இடுகைகள்

நிதி லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

தீவிரவாத இயக்கத்தின் நிதியாதாரத்தை முடக்கும் உலக அமைப்பு!

படம்
பினான்சியல் ஆக்சன் டாஸ்க் ஃபோர்ஸ் அமைதியையும் பாதுகாப்பையும் உறுதி செய்வது சாதாரண காரியமல்ல. இதற்கு உலக நாடுகள் துணிச்சலான பல்வேறு நடவடிக்கைகளை எடுக்கவேண்டும். இதில் முக்கியமானது, தீவிரவாத காரியங்களுக்கு உதவும் பணப்புழக்கத்தைக் கட்டுப்படுத்துவது. அமெரிக்கா, தனது வர்த்தக மைய தாக்குதலுக்குப் பிறகு தீவிரவாதம் வளர்க்கும் பல்வேறு செயல்பாடுகளை கண்காணிக்க ஆரம்பித்து தடுத்தது.  இதில் முழுமையான வெற்றி கிடைத்ததா, இல்லையா என்பதல்ல விஷயம். இந்த முயற்சியில் அமெரிக்கா தெரிந்துகொண்ட விஷயங்கள் அதிர்ச்சி ஏற்படுத்துபவை.  இருபதாண்டுகளாக அமெரிக்க தீவிரவாதத்தை தடுப்பது என்ற பெயரில் பாகிஸ்தானுக்கு நிதியளித்து வருகிறது. அதை வைத்து அவர்கள் என்ன செய்கிறார்கள் என்பது யாருக்கும் தெரியாது. தீவிரவாத அச்சுறுத்தல்களை தடுத்து நிறுத்த அதற்கு கிடைக்கும் நிதியுதவி ஆதாரங்களைக் கண்டுபிடித்து தடுக்கவேண்டும். அப்போதுதான் நாடுகளில் நடைபெறும் பல்வேறு தீவிரவாத செயல்களை தடுக்கமுடியும். ஃபினான்சியல் ஆக்சன் டாஸ்க் ஃபோர்ஸ் என்ற அமைப்புதான் மேலே சொன்ன விஷயங்களை கூறியது. உலகம் முழுக்க தீவிரவாதத்தைத் தடுப்பதற்கான முயற்சிகளில் இந்த அம

தாலிபன்கள் பற்றிய சிறு குறிப்பு!

படம்
  தாலிபன்கள் சிறு குறிப்பு 1866 பிரிட்டிஷ் காலனி ஆட்சி நடந்துகொண்டிருந்தது. அப்போது, பல்வேறு மத, இன குழு மக்கள் கசக்கி பிழியப்பட்டு வந்தனர். முஸ்லீம் மக்களை இதிலிருந்து காப்பாற்றவென தனி அமைப்பு ஒன்று உருவாக்கப்பட்டது. பழமைவாத கொள்கைகளை தனது பின்னணியில் கொண்டு பிற இந்து, கிறிஸ்தவ அமைப்புகளை போல இயங்கியது. உத்தரப்பிரதேசத்தில் டியோபேண்ட் என்ற இடத்தில் அடிப்படைவாத முஸ்லீம் அமைப்பு தொடங்கப்பட்டது.  1919 தியோபேண்ட் முறையில் பல்வேறு மத நம்பிக்கையாளர்களும் பயிற்சி பெறத் தொடங்கினர். இவர், இந்திய சுதந்திரத்திற்காக போராடினர். பாகிஸ்தான் என்ற நாடு உருவாவதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.  1977 பாகிஸ்தானில் தியோபேண்ட் முறையில் பயிற்சி செய்தவர்கள் இருக்கிறார்கள் என தகவல் அறியப்பட்டது. அதிபர் முகமது ஜியா உல் ஹக் காலத்தில் அவர்களுக்கு முழு சுதந்திரம் வழங்கப்பட்டது.  1980 பாகிஸ்தானிய தியோபண்டி ஆட்கள், இஸ்லாமிய சட்டங்களை அதி தீவிரமாக கடைபிடிப்பவர்கள். இவர்கள்தான் ஆப்கானிய ராணுவம, காஷ்மீரில் தாக்குதல் நடத்துபவர்களாக மாறினர்.  சவுதி அரேபியா, ஷியா மக்கள் அதிகம் உள்ள இரான் நாட்டில் சன்னி மக்களைக் கொண்டு சுவர் ஒன

