இடுகைகள்

முஸ்லீம் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

அரசியலமைப்புச்சட்டப்படி செல்லாத சட்டம் லவ் ஜிகாத், தேர்தலுக்காக இதனை முன்னிலைப்படுத்துகிறார்கள்! - மிஹிர் ஶ்ரீவஸ்தவா, எழுத்தாளர்

படம்
                  லவ் ஜிகாத் என்பது தேர்தலைக் குறிவைத்து நடக்கும் யுக்தி எழுத்தாளர் மிஹிர் ஶ்ரீவஸ்தவா பிரன்ட்லைன் திவ்யா திரிவேதி லவ் ஜிகாத் என்பதை ஊடகங்கள் பெரிதுபடுத்துவதாக எப்படி கூறுகிறீர்கள் ? உண்மையில் இந்தியாவில் நடக்கும் இயல்பான திருமணங்களை ஊடகங்கள் உலகில் பார்வையில் வேறுவிதமாக மாற்றிக் காட்டுகிறார்கள் . இது எப்படியென்றால் அமெரிக்காவில் ஃபாக்ஸ் நியூஸ் யாருடைய பக்கம் செயல்படுகிறதென அனைவருக்கும் தெரியும் . அதில் வரும் செய்திகள் எப்படி , யாருக்கு சார்பாக இருக்கும் என்பது மக்களுக்கு தெரியாதா ? அதுபோலதான் இதுவும் . என்ஐஏ இதுவரை லவ் ஜிகாத் என்பதற்கான ஒரு ஆதாரத்தைக் கூட காண்பிக்கவில்லை . திருமணம் செய்துகொண்ட சிலரை ஊடகங்களும் காவல்துறையும் குறிவைக்கின்றனர் . வழக்கு , சர்ச்சை காரணமாக அவர்கள் வாழ்க்கை நாசமாகிறது . ஊடகங்கள இதனை பெரிதுபடுத்தி லாபம் சம்பாதிக்கின்றனர் . புலனாய்வு அமைப்புகள் ஒருவரின் திருமணம் தேசபாதுகாப்பிற்கு ஆபத்து என அலறுகின்றன . இதெல்லாம் தேர்தலில் வெற்றி பெற அரசியல் கட்சிகள் செய்யும் தூண்டுதல்தான் .   அப்போது இந்துகள் ஆபத்த

சாதி வன்முறைகளை மறைக்கவே இந்தியா அகிம்சை நாடு என்று கூறப்பட்டது! - அபர்ணா வைதிக், வரலாற்று ஆய்வாளர்

படம்
              வரலாற்று ஆய்வாளர் அபர்ணா வைதிக் அசோகா பல்கலைக்கழக பேராசிரியர் லவ் ஜிகாத் முயற்சிகள் நாட்டின் அனைத்து பகுதிகளிலும் புழக்கமாகி நடைபெற வாய்ப்புள்ளதா ? இந்து என்பதை நம்மில் பலரும் கேட்டுப்பழகியது 19 ஆம் நூற்றாண்டு வாக்கில்தான் என்பதை நினைவுகூருங்கள் . அப்போதிலிருந்து இந்து என்பது பெரும்பான்மையான பல்வேறு ஊடகங்களில் ஒலித்தபடிதான் இருக்கிறது . ஆனால் லவ் ஜிகாத் என்ற சட்டம் இப்போது குறிப்பிட்ட மாநிலத்திற்கான சட்டமாக உள்ளது . நாளை இது நாடு முழுக்க அமலாகும் வாய்ப்புள்ளது . லவ் ஜிகாத் என்ற சட்டம் இருபதாம் நூற்றாண்டைச் சேர்ந்த சட்டமாக இருந்தாலும் இது இந்து முஸ்லீம் என்ற இரு மதங்களைக் கொண்டது மட்டுமல்ல . முஸ்லீம் , கிறிஸ்துவ அமைப்புகள் உத்தரப்பிரதேசத்ததிலுள்ள சமர் , சந்தால் , தோம் , லாய் பேகிஸ் என்ற தாழ்த்தப்பட்ட சாதிப்பிரிவினரை தங்கள் மதத்திற்கு மாற்றிவந்தன . இதனால்தான் ஆரிய சமாஜமும் , இந்து மகாசபையும் இந்து மக்கள் எண்ணிக்கையில் குறைகின்றனர் என்று குரல் எழுப்பி பேரணிகளை நடத்தினர் . லவ் ஜிகாத் என்பதே மேல்சாதியைச் இந்து பெண்களை கிறிஸ்தவர்கள் , முஸ்லீம்கள்

