இடுகைகள்

காடு லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

பாமாயிலால் அழியும் உராங்குட்டான்கள்!

படம்
  மழைக்காடுகளில் வளர்க்கப்படும் பனைமரங்களிலிருந்து பாமாயில் பெறப்படுகிறது. இதற்கு கொடுக்கும் பெரிய விலையாக உராங்குட்டான்களின் வாழிடம் அழிக்கப்படுகிறது.  பாமாயில் மேற்கு ஆப்பிரிக்க பனை எனும் மரத்திலிருந்து பாமாயில் பெறப்படுகிறது. இதனை நீங்கள் பெரும்பாலும் வெஜிடபிள் ஆயில் என்ற வார்த்தையின் கீழ் புரிந்துகொள்ளலாம். இன்று பிரிட்டானியா, ஐடிசி, யுனிபிக், மெக்விட்டிஷ், ஓரியோ என அனைத்து பிஸ்கெட் கம்பெனிகளிலும் மலிவான முதல் விலை உயர்ந்த அனைத்து பொருட்களிலும் பாமாயில் பயன்படுகிறது. பாமாயில் என்ற பெயர் வர மேற்கு ஆப்பிரிக்காவில் இருந்து உலகம் முழுவதும் பரவியதும், பருவ மழைக்காடுகளில் அதிகம் விளைவிக்கப்படுவதும் முக்கியமான காரணம்.  உலகளவில் பயன்படுத்தும் பாமாயில் 85 சதவீதம் இந்தோனேஷியா, மலேசியா ஆகிய நாடுகளில் இருந்து பெறப்படுகிறது. இங்குதான் உராங்குட்டான்கள் காடுகளில் வாழ்கின்றன.  பாமாயிலுக்காக பனை மரங்களை விளைவிக்க காடுகள் அழிக்கப்படுகின்றன. இதனால் உராங்குட்டான்கள் மட்டுமல்ல பிற உயிரினங்களும் பாதிக்கப்படுகின்றன. அவற்றின் வாழிடமும் அழிக்கப்படுகிறது. இதனால் உணவுக்காக அவை நகரங்களுக்குள் வருவது தவிர்க்க

இயற்கை, சூழல் சார்ந்த நூல்கள்- வாசிப்போம் வாங்க!

படம்
  ஐ பாட் எ மௌண்டைன் தாமஸ் ஃபிர்பேங்க் ஷார்ட் புக்ஸ்  1940ஆம் ஆண்டு பதிப்பிக்கப்பட்ட நூலின் மறுபதிப்பு. கிளாஸிக்கான நூலை, இயற்கை காதலர்களுக்காக புதிய தலைமுறைக்காக பதிப்பித்து இருக்கிறார்கள். ஸ்னோடோனியா என்ற மலைமீது உள்ள பண்ணை ஒன்றை தாமஸ் வாங்குகிறார். இதனால் அவரும், அவர் மனைவியும் சந்திக்கும் நிறைய சிக்கல்களை கூறியிருக்கிறார்.  தி ஸ்லாத் லெமூர்ஸ் சாங்க்ஸ்  அலிசன் ரிச்சர்ட் ஹார்ப்பர் கோலின்ஸ்  லெமூர் பற்றி 50 ஆண்டுகளாக ஆராய்ச்சி செய்து வருபவர் அலிசன் ரிச்சர்ட். நூலில் காட்டுயிர் வாழ்க்கை, புவியியல், சூழல் இவற்றை உள்ளடக்கிய சமூகம் என நிறைய விஷயங்களைப் பேசுகிறார். மடகாஸ்கர்தான் நூலில் பேசப்படும் முக்கியமான இடம். அதன் ரகசியங்களை அறிய நூலை வாங்கி வாசியுங்கள்.  டீர் மேன் ஜியோப்ராய் டெலோர்ம் லிட்டில் ப்ரௌன் புக் க்ரூப் புகைப்படக்காரர் டெலோர்ம் நார்மண்டியில் உள்ள லூவியர் காட்டுக்கு செல்கிறார். அங்கு சென்று தங்கி மான்களுடன் பழகுகிறார். அதன் வாழ்க்கையைக் கவனிக்கிறார். அதைப்பற்றிய குறிப்புகள், அனுபவங்கள் நூல் முழுவதும் விரவிக்கிடக்கிறது.  வைல்ட் சிட்டி ஃப்ளோரன்ஸ் வில்கின்சன் ஓரியன் பப்ளிசிங் மனிதர