ஒன்றிய அரசுக்கும் மாநிலத்திற்குமான உறவு உடைந்துபோய்விட்டது! - பிடிஆர் பழனிவேல் தியாகராஜன்

படம்
  நேர்காணல் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் ஜிஎஸ்டி கௌன்சில் கூட்டத்தில் அதனை ரப்பர் ஸ்டாம்ப் கௌன்சில் என்று பேசியிருக்கிறீர்கள். மேலும் மத்திய அரசின் அளவுகடந்த அதிகாரம் பற்றியும் குறிப்பிட்டுள்ளீர்கள். மாநில அரசின்  நிதிநிலை மோசமாவதற்கு என்ன காரணம் என்று நினைக்கிறீர்கள்? இதற்கு நிறைய காரணங்கள் உள்ளன. ஒன்றிய அரசு மற்றும் மாநில அரசு இரண்டுக்கும் இடையிலான உறவு முக்கியமானது. ஆனால் இந்த உறவு சுமூகமாக இல்லை. காலப்போக்கில் இந்த உறவு  தேய்ந்துபோய், பல்வேறு விரிசல்களால் நிறைந்துவிட்டது. இந்த நிலையில் கொரோனா பாதிப்பு மாநிலத்தின் பொருளாதாரத்தை கடுமையாக பாதித்துவிட்டது. நான் கடுமையாக பேசியிருக்கிறேன் என்று நினைத்தால், நீங்கள் இப்போது பிரதமராக இருக்கும் மோடி குஜராத் முதல்வராக இருந்தபோது என்ன பேசினார் என்பதை எடுத்து பாருங்கள்.  ஜிஎஸ்டி வரியை அவசரமாக அமல் செய்தனர். இதனால் ஏற்பட்ட பாதிப்பிலிருந்து கூட இன்னும் நாம் மீளவில்லை. ஜிஎஸ்டி கௌன்சில் முறையான படி அமைக்கப்படவில்லை.  திடீரென அதனை அமைத்து விளம்பரம் செய்து வரி சதவீதங்களை அமல் செய்து குழப்பம் ஏற்படுத்தினர். பணமதிப்பு நீக்கத்தை திடீரென அறிவிப்பு செய்தது

திமுக மூன்று மாதங்களில் சாதித்த வாக்குறுதிகள், சரிந்துபோன செயல்பாடுகள்!

படம்
  திமுக ஆட்சிக்கு வருவது உறுதியானவுடன் முதல்வரான ஸ்டாலின் கோவிட் பணிகளை மேம்படுத்தும் வேலைகளை தொடங்கிவிட்டார். ஆக்கப்பூர்வமான பணிகளை செய்து வந்த ஒதுக்கி வைக்கப்பட்ட ஐ.ஏ.எஸ் அதிகாரிகளை புதிய பொறுப்புகளுக்கு நியமிப்பது தொடங்கி பொருளாதார கௌன்சில் வரையில் நிறைய பணிகளை திமுக அரசு செய்துள்ளது.  சாதித்தது எதில், சரிந்தது எதில் என்று பார்ப்போம்.  நீட் தேர்வுக்கு எதிரான  போராட்டத்தில் பெரிய முன்னேற்றமில்லை. குடியரசுத்தலைவருக்கு இதுபற்றி கவனத்திற்கு கொண்டுசெல்லும் முயற்சிகள் பலிக்கவில்லை.  குடும்பத்தைக் காப்பாற்றும் பெண்களுக்கு மாதம்தோறும் ஆயிரம் ரூபாய் வழங்கும் திட்டம் நிறைவேறவில்லை.  அரசின் உதவி பெறும் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு மருத்துவப்படிப்பில் 2.5 சதவீத இட ஒதுக்கீடு வழங்கப்படும் என்று கூறினார்கள். இன்றுவரை நிறைவேற்றவில்லை.  சிறு, நடுத்தர விவசாயிகளின் விவசாயக்கடன், நகைக்கடன் தள்ளுபடி செய்யப்படவிலை.  உயர்கல்வி பயில மாணவர்கள் வாங்கிய கடனும் தள்ளுபடி ஆகவில்லை.  மாதம்தோறும் மின்சாரத்தை அளவிடும் பணி தொடங்கப்படவில்லை.  சமூக பாதுகாப்பு நிதியாக முதியோர், விதவைகள், மாற்றுத்திறனாளிகள், ஆதரவற

