இடுகைகள்

நெக்ரோபிலி - பிணங்களோடு மனிதர்கள் கொள்ளும் உடலுறவு ஆசை

படம்
  அசுரகுலம் ரத்த சாட்சி 1.0 இறந்தவர்களோடு வாழ்தல். இறந்த காதலியை தோளில் போட்டுக்கொண்டே திரிதல், அந்த உடலுடன் வாழ்தல், கொலை செய்து அல்லது இறந்த பிணங்களை தோண்டியெடுத்து அறையில் அருங்காட்சியகம் போல அமைப்பது, அழும் தசை துர்நாற்றத்தை சகித்துக்கொள்வது என வாழும் மனிதர்கள் உலகில் உண்டு. இதில் உடல்ரீதியான இன்பம் அனுபவிக்கும் பழக்கங்களையும் மனிதர்கள் செய்கிறார்கள். இதை உளவியல் மருத்துவர்கள் நெக்ரோபிலியா என்கிறார்கள். இறந்த உடல்களைப் பார்த்து ரசிப்பது, மனநல குறைபாடு கொண்ட மனிதர்களுக்கு பிடித்தமானது. உடலே விதையாக.. இங்கிலாந்தில் நடந்த கதை இது. அங்குள்ள லண்டன் நகரில் ப்ரௌன் என்பவர் ஒரு இடத்தை வாங்கினார். அறையில் இருந்து வரும் துர்நாற்றம் அவரை என்னடா இது என வெறுப்பு கொள்ள வைத்தது. சுவரில் ஒட்டியிருந்த வால்பேப்பரை உருவி எலி செத்திருக்கிறதோ என பார்த்தவர் நொடியில் முதுகுத்தண்டில் மின்சாரம் தாக்கியது போல அதிர்ந்தார். சுவரில் கான்க்ரீட் கலவையில் மூடியபடி நிர்வாணமாக ஒரு உருவம். பெண். தொட்டுப் பார்த்து உறுதி செய்தவர், உடனே காவல்துறைக்கு தகவல் சொன்னார். அவர்கள் வந்து சுவரை இடித்துப் பார்க்க இன்ன

மகப்பேறு மருத்துவத்தின் மூலம் தன்னைச்சுற்றியுள்ள பெண்களை புரிந்துகொள்ளும் மருத்துவர்! டாக்டர் ஜி

படம்
  டாக்டர் ஜி ஆயுஷ்மான் குரானா, ரகுல் ப்ரீத் சிங், ஷெபாலி ஷா இசை அமித் திரிவேதி   பொதுமருத்துவம் படித்த உதய் குப்தா, சிறப்பு மருத்துவராக மாற எலும்புகள் பற்றி படிக்க நினைக்கிறார். ஆனால் அதை படிப்பதற்கான சீட், அவருக்கு அருகில் கிடைப்பதில்லை. எனவே மகப்பேறு மருத்துவத்தை அவர் தேர்ந்தெடுக்கிறார். ஆனால் அதை முழு மனதாக செய்யவில்லை. ஆண் என்றால் மகப்பேறு மருத்துவம் எதற்கு செய்யவேண்டும் என நினைக்கிறார். பெண்களுக்குத்தான் அது சரியானது என நினைக்கிறார். இந்த மனநிலையை அவர் மாற்றிக்கொண்டு நல்ல மகப்பேறு மருத்துவராக அவர் மாறுவதுதான் கதை. உதய் குப்தா, ஆணாதிக்க கருத்துகள் கொண்டவர். அவருக்கு அவரது நெருங்கிய உறவினரான எலும்பு மருத்துவர்தான் ரோல்மாடல். அதுபோல மருத்துவராகி சந்தோஷமாக வாழவேண்டும். வெற்றிகரமான மருத்துவராக செயல்டுவதே கனவு. ஆனால் நிலைமை அப்படி எளிதாக செல்லவில்லை. அவருக்கு மகப்பேறு மருத்துவம்தான் படிக்க கிடைக்கிறது.   மருத்துவக் கல்லூரி, மருத்துவமனை என இரண்டு இடங்களிலும் அவர் தன்னை மிகவும் அந்நியமாக உணர்கிறார். வகுப்பில் அவர் மட்டும்தான் ஒரே ஆண். வேலையின்போது, ஆசிரியரும் துறை தலைவருமான நந்த