நாங்கள் எந்த மதத்தையும் குறிப்பிட மதமாற்றச்சட்டத்தை உருவாக்கவில்லை! பிரிஜேஷ் பதக்

படம்
              பிரிஜேஷ் பதக் நீதித்துறை அமைச்சர் உத்தரப்பிரதேசம் மாநில அரசு கொள்கையை மசோதாவாக கொண்டு வந்து விவாதிக்காகமலேயே சட்டமாக மாற்றியது ஏன் ? விதான் சபா இப்போது நடைபெறவில்லை சட்டவிரோத மதமாற்ற செயல்பாடுகள் அதிகரித்து வந்தன . இது இப்படியே தொடர்ந்தால் சட்ட ஒழுங்கு பிரச்னையாக மாறும் கலவரங்கள் ஏற்படும் என்பதால் அரசு உடனடியாக சட்டமாக கொண்டுவந்துவிட்டது . அப்படி அரசுக்கு என்னவிதமான புள்ளிவிவரங்கள் கிடைத்தன என்பதைச் சொல்லமுடியுமா ? நான் உங்களுக்கு அதுபற்றிய சரியான தகவல்களைக் கொடுக்க முடியாது . மதமாற்றம் தொடர்பான சம்பவங்கள் ஊடகங்களில் வெளியாகின . பல்வேறு மாவட்டங்களில் நடந்து வருவதை ஊடகங்கள் வெளிப்படுத்தின . இதுபோன்ற நிகழ்ச்சிகளால் குற்றங்கள் அதிகரித்து வந்தன . எனவே கட்டாய மதமாற்ற நிகழ்ச்சிகளை உடனடியாக நிறுத்த அரசு முயன்றது . நீங்கள் கொண்டு வந்துள்ள சட்டம் குறிப்பிட்ட மதத்தைக் குறி வைப்பதாக பயம் எழுந்துள்ளதே ? சோர் கி தாதி மெய்ன் டின்கா என்று இந்தியில் சொல்லுவார்கள் . இதுபற்றி பயப்படுபவர்கள்தான் , சட்டவிரோத மதமாற்றங்களை செய்து வருகின்றார்கள

சிறந்த கதை நூல்கள் 2020! டைம் இதழில் பரிந்துரைக்கப்பட்ட நாவல், சிறுகதை நூல்களின் பட்டியல்!

படம்
                சிறந்த கதை நூல்கள் ஐ ஹோல்ட் எ வோல்ஃப் பை தி இயர்ஸ் லாரா வான் டென் பெர்க் அனைத்தும் பெண்களை மையமாக கொண்ட சிறுகதைகள் . நிஜ வாழ்க்கையிலிருந்து துண்டிக்கப்படும் பெண்களின் கதைகளை நகைச்சுவையும் , வலியும் கலந்து படைப்புகளாக்கியுள்ளார் . பர்னிங் மேகா மஜூம்தார் ஒரு முஸ்லீம் பெண் தவறுதலாக தீவிரவாதி என குற்றம் சாட்டப்படுகிறாள் . அவளுக்கு எதிராக அனைத்து சாட்சிகளும் உருவாக்கப்படுகிற நிலையில் எப்படி அவளின் வாழ்க்கை பயணிக்கிறது என்பதை இந்தியாவின் அரசியல் நிலையை அப்படியே கண்ணாடி போல காட்டும் படைப்பு இது . வேர் த வைல்ட் லேடீஸ் ஆர் அயோகா மட்சுதா ஜப்பானிய பேய்கதைகளை பெண்ணிய பார்வையில் சொல்லியிருக்கிறார் ஆசிரியர் . இங்கு பேசப்படும் சூழல்கள் அனைத்தும் தினசரி வாழ்க்கையில் நாம் அனைவரும் சந்திப்பதுதான் . பிரெஸ்ட் அண்ட் எக்ஸ் மீகோ காவகாமி   ஜப்பானிய நாட்டில் வாழும் அக்கா , தங்கை , அவர்களுடைய உறவுப்பெண் ஆகியோரின் வாழ்க்கையைச் சொல்லும் படைப்பு . ஹோம்லேண்ட் எலிஜீஸ் அயத் அக்தர் அக்தர் , தனது பாகிஸ்தானிய பரம்பரை வழி அவரது பெயர

