இடுகைகள்

மோசடி லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

12.மோசடி நிரந்தரம், முறைகேடு ஒரு சந்தர்ப்பம் - மோசடி மன்னன் அதானி

படம்
  ஆதி குழுமம், அதானி குழுமத்திற்கு நிலக்கரியை விநியோகம் செய்யும் நிறுவனமாகும். நீண்டகாலமாக அதானி குழுமத்தின் வாடிக்கையாளராக உள்ளது. ஆதி குழுமத்தின் முதலீட்டாளர் பெயர், உட்கர்ஷ் ஷா. இவர், கௌதம் அதானியின் முப்பதாண்டு கால நண்பர் என எகனாமிக் டைம்ஸ் பத்திரிகை கட்டுரை தகவல் கூறுகிறது. 2020ஆம் ஆண்டு கணக்குப்படி, ஆதி குழுமத்தின் வருவாய், 9 மில்லியன் டாலர்களாகும். மொத்த லாபம் 97 ஆயிரம் டாலர்கள் என்ற தகவல், நிதி தொடர்பான ஆவணங்களிலிருந்து தெரிய வருகிறது. அதானி குழுமத்தில் உள்ள நான்கு நிறுவனங்கள், ஆதி குழுமத்திற்கு 87.4 மில்லியன் டாலர்களை கடனாக வழங்கியுள்ளது. ஆனால் இதுபற்றி விசாரித்ததில் பணம் கடன் கொடுக்கப்பட்டதற்கான எந்த ஆவணங்களும் இல்லை. இத்தனைக்கும் கடன் கொடுத்த பல நிறுவனங்கள், பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டவை. ஆதி குழுமத்தின் வருமானம், லாபம் அடிப்படையில் அந்த நிறுவனம், பிற நிறுவனத்திடமிருந்து கடனைப் பெற்றதே தவறான நடவடிக்கை. பொருளாதார ஆலோசகர் எவரும் கடன் வாங்கும் யோசனையை ஏற்கவே மாட்டார்கள்.   ஆதி குழுமம், வாங்கிய கடனைக் கட்ட900 ஆண்டுகள் தேவைப்படுகிறது. அப்படி கடினமாக உழைத்தாலும் கூட அச

11.அலுவலகமே இல்லாத நிறுவனத்தில் இருந்து கிடைத்த கடன் - மோசடி மன்னன் அதானி

படம்
  எப்படி ஏமாத்தினோம் பாத்தீங்களா? 2022ஆம் ஆண்டு பிப்ரவரி மாத ஆவணங்களில் உள்ள தகவல்படி, ரேவார் இன்ஃப்ராஸ்ட்ரக்சர் நிறுவனத்தின் முகவரி, மக்கள் வாழும் அடுக்கு குடியிருப்பில் அமைந்திருந்தது.   தற்போது மாற்றப்பட்டுவிட்ட அதன் புதிய முகவரியில் அலுவலகம் அகமதாபாத் நகரில் உள்ள கட்டிடத்திற்கு மாறிவிட்டது. இந்த நகரில்தான் அதானி குழுமம் இயங்கி வருகிறது.   ஹிண்டன்பர்க் அமைப்பு, புலனாய்வாளரை ரேவார் அலுவலக முகவரிக்கு   அனுப்பியது.   பெயின்ட் உதிர்ந்துகொண்டிருந்த பழைய கட்டிடத்தில்   ரேவார் அலுவலகம் அமைந்திருந்தது. வெள்ளி வணிகம் செய்யும்,   202 மில்லியன் டாலர்களை கடனாக வழங்கும் திறன் கொண்ட நிறுவனம், இப்படியொரு மோசமான இடத்தில் இயங்கி வருவது ஆச்சரியமாக இருந்தது. புலனாய்வாளர் அலுவலக நேரத்திலேயே, ரேவார் அலுவலகத்திற்குச் சென்றார், ஆனால் அப்போதே கதவில், ‘அலுவலகப் பார்வை நேரம் முடிந்துவிட்டது’ என தகவல் கூறப்பட்டிருந்தது. மேலும் தகவல் தேவை என்றால் அணுகும்படி, ஜிக்னேஷ் தேசாய் என்பவரின் பெயர், தொடர்புஎண் கையால் எழுதப்பட்டிருந்தது.     லிங்க்டுஇன் தளத்தில் ஜிக்னேஷ் தேசாய், அதானி என்டர்பிரைசஸ் நிறுவ

