அத்தியாவசியப் பட்டியலிலிருந்து நீக்கப்பட்ட பொருட்கள் மூலம் விவசாயிகளுக்கு நன்மைதான்! - சஞ்சய் அகர்வால்
விவசாயத்துறை செயலாளர், சஞ்சய் அகர்வால் வணிகத்திற்கு உருவாக்கப்பட்டுள்ள விதிகள் விவசாயிகளுக்கு எப்படி உதவும்? நமது நாடு தற்சார்பு கொண்டதாக உருவாக விவசாயிகளின் பங்கு முக்கியமானது. விவசாயிகள் நிலப்பரப்பு சார்ந்த அறிவும், திறனும் கொண்டவர்கள். இவர்கள், நம் நாடு உணவு பாதுகாப்பும், தன்னிறைவும் பெற முக்கியமானவர்கள். தற்போதுள்ள சட்டங்கள் மூலம் தானியங்களை மாநிலத்திற்குள்ளும், வெளிமாநிலத்திற்கும் கூட அவர்கள் விற்கலாம். இதன் காரணமாக, பொருட்கள் வீணாகாது. ஏபிஎம்சி அமைப்பின் உதவியால் விவசாயிகளுக்கு சரியான விலையும் கிடைக்கும். இந்த சட்டம், மாநில அரசின் கட்டுப்பாட்டில் இருந்த விவசாயத்தை மத்திய அரசின் கட்டுப்பாட்டில் வருவதாக பஞ்சாப் அரசு கூறியிருந்ததே? மத்திய அரசு சட்டத்திற்கு உள்பட்டே இந்த உத்தரவை பிறப்பித்து இருந்தது. இதன்காரணமாக விவசாயத்தின் மீதுள்ள மாநிலங்களின் உரிமை பறிபோகாது. ஒப்பந்த முறையில் விவசாயம் செய்பவர்களுக்கு என்ன கிடைக்கும்? இதுநாள் வரை பணப்பயிர்களை பயிரிட்டு வந்தவர்களுக்கு அதில் நஷ்டம் ஏற்பட்டால் விவசாயிகள்தான் ஏற்று வந்தனர். அதனை நாங்கள் பன்னாட்டு நிறுவனங்களுக்கு கைமாற்றிய