விமான விபத்தில் குடும்பத்தை கொன்ற தீவிரவாதிகளை உணர்ச்சிவசப்படும் பெண் பழிவாங்க முடியுமா? தி ரிதம் செக்ஷன் 2020

படம்
      Director: Reed Morano Produced by: Barbara Broccoli, Michael G. Wilson Writer(s): Mark Burnell  ரெகுலரான பழிக்குப்பழி கதைதான். பழி வாங்குபவள்  கொஞ்சம் மனிதநேயம் பார்த்து இறப்பவனுக்கும் குடும்பம், குழந்தைகள் இருக்கிறார்கள் என நினைத்துப் பார்த்து கண்ணீர் விடுபவளாக இருந்தால்.... அதுதான் தி ரிதம் செக்ஷன் படத்தின் கதையும் கூட.  பிளாக் லைவ்லி(ஸ்டெபானி), ஹார்வர்டு பல்கலைக்கழக மாணவி. அவளது அன்பான குடும்பம் விமானத்தில் பயணிக்கிறது. ஆனால் அதில் பிளாக் லைவ்லியால் பயணிக்க முடியவில்லை. அதேசமயம் அந்த விமானம் வெடிகுண்டு வைத்து வெடிக்க வைக்கப்படுகிறது. இதில் அதில் பயணித்த அத்தனை பேரும் இறந்துபோகிறார்கள். ஆனால் இதனை செய்த யூ17 என்பவனுக்கு எந்த தண்டனையும் கிடைக்கவில்லை. அவனுக்கு எதிராக தடயங்கள் இல்லை என சிஐஏ கைவிரித்து விடுகிறது.    குடும்பம் ஒட்டுமொத்தமாக இறந்துபோனதால், தவிக்கும் ஸ்டெபானி மனமுடைந்து போதைக்கு அடிமையாகிறாள். விபசாரம் செய்து வருகிறாள். எல்லாம் பிழைத்திருக்கத்தான். அவளது குடும்பத்தின் திடீர் இழப்பை அவளால் தாங்க முடிவதில்லை.  அப்போது அவளை சந்திக்கும் செய்தியாளர் அவளுக்கு விமான வெடிப்ப

ஏ டூ இசட் இந்தியா எப்படி இருக்கும்?