10.வணிகமே செய்யாமல் பெரும்தொகையைக் கடன் கொடுக்க முடியும் - மோசடி மன்னன் அதானி

படம்
  சிங்கப்பூரில் வினோத் அதானிக்கு சொந்தமான நிதி நிறுவனம் உள்ளது. 2013-2015 காலகட்டங்களில், இந்த நிறுவனம் அதானி என்டர்பிரைசஸ் நிறுவனத்திற்கு அதிக லாபம் காட்டும் விதமாக பயன்படுத்தப்பட்டது.   2013-2015ஆம் ஆண்டு கார்மிசல் அண்ட் போர்ட் சிங்கப்பூர் ஹோல்டிங்க்ஸ் லிட். நிறுவனத்தை வினோத் அதானி நிர்வாகம் செய்து வந்தார். (ப.2) இந்த நிறுவனத்தில் இருந்து மூன்றுநிதி   பரிவர்த்தனைகள் அதானி என்டர்பிரைசஸ் நிறுவனத்திற்கு செய்யப்பட்டு உள்ளது. இதன் மூலம் அதானி என்டர்பிரைசஸ் நிறுவனத்தின் மொத்த வருமானம் அதிகரித்தது. சொத்துகளுக்கு ஏற்படும் சேதம் அடிப்படையில் பெரிய நிறுவனம் என்ற அங்கீகாரத்தை இழக்கும் நிலையை அதானி குழுமம் நிதி பரிவர்த்தனை மூலம்தான் சமாளித்தது. ஆஸ்திரேலியாவில் உள்ள சுரங்கம், ரயில்வே, துறைமுகம் ஆகிய நிறுவனங்களுக்கு நிதி பரிவர்த்தனைகள் செய்யப்பட்டன. ஆனால் இந்த நிதி பரிவர்த்தனை அதானி என்டர்பிரைசஸ் நிறுவனங்களின் ஆண்டு அறிக்கையில் குறிப்பிடப்படவில்லை. ஹிண்டன்பர்க் அமைப்பு செய்த ஆய்வில் நிதி பரிவர்த்தனைகளைச் செய்த நிறுவனம் சிங்கப்பூரைச் சேர்

8. மோசடி செய்துவிட்டு நிறுவனத்தின் பெயரை மாற்றிய கேட்டன் பரேக் - மோசடி மன்னன் அதானி

படம்
  இந்தியாவில் இயங்கிய பங்குத் தரகர், கேட்டன் பரேக். முறைகேடுகள் பற்றிய தகவல்கள் இந்திய அரசுக்கு தெரிய வந்ததும் அவரும், அவரின் நெருங்கிய தொழில் கூட்டாளிகளும் தங்களது பங்கு வர்த்தக செயல்பாடுகளை லண்டனுக்கு இடம் மாற்றிக்கொண்டனர். பங்குச்சந்தையைச் சேர்ந்த பங்கு தரகர்கள், கேட்டன் பரேக் தற்போதும் கூட தனது தொழிலை கைவிடாமல் செய்து வருவதாக கூறினர். ‘’கேட்டன் பரேக்கிடம் முன்னர் பங்கு வர்த்தகம் செய்த தொழிலதிபர்கள், வாடிக்கையாளர்கள் இப்போதும் அவரிடம் தொடர்பிலுள்ளனர்’’ கேட்டன் பரேக்கிற்கு நெருங்கிய தொடர்பு கொண்ட பங்கு வர்த்தகர் தகவல் கூறினார். இந்திய ஒழுங்குமுறை அமைப்பைச் சேர்ந்த அதிகாரிகள் கேட்டன் பரேக் செய்த முறைகேடுகளைப் பற்றி விசாரித்து, இறுதியாக தடை, அபராதம் ஆகியவற்றை விதித்தனர். 2001ஆம் ஆண்டு இந்திய அரசு, கேட்டன் பரேக்கிற்கு தண்டனை விதித்தது. பிறகுதான், வேறுவழியில்லலாத கேட்டன் பரேக் தனது செயல்பாடுகளை இங்கிலாந்திலுள்ள லண்டன் நகருக்கு மாற்றிக் கொண்டார். இந்த தகவல் ஊடகங்கள் மற்றும் இங்கிலாந்து பெருநிறுவன ஆவணங்களின்படி தெரிய வந்தது. ஹிண்டன்பர்க் அமைப்பிற்கு பல்வேறு நபர்கள் மூலம் கிடைத்த தகவல

மோசடியாளரான கேட்டன் பரேக்குடன் கைகோத்த அதானி குழுமம்! பகுதி 7 - ஹிண்டன்பர்க் அறிக்கை தமிழாக்கம்

படம்
  ஒழுங்குமுறை அமைப்பான செபி,   செய்த அறுபது விசாரணைகளை ஆராய்ந்ததில், அதானி குழுமம் கடந்த இருபது ஆண்டுகளாக நிறுவனப் பங்குகளின் விலையை செயற்கையாக உயர்த்தி ஊழல் செய்துள்ளது தெரிய வந்துள்ளது. இதுபற்றி ஊடக நிறுவனங்கள் மற்றும் நிதி நிறுவன ஆய்வாளர்கள் பேசியுள்ளனர்.   1999 தொடங்கி 2005 வரையிலான காலகட்டத்தில், பங்குகள் விலை உயர்ந்து 100 சதவீதமாக அதிகரித்துள்ளது. இதுபற்றி செபி தனது வலைத்தளத்தில் வெளியிட்டுள்ள ஆவணங்களில் கூறியுள்ளது. இதுவரை செபி, அதானி குழுமத்தின் 90 நிறுவனங்கள் அல்லது பங்கு வர்த்தகத்தில் ஈடுபட்ட தனிநபர்கள் என பங்கு சந்தை வணிகத்தில் ஈடுபட தடை விதித்துள்ளது. இந்த தடையில் அதானி குழும முதலீட்டாளர்களும் உள்ளடங்குவார்கள். செபி, அதானி முதலீட்டாளர்களுக்கு, முதலில் தடை விதித்தது. பின்னர் அந்த தண்டனை அபராதமாக மாற்றப்பட்டுள்ளது. அதானி குழுமத்தின் பிற முறைகேடுகள், மோசடிகள் பெரும்பாலும் விசாரணைக்கு வரவில்லை. அப்படி விசாரணைக்கு வந்தாலும்   வேண்டுமென்றே அவை தாமதப்படுத்தப்பட்டன. 1999-2001ஆம் ஆண்டு கேட்டன் பரேக், பத்து நிறுவனப் பங்குகளின் விலையை முறைகேடாக உயர்த்தினார். இதற்காக அவர் பங்கு வ