அகதிகளைத் தடுக்கும் இரும்புவேலி- பாதிக்கப்படும் காட்டு உயிரினங்கள்

படம்
  அகதி வேலியால் பாதிக்கப்படும் உயிரினங்கள்! போலந்து நாடு, பெலாராஸ் நாட்டிலிருந்து வரும் அகதிகளைத் தடுக்க வேலி அமைத்து வருகிறது. மத்திய கிழக்கு நாடுகள் மற்றும் ஆசியா வழியாக வரும் அகதிகளை தடுப்பதே இதன் நோக்கம். இந்த வேலி பியாலோவிசா (Białowieża Forest) எனும் காட்டின் இடையே அமைக்கப்படுகிறது. தொன்மையான காடான இங்கு, 12 ஆயிரத்திற்கும் அதிகமான உயிரினங்கள் வாழ்ந்து வருகின்றன. யுனெஸ்கோ அமைப்பின் பாரம்பரிய இடமாக பியாலோவிசா காடு அறிவிக்கப்பட்டுள்ளது.  போலந்து மற்றும் பெலாரஸ் இடையே கட்டப்படும் வேலியின் நீளம் 130 கி.மீ. ஆகும். இதன் உயரம் 5.5 மீட்டர் ஆகும். உலகம் முழுக்க இப்படி கட்டப்பட்டுள்ள கம்பிவேலி, சுவர்களின் தோராய நீளம் 32 ஆயிரம் கி.மீ. ஆகும். இதன் காரணமாக உணவு, நீர் தேடி உயிரினங்கள் பிற நாடுகளுக்கு செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இந்த வகையில் 700 பாலூட்டி இனங்கள் பாதிக்கப்பட்டுள்ளன.  பியாலோவிசா காட்டில் பூஞ்சைகள், மரங்களில் வளரும் பாசி (mosses), பாறைகளில் வளரும் செடி (lichens), பூச்சி வகைகள் ஆகியவை காணப்படுகின்றன.  மேலும் ஐரோப்பிய காட்டெருமை, காட்டுப்பன்றி, ஓநாய், லின்க்ஸ் எனும் பூனை ஆகிய உய

சூழல் பற்றிய முக்கியமான ஆங்கில வார்த்தைகள்!

படம்
  தெரியுமா? Net Zero கார்பன் உமிழ்வை முற்றிலும் ஜீரோவாக்கும் திட்டத்தைப் பற்றி கூறும் வார்த்தை. கார்பன் உமிழ்வைக் கட்டுப்படுத்த உலக நாடுகள் குறிப்பிட்ட ஆண்டை இலக்காக வைத்துள்ளன. நடைமுறையில், கார்பன் உமிழ்வைக் கட்டுப்படுத்த தொழில்நுட்பங்களை பயன்படுத்துகிறோம் என நிறுவனங்களும் அரசுகளும் கூறுகின்றன.  Sustainability எதிர்கால தலைமுறையினர் தங்களது தேவைகளை சமரசம் இல்லாமல் பெறுவது என ஐ.நா அமைப்பு, இந்த வார்த்தைக்கு விளக்கம் அளிக்கிறது. சூழலுக்கு இசைவான  முறையில் நாம் வாழும் வாழ்க்கை முறையை மாற்றிக்கொள்ளவேண்டியது அவசியம்.  Mitigation and adaptation பசுமை இல்ல வாயுக்களை குறைக்கும் செயல்கள் என்பது இதற்கான பொருள்.  நிலக்கரியிலிருந்து காற்று, சூரிய ஆற்றல் புதுப்பிக்கும் வழிக்கு மாறுவதை உதாரணமாகக் கூறலாம்.  அடாப்டேஷன் என்ற வார்த்தை, வெப்பமயமாதலால் ஏற்படும் விளைவுகளை எப்படி சமாளிக்கப்போகிறோம் என்பதைக் கூறுகிறது. சூழலுக்கு ஏற்ப சாலைகளை, வீடுகளை அமைப்பதை இதற்கு எடுத்துக்காட்டாக கொள்ளலாம்.   Nature based solutions மனிதர்களுக்கு ஏற்படும் பிரச்னைகளுக்கான தீர்வுகளை இயற்கையிலிருந்து பெறலாம்.  கார்பனை உறிஞ்சு