படம்
அரசியலமைப்புச் சட்டத்தில் ஏ முதல் இசட் வரையில் பல்வேறு அர்த்தங்கள் உண்டு. அவற்றை நாம் இப்போது பார்ப்போம். இவை மிகச்சரியானவையா என்பதைவிட சரியாக இருக்க அதிக வாய்ப்புகள் உள்ளன என்பதே முக்கியம். ஏ –அம்பேத்கர் காந்தியின் மென்மையான இந்துத்துவத்திற்கு எதிராக போராடி சேகுவேரா. இந்திய அரசியலமைப்பை வடிவமைத்த குழுவின் தலைவர். அவர் ஏற்ற அரசியல் பணிகளிலும் தன் கருத்தை உள்ளே நுழைத்து சமூகத்தில் அனைவருக்குமான இடத்தை உறுதி செய்தார். தன் அரசியல் பணிகளுக்கு இடையில் ஏராளமாக எழுதியவர். பி – பட்ஜெட் பிப்ரவரி 1 ஆம் தேதி நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்யவிருக்கிறார். ஆனால் இதுபற்றிய எந்த ஆர்வமும் மக்களுக்கு கிடையாது. ஏனெனில் வெங்காயம் விலை ஏறியதிலிருந்து பெட்ரோல் டீசல் விலை ஏற்றம் வரை அம்மணி பேசிய அரிய கருத்துக்களை அவரது கட்சியினரே சகித்துக் கொள்ள முடியவில்லை. சட்டப்பிரிவு 112, இதனை ஆண்டுதோறும் தாக்கல் செய்யும் நிதிநிலை அறிக்கை என்கிறது. இதனால் என்ன பயன்? பட்ஜெட் தயாரிப்பு அறிக்கை முடிந்தபின் அல்வா கிண்டி சாப்பிடுவார்கள். அதே அல்வாவில் மிஞ்சியதை மக்களுக்கு கொடு

உண்மையை விசுவாசியுங்கள் இந்தியர்களே! - சேட்டன் பகத்

படம்
எங்களைக் காப்பாற்றுவதாக கூறும் அரசியல்வாதிகளே, சமூக ஆர்வலர்களே உங்கள் அனைவரின் நோக்கத்திற்காக உங்களை வணங்குகிறேன். நாங்கள் அணிந்துள்ள தொப்பி உங்களுக்கு ஏதோ ஒருவிதத்தில் நாங்கள் கலவரத்தில் பட்ட காயங்கள், அதில் எங்களை ஈடுபடுத்திய உங்களது குற்றவுணர்வு நழுவாமல் பார்த்துக்கொள்கிறது. இந்தியா ஜனநாயகப்பூர்வ குடியரசு என்பதில் எங்களுக்கு நம்பிக்கை இருக்கிறது. ஆனால் நாட்டில் பெரும்பான்மையினருக்கு அதே நம்பிக்கை இருக்கிறதா என்று தெரியவில்லை. வாக்குவங்கிக்காக பல்வேறு இனக்குழுக்களை நாட்டின் விரோதிகளாக முன்னே நிறுத்தும் போக்கு அதிகரித்து வருகிறது. இதனை துணிச்சலாக எதிர்த்துப் பேசியவர்களின் வாட்ஸ் அப் கூட இன்று உளவு பார்க்கப்படுகிறது. நல்லரசு நினைத்தால் எதுவும் செய்யலாம்தானே?  கல்வி, தொழில் என அனைத்திலும் நாங்கள் இன்று பின்தங்கவில்லை. பெரும்பான்மை மதங்களைச் சார்ந்தவர்களுக்கு நிகராக நாங்களும் வளர்ந்துள்ளோம். இதற்கு அரசு ஒத்துழைப்பு, நண்பர்களின் ஆதரவு ஆகியவை பின்னணியாக உள்ளன. என்னை நீங்கள் இப்போது அடையாளம் கண்டிருப்பீர்கள். பாஷா, அப்துல்லா, சாதிக் அலி, சித்திக் அலி, நிஜாமுதீன் என ஏதாவொரு பெய