குடும்பத்தை, காதலை காப்பாற்றுவதை விட நாடே முக்கியம்! ஸ்டோர்ம் ஐ - சீன தொடர்

படம்
              ஸ்ட்ரோம் ஐ சீன தொடர் Director: Yu Bo (于波) Screenwriter: Liang Zhen Hua , Jia Chang An , Jiang Da Qiao யூட்யூப் தீவிரவாத அமைப்புகளுக்கு விற்கப்படும் கனிம விற்பனையை உளவு அமைப்புகளை எப்படி கண்டுபிடித்து தடுக்கின்றன என்பதுதான் மையக்கதை . தேசிய பாதுகாப்பு , நாடு என்று வந்துவிட்டால் தனிப்பட்ட நபர்களுக்குள் காதலோ , நட்போ இருக்கக்கூடாது என உறுதியாக வலியுறுத்தும் தொடர் . சீனாக்காரர்கள் என்பதால் இப்படி கூறப்பட்டிருக்கலாம் . தேசிய உளவு அமைப்பின் தலைமையகம் ( பெய்ஜிங் ), ஜின்குவா என்ற மருத்துவ உபகரணங்களை தயாரிக்கும் நிறுவனத்தை கண்காணிக்கிறது . இதன் வணிகம் சார்ந்த நடவடிக்கைகள் சந்தேகமாக இருப்பதால் , தனது இரண்டு திறமையான அலுவலர்களை சாங்குவான் நகருக்கு அனுப்புகிறது . சாங்குவான் நகரில் உள்ள உளவு அமைப்பின் கிளைப்பிரிவு உளவாளி ஒருவரை பின்தொடர்கிறது . ஆனால் அந்த முயற்சி தோல்வியில் முடிகிறது . ஆனால் அந்த உளவாளியை பின்தொடர்ந்து எங்கே இருக்கிறது என கண்டுபிடிப்பதில் மேற்சொன்ன இரண்டு திறமைசாலிகள் உதவுகின்றனர் . கிளை அமைப்புடன் தலைமையக ஆட்கள் இருவரும்

வங்கியல்லாத நிதி நிறுவனங்களை ஆதரிக்கும் ஆர்பிஐ! - மெல்ல தேயுமா வங்கிகள்?

படம்
              இனி வரும் காலத்தில் வங்கிகளை நம்பி நாம் இருக்கவேண்டியதில்லை . வங்கியல்லாத நிதி நிறுவனங்கள் மெல்ல காலடி எடுத்து வைக்கத் தொடங்கியுள்ளன . இதில கணக்கு தொடங்கி பணத்தை பிறருக்கு அனுப்புவது பெறுவது , வணிகத்திற்கு பயன்படுத்துவது ஆகியவை இனி மெல்ல அதிகரிக்கும் . சாதாரணமாகவே யூனியன்பேங்க் வகை செயலியை விட கூகுள் பே போன்ற வங்கியல்லாத நிறுவனங்களின் செயலிகளை எளிதாக பயன்படுத்த முடிகிறது . இதற்கு காரணம் , அவர்கள் பயனர்களை வங்கிகளை விட எளிதாக புரிந்துகொள்வதுதான் . யூனியன்பேங்க் ஆப் இந்தியா , சிட்டியூனியன் பேங்க் போன்ற நிறுவனங்கள் செயலிகளின் வசதியில் காட்டும் அக்கறையின்மை கூகுள் பே , பேடிஎம் , போன் பே போன்ற நிறுவனங்களின் செயலிகளுக்கு ஆதரவாக அமைகிறது . தற்போது ஆர்பிஐ வங்கியல்லாத நிதிநிறுவனங்கள் பயனருக்கு வழங்கும் நிதியின் அளவை ஒரு லட்சத்திலிருந்து இரண்டு லட்சமாக உயர்த்தியுள்ளது . மேலும் ஆன்லைனில் பணத்தை பரிமாற்றம் செய்வதற்கும் பல்வேறு சலுகைகளை வழங்குவதாக அறிவித்துள்ளது . மத்திய நிதி திட்ட அமைப்பில் தற்போது பொதுத்துறை வங்கிகளும் , தனியார் வங்கிகளும் குறிப்பிட்ட வங்கியல்லாத நி

