இடுகைகள்

இதயம் சற்றே இடப்பக்கம் அமைந்துள்ளதற்கு காரணம் இதுதான்!

படம்
ஏன்? எதற்கு?எப்படி? மிஸ்டர் ரோனி இதயம் ஏன் சற்று இடப்பக்கமாக உள்ளது? இதயத்தின் இடது வென்ட்ரிக்கிள் உடல் முழுக்க ரத்தத்தை பம்ப் செய்யும் வேலையைச் செய்கிறது. இதற்கு அதிக இடம் தேவைப்படுகிறது. இதயத்தின் லப்டப் சத்தம் உங்களுக்கு இதை உறுதிப்படுத்தும். இதில் விதிவிலக்காக சில பேருக்கு பத்தாயிரத்தில் ஒருவருக்கு வலது பக்கம் அமைந்திருக்கும். இதற்குப் பெயர்  dextrocardia’. படம் செய்தி - பிபிசி

ஆண்களுக்கு மூன்று மார்பக காம்புகள் சாத்தியமா?

படம்
ஏன்?எதற்கு?எப்படி? மிஸ்டர் ரோனி ஆண்களுக்கு மூன்று மார்பக காம்புகள் இருக்குமா? ஏன் இப்படி உருவாகிறது? பெரும்பாலான பாலூட்டிகளுக்கு நிறைய மார்பக காம்புகள் உண்டு. மனிதர்கள் தங்கள் பரிணாம வளர்ச்சியில் ஒரு செட் மார்பக காம்புகளோடு நிற்கிறார்கள். இன்றும் பதினெட்டு நபர்களில் ஒருவருக்கு இதுபோல மூன்று மார்பக காம்புகள் உண்டு. இதில் சில ஜீன்கள் மீண்டும் தூண்டப்பட்டால் இப்படி காம்புகள் உருவாக வாய்ப்புண்டு. இந்த ஜீனின் பெயர்  NRG3. இது ஒரு பெரிய குறைபாடு கிடையாது. விரும்பினால் நீங்கள் அறுவை சிகிச்சை மூலம் நீக்கிக்கொள்ளலாம். 

மது குடித்தால் மூளைக்குள் என்னாகிறது?

படம்
ஏன்?எதற்கு?எப்படி? - மிஸ்டர் ரோனி மது குடித்தால் பதற்றம் ஏன் அதிகரிக்கிறது? காதலில் பிரேக் அப் ஆகியிருக்கிறது என்றால் டாஸ்மாக்கில் போய் கல்ப்பாக சரக்கு போட்டீர்கள் என்றால் உடனே போனை எடுத்து காதலியிடம் சண்டை போடுவீர்கள். வம்பு இழுப்பீர்கள். காரணம், மது உள்ளே சென்றதும் உங்கள் மூளையில் உடலை தளர்வு செய்வது போன்ற உணர்வை ஏற்படுத்துகிறது. அதேசமயம் அப்போது உங்கள் மனதை எது ஆட்கொண்டிருக்கிறதோ அந்த உணர்வை சற்றே உயர்த்தும். இதன்காரணமாக கோபத்துடன் டாஸ்மாக் செல்பவர்கள், சரக்கை அடித்து விட்டு வெளியே வரும்போது கொலை செய்துவிடலாம் என்ற எண்ணத்துடன் இருப்பார்கள். எனவே, ஃபாரம் மாலில் எலைட் பார் திறந்திருக்கிறார்கள். அங்கு வாங்கி வீட்டில் வைத்து அருந்திவிட்டு கலவரம் செய்யாமல் கமுக்கமாக படுத்து தூங்குங்கள். செய்தி - படம் - பிபிசி

கிளிஷேக்களிலிருந்து வெளியே வாங்க தேஜா - சீதா(தெலுங்கு)

