இடுகைகள்

தாக்குதல் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

மரபணு மாற்றப்பட்ட பொருட்கள் உடலுக்கு ஆபத்தானவையா? உண்மையும் உடான்ஸூம்

படம்
            உண்மையும் உடான்சும்! பசு , தன்னுடைய குரல் மூலம் கன்றுகளை தொடர்புகொள்கிறது ரியல் : உண்மைதான் . எப்படி விலங்குகளின் வால் அசைவுகளுக்கு பொருள் உள்ளதோ , அதேபோல பசுவின் குரலுக்கும் பொருள் உண்டு . பசுக்களை பராமரிப்பவர்கள் பசு எழுப்பும் ஒலியை வைத்தே அதன் தேவை என்னவென்று உணர்வார்கள் . இது அனுபவத்தால் ஏற்படுவது . 2014 ஆம் ஆண்டு லண்டனைச்சேர்ந்த ராணிமேரி பல்கலைக்கழகம் , நார்த்திங்டன் பல்கலைக்கழகம் செய்த பத்து மாத ஆய்வில் பசுவின் குரலுக்கு பல்வேறு அர்த்தம் உண்டு என கண்டறிந்தனர் . மாலைவேளையில் உடலின் ஆற்றல் குறையும் ரியல் : உடலிலுள்ள உயிரியல் கடிகாரத்தின் (Circadian Rhythm) இயக்கத்தைப் பொறுத்தே இந்நிலை அமையும் . இதனை மூளையிலுள்ள சுப்ராஸ்மேடிக் நியூக்ளியஸ் (SCN) எனும் பகுதி கட்டுப்படுத்துகிறது . இதன் காரணமாக மதிய உணவை நீங்கள் சாப்பிட்ட பிறகு 2-4 மணிக்குள் தூக்கம் உங்களை சொக்க வைக்கிறது . தூக்கத்திற்கு மூலமான மெலடோனின் சுரப்பு உடலில் சுரப்பதே இதற்கு காரணம் . உயிரியல் கடிகாரத்தின் இயல்போடு , அதிக மாவுச்சத்து சேர்ந்த உணவுகள் , இரவில் போதிய தூக்கமின்மை ஆகியவையும் மாலையில் உடல

வேற்றுகிரகவாசிகளைக் கண்டுபிடிக்க முயலும் புதிய ஆராய்ச்சி!

படம்
                வேற்றுகிரகவாசிகளைக் கண்டறியும் ஆராய்ச்சி ! விண்வெளியிலுள்ள வேற்றுகிரகவாசிகளைக் கண்டறியும் ஆராய்ச்சி நவீனமடைந்து வருகிறது . 1960 ஆம் ஆண்டு ரேடியோ வானியலாளர் ஃபிராங்க் டிரேக் , விண்வெளியிலிருந்து வரும் சிக்னல்களில் மாறுதல்களை கண்டார் . அவர் பணியாற்றும் அமெரிக்காவின் மேற்கு வர்ஜீனியாவில் உள்ள தொலைநோக்கி ஆய்வகத்தில் , 26 மீட்டர் அளவிலான தொலைநோக்கி பொருத்தப்பட்டுள்ளது . இது , எபிசிலான் எரிசிலானி என்ற விண்மீனை கண்காணித்து வந்தது . அப்போது திடீரென அதன் கருவிகளில் சிக்னல்களை பெறும் வேகம் அதிகரித்தது . வேற்றுகிரகத்திலிருந்து உயிரினங்கள் பூமியைத் தொடர்புகொள்கின்றன என டிரேக் நினைத்தார் . சில நாட்கள் கழித்து தொலைநோக்கியில் முன்னர் கிடைத்தது போன்ற சிக்னல்கள் கிடைத்தன . பிறகுதான் அது ஆகாய விமானம் ஒன்றிலிருந்து பெறப்பட்டவை என தெரிய வந்தது . வானியலாளர் டிரேக் எபிசிலான் எரிசிலானி மற்றும் தாவ் செடி என்ற இரு விண்மீன்களை கண்காணிப்பதில் சுணங்கவேயில்லை . செவ்வாய் கோளை ஆராய்தற்கு பயன்படுத்தும் தொழில்நுட்பங்கள் போலவே , வேற்றுகிரகவாசிகளின் புத்திசாலித்தனத்தை அறியும்

வெறுப்பு பேச்சுகளை ஊக்கப்படுத்தும் சமூக வலைத்தளங்கள்! - வணிகத்திற்காக எல்லைமீறும் கார்ப்பரேட் நிறுவனங்கள் சந்திக்கும் வழக்குகள்!

