இடுகைகள்

மரணம் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

தனது தொழிற்சாலை சகாக்களுக்கு காபியில் விஷம் கலந்த சைக்கோ கொலைகாரர் - கிரகாம் யங்

படம்
                கோடரிக் கொலைகள் ! பத்தொன்பதாம் நூற்றாண்டில் பெரும்பாலான அமெரிக்கர்கள் , பண்ணை வீட்டில் வசித்தனர் . அவர்கள் அங்கு கத்தி , கோடரி , கடப்பாரை என பல்வேறு கருவிகளை வைத்துக்கொண்டு வேலைகளை செய்துகொண்டிருந்தனர் . இதனால் அங்கு நடைபெறும் அனைத்து குற்ற சம்பவங்களிலும் கோடரி , கத்தி ஆகியவை முக்கியமான கொலை பொருட்களாக இருந்தன . இதில் ஆச்சரியப்பட என்ன இருக்கிறது ? இப்போதும் கூட கோபம் வரும்போது கையில் கிடைப்பதை எடுத்து பிறரை அடிப்பவர்கள் இருக்கிறார்கள்தானே ? 1836 ஆம் ஆண்டு ரிச்சர்ட் ராபின்சன் என்ற செல்வச் செழிப்பான குடும்பத்தில் வளர்ந்தவர் , கொலையாளியாக மாறினார் . அப்போது நியூயார்க்கில் புகழ்பெற்றிருந்த விலைமாது ஹெலன் என்பவரை கோடரி மூலம் மண்டையை பிளந்து கொன்றார் . இதனால்தான் ரிச்சர்ட் அந்த நகரில் பிரபலமானார் . முதல் உலகப்போர் காலகட்டத்தில் பெல்லா குன்னஸ் என்ற பெண்மணி , ஒரு டஜன்பேர்களுக்கு மேல் கோடரியால் வெட்டி கொன்றார் . அப்படிதான் இந்த கொலைகள் வெளியானபோது ஊடகங்கள் பேசிக்கொண்டன . 1940 களில் ஆப்பிரிக்க அமெரிக்கரான ஜாக் பேர்ட் என்பவர் , கோடரியால் ஏராளமான வெள்

சீனாவிலிருந்து விடைகிடைக்காத கேள்விகள்! - கோவிட் -19 எங்கிருந்து பரவியது?

படம்
          கொரோனா பெருந்தொற்று தடுப்பூசி போட்டவர்களுக்கும் கூட கொரோனா வருகிறது என எழுத்தாளர் பா . ரா கூறிவிட்டார் . எனவே , நோய்த்தொற்று ஏற்பட்டாலும் கூட கவனமாக சிகிச்சை பெற்று உயிரைக் காப்பாற்றிக்கொள்ளவேண்டியதே முக்கியம் என்ற நிலையில் நாம் உள்ளோம் . . 2003 இல் ஏற்பட்ட சார்ஸ் பெருந்தொற்றை விட கோவிட் -19 பரவும் வேகம் அதிகமாக உள்ளது . மேலும் இதனால் ஏற்படும் அறிகுறிகளும் கடுமையானவைதான் . பா . ரா தனது சமூக வலைத்தள பதிவில் கூறியதில் முக்கியமானது , மருத்துவரே தடுப்பூசி போட்டாலும் கூட நோய்த்தொற்று ஏற்படும் என்பதை உறுதிப்படுத்தினார் என்பதைத்தான் . காரணம் , தற்போது செலுத்தப்படும் தடுப்பூசியை விட தற்போது மாறியுள்ள கொரோனா வைரஸின் தன்மை செயல்திறன் கொண்டதாக உள்ளது . இந்த வைரஸ் எங்கிருந்து பரவியது என்ற கேள்விக்கு இன்றளவும் யாரிடமும் பதில் கிடைக்கவில்லை . சீனாவிலிருந்து பரவியது என பலரும் முன்னர் கூறிக்கொண்டிருந்தனர் . ஆனால் உலக சுகாதார அமைப்பு , வூகான் வைரஸ் ஆய்வு மையத்தில் செய்த சோதனையில் அதற்கான வாய்ப்பு இல்லை என்று தெரிய வந்துள்ளது . ஆனால் வேறு எப்படி பரவியிருக்க முடியும் எ

லிஸ்டர் பற்றிய ஐந்து சுவாரசியமான விஷயங்கள்!

படம்
          லிஸ்டர் பற்றி ஐந்து விஷயங்கள் ! லிஸ்டரின் அப்பா , தனது பதினான்கு வயதில் பள்ளிக்கல்வியை விட்டு தப்பித்தோம் பிழைத்தோம் என வெளியே வந்தார் . பின்னாளில் அவர் உருவாக்கிய நுண்ணோக்கி , அதன் லென்ஸ் ஆகியவற்றுக்காக பணமும் புகழும் பெற்றார் . லிஸ்டர் ஏராளமான நுட்பமான பல்வேறு கருவிகளை உருவாக்கினார் . அதனை புத்திசாலித்தனமாக காப்புரிமை பெற்று வைத்திருந்தார் . அறுவை சிகிச்சை செய்த புண்களை தைக்கும் ஊசி , காதில் நுழைந்த பொருட்களை எடுக்கும் கொக்கி போன்ற கருவி , வயிற்றிலுள்ள உறுப்புகளை ஆராயும் கருவி என சொன்னால் சொல்லிக்கொண்டே போகலாம் . லிஸ்டர் உருவாக்கிய ஆன்டிசெப்டிக் முறையை இங்கிலாந்தில் எதிர்த்தாலும் , பிரான்ஸ் , ஜெர்மனி ஆகிய நாடுகள் அரவணைத்துக்கொண்டு பயன்படுத்தினர் . பிரான்ஸ் ப்ரஸ்ஸியா போர்க்காலங்களில் இம்முறையை பரவலாக பயன்படுத்தினர் . இன்று மருத்துவர்கள் நோயாளிகளை நம்பர் அல்லது கேஸ் என்று சொல்லித்தான் கூப்பிடுவார்கள் . ஆனால் லிஸ்டர் இந்த ஏழை மனிதர் , இந்த நல்ல பெண்மணி போன்ற வார்த்தைகளை பயன்படுத்தி நோயாளிகளை தேற்றியிருக்கிறார் . தனது மாணவர்களிடம் நோயாளிகளின் நோ்