கலைந்துபோன கனவு - இந்திய சுயராஜ்ஜியம் - காந்தி

படம்
pixabay இந்திய சுயராஜ்ஜியம் காந்தி ரா.வேங்கடராஜூலு இன்று இந்தியா பெரும் சிதைவில் உள்ளது. கலாசாரம், மதிப்பீடுகள் என அனைத்திலும் பிரதானமாக பணமே உள்ளது. மேலும் ஒருவர் கூறும் கருத்தை மற்றொருவர் பயத்துடன் ஆமோதிக்க வேண்டிய  கட்டாயம் உள்ளது காரணம், கருத்தை கூறுபவரின் பின்னே ஆயுதங்களுடன் கும்பல் நிற்கிறது. இவர்களின் தலைவர் ஆல் இஸ் வெல் என்று அயல்நாட்டில் சொல்லும்போதே, உள்நாட்டில் இறைச்சி சாப்பிட்ட காரணத்திற்காக ஒருவர் கட்டி வைத்து அடித்துக் கொல்லப்படுகிறார். காரணம், அவர் சிறுபான்மையினர் என்ற ஒரே காரணம்தான். உ.பியில் மதிய உணவுத் திட்டத்தில் நடந்த  ஊழல் உண்மையைச் சொன்ன பத்திரிகையாளர்  மீது அடுக்கடுக்கான வழக்குகள் பதியப்படுகின்றன. நாமார்க்கும் குடியல்லோம் நமனை அஞ்சோம் என்று இனி கூறுவது கஷ்டம். இந்து கும்பலை விரட்டி, கலவரத்தை ஒடுக்கி அமைதியை ஏற்படுத்திய போலீஸ்காரர்,  திட்டமிட்டு கொலை செய்யப்பட மாநில முதல்வரே உதவுகிறார்.  இதுபோன்ற சிதைவுகள் உலகமெங்கும் நடந்து வருகின்றன. மற்றொரு அபாயம், அடிப்படைவாத தலைவர்கள் ஜனநாயகப் பூர்வமான முறையில் தேர்ந்தெடுக்கப்பட்டு சர்வாதிகாரத்த

கற்பைக் கேள்வி கேட்கும் திருமணச் சான்றிதழ்!

படம்
வங்கதேசத்தில் ஐந்து ஆண்டுகளாக போராடி, திருமணச்சான்றிதழில் உள்ள குமாரி என்ற சொல்லை நீக்கியுள்ளனர். குமாரி என்பது, கல்யாணப் பத்திரிக்கையில் இருந்தால் பரவாயில்லை. ஆனால் அங்கு அரசின் திருமணச்சான்றிதழில் இருப்பது விவகாரமானது. காரணம், குமாரி என்பது பெண்ணின் கன்னித்தன்மையைக் குறிக்கிறது. 1974 ஆம் ஆண்டு வங்கதேச திருமணம் மற்றும் விவாகரத்து சட்டப்படி,  மேற்சொன்ன விஷயங்கள் கறாராக கடைப்பிடிக்கப்பட்டு வந்தன. இஸ்லாமியர்கள் திருமணம் என்பதால், அரசு இவற்றை பெரிய மாறுதலுக்கு உட்படுத்தவில்லை. அங்கு செயல்படும் பிளாஸ்ட்,  மொகிலா பரிஷத், நாரிபோகோ ஆகிய அமைப்புகள் பெண்ணை குமாரி - திருமணமாகதவர் அல்லது கற்புள்ளவர் என்பதை மாற்றி ஒபிபாகிதோ என்ற வார்த்தையை அச்சொல்லுக்கு பதிலாக சேர்க்க விண்ணப்பித்தன. மேலும் அந்நாட்டு அரசியல் சட்டப்படி குமாரி என்று கூறுவது சில குறிப்பிட்ட சட்டப்பிரிவுகள் படி தவறு என்றும் வாதிட்டு பொதுநல வழக்கைத் தொடர்ந்தன. இதில் உயர்நீதிமன்றம் அரசை இது பற்றிய ஆய்வு செய்து அறிக்கையை தாக்கல் செய்யக்கூறியது. அதில்தான் குமாரி என்ற சொல்லை இனி சான்றிதழில் பயன்படுத்தவேண்டியதில்லை என்று தீ