கண்டுபிடிப்பாளரை மறைத்த அவரின் அழகு! - ஹெடி லாமர் - இன்றைய வைஃபை தொழில்நுட்பத்தின் அடிப்படையை உருவாக்கியவர்

படம்
    அமெரிக்க நடிகையான ஹெடி லாமர் புகழ்பெற்ற அமெரிக்க நடிகையாகவே பலருக்கும் தெரியும் . ஆனால் அவர் பொறியியலில் ஆர்வம் கொண்டு தனது வீட்டில் க ண்டுபிடிப்புக்கான அறை ஒன்றை வைத்திருப்பது பலருக்கும் தெரியாத சங்கதி . ஆங்கில உலகில் அழகு , நடிப்பு என இரண்டும் சேர்ந்த கலவையாக மக்களைக் கவர்ந்தவர் , லாமர் . 1914 ஆம் ஆண்டு வியன்னாவில் பிறந்தார் . இயற்பெயர் ஹெட்விக் கீஸ்லெர் . நடிப்பு ஆர்வத்திற்காக பள்ளிப்படிப்பை கைவிட்டார் . முதலில் செக்கோஸ்லோவியா சென்றவர் , பின்னாளில் அமெரிக்காவிற்கு வந்தார் . அங்குதான் தனது பெயரை ஹெடி லாமர் என்று மாற்றிக்கொண்டார் . படிப்பு கைவிட்டாலும் ஏராளமான நூல்களைப் படித்து தனக்கு தேவையான அறிவைப் பெற்றுக்கொண்டார் . போக்குவரத்து சிக்னல்களை மேம்படுத்துவது , தனது விமானத்துறை காதலரான ஹோவர்ட் ஹியூஹெஸ் மூலம் வேகமாக செல்லும் விமானத்தை தயாரிக்க உதவினார் . இதனை அமெரிக்க விமானப்படை பின்னாளில் வாங்கிக்கொண்டது . சிறு மாத்திரை மூலம் நீரை கார்பனேட்டட் பானமாக மாற்றுவது என பல்வேறு ஐடியாக்களை சாத்தியப்படுத்தினார் . இரண்டாம் உலகப்போரின்போது , மக்கள் கஷ்டப்படுவதை அவரால் ப

இந்தியமக்களில் ஆண்டுக்கு 2 லட்சம் பேர் இறக்க காரணம்!- நீர் பற்றாக்குறை - பிட்ஸ்

படம்
  நீர் பற்றாக்குறை - பிட்ஸ் 1. உலகெங்கும் 84.4 கோடி மக்கள்  சுத்தமான நீரைப் பெறமுடியாமல் தவித்து வருகின்றனர். இந்த எண்ணிக்கை அமெரிக்க மக்கள்தொகையை விட இருமடங்கு அதிகம்.  2. உலகில் ஏற்பட்டுள்ள குடிநீர் பற்றாக்குறையால், 2 பில்லியன் மக்கள் மாசுபட்ட நீரைக் குடிநீராக அருந்தி வருகின்றனர்.  3. மாசுபாடான குடிநீரால் வயிற்றுப்போக்கு, காலரா, டைபாய்டு, போலியோ ஆகிய நோய்கள் பரவுகின்றன. ஆண்டுதோறும் வயிற்றுப்போக்கு பிரச்னையால் 4 லட்சத்து 85 ஆயிரம் பேர் பலியாகின்றனர்.  4. 2025ஆம் ஆண்டு,  உலக மக்கள் தொகையில் பாதிப்பேர் நீர்ப்பற்றாக்குறையைச் சந்திப்பதோடு, அவர்களின் வாழிடத்திலுள்ள நிலத்தடி நீர்மட்டமும் குறையும் என்று ஐ.நா. ஆய்வு குறிப்பிடுகிறது.  5.வளரும் நாடுகளில் மருத்துவச் சேவைகளைச் செய்வதற்கு தடையாக 22 சதவீதம் நீர்ப்பற்றாக்குறை உள்ளது. இந்நாடுகளில் சுகாதாரப் பணிகள் 21 சதவீதம் பற்றாக்குறையாகவும், கழிவுகளைக் கையாள்வதில் திறனின்மை 22 சதவீதமாகவும் உள்ளது.  6. நமது உலகைச்சுற்றி 70 சதவீத நீர்ப்பரப்பு உள்ளது. அதில், 2.5 சதவீத நீர் மட்டுமே நன்னீர். மீதி முழுக்க கடல்நீர்தான். பூமியிலுள்ள 1 சதவீத நீரை மட்டுமே ந

க்ரவுட் ஃபண்டிங் மூலம் தேர்தலில் ஊழல் குறையுமா?

