இடுகைகள்

பெண் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

பெண்களை அடைத்து வைத்து மாரத்தான் வல்லுறவு கொண்ட குற்றவாளி

படம்
  டெக்சாஸின் எல்பாசோ எல்லை அருகே உள்ள இடம்தான், சியூடாட் ஜூவாரெஸ். மெக்சிகோவில் உள்ள இந்தப் பகுதியில்தான் அதிகளவு பெண்கள் கொலை செய்யப்பட்டு இருக்கின்றனர். இங்கு,   கொலை, வல்லுறவு காரணமாக நடைபெறும் குற்றங்கள் அதிகம். 1990ஆம்ஆண்டில், தொடர் கொலைகாரர்களின் விளையாட்டு மைதானம் என மெக்சிகோவின்   ஜூவாரெஸ் அழைக்கப்பட்டது. இங்கு, போதைப்பொருட்களின் புழக்கம் அதிகம். மேலும் இது தொடர்பாக இங்கு நடைபெறும் வன்முறைக் குற்றங்களின்   எண்ணிக்கையும்   அதிகம். 2003ஆம் ஆண்டு எல்பாசோ டைம்ஸ் என்ற பத்திரிகை, இங்கு ஆண்டுக்கு 340 கொலைகள் நடைபெறுவதாக கூறியது. ஆம்னஸ்டி இன்டர்நேஷனல் அமைப்பு, கொலையாகும் நபர்களின்   எண்ணிக்கை   370 என எண்ணிக்கையை உயர்த்திக் கூறியது. தொடர் கொலைகாரர்களின் நிலம், மைதானம் என கூறினாலும் இங்கு நடைபெறும் கொலைகளுக்கு எந்த கொலைகார ர்களும் பொறுப்பே ஏற்கவில்லை. காவல்துறையினர் சந்தேகப்படும் ஆட்களையெல்லாம் பிடித்து சிறையில் வைத்திருந்தனர். ஆனாலும் ஜூவாரெஸில் உள்ள பெண்கள் தெருக்களில் இறங்கே நடுங்கும் நிலைதான் அங்கிருந்தது. குற்றங்கள் குறையவே இல்லை. தொண்ணூறுகளில் கொல்லப்பட்டவர்களில் முக்கியமான

காதலைப் புரிந்துகொள்வது எப்படி? - ஜே.கிருஷ்ணமூர்த்தி

படம்
  தென் தேர் இஸ் லவ் இலவச நூலில் இருந்து… ஜே கிருஷ்ணமூர்த்தி தமிழாக்கம் ஒரு உறவில் பாதுகாப்பைத் தேவையாக நினைக்குப்போது அது பயத்தையும் சோகத்தையும் உருவாக்குகிறது. பாதுகாப்பைத் தேடும்போது அது, பாதுகாப்பின்மையை அழைத்து வருகிறது. உங்கள் உறவுகள் எதிலாவது பாதுகாப்பைத் தேடியுள்ளீர்களா? நம்மில் பெரும்பாலானோர்   காதலிக்க, காதலிக்கப்பட என்ற வகையில் ஒருவகை பாதுகாப்பை விரும்புகிறவர்கள். உண்மையில் ஒருவருக்கொருவர் காதலிக்கிற சூழ்நிலையில் அந்த காதல் இருவருக்குமான பாதுகாப்பைக் கொண்டிருக்கிறதா? இந்த பாதுகாப்பு என்பது, குறிப்பிட்ட வழிமுறையைக் கொண்டுள்ளதா? நாம் காதலிக்கப்படுவதில்லை. காரணம், நமக்கு எப்படி காதலிப்பது என்று தெரியாது. காதல் என்பது என்ன? இதைப்போல உலகம் முழுவதும் களங்கப்படுத்தப்பட்ட தவறாக பொருள் கொள்ளப்பட்ட வார்த்தை வேறு ஏதும் இருக்க முடியாது. நீடித்த காதல், அழியாத காதல் என்பதை மாத இதழ், நாளிதழ், மிஷனரிகள் வரையில் பேசியுள்ளனர். ‘’நான் எனது நாட்டை, அரசரை, நூலை, மலையை, மனைவியை, மகிழ்ச்சியை, கடவுளைக் காதலிக்கிறேன்.’’ இப்படி பலமுறை பலரும் சொல்ல கேட்டிருப்போம். உண்மையில் காதல் என்பது ஒரு சிந