படம்
சீதா தெலுங்கு தேஜா ஒளிப்பதிவு சிர்ஷா ரே இசை அனுப் ரூபன்ஸ் ஆஹா! வாழ்க்கையில் பணம் மட்டும்தான் முக்கியம் என்று நம்புகிற பெண், மனிதர்கள் அதைவிட முக்கியம் என உணருவதுதான் கதை. இதில் இப்படத்தில் தேறுவது சோனு சூட், காஜலின் நடிப்புதான். பெல்லக்கொண்டம் சீனிவாஸ், ஜூனியர் ஆர்டிஸ்ட் போல வந்து போகிறார். சோனு சூட், அவரின் அடியாட்களாக வந்து பாடலாகப் பாடும் நடிகர், உதவியாளராக வரும் கணேஷ் ஆகியோர் பிரமாதப்படுத்துகிறார்கள். காஜல் முதல் காட்சியிலிருந்து அட்டாகப்படுத்துகிறார். இசையில் அனுப் ரூபன்ஸ் தன் பங்குக்கு கோயிலம்மா பாடலில் அசர வைக்கிறார். அடச்சே! தேஜாவின் நாயகன், எப்போதும் ஏதோவொன்றை தள்ளி உடைத்து தன் பலத்தை நிரூபிப்பார். நானே ராஜா நானே மந்திரி படத்தில் ஜீப்பை ஆற்றில் விழுவதிலிருந்து ராணா காப்பாற்றுகிற காட்சி நினைவுக்கு வருகிறதா? அதேதான். இங்கு சீனிவாஸ் அதை அப்படியே மாற்றி பாத்ரூம் கதவை உடைக்கிறார். பஸ் சீட்டைப் பிடுங்குகிறார். கியர் ராடை அசைத்து உடைத்து எடுக்கிறார். இது படத்தின் கதைப் போக்குக்கு எந்தளவு உதவுகிறது. படம் பார்த்த எனக்கு ஒன்றுமே புரியவில்லை. தேஜா சார் கிளிஷே

போராட்டங்களின் அடிப்படை- வெல்லுமா -தோற்குமா?

படம்
போராட்டங்கள் வெல்லுமா? ஹாங்காங்கில் ஜூன் பனிரெண்டாம் தேதி தொடங்கிய போராட்டம் ஹாங்காங் கடந்து உலகளவில் மக்களின் கவனத்தையும் ஊடகங்களையும் ஈர்த்தது. காரணம், சீனா வர்த்தக மையமான ஹாங்காங்கை எப்படி பல்வேறு சட்டங்கள் மூலமாக சீனாவின் துணை நாடாக மாற்ற முயல்கிறது என்பதை மக்கள் போராட்டம் உலகிற்கு காட்டியது. காவல்துறை மையத்தை முற்றுகையிட்டு மக்கள் போராடத் தொடங்கினர். கேரி லாம் என்ற ஹாங்காங்கின் நிர்வாகத்தலைவரை மாற்றக்கோரி போராட்டம் மாறியுள்ளது. முதலில் தொடங்கிய போராட்டம்  லாம் அமல்படுத்திய குற்றச்சட்டம் தொடர்பானது. சாதாரணமாக பேரணி, அமர்ந்து போராடி செய்திகளை உலகிற்கு கூறிய மக்கள் இன்று அதில் வன்முறை வழியாகவும் உணர்த்துவதற்கு தயங்குவதில்லை என்கிறார் டொரண்டோ பல்கலைக்கழகத்தைச் சேர்த மார்க் ஃபெய்ன்பெர்க். கடந்த ஏப்ரலில் இம்முறையில் சுற்றுச்சூழல் தொடர்பான போராட்டத்தை மத்திய லண்டனில் மக்கள் முன்னெடுத்தனர். மக்களின் கவனம் ஈர்ப்பது நமக்கொன்றும் புதிதல்ல. மரம் வெட்டி போடுவது, பஸ்களை எரிப்பது, கிடைத்தால் மனிதர்களை பஸ்ஸில் வைத்து எரிப்பது என பல்வேறு வழிகளில் போராட்டம் குறித்து இந்தியளவில்

கட்டாய தானம் பெறுகிறார்களா?