படம்
  மக்களுக்காக மக்கள் பணம் தரலாமா? தேர்தல் என்பது பெரும் பட்ஜெட்டில் நடத்தப்பட்டு வருகிறது. இதனை நடத்துவதற்கு அரசுக்கு ஆகும் செலவைவிட கட்சிகளுக்கும், வேட்பாளர்களுக்கும் அதிக செலவு பிடிக்கிறது.  தொழிலதிபர்கள், நடிகர்கள் போட்டியிடும்போது, தொண்டர்களைத் திரட்டுவதற்கான செலவு, உணவு ஆகியவற்றை அவர்கள் பார்த்துக்கொள்ள முடியும். ஆனால் சாதாரண நிலையில் உள்ள கம்யூனிஸ்டுகள் போன்றோர் போட்டியிடும்போது, உண்டியல் குலுக்கித்தான் நிலையை சமாளிக்க வேண்டி உள்ளது. ஆனாலும் இது போதுமானதல்ல. எனவே, தற்போது அவர் டெமாக்கிரசி என்ற இணைய வழி நன்கொடை திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. உங்களுக்கு பிடித்த வேட்பாளருக்கு நீங்கள் நன்கொடைகளை வழங்கலாம்.  கிக்ஸ்டார்ட்டர் இணையதளம் பொருட்களை வெளியிட்டு, அப்பொருள் உங்களுக்கு பிடித்திருந்தால் நிதியுதவி செய்யுங்கள் என்று கேட்கிறார்களே அதே பாணிதான். தற்போது அவர் டெமாக்கிரசி நன்கொடைத் திட்டத்தில் 14 வகை நிதிகோரும் முறைகள் செயல்பாட்டில் உள்ளன. இதனை பிலால் ஸைதி தொடங்கினார். “எங்களுடைய திட்டத்தின் வெற்றியால், இன்று சர்வர் மீது சிலர் தாக்குதல் நடத்தி வலைத்தளத்தை மூட முயற்சிக்கின்றனர். டெல்லி ஆம்

ஆந்திரப் பிரதேசத்தில் பிச்சைக்கார ர்களுக்கும், வீடற்றோருக்கும் உணவு வழங்கும் மூன்று ராணுவ வீரர்கள்! - பெருகும் இளைஞர்களின் ஆதரவு

படம்
                  ஆதரவற்றோருக்கு உணவு ! ஆந்திரப்பிரதேசத்தில் மூன்று ராணுவ வீரர்கள் , ஆதரவற்றோருக்காக உணவு வழங்கி வருகின்றனர் . இப்பணியை கடந்த மூன்று ஆண்டுகளாக செய்து வருகின்றனர் . பலசா ரயில் நிலையத்தில் உள்ள பிச்சைக்காரர்கள் , வீடற்ற மக்களுக்கு விவேகானந்தா சேவா சமிதி என்ற பெயரில் அமைப்பை நிறுவி உதவிகளை வழங்கி வருகிறார்கள் . ரபகா கிரண் , பன்னி , தர்மா ஆகிய மூவரும்தான் இந்த பணியில் இறங்கி பல்வேறு உதவிகளை மக்களுக்கு வழங்கி வருகிறார்கள் . கிரண் இந்தோ திபெத் ராணுவ வீரர் என்றால் மற்ற இருவரும் அசாம் ரைபிள்ஸ் , எல்லைப்பாதுகாப்பு படையைச் சேர்ந்தவர்கள் . தொடக்கத்தில் பலசா பகுதியிலுள்ள உணவகங்களில் மீதியாகும் உணவைப் பெற்று பிச்சைக்காரர்களுக்கும் , உணவு தேவைப்படுவோருக்கும் வழங்கத் தொடங்கியுள்ளனர் . இந்த மூன்று ராணுவ வீரர்களின் பணியைப் பார்த்துவிட்டு மாவட்டத்திலுள்ள 600 இளைஞர்கள் இவர்களின் விவேகானந்தா சமிதி பணியில் இணைந்துள்ளனர் . மண்டசா , சோம்பேட்டா , ஹரிபுரம் என மூன்று பகுதிகளுக்கு உணவு அளிக்கும் பணி விரிவடைந்துள்ளது . இந்த அமைப்பைச் சேர்ந்தவர்கள் பல்வேறு தன்னார்வலர்க

பிரேசில் நேரடி பணப்பரிமாற்ற திட்டத்தில் இந்தியா கற்கவேண்டியது என்ன?