புலிகளைப் பாதுகாக்கும் லத்திகா நாத்!

படம்
  புலிகளின் பாதுகாப்பில் அணுகுமுறை மாறவேண்டும்! சூழலியலாளர் லத்திகா நாத், புது டில்லியில் உள்ள அனைந்திந்திய மருத்துவ அறிவியல் கழகத்தின் (AIIMS) முன்னாள் இயக்குநர். கடந்த 30 ஆண்டுகளாக புலிகளைப் பற்றி ஆய்வுகளைச் செய்து வருகிறார். 1970ஆம் ஆண்டு தொடங்கி ஊடகங்களில் வனப் பாதுகாப்பு பற்றி பேசியும், எழுதியும் பங்களித்து வருகிறார்.  சிறுவயதில், நாடு முழுவதும் உள்ள பல்வேறு காடுகளுக்கு பயணித்துள்ளார். தனது ஆறு வயதில் சூழலியலாளர் என்ற வார்த்தையைக் காதில் கேட்டார். அத்துறையில் வல்லுநராகவேண்டும் என்ற ஆசை அப்போதே மனதில் முளைவிட்டிருக்கிறது. இந்தியாவில் முனைவர் பட்டம் வென்ற முதல் பெண் உயிரியலாளர் லத்திகா நாத் தான்.ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் புலிகளின் பாதுகாப்பு தொடர்பாக படித்து பட்டம் பெற்றார்.  பெண் என்பதால் கல்வி கற்றும் கூட பல நிறுவனங்களில் புறக்கணிப்புகளை எதிர்கொள்ள நேரிட்டது. எனவே தனது ஆராய்ச்சிகளை சுயமாகவே முடிவு செய்து செய்யத் தொடங்கியிருக்கிறார்.  மத்தியப் பிரதேசத்தில் கன்ஹா காட்டுப்பகுதியில் புலிகள் பாதுகாப்புக்காக பணிகளை செய்தார். புலி, பனிச்சிறுத்தை, சிறுத்தை, ஜாகுவார், யானை, டால்பின்கள்