இந்தியர்கள் பெருமைப்படுவதற்கான ஓர் நூல்!- இந்துத்துவா நேசர்களுக்கான நூல்

படம்
நம்பக்கூடாத கடவுள் - ஹிந்துத்துவா சிந்தனைகள் அரவிந்த் நீலகண்டன் கிழக்கு பதிப்பகம் வரலாற்றில் மொகலாயர்கள் படையெடுப்பு இந்துக்களுக்கு என்ன பாதிப்பை ஏற்படுத்தியது? அசோகர் மரம் நட்டார், பிற மதங்களை போஷித்தார் என்பவர்கள் இந்து மன்னர்களைப் பற்றி(வீர சிவாஜி) ஏன் எதுவும் பேசமாட்டேன்கிறார்கள், இந்தியா எனும் பன்மைச் சமுதாயத்திலுள்ள பல்வேறு பொக்கிஷங்களை அழித்தவர்கள், திருடியவர்கள் யார், மொகலாயர்களின் வரி, பிற மத மன்னர்களின் சகிப்புத்தன்மை ஆகியவற்றைப் பற்றிய கேள்விகள் இன்றும் இந்தியர்களின் மனதில் உண்டு. அத்தனை கேள்விகளுக்கும் அரவிந்தன் நீலகண்டன் இந்த நூலில் பதில் எழுதியுள்ளார். இந்நூலில் 60 பக்கங்கள் வரை மேற்சொன்ன விஷயங்கள் பேசப்படுகிறது. பின்னர் அப்படியே தடம் மாறி மேற்கத்திய அரசுகள் இந்திய கலாசாரப் பொக்கிஷங்களை மூலிகைகளை எப்படி திருடுகிறார்கள், அதைத் தடுக்கும் அவசியம் என தடம் மாறுகிறது. இந்த இடம் நூலில் பொருந்தாமல் இருக்கிறது. முழுக்க இந்துத்துவ கருத்துகள் என்று படிப்பவர்களுக்கும், இந்த இடம் பார்த்திபன் படம் போல புரியாமல் போக அதிக வாய்ப்பு உண்டு.  அயோத்தி ராமர் கோவில் தீர்ப

அகதிகளை மரியாதையாக நடத்த கற்பது அவசியம் - சேட்டன் பகத்

படம்
மியான்மரில் புத்த பெரும்பான்மையினர் சிறுபான்மையினரான ரோஹிங்கயா முஸ்லீம்களை கொடுமைப்படுத்தி இனப்படுகொலை முயற்சிகளை அரங்கேற்றினர். இதன் விளைவாக, வாழ வழியற்ற அம்மக்கள் வங்காளதேசம் வழியாக இந்தியாவிற்குள் நுழைந்தனர். அவர்களை எல்லைப் பாதுகாப்பு படையினர் மிளகு ஸ்ப்ரே அடித்து விரட்டினர். உண்மையில் இந்த விவகாரத்தில் இந்தியா இப்படி நடந்துகொள்ளும் என்று நான் நினைத்தே பார்க்கவில்லை. வளரும் பொருளாதாரம் கொண்ட நாடு இந்தியா. முக்கியமான விவகாரத்தில் இப்படி முதிர்ச்சியற்று நடந்துகொண்டது என்னை வேதனைப்படுத்தியது. உலகம் முழுக்க போர்களால் மக்கள் இடம்பெயர்ந்து வருகின்றனர். சில நாடுகள் அகதி மக்களை ஏற்கின்றனர். உதாரணம்  -கனடா, ஜெர்மனி, பிரான்ஸ் போன்ற நாடுகள். சிலர் தீவிரமாக அவர்களை ஏற்க மறுக்கின்றனர். உதாரணம் - ஆஸ்திரேலியா, அமெரிக்கா போன்ற நாடுகள்.  அவரவருக்கு ஏற்பதா, இல்லையா என்பதில் கருத்துகள் உண்டு. இந்தியா ரோஹிங்கயா முஸ்லீம்களை தங்க வைப்பதில் பெரிய பிரச்னை வந்துவிடாது. ஏற்கனவே இங்கு 40 ஆயிரம் பேர் உள்ளனர் என்பது அரசுக்கு பிரச்னையாக இருக்காது. பாதுகாப்பு தொடர்பான பிரச்னை என்றாலும் அரசு, அம்மக

சிறுபான்மையினருக்கு அச்சுறுத்தல் ஏன்?