படம்
                நேரடி பணப்பரிமாற்றத்தில் இந்தியா கற்கவேண்டியவை ! இந்திய அரசு கடந்த ஆகஸ்ட் முதல் 52 அமைச்சகங்களை ஒன்றாக இணைத்து , 384 நலத்திட்டங்களை மக்களுக்கு சென்றுசேர்வதற்கான முயற்சிகளை செய்து வந்த்து . நேரடி வங்கிக்கணக்கு பரிமாற்றம் மூலம் நலத்திட்டங்களை இந்திய அரசு செயல்படுத்திவருகிறது . பிரதான் மந்திரி காரிப் கல்யாண் யோஜனா என்ற திட்டம் மக்களுக்கு உணவுப்பொருட்களை வழங்குவதோடு வறுமை ஒழிப்பு மற்றும் உள்ளூர் பொருளாதாரத்தை வளர்க்கவும் உதவுகிறது . நீண்டகால நோக்கில் இதனை விரிவுபடுத்தி , குறைகளைக் களைந்தால் மட்டுமே நலத்திட்ட உதவிகள் அனைத்து தரப்பு மக்களிடமும் சென்றுசேரும் . இந்திய அரசின் சிந்தனைகள் சரியாக இருந்தாலும் அனைத்து திட்டங்களிலும் ஒருங்கிணைப்பு முறையாக இல்லாததால் மகாத்மா காந்தி கிராம வேலைவாய்ப்பு திட்டம் , பிரதான் மந்திரி மாட்ரி வந்தனா யோஜனா ஆகிய திட்டங்களில் ஆயிரக்கணக்கான பயனர்கள் தங்களுக்கான பயன்களைப் பெற முடியவில்லை . 2015 ஆம் ஆண்டு டில்லியில் நிதி அமைச்சகம் ஒருங்கிணைத்த பொருளாதார மாநாட்டில் , ஜன்தன் ஆதார் திட்டம் விவாதிக்கப்பட்டது . இதில் பிரேசில்

அனாதைப் பிணத்தை வைத்து ஐஐடி மாணவர் ஆடும் பரமபத ஆட்டம்! - ஐஐடி கிருஷ்ணமூர்த்தி 2020

படம்
        ஐஐடி கிருஷ்ணமூர்த்தி   தனது சித்தப்பா காணவில்லை என கிருஷ்ணமூர்த்தி மும்பையிலிருந்து சென்னைக்கு வந்து நாளிதழில் விளம்பரம் கொடுக்கிறார் . அதைப் பார்த்து உதவி கமிஷனர் வினர் வர்மா , அவனை புகார் கொடுக்க அழைக்கிறார் . அவன் சொல்வது உண்மையா என அவருக்கு சந்தேகம் வருகிறது . உண்மையில் கிருஷ்ணமூர்த்தி யார் ? அவன் உண்மையில் தேடுவது அவன் சித்தப்பாவைத்தானா ? அவனது நோக்கம் என்ன என்பதை உதவி கமிஷனரோடு சேர்ந்து பார்வையாளர்களும் அறிவதுதான் படத்தின் மையப்பகுதி . படத்தில் மசாலா அம்சங்கள் ஏதுமில்லை . மைரோ தோஷி வரும் காட்சிகள் கூட இறுக்கமான கதையில் கொஞ்சம் ரிலாக்ஸ் செய்யவேண்டுமே என்பதுதான் .    படத்தின் நாயகன் நல்ல ஓங்குதாங்கான உடல்கட்டோடு இருக்கிறார் . இதனால் படத்தில் சண்டைக்காட்சிகள் இருக்கலாமே என தோன்றுகிறது . ஆனால் படத்தில் அதற்கான தேவைகள் மிகவும் குறைவு . ஒரேயொரு சண்டைக்காட்சி மட்டுமே உள்ளது . பள்ளியொன்றை நடத்தி வரும் ஶ்னிவாசன் என்பவரின் மீது சுமத்தப்படும் நிதி மோசடி குற்றச்சாட்டும் அதைப்பற்றிய சர்ச்சைகளும்தான் பின்பாதி கதையை நகர்த்த உதவுகிறது . உண்மையில் ஶ்னிவாசன்