படம்
            சமூக வலைத்தளங்களில் அதிகரிக்கும் வெறுப்புவாதம் ! வெறுப்பு பேச்சுகளை ஊக்குவிப்பதாக எழுந்த புகார்களின் பேரில் ஃபேஸ்புக் , ட்விட்டர் ஆகிய சமூகவலைத்தள நிறுவனங்கள் பல்வேறு வழக்குகளை சந்தித்து வருகின்றன . கடந்த ஆண்டு நவம்பர் 17 அன்று அமெரிக்க செனட் கமிட்டி முன் ஃபேஸ்புக் நிறுவனர் மா்ர்க் , டிவிட்டர் இயக்குநர் ஜேக் டோர்ஸி ஆகியோர் ஆஜராயினர் . அவர்களது நிறுவனத்தில் பகிரப்படும் வெறுப்புவாத செய்திகள் பற்றிய விசாரணையை நாடாளுமன்ற உறுப்பினர்கள் நடத்தினர் . பேச்சு சுதந்திரம் அல்லது வெறுப்பு வாதங்கள் என்று பகிரப்படும் செய்திகளால் நாட்டில் நடைபெறும் பதற்றமான நிகழ்ச்சிகள் காரணமாகவே மேற்கண்ட நிறுவனங்கள் மீது விசாரணை நடைபெற்றது . அமெரிக்காவில் மட்டுமல்ல உலக நாடுகளிலும் சமூக வலைத்தளங்களின் பயன்பாட்டால் அரசியல் நிலை சீரற்றதாகி வருகின்றன . இந்தியாவில் நவம்பர் 21 அன்று கேரள அரசு , 118 ஏ என்ற சமூகவலைத்தள பதிவுகளுக்கா ன தடுப்புச்சட்டத்தை அமல்படுத்தியது . பெண்கள் , குழந்தைகள் இணையத்தில் கேலி , கிண்டல் செய்யப்படுவதைத் தடுக்கும் சட்டம் என மாநில அரசு கூறியது . ஆனால்

மதச்சார்பற்ற தன்மையை மூலம் ஜனநாயகத்தை உருவாக்கிய நேரு, காந்தி மீது எனக்கு மரியாதை உண்டு! எழுத்தாளர் ஃபரீத் ஜக்காரியா

படம்
            எழுத்தாளர் ஃ பரீத் ஜக்காரியா மேற்குலக நாடுகள் இனி ஆதிக்கம் செலுத்த முடியாதா ? பிற நாடுகள் அந்த இடத்திற்கு நகருமா ? 35 ஆண்டுகளுக்கு முன்னர் துருக்கிக்கு அமெரிக்கா பல்வேறு உதவிகளை செய்துவந்தது . அவர்களுக்கு அமெரிக்காவின் பல்வேறு உதவிகள் உயரத்திற்கு வருவதற்கு தேவைப்பட்டது . முப்பது ஆண்டுகளுக்குப் பிறகு துருக்கி அமெரிக்கா சொல்லுவதை கேட்பதில்லை . அங்கு ஏற்பட்ட பொருளாதார வளர்ச்சி பிற அரசியல் கலாசார அமைப்புகளின் தாக்கம் அப்படியுள்ளது . இப்படித்தான் உலகம் மெல்ல மாறி வருகிறது . அமெரிக்காவின் வெள்ளை மாளிகை தாக்குதலுக்கு ஆட்பட்டது . இந்த நிலையில் அமெரிக்க அரசு பிற நாடுகளின் ஜனநாயகத்தி்ற்காக பேசும் அதிகாரம் கொண்டிருக்கிறதா ? நான் இதற்கு கூறும் ஆலோசனை ஒன்றுதான் . ஒவ்வொரு நாடுகளுக்கும் அவற்றுக்கு உரித்தான பல்வேறு எதிரிகளை சமாளிக்க வேண்டியுள்ளது . பிற நாடுகள் தவறுகள் , வெற்றிகளை கவனமாக பார்த்து தங்களை திருத்திக்கொள்ளலாம் . இதுதான் இங்கு நான் நேர்மையான முறையில் கூற விரும்புவது . சுதந்திரம் என்பதிலுள்ள பல்வேறு முரண்பாடுகளைக் கொண்ட நாடு அமெரிக்கா என்று இ

வெள்ளை மாளிகை தாக்குதலுக்கு வழிவகுத்த பார்லர் சமூகவலைத்தள சேவை! - பின்னணியில் வலதுசாரி முதலீட்டாளர்

படம்
                அமெரிக்காவில் உள்ள வெள்ளை மாளிகையை வலதுசாரி டிரம்ப் ஆதரவாளர்கள் முற்றுகையிட்டனர் . இதன் காரணமாக உலக நாடுகளில் அமெரிக்கா இனி என்னவாகும் என்ற கேள்வி எழுந்தது . இத்தனைக்கும் அங்கு பாதுகாப்பு இருந்ததா என்று கேட்குமளவுக்கு போராட்டக்கார ர்களை காவல்துறை எதுவுமே செய்யாமல் வேடிக்கை பார்த்தது . இதையொட்டி நடந்த வன்முறை சம்பவங்களுக்கு டிரம்ப் பேசிய பேச்சுகள் முக்கிய காரணம் . அதேபோல வலதுசாரி , கலக , துவேஷ கருத்துகளை பரப்பும் பார்லர் எனும் சமூக வலைத்தளம் தற்போ ஆப்பிள் , கூகுள் , அமேசான் சேவையிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளது . பார்லர் எனும் சேவை டிவிட்டர் போன்ற மைக்ரோபிளாக்கிங் போன்றதுதான் . இதிலும் உங்களுக்கு பிடித்தவரைப் பின்தொடரலாம் . கருத்துகளை பகிரலாம் . ஆனால் எந்த கருத்துகளையும் பார்லர் பயனருக்கு பரிந்துரைக்காது . எந்த பயனர் தொடர்பான தகவல்களையும் பகிரமாட்டோம் என்று பார்லர் கூறியுள்ளதால் , இதன் பதிவுகளை வேறு எந்த சமூகவலைத்தளத்திலும் பகிர முடியாது . ஆனால் பிற சமூக வலைத்தள பதிவுகளை ஸ்க்ரீன்ஷாட்டாக எடுத்து பயனர்கள் பகிர்ந்துகொள்கிறார்கள் . அமெரிக்காவில் 8 மில்ல