படம்
சீனாவில் மரண தண்டனை பெறுபவர்களின் உடலிலிருந்து, உறுப்புகளை பெறுவது சீனாவில் வழக்கமாக உள்ளது. சீன அரசு நான்கு ஆண்டுகளுக்கு முன்பே இந்த வழக்கத்தை விட்டொழித்துவிட்டதாக கூறிவருகிறது. ஆனால் இதுகுறித்து விசாரிக்கும் தன்னார்வ அமைப்பு லண்டனில் செயல்பட்டு வருகிறது. இது சட்டப்பூர்வமான அமைப்பு இல்லை என்றாலும், சீனாவில் நடைபெறும் சட்டவிரோதமான உறுப்பு பரிமாற்றங்களை கேள்விக்குக்குள்ளாக்கி வருகிறது. சீன அரசு உய்குர் முஸ்லீம்கள் மற்றும் ஃபால்கன் காங் மதத்தைப் பின்பற்றுவர்களை இந்த உறுப்பு பரிமாற்ற அறுவைசிகிச்சைகளுக்கு கட்டாயப்படுத்துவதாக புகார்கள் எழுந்துள்ளன. அரசு மறுத்தாலும் அரசியல் கைதிகளையும், தூக்கு தண்டனை கைதிகளையும் உறுப்பு மாற்ற அறுவை சிகிச்சைகளுக்கு அரசு கட்டாயப்படுத்துவதாக செய்திகள் வந்துள்ளன. இங்கிலாந்திலுள்ள விசாரணை அமைப்பு நீதிபதி இதுகுறித்து, சீன மருத்துவமனைகளில் எப்படி லிஸ்டில் உள்ளவர்களுக்கு மிக குறைந்த நாட்களில் மாற்று உறுப்புகள் பொருத்தப்படுகின்றன. இதற்கு அர்த்தம், உறுப்புகளை லிஸ்ட்படி அவற்றை முன்னமே தயாரித்து வைத்து இருந்தால்தான் சாத்தியம் என்கிறார். ஆய்வு செய்த பனிரெ

தரம் வேண்டுமா? எண்ணிக்கை வேண்டுமா?

படம்
இந்தியா பொருளாதாரம் மெல்ல சரிவை சமாளித்து மீண்டு வருகிறது. அதேசமயம் வேலைவாய்ப்புகளை உருவாக்குவதில் தடுமாற்றத்தை சமாளித்து வருகிறது. இதில் பாலினம், சம்பள இடைவெளி ஆகிய பிரச்னைகளும் உள்ளது. இதுகுறித்து அசிம் பிரேம்ஜி பல்கலைக்கழகம் ஆய்வு ஒன்றை செய்துள்ளது. இருபத்தொரு மாநிலங்கள் பங்கேற்ற இந்த ஆய்வில் ஆந்திரம் வேலைவாய்ப்புகளை உருவாக்குவதில் முன்னிலை வகிக்கிறது. அடுத்த இடத்தில் மகாராஷ்டிரம் உள்ளது. பெண்களுக்கான ஊதியத்தில் இந்தியா இன்னும் பின்தங்கிய நிலையில் உள்ளது. இதில் இமாச்சலப் பிரதேசம், சத்தீஸ்கர் ஆகிய மாநிலங்கள் பாஸ் மார்க் வாங்குகின்றன. இதில் வேலைவாய்ப்பு , சம்பளம் என இரண்டு விஷயங்களும் கணக்கில் கொள்ளப்பட்டன. பீகார், உபி எப்போதும்போல இந்த விஷயத்திலும் பின்தங்கி உள்ளன.  சம்பள இடைவெளி விஷயத்தில் கேரளா முன்னணியில் உள்ளது. சத்தீஸ்கர் மற்றும் மகாராஷ்டிரம் ஆகிய மாநிலங்கள் இந்த விவகாரத்தில் சிறப்பாக செயல்பட்டுள்ளன. சத்தீஸ் வேலைவாய்ப்புகளைத் தருவதில் முன்னிலை வகிக்கிறது. காரணம், இங்கு கட்டுமான வேலைகள் அதிகம் உள்ளன. கோவா, கேரளம் ஆகிய மாநிலங்களில் வேலைவாய்ப்புகள் குறைவாக உள்ள

நேரு - கமலா கௌல் திருமண வாழ்க்கை!