மாண்வரி அல்குல் - புதிய மின்னூல் வெளியீடு

படம்
  மாண்வரி அல்குல் என்ற சிறுநூல், பிடிஎஸ்எம் வாழ்க்கை முறையைப் பற்றி பேசுகிறது. இந்த வாழ்க்கை முறை சார்ந்து ஆங்கில நூல்கள் நிறைய இருந்தாலும் தமிழில் நூல்கள் குறைவு. அந்த வகையில் பிடிஎஸ்எம் முறையில் உள்ள கருத்துகள், நம்பிக்கைகள், விதிகள் பற்றி மாண்வரி அல்குல் உரையாடுகிறது.  பிடிஎஸ்எம் என்றால் பலருக்கும் ஆபாச வீடியோ தளங்கள் நினைவுக்கு வரலாம். ஆனால் அத்தகைய தன்மையை இயல்பாக கொண்ட உறவுமுறை பிடிஎஸ்எம்மில் மிக குறைவு. காட்சியாக ஒன்றை காண்பதற்கும் அனுபவித்து வாழ்வதற்கும் நிறைய வேறுபாடுகள் உண்டு. இணையத்தில் இதுபற்றி தேடினால் உங்களுக்கு நிறைய மக்கள் குழுக்களாக பிடிஎஸ்எம் முறையை கடைபிடித்து வாழ்கிறார்கள். விருந்துகளை நடத்துகிறார்கள். அதுபற்றி புரிதலை ஏற்படுத்தும் நூல்தான் மாண்வரி அல்குல். ரோஸ்கோல்ட் அண்ட் கோ., நிறுவனம் நூலை தொகுத்துள்ளது.  நூலை கிண்டில் மூலம் வாசிக்கலாம். நன்றி! https://www.amazon.in/dp/B0BQ7H4ZMK

மென்மையான உணர்வுகளை மனதிற்குள் கடத்தும் கதைகள் - அப்பாவின் வேஷ்டி - பிரபஞ்சன்

படம்
  அப்பாவின் வேஷ்டி - பிரபஞ்சன் சிறுகதைகள் அப்பாவின் வேஷ்டி பிரபஞ்சன் டிஸ்கவரி பப்ளிகேஷன் தொகுப்பில் மொத்தம் பதினைந்து கதைகள் உள்ளன. இதில் வாசிக்க அனைத்துமே வெவ்வேறு வகையாக மனித வாழ்க்கையை அணுகுபவைதான். நிகழ் உலகம், அமரத்துவம், குழந்தைகள் ஆகிய கதைகள் சற்றே வேறுபட்ட தன்மையைக் கொண்டுள்ளன. குழந்தைகள் கதையில் வாசு என்ற இசைக்கலைஞரிடம் வீணை பாடம் கற்க இரு இளைஞர்கள் செல்கிறார்கள். அங்கு வாசு சாரின் மகள் விதவையாகி வாழ்ந்து வருகிறாள். பிறகென்ன கதை அதேதான். பாடம் கற்க சென்றவரான பிச்சுவுக்கு காதல் பொத்துக்கொண்டு வருகிறது. ஆனால் பிச்சுவின் செயலை வாசு சார் எப்படி பார்க்கிறார், அவரின் மகள் ஜானகி எப்படி புரிந்துகொள்கிறாள் என்பதே கதையின் இயல்பை மாற்றுகிறது. இதில் வைத்தி முதலிலேயே வாசு சாரின் இயல்பைப் புரிந்துகொள்கிறான். அதனால் பிச்சு தனது காதல் பற்றி சொன்னதும், அது சிக்கலாகும் வேண்டாம். நீ காதல் என்று சொன்னால் செருப்பால் அடிப்பேன் என எச்சரிக்கிறான். ஆனால் காதல் இதற்கெல்லாம் நின்றுவிடுமா என்ன? இறுதியாக என்னாகிறது, பிச்சுவின் காதல் பற்றி வைத்தி என்ன சொல்லுகிறான் என்பதுதான் முக்கியமானது. நிகழ்

பரவசமான வாசிப்பு இன்பத்தை தரும் ஸோரன்டினா எழுதிய சிறுகதை தொகுப்பு - ஆட்டுக்குட்டிகள் அளிக்கும் தண்டனை -எம்.எஸ்.