எஸ்ஓஎஸ் சிக்னல்- ஆபத்தில் உள்ளவர்களை காக்கும் அடையாளம்

படம்
  எஸ்ஓஎஸ் சிக்னல் (SOS Signal) கடலில் அல்லது மலைப்பகுதியில் அவசர நிலையின்போது, ஆபத்தில் உள்ளவர்கள் தீப்பந்தம் ஒன்றை எரிய விடுகிறார்கள். இதனை ஃபிளேர்ஸ் (flares) என்று அழைக்கின்றனர். இதிலுள்ள வேதிப்பொருட்கள் பல்வேறு நிறங்களில் எரியும் என்பதால், தொலைதூரத்தில் உள்ளவர்களும் இதனைப் பார்க்கலாம். ஆபத்து சமிக்ஞையைப் பார்க்கும் விமானப்படையினர், எளிதாக உதவி தேவைப்படுபவர்களுக்கு உதவுகிறார்கள்.  ஃப்ளேர்ஸ், பெரும்பாலும் அடர்த்தியான சிவப்பு நிறத்தில் தயாரிக்கப்படுகிறது. பகல் மற்றும் இரவிலும் இதனை எளிதாக காணலாம். இதில் சிலவகை ஃபிளேர்ஸ், எரியும்போது புகையை மட்டுமே வெளிவிடும். காடுகளில் இவ்வகையைப் பயன்படுத்துகிறார்கள். வானில் விமானத்திலிருந்து பார்க்கும்போது காடுகளின் பகுதிகளை  துல்லியமாக பார்க்க முடியாது. இச்சமயங்களில், நெருப்பை விட புகையை எளிதாக அடையாளம் காணலாம்.   ஒருவர் கையில் பிடித்து ஃப்ளேர்ஸை எரித்தால் அது 1 நிமிடம் முழுதாக எரியும். அதனை ஐந்து கி.மீ. தூரத்தில் இருப்பவர்கள் பார்க்கலாம்.  ஃப்ளேர்ஸில் உள்ள வேதிப்பொருட்கள் எரியும்போது, ஆக்சிஜனை வெளியேற்றுகிறது. இதன் காரணமாகவே அதில் பற்றிவைக்கப்படும்

பாத்திமா ராணியின் திகைப்பூட்டும் அஞ்சல் பயணம்!

படம்
  பாத்திமா ராணி, தினசரி தபால்களை கொண்டு சேர்க்க காட்டு வழியே சென்று கொண்டிருக்கிறார். இவர் கோதையூர் மேல்திங்கள் பகுதி போஸ்ட் மாஸ்டராக பணிபுரிகிறார். அங்குள்ள புனல் மின்சார நிலையத்திலுள்ளவர்களுக்கு வரும் தபால்களை காட்டைத் தாண்டி சென்று கொடுத்து வருகிறார். களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பகம் இவர் கடந்து செல்லும் காட்டில் உள்ளது.  இவர் தனது பணியை செய்யும்போது எதிரில் சிறுத்தை, காட்டெருமை, யானை, காட்டுப்பன்றி ஆகியவை எதிர்ப்படுவது சகஜமானது. மழைப்பொழிவு அதிகம் என்பதால், பனி சூழ்ந்த சூழலில் வழியே தெரியாதபோது அங்குள்ள விலங்குகளை எப்படி அடையாளம் காண்பது என பலருக்கும் திகைப்பாக இருக்கும். அதையும் புனல் நிலைய மக்களே உதவி செய்து வழிகாட்டி வருகின்றனர். அவர்களது அறிவுரை மூலம் யானை ஒரு இடத்தில் இருக்கிறதா என அடையாளம் கண்டு கொண்டுகொள்கிறார் ராணி.  ஒருசமயம் இப்படி செல்லும்போது, புலிக்குட்டி ஒன்று வழியில் விளையாடிக்கொண்டிருக்க, அருகில் தாய்ப்புலி இருப்பதை ராணி உணர்ந்தார். எனவே, மரத்தின் அருகில் சென்று அரைமணி நேரம் காத்திருந்துவிட்டு பிறகே தனது வேலையை தொடர்ந்திருக்கிறார். இல்லையெனில் தாய்ப்புலியின் தாக