மக்களுக்காக உருவான சட்டத்தை மக்கள் தங்களை உயிரைக்கொடுத்து காப்பாற்றிக்கொண்டு வருகிறார்கள்! - நிகில் தே, ஆர்டிஐ செயற்பாட்டாளர்

படம்
                  தகவல் அறியும் உரிமைச்சட்டம் அரசின் செயல்பாட்டையே மாற்றியது நிகில் தே அனுபமா கடகம் பிரன்ட்லைன்    15 ஆண்டுகளுக்கு முன்னர் ஆர்டிஐ சட்டம் நிறைவேற்றப்பட்டது உண்மையிலேயே முக்கியமானது . ஆனால் அண்மைய காலங்களில் மெல்ல அச்சட்டம் முடக்கப்பட்டு வருவதைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள் ? இதற்கான முயற்சிகள் 30 ஆண்டுகளாக இருந்ததால் ஆர்டிஐ சட்டம் அமலுக்கு வந்தது . ஏராளமான போராட்டங்கள் , பேரணிகள் என மக்கள் போராடியதால்தான் இச்சட்டம் நாடு முழுக்க நடைமுறைக்கு வந்தது . இதனை மக்களுக்கான சட்டம் என்று கூட சொல்லலாம் . எனவேதான் நாடு முழுக்க பரவலாக பயன்பட்டு வருகிறது . இந்த சட்டத்தின் வெளிப்படைத்தன்மை தற்போது கேள்விக்குறியாகி வருகிறது . ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சிக்காலத்தில் தகவல் அறியும் உரிமைச்சட்டத்தின் வலிமையைக் குறைப்பதற்கான செயல்பாடுகள் தொடங்கிவிட்டன . முதலில் சட்டத்தை அமலாக்க போராடிய செயல்பாட்டாளர்கள் இப்போது அதனை நீர்த்துப்போகாமல் பாதுகாக்க போராடவேண்டியுள்ளது . இந்தியாவில் தகவல் அறியும் உரிமைச்சட்டத்தை தினசரி எட்டு லட்சத்திற்கும் அதிகமான மக

தொழில் மாநாடு மேற்கு வங்கத்தில் கூட்டப்பட்டது மோசடியானது! ஜக்தீப் தன்கர், மேற்கு வங்க ஆளுநர்

படம்
                  ஜக்தீப் தன்கர் மேற்குவங்க ஆளுநர் மாநில அரசு உங்களை நிறைய விஷயங்களில் தலையிடுவதாக குற்றம் சாட்டுகிறதே ? மேற்கு வங்க மாநிலம் முழுக்க காவல்துறையின் கட்டுப்பாட்டில் இயங்குகிறது . இங்கு மனித உரிமைகளுக்கு எந்த மதிப்பும் இல்லை . மனித உரிமைகள் அமைப்பின் தலைவர் , உயர்நீதிமன்ற நீதிபதி . அவர் இப்போது வெண்டிலேட்டர் வசதியுடன்தான் உயிர்வாழ்ந்துகொண்டிருக்கிறார் . அரசியலமைப்புச் சட்டப்படி மாநில அரசின் ஆட்சி கலைக்கப்பட்டு குடியரசுத்தலைவர் ஆட்சி அமல்படுத்தலாமே ? நீங்கள் கொடுக்கும் அறிக்கைப்படி செயல்படுவதாக உள்துறை அமைச்சர் கூட கூறியிருக்கிறாரே ? நான் மத்திய அரசுக்கு அளித்த அறிக்கையை வெளிப்படையாக கூறமுடியாத நிலையில் உள்ளேன் . ஆளும்கட்சி தலைவர் உங்கள் மீது வழக்குப்பதிவதாக கூறுகிறார் . அக்கட்சியைச் சேர்ந்தவர் உங்கள் மாமா என்று வேறு அழைக்கிறார் . இதற்கு உங்கள் பதில் என்ன ? ஆதாரமில்லாத குற்றச்சாட்டுகளுக்கு நான் எந்த பதிலும் கூறவிரும்பவில்லை . நிதிஅமைச்சர் அமித் மித்ரா நீங்கள் மத்திய அரசிடமிருந்து எந்த நிதி உதவிகளையும் பெற்றுதரவில்லை என்ற