படம்
முஸ்லீம் எழுத்தாளர்கள் அஞ்சுவது ஏன்? பாஜக அரசு கருத்தியல் ரீதியாக தொடர்ந்து சிறுபான்மையினரை அச்சுறுத்தி வருகிறது. இதன் விளைவு எப்படியிருக்கிறது? அரசு அளிக்கும் தடுப்பூசியைக் கூட தன் இனத்தை அழிக்கும் முயற்சியாக பயப்படும் அளவுக்கு சென்றிருக்கிறது. இது மட்டுமல்லாமல் முஸ்லீம் மக்களை தொடர்ச்சியாக கிண்டல் செய்வது, உரிமை கேட்பவர்களை பாகிஸ்தானுக்கு செல்லக்கூறுவது என நிலைமை எல்லை மீறி சென்றுகொண்டிருக்கிறது. இதற்கு குறிப்பிட்ட ஒருவரைக் குறைசொல்வதை விட நாட்டின் நிலை அப்படி யோசிக்க சொல்லுகிறது என புரிந்துகொள்ளலாம். நாட்டின் நிராதரவான நிலையை எப்படி மக்களிடம் அரசு ஒப்புக்கொள்ளும்.? உடனே பாகிஸ்தான்தான் பிரச்னைக்கு காரணம், முஸ்லீம்கள், கிறிஸ்தவர்கள்தான் இந்தியாவின் பிரச்னைக்களுக்கு மூல ஊற்று என பற்றி வைத்தால் போயிற்று. அனைத்து ஊடகங்களும் கைப்பிடியில் இருக்க கவலை என்ன? நான்கு ஆண்டுகளுக்கு முன்பு என்னுடைய குழந்தையை நான் பெற்றெடுத்தேன். அப்போது அவளை முஸ்லீம் பெயரைச் சொல்லி எப்படிக்கூப்பிடுவது பிரச்னை ஏற்படுமா என்றுகூட பயந்துகொண்டிருந்தேன் என கூறுகிறார் எழுத்தாளர் நாசியா எரும். மதரி

முஸ்லீம்களை உளவு பார்க்கும் சீன அரசு!

படம்
நேர்காணல் சீனா, தன் நாட்டிலுள்ள இய்கூர் மற்றும் துருக்கிய முஸ்லீம்களை கவனமாக பார்த்து கட்டுப்படுத்த குறிப்பிட்ட ஆப்பைப் பயன்படுத்துகிறது. இந்த ஆப்பை இன்ஸ்டால் செய்தால் ஒருவரின் மின்கட்டணம் இணையம் முதற்கொண்டு கண்காணிக்க முடியும்.  ஐஜேஓபி பற்றி கூறுங்கள்.  நாடு முழுக்க ஒரே கணினியில் கொண்டுவரும் கண்காணிப்புத் திட்டம் இது. செக் போஸ்ட்,மக்கள் ஒன்றுகூடும் இடங்கள், பள்ளிகள் தெரு என அனைத்து இடங்களிலும் இந்த கண்காணிப்பு உண்டு. ஜின்ஜியாங் பகுதியில் இந்த அமைப்பு நிறுவப்பட்டுள்ளது. இது ஆபத்தான கண்காணிப்பு திட்டமாக மெல்ல மாறிக்கொண்டிருக்கிறது. ஆப்பின் செயல்பாடு பற்றிக் கூறுங்கள்.  நீங்கள் அரசு கூறும் விதிகளை மீறீனாலே ஆப் தானாகவே அருகிலுள்ள அதிகாரிக்கு செய்தி அனுப்பி விடும். நீங்கள் என்ன வலைத்தளத்தை பார்க்கிறீர்கள். அதில் வன்முறையைத்தூண்டும் விஷயங்கள் உண்டா? விபிஎன் பயன்படுத்துகிறீர்களா? வேறு என்ன ஆப் பயன்படுத்துகிறீர்கள் என அத்தனை விஷயங்களையும் கண்காணிப்பு ஆப் பதிவு செய்யும்.  எப்படி இந்த ஆப் இப்படி கண்காணிக்கிறது என்பதைக் கண்டுபிடிப்பது? ஐஜேஓபி என ஆப் ஸ்டோரில் த