குஸ்திபோடும் கிராம பெண் பப் பவுன்சராகி சாதிக்கும் கதை - பப்ளி பவுன்சர் -மதுர் பண்டார்கர்

படம்
  பப்ளி பவுன்சர் இந்தி இயக்கம் மதுர் பண்டார்கர் தயாரிப்பு ஜங்லீ பிக்சர்ஸ்   டெல்லிக்கு அருகில் உள்ள கிராமத்தில்  நடைபெறும் கதை. அங்குள்ள   கிராமத்தில் குஸ்தி அதாவது மல்யுத்தம் செய்யும் இளைஞர்கள் அதிகம். இவர்கள் டெல்லிக்கு சென்று அங்குள்ள கிளப்பில் பாதுகாவலர்களாக – பவுன்சர்களாக வேலை செய்து சம்பாதிக்கிறார்கள். இரவில் கிளப் பாதுகாப்பு வேலை. பகலில் வீட்டில் வேலை செய்வது உடற்பயிற்சி செய்வது என இருக்கிறார்கள். மல்யுத்தம் சொல்லித் தரும் பயிற்சியாளருக்கு ஒரு மகள் இருக்கிறாள். அவள்தான் பப்ளி. மல்யுத்தம் கற்று அவளும் ஆண்பிள்ளை போல திடமாக வளருகிறாள். படிப்பு வருவதில்லை. பத்தாவது தேர்ச்சி பெறமுடியாமல் நின்று, வீட்டு வேலைகளை செய்து வருகிறாள். இவளுக்கு கணக்கு சொல்லிக்கொடுத்த ஆசிரியை மகன் விராஜைப் பார்த்ததும் காதல் பூக்கிறது. அவனைப் பார்க்கவேண்டுமெனில் டெல்லி செல்லவேண்டும். அதற்கு அவளுக்கு குக்கு என்ற பள்ளிக்கால நண்பன் உதவுகிறான். டெல்லி சென்று நவ நாகரீக இளைஞன் விராஜை கிராமத்து பெண் சந்தித்தாளா, காதலைச் சொன்னாளா என்பதுதான் மீதிக்கதை.   பெண்களுக்கும் கல்வி, பொருளாதார சுதந்திரம் தேவை. வாய

கொலைகார ஆண் துணைக்கு பெண்கள் உதவி செய்வதற்கான காரணங்கள்!

படம்
  உணர்வு ரீதியான உறவுகள் என்று சில உண்டு. ஒருவரின் காதலுக்காக, அவர் தன்னை விட்டுப்போக கூடாது என்பதற்காக.. நிறைய குற்றச்செயல்களை அறியாமலேயே செய்வார்கள். ஆஸ்திரேலியாவில் அப்படி நடந்த சம்பவம் ஒன்றைப் பார்ப்போம். இதில், வோரல் என்பவர்தான் குற்றவாளி. இவர், தன்னைக் காதலிக்கும் மில்லர் கொண்டு வரும் இளம்பெண்களை வல்லுறவு செய்து கொல்வார். சவங்களை புதைக்கும் பாக்கியம் வேறு யாருக்கு, மில்லருக்குத்தான். இப்படி ஏழு பெண்களுக்கு மேல் கொல்லப்பட்டனர். இதை சரி, தவறு என எப்படியும் மில்லருக்கு கூறத் தெரியவில்லை. அவருக்கு வோரலின் காதல் தேவைப்பட்டது. ஆனால் வோரல் ஒருநாள் சாலை விபத்தில் இறந்துவிட்டார். அவரை த் தொடர்ந்து வந்த காவல்துறையினர் மில்லரைப் பிடித்தனர். வோரல் மீது கொண்ட காதலுக்காகத்தான் குற்றங்களை செய்தேன். கொலை செய்யவில்லை. உடல்களைப் புதைத்தேன் என்று சொல்லி புதைத்த இடங்களை அடையாளம் காட்டினார். இதுபோன்ற கொலைஜோடிகளில் ஆதிக்கம் செலுத்துபவர், எளிதாக குற்றங்களை தான் செய்துவிட்டு அதற்கான பல்வேறு செயல்களை பிறரை செய்யவைப்பவராக இருப்பார்..இப்படி ஆணைகளைக் கேட்டு நடப்பவர், மனதளவில் சமநிலை இல்லாதவராக எளிதில் கோப