புலிகளை செல்லப்பிராணிகளாக வளர்க்கலாமா? - பதில் சொல்லும் ஆவணப்படம்

படம்
  பொதுவாக வன விலங்குகளை யாரும் சங்கிலி போட்டு கட்டி செல்லப் பிராணிகளாக்க முடியாது. ஓநாய் குலச்சின்னம் நாவலில் ஒரு மாணவர் அப்படி செய்து இறுதியில் தோற்றுப்போவார்.  கீழேயுள்ள லிங்கை கிளிக் செய்தால் விரியும் படம் எட்டு நிமிடங்கள் ஓடும். அதன் மையக்கதையே, புலிகள் அழிவும். அதனை சிலர் குட்டியாக இருக்கும்போதே எடுத்து செல்லப்பிராணியாக வளர்ப்பதும் தவறு என்பதைப் பற்றியதுதான்.  அமெரிக்காவில் மட்டுமல்லாது  உலகம் முழுக்கவுமே புலிகளின் எண்ணிக்கை குறைந்து வருகிறது. தற்போது தோராயமாக 3900 புலிகள் மட்டுமே உயிருடன் உள்ளன. மீதியுள்ள புலிகள் எங்கே போயின என்பதை நாம் நமது மனத்திடம்தான் கேட்டுப்பார்க்க வேண்டும். பெரும்பாலான புலிகள் வீரிய மாத்திரைகள், சூப் ஆகியவற்றுக்காக பலியாகிவிட்டன.  மீதி நினைவில் மட்டுமே காடுள்ள மிருகமான புலிக்குட்டிகளும் பல பிரபலங்களின் வீட்டில் சங்கிலி போட்டு கட்டி வைக்கப்பட்டுள்ளன. ஆவணப்படத்தில் காட்டப்படும் செல்லபிராணி காட்சிகள் மனதை ரணப்படுத்தக்கூடியது.  ஆவணப்படத்தில் ஏராளமான இயற்கை அமைப்பு சார்ந்த நிபுணர்கள் புலிக்குட்டிகளை செல்லப்பிராணிகளாக வீட்டில் வளர்ப்பது ஏன் தவறு என்று பேசுகிறார்

உலகிலுள்ள வினோதமான காடுகள்- தெரிஞ்சுக்கலாம் வாங்க!

படம்
  ஆவோகிகாகரா, ஜப்பான் வினோதமான காடுகள் விஸ்ட்மேன்ஸ் வுட் இங்கிலாந்து டர்ட்மூர் தேசியப்பூங்காவின் ஒருபகுதியாக விஸ்ட்மேன்ஸ் வுட் காடு உள்ளது. தென்மேற்கு பகுதியில் இந்தக் காடு அமைந்துள்ளது. உயரமாக ஓக் மரங்களின் கிளைகள் படர்ந்து வளர்ந்துள்ளதால் காட்டுக்குள்ளிருந்து ஆகாயத்தைப் பார்ப்பதே கடினமாக இருக்கும். பேய், பூதம், பிசாசு இருக்கும் என்றாலும் நம்பியே ஆகவேண்டிய அனைத்து செட்டப்புகளும் இக்காட்டில் உண்டு.  தி ஸ்வார்ஸ்வால்ட் ஜெர்மனி இதனை கருப்புக்காடு என்று சொல்லுகிறார்கள். பிரதர்ஸ் கிரிம்ப் போன்றோர் இக்காடு பற்றி ஏராளமான கதைகளை எழுதியுள்ளனர். ஓநாய் இருக்குமாம், சூனியக்காரிகள் இருப்பார்களாம், தீய சக்திகள் குடியிருக்கும் காடாம் என அரண்மனை 4, 5 எடுக்கும் அளவுக்கு சமாச்சாரங்கள் உள்ளன. இக்காட்டிற்குள் நுழையும் சிறுவர்கள், அவர்களின் பாவக்கணக்கிற்கு ஏற்ப தண்டிக்கும் அரக்க மனிதனும் இருக்கிறான் என்று சொல்லுகிறார்கள். இக்காட்டிற்குள் உள்ளே போனவர்கள் திரும்ப வெளியே வரமுடியாது எனவும் கதை கட்டி வருகிறார்கள்.  தி ஹோயா பசியு காடு ரோமானியா வடமேற்கு ரோமானியாவில் அமைந்துள்ள காடு. இதனை ரோமானியாவின் பெர்முடா டிர

மியாவாகி காடுகளை நகரங்களை பசுமையாக்குமா?