படம்
  ஆட்டுக்குட்டிகள் அளிக்கும் தண்டனை - ஃபெர்னான்டோ ஸோரன்டினோ ஆட்டுக்குட்டிகள் அளிக்கும் தண்டனை அர்ஜென்டினா எழுத்தாளர் ஸோரன்டினா தமிழில் எம்எஸ் காலச்சுவடு பதிப்பகம் நூலின் பக்கங்களே 77 தான். எளிமையான கதைகள். அனைத்துமே வாசிக்கும்போது புன்னகை வர வைப்பவைதான். சில நன்றாக சிரிக்க வைக்கின்றன. காலச்சுவடின் எம்.எஸ் அனைத்து கதைகளையும் எளிமையாக மொழிபெயர்த்திருக்கிறார். சரளம் என்பதைத் தாண்டி அர்ஜென்டினா எழுத்தாளரின் பகடியையும் நம்மால் அனுபவித்து ரசித்து படிக்க முடிகிறது. 2003இல் வெளியான காலச்சுவடின் முதல் அயல் இலக்கிய நூல் இதுதான். வெறும் சூசகம், ஹார்ன் இசைப்பவர், வருகை ஆகிய கதைகள் ரசித்து படிக்கும்படியானவை. இப்படி கூறுவதால் இவை மட்டுமே சிறப்பானவை என்று கருதிவிடவேண்டாம். எழுத்தாளரின் விசேஷமான பகடி இக்கதைகளில் சிறப்பாக வெளிப்பட்டு இருக்கிறது. வெறும் சூசகம் என்பது சிறிய கதைதான். ஆனால் அதை பயன்படுத்தி ஒரு மனிதர் தன்னை மட்டும் காப்பாற்றிக்கொள்ளும் குணத்தை ஸோரன்டினோ எளிமையாக அதேசமயம் தீர்க்கமாக வெளிப்படுத்தியுள்ளார். அற்பத்தனமாக நடந்துகொண்டு வீட்டு உரிமையாளரை தனது சமையலறையில் நீர் எடுத்து

கழுத்தைக் கடித்து ரத்தம் உறிஞ்சினால் பேரின்பம்! - மனித வடிவில் சுற்றிய காட்டேரிகள்

படம்
    அசுரகுலம் ரத்த சாட்சி 1.0 காட்டேரி இந்தோனேஷியாவைச் சேர்ந்தவர் அஹ்மத் சுராத்ஜி. இவர் அந்த நாட்டில் மாந்த்ரீகம் படித்த ஆள். இவரை காவல்துறை கைது செய்தபோது நாற்பத்திரெண்டு கொலைகளை செய்திருந்தார். கரும்புக்காட்டில் இருபதுக்கும் அதிகமான மண்டையோடுகளை காவல்துறை கண்டெடுத்து பீதியானது. இன்னும் முப்பது கொலைகளை செய்த ஆர்வமாக இருந்தவரை கைதும், சிறையும் கட்டுப்படுத்திவிட்டது பரிதாபம்தான்.   எப்படி ப்ரோ கொலை செஞ்சீங்க என குற்றவரலாற்றை காவல்துணை நிமிண்டி   கேட்க, அதற்குத்தானே அஹ்மத் காத்திருந்தார். முதலில் பெண்களை பிடித்து கழுத்தை நெரித்துக் கொல்வேன். பிறகு அவர்களின் வாயில் உள்ள எச்சிலைக் குடிப்பேன் என திகில் ஊட்டியிருக்கிறார். இப்படி எச்சிலைக் குடிப்பதன் மூலம் இறந்தவர்களின் ஆன்மாவைக் கட்டுப்படுத்த முடியும் என நினைத்திருக்கிறார். காவல்துறை தன்னை பிடித்துவிட்டது. சாகப்போகிறோம் என ஒருவர் தெரிந்துகொண்டால் எப்படி இருப்பார். மனதளவில் நொறுங்கியவராகத்தானே, ஆனால் ஜெர்மனியைச் சேர்ந்த ஃபிரிட்ஸ் ஹார்மன், எப்படி கொலை செய்தேன் என்பது மகிழ் திருமேனி பட கொலை போல துல்லியமாக சொன்னார். உனக்கென்ன தண்டனை கி

மகிந்திரா நிறுவனத்தை அடித்தளமிட்டு உருவாக்கிய இரண்டு சகோதரர்கள்!