பெண்களைக் கொன்று உறுப்புகளை வெட்டித் தின்று மகிழ்ந்த மனிதர் - ஜோச்சிம் க்ரோல்

படம்
  ஜோச்சிம் க்ரோல், ஜெர்மனியைச் சேர்ந்தவர்.   இவர் நிறைய பெண்களை, சிறுமிகளை கொன்றதாக குற்றம்சாட்டப்பட்டு கைதானார். விசாரணையில்தான் ஒருவரை மட்டுமே கொன்றதாக நேர்மையுடன் ஒத்துக்கொண்டார். ஆனால் அது உண்மையல்ல என்பதை அவரது வீட்டுக்குப் போனதும் காவல்துறையினர் அறிந்துகொண்டனர். வீட்டில் காய்கறிகள் வேகவைத்துக்கொண்டிருக்கும் பாத்திரத்தில் பெண்ணின் கை கிடந்தது. குளிர்பதனப் பெட்டியைத் திறந்தால் இறைச்சிதான்   நிறைய பாக்கெட்டில் சுற்றி வைக்கப்பட்டிருந்தது. அசைவ விரும்பியோ என இறைச்சியை சோதித்தால் அத்தனையும் மனித உடலில் இருந்து வெட்டப்பட்ட பாகங்கள், கறி   சேமிக்கப்பட்டிருந்தன. கழிவறையையும் விடாமல் சோதித்தபோது அதில் மனித குடல்கள் மிதந்துகொண்டிருந்தன. அவற்றை சரியாக ஃபிளஷ் செய்ய முடியவில்லை. இதற்கு காரணம் யார் என தேடினால் க்ரோல் மாட்டிக்கொண்டார். சிறுவயதில் சிறு பொம்மைகளை வைத்து பாலுறவு தொடர்பான கற்பனையில் மிதந்தவர். தனக்கு அருகில் ஓடிய விலங்குகளை கண்டந்துண்டமாக வெட்டியெறிந்தார். இந்த வகையில் அதிகம் அவரிடம் சிக்கியது பன்றிகள்தான். பொம்மைகளை வாங்கி அவற்றை கத்தியால் குத்தி, கழுத்தை இறுக்கிப் பார்த்து மனிதர

வலியைத் தாங்குவதில் யார் பெஸ்ட் - ஆணா, பெண்ணா? உண்மையா? உடான்ஸா?