படம்
  மியாவாகி காடுகளை பல்வேறு மாநிலங்களிலும் சோதனை செய்து பார்த்து வருகிறார்கள். சாதாரண மரங்களை விட 30 மடங்கு கார்பன்டை ஆக்சைடை உறிஞ்சுகிறது.  ஒரு ஹெக்டேருக்கு 20 முதல் 30 ஆயிரம் விதைகளை ஊன்றி மியாவாக முறையில் மரக்கன்றுகளை வளர்க்க முடியும்.  சிறிய நிலப்பரப்பில் அடுக்கடுக்காக நிலப்பரப்பு சார்ந்த தாவரங்களை வளர்ப்பதுதான் மியாவாகி காடுகள் வளர்ப்பு முறை.  இந்த முறையில் இந்தியாவில் 24.3 சதவீதமும், சீனாவில் 23.4 சதவீதமும் காடுகள் வளர்க்கப்பட்டுள்ளன. ஜப்பானைச் சேர்ந்த தாவரவியலாளர் அகிரா மியாவாகி என்பவர், இந்த காடு வளர்ப்பு முறையை உருவாக்கினார்.  குறிப்பிட்ட ஏரியாவை தேர்ந்தெடுக்க வேண்டும். எங்கு விதைகளை ஊன்ற வேண்டுமோ அந்த மண்ணின் தரம், கார்பன் அளவு, மண்ணிலுள்ள பிஹெச் அளவு ஆகியவற்றை கணக்கிடுகிறார்கள்.  மனிதர்களின் இடையூறின்றி தாவரங்கள் வளருமா என்று பார்த்துத்தான் மியாவாகி காடுகளை வளர்க்க முடியும்.  பாகிஸ்தான், சீனா, ஜப்பான் ஆகிய நாடுகளில் மியாவாகி காடு வளர்ப்பு முறையை உடனே எடுத்துக்கொண்டு செயல்படுத்தியுள்ளனர்.  சத்தீஸ்கர், குஜராத், கேரளா, தெலங்கானா ஆகிய இந்திய மாநிலங்களில் இந்த முறையை முயன்றுள்ளனர்

காடுகள் அழிவதை மக்களுக்கு சொல்லவே படம் எடுத்தேன்! - அமித் வி மஸ்துர்கார்

படம்
                        அமித் வி மஸ்துர்கார் இந்தி திரைப்பட இயக்குநர்     ஒரு இயக்குநராக உங்களை எப்படி வரையறுப்பீர்கள் ? நான் எண்ணிக்கை அடிப்படையில் பெரிய இயக்குநர் கிடையாது . நான் திரைப்படம் உருவாகும் முறையை ரசித்து செய்கிறேன் . அதில் அனைத்துமே எனக்கு முக்கியம்தான் . எனக்கு படத்தின் கதைக்கரு பற்றி ஆராய்ச்சி செய்வது பிடிக்கும் . நிறைய விஷயங்களை தெரிந்துகொள்வதில் எனக்கு ஆர்வம் அதிகம் . படத்தின் ஒளிப்பதிவு , இசை , படத்தொகுப்பு ஆகியவற்றை நான் விரும்பியே செய்கிறேன் . ஒரு படத்தை உருவாக்க தேவையான நேரத்தை எடுத்துக்கொண்டே உருவாக்க நினைக்கிறேன் . திரைப்படம் என்பது காதலுடன் செய்யப்பட வேண்டியது அவசியம் . நியூட்டன் படத்தை உருவாக்கியபிறகு அடுத்து உடனே படம் செய்ய அழுத்தம் இருந்ததா ? ஆமாம் . நியூட்டன் படம் உருவாக்கி வெளியிட்டபிறகு ஓராண்டுக்குப் பிறகு அந்த அழுத்தத்தை எடுத்துக்கொண்டேன் . நிறைய பெரிய நடிகர்களின் படங்களை இயக்கும் வா்ய்ப்பு கிடைத்தது . ஆனால் நான் அவற்றைத் தேர்ந்தெடுக்கவில்லை . நா்ன் அடுத்து எடுக்கப்போகும் படம் ஆழமாக இருக்கவேண்டும் என நினைத்தேன் . எனவே , வ

விலங்குகளும் அதன் கணக்கிடும் திறன்களும்!