படம்
நேரு - கமலா கௌல் திருமண வாழ்க்கை! இந்தியாவின் முதல் பிரதமராக பணியாற்றிய நேரு, கடுமையான உழைப்புக்கு பெயர் பெற்றவர். தினசரி பனிரெண்டு மணிநேரங்களுக்கு மேல் உழைத்தவர். நாட்டின் பிரதமராகவும், வெளியுறவுக்கொள்கை அமைச்சராகவும் இருந்தார். இவரின் அரசியல் வாழ்வு அளவுக்கு, இவரின் திருமண வாழ்வு அதிகளவு குறிப்பிடப்படவில்லை. நேரு, இங்கிலாந்தின் கேம்ப்ரிட்ஜிலுள்ள ட்ரினிட்டி கல்லூரில் படித்து வந்தார். தந்தை மோதிலால் நேருவுக்கு அவரை ஆங்கிலேயே அரசில் ஐசிஎஸ் அதிகாரியாக வேலைசெய்ய வைக்கவேண்டும் என்று ஆசை. ஆனால் நேரு படிக்கும் காலத்திலேயே உலக அரசியலில் தீவிர ஆர்வம் கொண்டிருந்தார். கல்லூரியில் படிக்கும்போது ஐசிஎஸ் அதிகாரியாக தேர்வு பெறுவதற்கான மதிப்பெண்களை அவர் பெற்றிருக்கவில்லை. ஆங்கில அரசில் பணிபுரியும் எண்ணமும் அவருக்குக் கிடையாது. விருப்பமற்ற திருமணம் அந்த கால நடைமுறைப்படி நேருவுக்கு திருமணம் செய்வதற்கான பேச்சு தொடங்கியது. இதுகுறித்து தன் தாய்க்கு 1907 ஆம் ஆண்டு நேரு கடிதம் எழுதினார். ”திருமணத்திற்கு பொருத்தமான பெண்ணை நீங்களே தேர்ந்தெடுங்கள். அதில் எனக்கு மாற்றுக்கருத்து கிடையாது. ஆனால்

மில்லினிய இளைஞர்கள் - சீக்ரெட்ஸ் லிஸ்ட்!

படம்
சீனியர்களை கோப ப்படுத்தும் விஷயம் நாங்கள் மில்லினியல் பாஸ் என பொடுசுகள் பேசுவதுதான். பின்னே அடிக்கடி வயசை நினைவுபடுத்தினால் எப்படி..... தற்போது மில்லினிய குழந்தைகளைப் பற்றி ஏராளமான ஆராய்ச்சிகள் வெளிவந்து கொண்டிருக்கின்றன. உண்மையில் மில்லினிய செட் பற்றி தெரிந்துகொள்வோம். 1981 - 96 ஆண்டுகளுக்குள் பிறந்தவர்களை மில்லினிய செட்டில் சேர்க்கலாம். இளையவர்கள் என்பதைத்தான் மில்லினியர்கள் என்று குறிப்பிடுகிறார்கள் என்பதை ப்யூ ஆராய்ச்சி நிறுவனம் கூறுகிறது. இதில் மூத்தவர்கள் 30 களில் இருப்பார்கள். மில்லினியல் என்ற வார்த்தை 91 ஆம் ஆண்டு வரலாற்று ஆய்வாளர்களால் முன்வைக்கப்பட்டது. நெய்ல் ஹோவே மற்றும் வில்லியம் ஸ்ட்ராஸ் ஆகியோரின் நூலான ஜெனரேஷன்ஸ் என்பதில் இந்த வார்த்தை முதன்முதலில் குறிப்பிடப்பட்டது. 2000 ஆம் ஆண்டில் பட்டம் பெற்றவர்களைக் குறிப்பிட்ட இந்த வார்த்தையை ஆசிரியர்கள் பயன்படுத்தினர். மில்லினியர்கள் புத்தகம் படிப்பதில் ஆர்வமுடையவர்கள்தான். 2016 ஆம் ஆண்டு இவர்கள் ஆண்டுக்கு ஐந்து நூல்களை தோராயமாக படித்திருப்பதாக ஆய்வு கூறுகிறது. முந்தைய ஆய்வில் நான்கு நூல்களைத்தான் படித்தார்கள். டெக்

