தன் கௌரவத்திற்காக யாரையும் பலிகொடுக்கத் தயங்காத சினிமா இயக்குநர்! - ஆட்டகாலு
maryland ஆட்டகாலூ இயக்கம்: பச்சூரி முரளி இசை: சாய் கார்த்திக் சித்தார்த் புகழ்பெற்ற சினிமா இயக்குநர். சாலை விபத்தில் அப்பா, அம்மா இருவரும் பலியாகிவிட அனாதையாகிறாள் சிறுமி ஒருத்தி. அவளை அவளது சொந்தங்களே விலக்கி வைக்க, சித்தார்த் அச்சிறுமியை தத்தெடுத்துக்கொள்கிறார். அட எப்படிப்பட்ட மனிதர் என நாம் வியக்கும்போது, அவரது வீட்டில் காதல் மனைவி அஞ்சலி கத்தியால் முதுகில் குத்தப்பட்டு பிணமாக கிடக்கிறார். ரத்தம் வடிந்து கதவுக்கு வெளியே குளமாக தேங்கிக் கிடக்கிறது. அவளது அம்மா இதைப்பார்த்து ஐயோ என வாயில் கைவைத்து அலற, போலீஸ் விசாரணை செய்து எளிமையாக சித்தார்த்தான் கொலையாளி என கூண்டில் நிறுத்துகிறது. ஆனால் சித்தார்த் நான் கொலை செய்யவில்லை. நியாயத்தின் பக்கம் நிற்பதாக சொல்லும் அரசு வழக்குரைஞரே இதுபற்றி முடிவு சொல்லட்டும் என்கிறார். இதனால் குழப்பத்திற்கு உள்ளாகும் அரசு வழக்குரைஞர் வீரேந்திரா, இதுபற்றி விசாரணையை முடுக்கிறார். அவருக்கு டிசிபியும் உதவுகிறார். அதன் முடிவில் கொலைக்கு அஞ்சலியின் காதலன் முன்னா காரணம் என முடிவாக, அவனுக்கு மரணதண்டனை வழங்கப்படுகிறது. சித்தார்த் விடுதலையாகி வெளியே வருகிற