படம்
  கீமோதெரபி தலையில் வளரும் முடியில் மாற்றம் ஏற்படுத்துகிறது! உண்மை. புற்றுநோயாளிகளுக்கு நோய் பாதிப்பைக் குறைக்க கீமோதெரபி கொடுக்கப்படுகிறது. இதன் விளைவாக, தலையில் முடிகொட்டும். இதை தவிர்க்க நோயாளிகளுக்கு முடியை மொட்டையடித்துவிடுகிறார்கள். இதற்குப் பிறகு முளைக்கும் முடியின் நிறமும், அதன் வடிவமும் சற்றே மாறியிருக்கும். தலைமுடியின் உரோமக்கால்கள் கீமோதெரபியால் மாற்றம் பெறும். இதன் விளைவாகவே முடியின் வடிவம், நிறம் மாறுகிறது. ஆனால் இது நிரந்தரமான மாற்றம் அல்ல. ஓராண்டிற்குள்  முடியின் வடிவமும் நிறமும் இயல்பானபடி மாறிவிடும்.  ஆண்களை விட பெண்களால் அதிகளவு வலியைத் தாங்கமுடியும்! உண்மை. குழந்தையை பிரசவிக்கும் பெண்களைப் பார்த்து இதனை எளிதாக யூகித்துவிடலாம். ஆராய்ச்சிகளின் அடிப்படையில் குழந்தை பிறக்கும் காலத்தில் பெண்களின் உடலில் வலியைத் தாங்கும் திறன் அதிகரிக்கிறது என  ஆய்வாளர்கள் கூறுகிறார்கள். இதற்கு அவர்களின் உடலில் அதிகரிக்கும் ஹார்மோன்களின் அளவு முக்கியக் காரணம். பொதுவாக வலியைத் தாங்கும் திறன் பற்றி ஆராய்ந்தால், அதற்கு ஒருவரின் வயது, சாப்பிடும் உணவு, செய்யும் வேலை ஆகியவற்றைப் பற்றியும் கவனம்

ஓவியத்தில் நிறைய பரிசோதனை முயற்சிகள் அவசியம் ! ராதிகா ஷேக்சரியா - ஓவியக்கலைஞர்

படம்
  ராதிகா ஷேக் சரியா  ஓவியக்கலைஞர் 20 ஆண்டுகளாக ஓவியக்கலைஞராக ராதிகா ஷேக் சரியா பணியாற்றி வருகிறார். கோரக்பூரில் பிறந்து வளர்ந்தவர், சிறுவயதிலிருந்தே கலையின் கைபிடித்து வளர்ந்தவர். ரூமியின் கவிதைகளை ஓவியங்களாக வடிவமைக்க முயன்று வருகிறார். தற்போது அக்ரிலிக் ஓவியங்களை வரைந்து வருகிறார்.  கலை மீதான காதலைப் பற்றிச் சொல்லுங்கள்.  சிறுவயது முதலே பெயின்ட் பிரஷ் மீது காதல் பிறந்துவிட்டது. தொடக்க காலத்தில் நான் நிறைய நிறங்களை பரிசோதித்து வந்தேன். இதில் நிறைய பரிசோதனை முயற்சிகளை செய்தேன்.  பிறகு எனக்கு திருமணமானபோது நான் மும்பைக்கு இடம்பெயர்ந்தேன். ஜேஜே கலைப்பள்ளியில் ஓவியத்தை பயின்றேன். இதற்குப் பிறகு நான் வரைந்த ஓவியங்களை மிராயா என்ற பெயரில் ஓவியக் கண்காட்சியாக வைத்தேன்.  நடிகை ராகேஸ்வரி என்னுடைய ஓவியங்களைப் பார்த்துவிட்டு, அதில் ஆன்மிகத்தன்மை இருக்கிறது என்று விமர்சனம் செய்தார். அவர்தான் ரூமியை வாசி என்று கூறினார்.  பிறகுதான் என்னுடைய பயணம் ரூமியுடன் தொடங்கியது. அதில் வாழ்க்கைக்கான கொண்டாட்டம், ஒற்றுமை, பேரானந்தம் என நிறைய விஷயங்கள் இருந்தன.  உங்களுடைய ஆன்மிகம் தொடர்பான கலை கண்காட்சி பற்றி சொல