கொரோனா காலத்தில் ஜார்க்கண்ட் மக்களின் வாழ்க்கையைக் காத்த பெண்மணி! - காயத்ரி தேவி

படம்
                  காயத்ரிதேவி பாகீரதி சுய உதவிக்குழுக்கள் காயத்ரியின் பணிகள் காலை ஏழுமணிமுதலே தொடங்கிவிடுகிறது . தனது வீட்டுவேலைகளை அவர் வேகமாக முடிப்பது அவசியம் . அப்போதுதான் அவரது வீட்டு வாசலில் காத்திருக்கும் கிராமத்து பெண்களுக்கு வங்கியில் பணப்பரிமாற்றம் பற்றி விளக்கம் அளிக்க முடியும் . ஜார்க்கண்டின் ஜெய்ப்பூரைச் சேர்ந்த காயத்ரி லேப்டார் சகிதமாக அனைத்து கிராமத்தினரின் வீடுகளுக்கும் சென்று வங்கிக்கணக்கு தொடங்குவது பற்றி சொல்லிக்கொடுக்கிறார் . கடன் , காப்பீடு , வங்கிக்கணக்கு புத்தக பதிவு , ஏன் அவர்களின் போனுக்கும் கூட ரீசார்ஜ் செய்துகொடுப்பதையும் செய்கிறார் . இத்தனைக்கும் இப்பணிகளை நக்சல் ஆதிக்கம் கொண்ட குன்டி மாவட்டத்தில் செய்து வருகிறார் என்பது கவனிக்கவேண்டிய ஒன்று . இப்பணிகளை இவர் அக்டோபர் 2016 முதல் செய்துவருகிறார் . கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த பொதுமுடக்கம் அறிவிக்கப்பட்டபிறகு , கிராமத்தினர் அனைவரும் பணத்தை வங்கியில் இருந்து பெற அலைபாயத் தொடங்கினர் . வங்கிகள் மூடப்பட்டிருந்தால் தினசரி செலவிற்கான பணத்தை எப்படி பெறுவது என்பதுதான் அவர்களின் யோசனை .

அறிவியல், ஆராய்ச்சி தொடர்பான மசோதாவில் என்னென்ன அம்சங்கள் மக்களுக்கு உதவும்? -மத்திய அரசின் புதிய கொள்கை வரைவு

படம்
                தொழில்நுட்பம் மற்றும் அறிவியலுக்கான கொள்கை ஜனவரி 1 அன்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது . இதில் என்னென்ன மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன , மக்களுக்கு என்னென்ன நன்மை கிடைக்கும் என்பதை டாக்டர் அகிலேஷ் குப்தா விளக்குகிறார் . முதலில் உருவாக்கப்பட்ட தொழில்நுட்ப கொள்கைகள் நினைத்த இலக்கை எட்டவில்லை . தற்போதையை ஐந்தாவது தொழில்நுட்பக் கொள்கை மையப்படுத்தப்படாதது , வல்லுநர்களைக் கொண்டது , கீழே வரை வளர்ச்சியை ஏற்படுத்துவது , குறிப்பிட்ட காலத்தில் இதனை ஆய்வு செய்வது , மேம்படுத்துவது , இதுதொடர்பான கருத்துகளைப் பெறுவது ஆகியவற்றை உள்ளடக்கமாக கொண்டது . பத்தாண்டுகளுக்குள் உலகின் மூன்று முக்கிய அறிவியல் ஆற்றல் கொண்ட நாடாக இந்தியா மாறவேண்டும் என்பதே இலக்கு . முழுநேர ஆராய்ச்சியாளர்கள் . தனியார் நிறுவனங்களின் பங்களிப்பு , ஆராய்ச்சிக்கான நிதியுதவி ஆகியவை இதில் கிடைக்கும் . தற்சார்பு இந்தியாவின் கீழ் பல்வேறு திட்டங்கள் இதில் உள்ளன . உலக அங்கீகாரத்தோடு விருதுகளும் இதன் மூலம் வழங்கப்படவுள்ளது . இதில் ஒருவர் செய்யும் ஆராய்ச்சியை மக்கள் அனைவரும் ஆர்வமுடன் அணுகி அதனைப் படிக்கமுடியும் . அர