உலகப்புகழ் பெற்ற உரைகள் - பேட்ரிக் ஹென்றி

படம்
உலகப்புகழ்பெற்ற பேருரைகள் பிரிட்டிஷ் நாட்டு ராணுவம், அமெரிக்காவைத் தாக்கும் முயற்சியில் இருந்தது. அப்போது பேட்ரிக் ஹென்றி, தன் நாட்டு மக்களை போருக்கு ஆயத்தம் செய்யும்விதமாக உரையாற்றினார். உரையின் முடிவில் மக்கள் போர்தான் ஒரே வழி என்ற முடிவுக்கு வந்து கோஷமிட்டனர். காரணம், உணர்வுபூர்வமாக பேட்ரிக் ஹென்றி ஆற்றிய உரைதான். பேட்ரிக் ஹென்றி 1775 ஆம் ஆண்டு மார்ச் 23 அன்று பிறந்தவர். அமெரிக்காவிலுள்ள வர்ஜீனியாதான்(ரிச் மாண்ட்) இவரின் சொந்த ஊர். சுதந்திரத்தைக் கொடுங்கள் அல்லது இறப்பை பரிசளியுங்கள் - பேட்ரிக் ஹென்றி தமிழில்: ச.அன்பரசு  அமெரிக்காவின் இறையாண்மையைக் காப்பாற்றுவதற்காக என்னளவு இங்கு ஒருவர் சிந்தித்து செயலாற்றியிருக்க முடியாது. அதேசமயம் இந்த விவகாரத்தை ஒவ்வொருவரும் வெவ்வேறு கோணத்தில் ஒளியில் பார்ப்பார்கள் என்பது மறுக்க முடியாத உண்மையும் கூடத்தான். இதில் நான் மேற்சொன்னவர்கள் மீது எந்த விமர்சனத்தையம் முன்வைக்க விரும்பவில்லை. மேலும் நாம் இன்றுள்ள சூழ்நிலையில் கொண்டாட்டத்திற்கு இடமில்லை. பொழுதுபோக்கவும் எனக்கு ஆர்வம் இல்லை. இன்றும் நம் நாட்டின் முன்னே சிக்கலான சூழலும்

பெண்களுக்குத் தேவை வாய்ப்புகள்தான் கருணை அல்ல!

படம்
நேர்காணல் வாய்ப்பு கொடுத்தால் பெண்களாலும் சாதிக்கமுடியும்! அலெசாண்ட்ரா செலெட்டி (ALESSANDRA CELLETTI) இத்தாலியைச் சேர்ந்த கணிதவியலாளர் அலெசாண்ட்ரா செலெட்டி, ரோம் டோர் வர்கட்டா பல்கலையில் கணிதவியலாளராக பணியாற்றி வருகிறார். அலெசாண்ட்ரா, டைனமிக்கல் சிஸ்டம்ஸ், காம் தியரி, செலஸ்டிகல் மெக்கானிக்ஸ் (வளிமண்டல இயக்கவியல்) ஆகி பங்களிப்புக்காக பாராட்டப்பெற்றவர். ஆராய்ச்சிக் கட்டுரைகளோடு பல்வேறு நூல்களையும் எழுதியுள்ளார். கணிதத்தில் பல்வேறு சாதனைகளை நிகழ்த்தியுள்ளீர்கள்.உங்களது பள்ளிப்பருவத்திலிருந்தே கணிதம் மீது ஈர்ப்புடையவராக இருந்தீர்களா? எனக்கு இப்போது அந்த காலத்தை நினைவுகூர்ந்து பார்த்தால், ஐந்து வயதில் உறவினர் ஒருவர் என்னைக் கேட்ட கேள்வி நினைவுக்கு வருகிறது. உனக்கு என்னவாக ஆசை என்று கேட்டார். நான் கணிதம் படிக்கப்போகிறேன் என்று கூறியது மங்கலாக நினைவு இருக்கிறது. செலஸ்டிகல் மெக்கானிக்ஸ்என்று அன்று சொல்லியிருக்கமுடியாது. கணிதம் இல்லாமல் இளம் வயதில் அறிவியல் குறும்படங்களை எடுக்கும் ஆசை தோன்றியது. நீங்கள் அறிவியல் பத்திரிக்கைக்கு ஆசிரியராகவும் செயல்படுகிறீர்கள் என்று கேள்விப்பட்டோம