ஆன்டிசெப்டிக் முறையை மருத்துவர்களின் பிரசாரம் செய்து நோயாளிகளின் உயிரைக் காப்பாற்றியவர்!

படம்
        ஜோசப் லிஸ்டர்       மருத்துவத்துறையில் இன்று டெட்டால் , சேப்லான் என பல்வேறு ஆன்டிசெப்டிக் மருந்துகள் கிடைக்கின்றன . இதனை அறிமுகப்படுத்தியவர் யாரென்று தெரிந்து உய்வோமா ? ஜோசப் லிஸ்டர் என்ற படிப்பில் மூழ்கி ஏராளமான தங்கமுலாம் பூசிய பதக்கங்களை பெற்ற மனிதர்தான் அறுவை சிகிச்சையை பாதுகாப்பானதாக மாற்றினார் . 1827 ஆம்ஆண்டு 5 ஏப்ரலில் பிறந்தவர் குவாக்கர் குடும்ப வாரிசு . இவரது படிக்கும் நேரம் போக மீதி நேரம் போக அப்பாவின் நுண்ணோக்கியில் ஏராளமான நுண்ணுயிரிகளைப் பார்த்துக்கொண்டிருப்பார் . இப்படிப்பட்டவருக்கு வேறு என்ற ஆசை இருக்கமுடியும் ? மருத்துவராகவே ஆசைப்பட்டார் . லண்டன் பல்கலைக்கழகத்தில் கலைப்படிப்பு பட்டம் படித்தார் . 1848 ஆம் ஆண்டு மருத்துவம் படிக்க சேர்ந்தார் . அப்போதுதான் மருத்துவத்துறையில் அனஸ்தீசியாவைப் பயன்படுத்துவது பரவலாகிக் கொண்டிருந்தது . அதில் நிறையப் பேர் சேர்ந்து பயின்று வந்தனர் . 1846 ்ஆம் ஆண்டு ஈதர் அனஸ்தீசியா வல்லுநராக உருவானார் . ஆனால் அப்போதும் பல்வேறு நோயாளிகள் நோய்த்தொற்று காரணமாக இறந்துபோனார்கள் . இதற்கு காரணம் என மோசமான காற்றான மியாஸ்மாவைக் காரண

ஊடகங்கள் பெருகியுள்ள காலத்தில் கோவிட் மரணங்களை எப்படி மறைக்க முடியும்? - சுகாதாரத்துறை அமைச்சர் கே.கே.சைலஜா

படம்
            நேர்காணல் கே . கே . சைலஜா தற்போதைய நோய்த்தொற்று என்பது நிபாவை விட எப்படி வேறுபட்டது என்கிறீர்கள் ? நிபா நோ்ய்த்தொற்றுதான் எங்களை இன்று எச்சரிக்கையாகவும் முன்னெச்சரிக்கை ஏற்பாடுகளை செய்துகொள்ளவும் உதவின . நிபாவின் மரண சதவீதம் அதிகம் என்றாலும் கோவிட் 19 அளவுக்கு வேகமாக பரவ வில்லை . கோழிக்கோட்டிலுள்ள வௌவால்கள் மூலம் நிபா பரவியது . எனவே நாங்கள் மக்களை வெளியே வரவேண்டாம் என்று சொன்னோம் . கோவிட் 19 வெளிநாட்டிலிருந்து நமது நாட்டிற்கு வந்தது . கேரளத்திலுள்ள விமானநிலையங்கள் நான்கு . அதன் மூலம் வந்திறங்கிய மக்கள் மூலம் நோய்த்தொற்று வேகமாக பரவியது . இதனால் 14 மாவட்டங்களில் உடனடியாக நோய்த்தொற்று பரவி பாதித்தது . இரண்டாவது அலை பரவுவதால் , மீண்டும் பொதுமுடக்கம் அறிவிக்கப்படுமா ? பொதுமுடக்கம் என்பது இந்தியாவில் வெற்றிகரமாக செயல்படுத்தப்படவில்லை . எனவே , மீண்டும் பொதுமுடக்கம் அமல்படுத்தப்படாது என்று நினைக்கிறேன் . மக்களை ஏற்கெனவே அடைத்து வைத்தது பெரும் சிக்கலை ஏற்படுத்தியுள்ளது . நாங்கள் இப்போது நோயிலிருந்து மக்களை காப்பாற்றவே முயன்று வருகிறோம் . கொர