படம்
            விலங்குகளும் அவற்றின் திறன்களும் சிங்கம் தனக்கென கூட்டத்தை உருவாக்கி வைத்திருப்பதில் சிறப்பு பெற்றவை . ஆனால் அதன் எண்ணிக்கை கூடாமல் இருப்பது அதன் பலம் . ஒற்றுமையாக இருப்பதால் , எளிதாக இரையை வேட்டையாட முடியும் . கூடவே தனது எல்லையை எளிதாக பாதுகாக்க முடியும் . ஒரு தனி சிங்கம் 259 சதுர கிலோமீட்டர் தூரத்தை தனது கோட்டையாக பாவித்து காப்பாற்றி வாழும் . இதன் எல்லை மாறிக்கொண்டே இருக்கும் . கூட்டமாக இருப்பதால் பிற சிங்க கூட்டத்தின் தாக்குதலை எளிதாக சமாளிக்க முடியும் . மேலும் சண்டையில் பிற எதிரி கூட்டங்களிலுள்ள உறுப்பினர்களின் எண்ணிக்கையையும் மனதில் கொண்டு தாக்குதலை நடத்துகிறது . ராணித்தேனீயை மையமாக கொண்ட தேனீக்களின் காலனி எப்போதும் ஆச்சரியப்படுத்துகிற செய்திதான் . நூற்றுக்கணக்கான ஆண் தேனீக்களும் , ஆயிரக்கணக்கான பெண் தேனீக்களும் வாழ்வதற்காக கடுமையாக உழைக்கின்றன . இவை பிற தேனீக்களுடன் தொடர்புகொள்ள குறிப்பிட்ட திசை நோக்கி நடனம் ஆடுகின்றன . குறிப்பிட்ட திசை நோக்கி பறக்கின்றன . இப்படி பறக்கும் விதத்தில் பூக்கள் எவ்வளவு தொலைவில் உள்ளன என்ற தகவலையும் வெளிப்படுத்துகின்

காட்டிற்குள் சென்று தான் யார் என்பதை நிரூபித்துக்காட்டும் சிங்கம்! - வைல்ட் - டிஸ்னி

படம்
                  வைல்ட் Directed by Steve "Spaz" Williams Produced by Clint Goldman Beau Flynn Screenplay by Ed Decter John J. Strauss Mark Gibson Philip Halprin Story by Mark Gibson Philip Halprin சாம்சன் என்ற சிங்கம் , ரையான் என்ற மகனுடன் வனவிலங்கு காட்சியகத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளை நடத்தி புகழ்பெற்றிருக்கிறது . ரையோன் குட்டி சிங்கமாக இருந்தாலும் அதற்கு கர்ஜனை செய்யவருவதில்லை . பூனை போல மியாவ் என்றுதான் குரல் வருகிறது . இதனால் ரையோன் மனம் தளர்ந்து போகிறது . கூடவே இருக்கும் பாம்பு , ஒட்டகச்சிவிங்கி , கரடிகளின் கிண்டல் வேறு மனதைக் காயப்படுத்துகிறது . இதனால் வைல்ட் எனும் காட்டிற்கு சென்று வாழ்ந்தால்தான் தன் இயல்பைப் பெறமுடியும் என நம்புகிறது ரையான் இதற்கான முயற்சியில் தவறுதலாக வண்டி ஒன்றில் ஏற , அந்த வண்டி நகருக்கு செல்கிறது . தன் மகனை தேட சாம்சன் தனியாகத்தான் புறப்படுகிறார் . ஆனால் அவரது இம்சை நண்பர்களும் உடன் வர அவர்களின் கோளாறான கோக்குமாக்கு வேலைகளை சமாளித்து எப்படி சாம்சன் தனது மகனைக் கண்டுபிடித்தது என்பதுதான் கதை .    படத்தைப் பார்த்து