படம்
  இடமிருந்து வலம் - கே சி மகிந்திரா, ஜே சி மகிந்திரா, குலாம் முகமது வீடு, தொழிற்சாலை என கட்டுமானங்களுக்கு அடித்தளம் சரியாக அமைக்கப்படவேண்டும். அப்போதுதான் அதனை எதிர்காலத்திற்கு ஏற்ற வகையில் கட்ட முடியும். அடித்தளம் என்பது கட்டிடம் எங்கு எழும்புகிறதோ அங்குள்ள மண், இயற்கைப்பேரழிவு ஆபத்துகள் ஆகியவற்றை அடிப்படையாக கொண்டு திட்டமிட்டு அமைக்கின்றனர். ஒரு நிறுவனத்தை தொடங்குபவர் உயர்ந்த லட்சியத்திற்காக, வானுயர்ந்த நோக்கத்தை கருத்தில் கொண்டு உருவாக்குகிறார். அடுத்து தலைமை பதவிக்கு வருபவர், நிறுவனரின் லட்சியத்தை மேம்படுத்துகிறார். விரிவுபடுத்துகிறார். இப்படி தலைமை   பதவிக்கு வருபவர்கள் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்களாக இருந்தால் நல்லது. குடும்பம் என்பதை விட திறமையே முக்கியம். இதற்கு எடுத்துக்காட்டு   வேண்டுமெனில் வெளிநாடுளில் இருநூறு ஆண்டுகளுக்கு மேலாக செயல்படும் நிறுவனங்களை அடையாளம்   கூறலாம். இந்த நிறுவனங்களில் தலைமை பொறுப்பை வகிப்பவர்கள் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்களாக இருக்கிறார்கள். அல்லது குடும்பத்தில் பெண் எடுத்தவர்களாக இருக்கிறார்கள். பல்வேறு தலைமுறைகளாக நிறுவனம் நிலைத்து நிற்க அர்ப்பணி

மக்களின் மனதைப் புரிந்துகொள்ள முயலும் தொழிலதிபர் - ஆனந்த் மகிந்திரா

படம்
  இந்தியாவில் தற்போது பொதுமக்களோடு அதிகம் உரையாடிக் கொண்டிருக்கும் தலைவர் யாரென   நினைக்கிறீர்கள்? அமெரிக்காவில் இதுபோல இயங்கும் சர்ச்சை கிளப்பும் தலைவர் ஒருவருண்டு. அவர் எலன் ம|ஸ்க் என அனைரும் தெரிந்துகொண்டிருப்பீர்கள். இந்தியாவில் எலன் ம|ஸ்கையொத்த பல்வேறு பரிசோதனை முயற்சிகளை செய்துகொண்டிருப்பவர் இவர் ஒருவரே…. அவர்தான் ஆனந்த் மகிந்திரா. இந்தியாவைப் பொறுத்தவரை தொழிலதிபர்கள் யாரும் வெளிப்படையாக தங்கள் கருத்தை எங்கும் பகிர்ந்துகொள்ள மாட்டார்கள். என்ன காரணம்? அரசியல் கட்சிகள் அதை வைத்து அவர்களது தொழிலை நசித்து விடுவார்கள் என்பதுதான்   முக்கியமான காரணம்.   ஆனந்த் மகிந்திரா இந்தவகையில் அரசியல் என்பதைப் பற்றி கவலைப்படாமல் நம்பிக்கையான மனிதர்கள், அவர்களைப் பற்றிய வீடியோ என பகிர்ந்துகொண்டு   ட்விட்டரில் இயங்கி வருகிறார்.   ஆனந்த்   நாள்தோறும் ட்விட்டரில் பகிரும் வீடியோக்களைப் பார்க்க பகிரவே நிறைய மனிதர்கள் ட்விட்டரில் அவரைப் பின்தொடர்கிறாரகள். மகிந்திரா நிறுவனம் 1945ஆம் ஆண்டு தொடங்கப்பட்டு 2022ஆம் ஆண்டோடு 77 ஆண்டுகளை   நிறைவு செய்துள்ளது. 2020ஆம் ஆண்டில் 75 ஆண்டுகளை நிறைவு செய்தது. மகிந்

முதலில் காதலியைக் காப்பாற்றிவிட்டு பிறகு காட்டைக் காப்பாற்ற முயலும் வன அதிகாரி - கொண்டா பொலம் - கிரிஷ்