மனதிற்கு பிடித்த விஷயத்தை செய்தால் வெற்றி! ஸ்கை க்ரூ நிறுவனர், மலோபிகா

படம்
  மலோபிகா பானர்ஜி எம்ஜே  பாடகர், நடிகர், பாடலாசிரியர் ஸ்கைக்ரூ நிறுவனர் மலோபிகாவின் பெயருக்கு பின்னே இருக்கும் அத்தனையும் நிஜம். அவ்வளவு ஆர்வமாக பல்வேறு வேலைகளை செய்துவருகிறார். ஸ்கை க்ரூ என்பது அவரின் ஆடை நிறுவனமாகும். பாரம்பரிய இழைகளில் தேவையான திருத்தங்களோடு கஸ்டமைஸ்டு உடைகளை தைத்து கொடுப்பது இவரது நிறுவன பாணி.  உள்ளூர் சார்ந்த விஷயங்களை முக்கியமாக நினைக்கிறார். ஆர்வமும், அர்ப்பணிப்புமான தனது நிறுவனத்தை வளர்ச்சியடையச் செய்ய உழைத்து வருகிறார்.  உங்களின் ரோல்மாடல் யார்? என்னுடைய குடும்பம்தான் என்னுடைய ஊக்கசக்தி, ஆற்றல் அனைத்துமே. சரியாக வேலை செய்தால் முடிவுகள் சிறப்பாக இருக்கும் என என் அம்மா கொடுக்கும் ஊக்கம் அற்புதமானது. இதனால் நான் நினைத்த இலக்குகளை எதிர்காலத்தில் அடைவேன் என நம்புகிறேன்.  மன அழுத்தத்தை எப்படி சமாளிக்கிறீர்கள்? பொதுமுடக்க காலத்தைப் பற்றி கேட்கிறீர்கள். நான் அப்போது சமையல் செய்துகொண்டிருந்தேன். அதுதான் மன அழுத்தத்தை போக்கும் ஒரே வேலையாக இருந்தது. காய்கறியை சீராக ஒன்றுபோல வெட்டுவது எனக்கு பிடித்திருந்தது. மன அழுத்தம் வரும்போது நடனமாடுவது எனக்கு பிடித்தமானது. இது உடலையு

தோற்றுப்போவதற்கு பயப்படாதீர்கள்! - ஹேம்லதா முகேஷ் சாங்வி, வர்த்தமான் ஜூவல்லர்ஸ்

படம்
  ஹேம்லதா முகேஷ் சாங்வி துணை நிர்வாகத்தலைவர் - வர்த்தமான் குழும நிறுவனங்கள் படித்தது மென்பொருள் பொறியியல் படிப்பு. ஆனால் செயல்படுவது, தொழிலதிபராக தொழில்துறையில் என்பதுதான் லதாவின் வாழ்க்கை. மும்பையில் செயல்படும் வர்த்தமான் குழுமத்தின் வளர்ச்சிக்கு முதுகெலும்பு என லதாவைக் கூறலாம். வர்த்தமான்  நிறுவனத்தின் முக்கிய வணிகம், நகைகள்தான்.  2016ஆம் ஆண்டு வர்த்தமான் கூட்டுறவு கடன் சங்கத்தின் தலைவராக பொறுப்பேற்றார். அதனை தங்க நகைக்கு கடன் கொடுக்கும் நிறுவனமாக வளர்ச்சி பெறச் செய்தார். வர்த்தமான் நிறுவனம், நிலம், வண்டி, வாகனங்கள், ஓவியங்கள், திரைப்படங்கள் ஆகியவற்றிலும் முதலீடுகளை செய்து வருகிறது. இந்தியாவின் நம்பிக்கையான நூறு நிறுவனங்களைக் கணக்கெடுத்தால் வர்த்தமான் நிறுவனமும் அதில் ஒன்று என்று கூறலாம்.  ஹேம்லதாவிடம் பேசினோம்.  நீங்கள் வணிகத்திற்குள் எப்படி நுழைந்தீர்கள்? 2006ஆம் ஆண்டு எனது மாமனார் மறைவிற்குப் பிறகு எனது கணவர் வர்த்தமான் குழுமத்தின் தலைவராக ஆனார். நான் வணிகத்திற்குள் வர நினைக்கவில்லை. ஆனால் எனது கணவர் நகை தொடர்பான வணிகத்தை கவனித்துக்கொள்ள வலியுறுத்தினார். சந்தையை நன்கு ஆய்வு செய்து

உங்களைச் சுற்றியே ரோல்மாடல்கள் நிறையப் பேர் உண்டு! பெனு சேகல், ஃப்ரீபோர்ட் ரீடெய்ல் இந்தியா

