாய் அமர்ந்து மனம் உடைக்கிறாயே! என்னைப் பற்றி எழுதியவைகளில் நிறைய விஷயங்கள் விடுபட்டு இருக்கிறது

லவ் இன்ஃபினிட்டி: என்னை அறிந்தால்...

படம்
லவ் இன்ஃபினிட்டி குமார் சண்முகம் தொகுப்பு: டேனியல், வில்லியம்சன் சுய புலம்பல்கள் போதும். நான் எழுதாவிட்டால் தமிழ் இலக்கியம் என்னாகும்? சொல்லுங்கள். இதோ என் படைப்பு இந்த 17 வயதுகளில் பாதியை சோகங்களே சுவைத்துவிட்டன சின்னஞ்சிறு வயதில் பொம்மைகளோடு நான் அதிகம்  பேசியதில்லை.  வெறும் தனிமையின் சுவடுகளோடுதான் என் சுவாசமெல்லாம்.  எந்தையும் தாயும் எனக்கு எல்லாமே கொடுத்தார்கள் ஆனால் கொடுக்க மறந்தது அன்புதான். நான் வாங்க மறந்தேன் அவர்கள் கொடுமைக்காரர்கள் அல்லர்.  எனினும் அன்பால் என்னை  கொடுமைப்படுத்தவேண்டும் என்று  நான் நினைத்தேன்.  திட்டுகள் வாங்கி வாங்கி  பழக்கமான என் காதுகள்! மரத்துப்போன என் மனசு! இறுகிப்போன முகம் எதையோ இடையறாது தேடும் கண்கள் இவ்வாறுதான் இருந்தேன் அகவை பத்து வரை.  பின்னர் புத்தகங்கள் என் புலன்களைத் திறக்கும் சாவியானது.  படிக்கும்போது கவலைகள்  எல்லாம் பஞ்சுபோல சுகமாய் தோன்றியது.  நண்பர்களின் சூழலில் நான் மட்டும் தனியாய்! அப்போதே எல்லாம் எனக்குத் தெரியும் என்ற  கர்வமெனக்கு முள்முனையளவு துளிர்த்துவிட்டது.  குறும்

லவ் இன்ஃபினிட்டி: என்னை ஏன் நம்ப மறுத்தாய்?

படம்
pexels.com லவ் இன்ஃபினிட்டி குமார் சண்முகம் தொகுப்பு: ச.அன்பரசு வரிகளை மடக்கி எழுதினால் கவிதை என்று உலகம் பார்க்கும் என்பதை புரிந்துகொண்டபோது இப்படி எழுதினேன். எப்படி மாற்றுவேன்? புது வீடு  எல்லாமே புதுசாய் என்னால்  எடுத்துப் போக முடிந்தது நீயில்லாத வாழ்க்கையையும் நிசப்தமான மனசையும்தான்.  புது வீட்டைக் காட்டிலும்  பழைய வெளிச்சம் குறைந்த  இருளான மழை ஒழுகும் நீ வந்து போன  நீ ஒளிந்து ஓடி விளையாடிய நீ தலை இடித்துக்கொண்ட தாழ்வாரம்,  நீ நடந்த சுவடுகள் அழியாமல் இருக்கும் என் பழைய வீடு அற்புதமானது.  வீடு மாற்றிக்கொள்ளலாம் மனசை எப்படி மாற்ற????? அடுத்தவர்கள் ஆயிரம் சொல்லி கெடுக்க நினைக்கலாம் நீ எப்படி நம்பலாம்? என்மேல் சந்தேகம் எப்படி வரலாம்? உனக்கு அவள் தோழி எனக்கு அவள் யாரோ? நல்லவர்களுக்கு தீமை விளையும்போது தடுக்க நினைப்பதும், தடுப்பதிலும் தவறில்லை பாம்புக்கு பால் வார்த்தால்? அதனால்தான் அனைத்தும் அறிந்தும் அமைதியாக இருக்கிறேன். நாம் தப்பு செய்தால்தானே பிரச்னை வருகிறது? அவள் உப்பு தின்றாள், தண்ணீர் இப்போதுதான் குடிக்கிறாள். அவ்வளவுதான். அதிக