படம்
  கொண்டா பொலம்   இயக்குநர் கிரிஷ்   குடிமைத் தேர்வுகள் எழுதிய பிற்படுத்தப்பட்ட பழங்குடியை ஒத்த சாதி இளைஞர், தனது கதையை அதிகாரிகளிடம் சொல்லுகிறார். அவரது நினைவுகளின் வழியே கதை பயணிக்கிறது. வைஷ்ணவ் தேஜின் –( சின்னவன்) வாழும் ஊரின் வேலையே ஆடு மேய்த்து பிழைப்பதுதான். ஆனால் அவனது அப்பா, ஆடுகளை விற்று அவனை பட்டப்படிப்பு படிக்க வைக்கிறார். இதன்மூலம் அவன் நகரத்தில் போய் பிழைத்துக் கொள்வான் என நினைக்கிறார். ஆனால் படித்த ஐடி படிப்பும், வாயில் நுழையாத ஆங்கிலமும் சின்னவனை வேலையில்லாத பட்டதாரியாக்குகிறது. இந்த நிலையில் அவன் திரும்ப கிராமத்துக்கு வருகிறான். ஆடுகளை மேய்க்கப் போவதற்கு ஆட்கள்   குறைய,   அவனும் ஆட்களோடு மலைக்கு செல்கிறான். அங்கு சென்று சில மாதங்கள் தங்கி ஆடுகளை மேய்த்து கூட்டி வர வேண்டும். இந்த பயணத்தில் அவன் விலங்குகளை மேய்ப்பதோடு காட்டுக்குள் உள்ள பல்வேறு சதிகார மனிதர்களையும், ஆடுகளை தின்னும் புலியையும் சந்திக்கிறான். பள்ளித்தோழி ஓபுலம்மா மூலம் சின்னவன் நிறைய விஷயங்களைக் கற்கிறான். அதில் காதலும் ஒன்று. அவனுக்கு காதலை விட முக்கியமானதாக காடுகளில் மரங்களை வெட்டுவதை தடுக்க வேண்ட

இயங்க முடியாத என்னை உன் கண்களால் பார்க்காதே- சிகாட்டில்லோவின் கொலை அட்டூழியங்கள்!

படம்
  அசுரகுலம் ரத்த சாட்சி 1.0 ஓநாயின் வாரிசு   ஒருவர் தன்னை ஓநாயாக உணர்ந்து அப்படியே நடந்துகொண்டால் எப்படியிருக்கும்? பதற்றமாக இருக்குமா இல்லையா? அப்படியான மனநிலை பிரச்னைகள் உலகில் நடந்துள்ளன. அப்படி ஒன்றுதான் இப்போது நீங்கள் படிக்கப் போவதும் கூட. பிரான்ஸ் நாட்டில் ஜீன் கிரேனியர் என்ற பதிமூன்று வயது சிறுவன்தான் கதையின் கதை நாயகன். பாதிரியாரின் மகன் என்று தன்னைக் கூறியவன், தனது ஆன்மாவை சாத்தானுக்கு விற்றுவிட்டதாக அர்ப்பணித்துவிட்டதாக சொல்லி சிறுமிகளை பிடித்து ரத்தம் உறிஞ்சிக் குடிக்கத் தொடங்கினான். ஓநாயின் தோலாடையை அணிந்தால் ஒருமணி நேரத்தில் ஓநாயாக மாறிவிடுவேன் என்று கதை கட்டியவன், ஊர் முழுக்க வதந்தியைப் பரப்பி வந்தான். அவன் சொன்னதையும் நம்பி ஒன்பது பேர் அவனிடம் செட்டு சேர்ந்து நண்பர்களாக மாறினார்கள். பிறகு குற்றச்செயல்கள் அதிகரிக்க அங்குள்ள உள்ளூர் நிர்வாகம் இதுபற்றி ஆராய்ச்சி செய்து ஜீனைக் கண்டுபிடித்து விசாரித்தது. அவன், அலட்டிக்கொள்ளாமல் எம் என்ற பெயருடைய கருப்பு நிற மனிதன் தனக்கு ஓநாய் உடையைக் கொடுத்து விரைவில் ஓநாயாக மாறிவிடுவாய் என்று கூறியதாக கூறினான். பிறகுதான், தான் குழந்தை, சிற