படம்
  பெனு சேகல், ஃப்ரீபோர்ட் ரீடெய்ல் பெனு சேகல் இயக்குநர், ஃப்ரீபோர்ட் ரீடெய்ல் இந்தியா பெனு, 23 ஆண்டுகளாக பல்வேறு நிறுவனங்களில் முக்கிய பொறுப்புகளை வகித்துள்ளார். ஆம்பியன்ஸ், டிஎல்எஃப் யுடிலிட்டிஸ், இன்டர்நேஷனல் ரீகிரியேஷன் பார்க்ஸ் ஆகிய நிறுவனங்களில் வேலை பார்த்த அனுபவம் கொண்டவர். ரீடெய்ல் துறையில் விநியோகம், வணிக முறை, இடங்களை வாடகைக்கு பிடிப்பது என பல்வேறு பணிகளைச் செய்துள்ளார்.  உயிரிதொழில்நுட்பத்தில் முதுகலை படித்துள்ளவர், மனிதவளத்துறை நிர்வாகத்திலும் முதுகலை படிப்பை நிறைவு செய்துள்ளார். அவரிடம் பேசினோம்.  ரீடெய்ல் தொடர்பான வணிகத்தை எப்படி கையில் எடுத்தீர்கள்? தேவைதான் கண்டுபிடிப்புகளின் தாய் என்று சொல்லுவார்கள். இந்த இயல்பு நம் அனைவருக்குள்ளும் இருக்கும். சிலர் தொடக்கத்திலேயே இதை அடையாளம் கண்டுகொள்கிறார்கள். பிறர் இந்த தீப்பொறியை வாழ்க்கை முழுக்க தேடிக்கொண்டே இருக்கிறார்கள்.  வணிகம் என்பது எனக்குத் அப்படித்தான் வந்தது. இத்தனைக்கும் நான் முதுகலை படித்தது உயிரி தொழில்நுட்பம் மற்றும் வேதியியல் தான். ஆனால், நான் என் வேலைவாய்ப்பை அதில் தேடவில்லை. கல்லூரியில் மாணவர்களின் தலைவராக இருந்தவ

மாற்றுப் பாலினத்தவர்களுக்கான திரைப்படங்கள்- பட்டியல்

படம்
  ஃபிரன்ட் கவர் ஹேப்பி டுகெதர் ஹார்ட் பீட்ஸ் லவுட் லவ் சைமன் எ ஃபென்டாஸ்டிக் வுமன் 2017 டேனியல் வேகா நடித்துள்ள படம். அவர்தான் மெரினா. அவரது பார்ட்னர் திடீரென இறந்துபோகிறார். இருவருமே மாற்றுப்பாலினத்தவர்கள். இறந்துபோனவரின் குடும்பத்தினருக்கு மாற்றுப்பாலினத்தவர் என்றாலே ஆகாது. இந்த சூழ்நிலையை அவர் எப்படி சமாளிக்கிறார், மாற்றுப்பாலினத்தவர்களை சமூகம் எப்படி புரிந்துகொள்கிறது என்பதை சொல்லிய சிலிய படம். வெளிநாட்டு பட வரிசையில் ஆஸ்கர் பரிசு பெற்றது.  டிஸ்குளோசர்  2020 ஆவணப்படம்.  திரைப்படங்களில், சமூகத்தில் மாற்றுப்பாலினத்தவர்கள் எப்படி நடத்தபடுகிறார்கள் என்பதை அவர்களை வைத்தே பகிர்ந்துகொண்டால் எப்படி இருக்கும்? நெட்பிளிக்ஸின் ஆவணப்படம். வாய்ப்பு இருப்பவர்கள் பாருங்கள்.  ஃபிரன்ட் கவர் 2015 சீன நடிகர் ஒருவருக்கும், உடை வடிவமைப்பாளருக்கும் பற்றிக்கொள்ளும் ஒரினச்சேர்க்கை உறவு பற்றிய கதை.  ஹேப்பி டுகெதர் 1997 இரு ஆண்களுக்கு இடையிலான ஓரினச்சேர்க்கை உறவு எப்படி வன்முறை கொண்டதாக மாறி, பிரிவு நேரிடுகிறது என்பதை சொல்லுகிற படம். ஹாங்காங் தொடங்கி அர்ஜென்டினா வரையில் செல்லும் இரு நண்பர்களின் பயணம்தான் தி