காட்டு விலங்குகளை பாதுகாக்க முயலும் கரடியும் மானும்! - ஓபன் சீசன் -1

படம்
                ஓபன் சீசன்2006 முதல் பாகம் Directed by Roger Allers Jill Culton Produced by Michelle Murdocca Screenplay by Steve Bencich Ron J. Friedman Nat Mauldin Story by Jill Culton Anthony Stacchi Based on An original story by Steve Moore John B. Carls பூக் என்ற கரடிதான் படத்தின் ஹீரோ . வேட்டைக்காரன் ஒருவன் மானை வண்டியை விட்டு ஏற்றி கொலை செய்ய முயல , அதில் மயக்கமுற்று கரடியால் உயிர்பிழைக்கும் மான் , கரடியின் ஒரே ஆத்ம நண்பனாகிறது . கரடிதான் தன் ஒட்டுமொத்த வாழ்க்கைக்கும் இன்சார்ஜ் என்கிறது . மான் அத்தியாயம் பின்னால்தான் வருகிறது . அதற்கு முன்னால் கரடியை ரேஞ்சர் பெண்மணி பராமரித்து வருகிறார் . அவரைப் பொறுத்தவரை அதன் வளர்ப்பு பிராணி போல நடத்துகிறார் . அதை வைத்து வித்தைகாட்டி அவர் சம்பாதிக்கிறார் . ஆனால் கரடிக்கு காட்டில் எப்படி உணவு பெறுவது என்பதைப் பற்றியெல்லாம் தெரியாது . அப்போது கொம்பு உடைந்த மானின் நட்பு கிடைக்க , காட்டுக்குள் கிடைக்கும் சுதந்திரம் கரடிக்கு தேவைப்படுகிறது . மேலும் சாப்பிட நிறைய தீனியை மானும் கரடியும் சென்று வேட்டையாட சூப்பர் மார்க்கெட் சுமார் மார்க்கெ

காட்டு விலங்குகளை வேட்டையாடி வரும் செல்லப்பிராணிகள்! - காட்டுயிர் காணாமல் போகும் அவலம்

படம்
                    காட்டு விலங்குகளை அழிக்கும் வீட்டுப்பூனைகள் ! நெதர்லாந்து நாட்டைச் சேர்ந்த தில் பர்க் பல்கலைக்கழக பேராசிரியர் ஆரி ட்ரோபோர்ஸ்ட் . இவர் , அண்மையில் செல்லப்பிராணிகளாக வளர்க்கப்படும் பூனைகள் காட்டில் உள்ள சிறுவிலங்குகளை வேட்டையாடுவதால் ஏற்படும் விளைவுகளைப் பற்றி அறிக்கை ஒன்றை வெளியிட்டார் . இதுவரை ஓநாய்களின் அழிவு , விலங்குகளை வேட்டையாடுவதற்கு அரசு அனுமதி உள்ளிட்ட பல்வேறு விவகாரங்களை கையாண்டவர் ட்ரோபோர்ஸ்ட் . ஆனால் அதைவிட பூனைகளைப் பற்றி இவர் எழுதிய ஆய்வறிக்கைக்கு கொலைமிரட்டல்களை சந்தித்து வருகிறார் . ஆஸ்திரேலியா , இங்கிலாந்து , அமெரிக்கா , நியூசிலாந்து ஆகிய நாடுகளில் பூனைகளை வளர்ப்பவர்களும் , சூழலியலாளர்களு்ம இதுதொடர்பாக தீவிரமாக மோதி வருகின்றனர் . ஐரோப்பிய நாடுகளில் பூனைகள் வேட்டையாடுவதை அனுமதிக்கும் சட்டத்தை மாற்றவேண்டி சூழலியாளர்கள் குரல் கொடுத்து வருகிறார்கள் . அமெரிக்காவில் மட்டும் வீட்டுப்பூனைகளால் 630 கோடி சிறு காட்டு விலங்குகளும் , 130 கோடி பறவைகள் பலியாகியுள்ளன என்பதை ஆய்வறிக்கை வெளிப்படுத்தியுள்ளது . நெதர்லாந்தில் செய்த ஆய்வில் இதைப்ப