காமத்தைக் கொண்டாடும் நுண்கதைகள்! - 69 நுண்கதைகள் - சி.சரவணகார்த்திகேயன்

படம்
  69 நுண்கதைகள் சி.சரவணகார்த்திகேயன் உயிர்மை பதிப்பகம் ரூ.80 சி.சரவணகார்த்திகேயன் ஒரு மாதத்தில் எழுதப்பட்ட கதைகள் என எழுதிய ஆசிரியர் குறிப்பிடுகிறார். 69 என்பது காகத்தின் கலவி நிலை என பின்னட்டைக் குறிப்பு சொல்லுகிறது. இதெல்லாவற்றையும் தாண்டி இந்த நூலை வாங்க வைப்பது முன்னட்டையில் உள்ள அழகான ஓவியங்கள்தான். பார்த்தவுடனே ஈர்க்கும்படி செய்திருக்கிறார்கள்.  60 கதைகள் இருக்கின்றன. அனைத்துமே நுட்பமாக காமம், காதல், மனதிற்குள் ஒளித்து வைத்துள்ள சில ரகசியங்கள், பாலினத்தின் மீதான மாறாத ஈர்ப்பு ஆகியவற்றை குறியீடாக சில சமயங்களில் நேரடியாகவே வெளிப்படுத்துகிற ஒருபக்க கதைகள்.  சரவண கார்த்திகேயன் எழுதிய கதைகள் சிறியவை என்றாலும் இதில் எங்கேயும் தேவையில்லாமல் கதையை  இழுத்துவிடுகிற தன்மை இல்லை. எல்லாமே இழுத்து பின்னப்பட்ட வலைப்பின்னல்களைக் கொண்ட நாற்காலி போல கச்சிதமாக உள்ளது.  இதில், குறிகளை வெட்டும் லட்சியத்தைக் கொண்ட மனிதரின் கதை சிறப்பாக உள்ளது. கணவரை விவகாரத்து செய்யும் பெண் நீதிமன்றத்தில் சொல்லும் உரையாடல்களாக விரியும் கதை, காமத்தில் நிறைவு கொள்ளாத மனம் பிறருக்கு ஏற்படுத்தும் அசௌகரியத்தைப் பற்றி பேசுக

இந்தியர்கள் அன்பான தொடுதலை அறியாதவர்கள்! - அய்லி சேகட்டி

படம்
  அய்லி சேகட்டி காதல் உறவுக்கான பயிற்சியாளர்  நீங்கள் ஃபின்லாந்து நாட்டைச் சேர்ந்தவர்தானே? இந்தியாவுக்கு வருவதற்கு என்ன காரணம்? இங்கு நீங்கள் காதல் உறவுக்கான பயிற்சியையும் வழங்குகிறீர்கள் நான் பின்லாந்து, இத்தாலி, லண்டனில் வாழ்ந்துள்ளேன். எனது பதினெட்டு வயதிலேயே லண்டனுக்கு சென்றுவிட்டேன். பிறகுதான் இந்திய தத்துவங்கள் மீது ஆர்வம் பிறந்தது. மதரீதியான படிப்புகளை படிப்பையும், இந்தி மொழியையும் கற்றேன். பிறகுதான் 2007இல் மும்பைக்கு சென்றேன். பிராண்டுகள் மற்றும் வாடிக்கையாளர் மனநிலை பற்றிய ஆராய்ச்சி செய்தேன். கூடவே, சோமாட்டிகா எனும் படிப்பைப் படித்தேன். சைக்கோதெரபி, விபாசனா ஆகியவற்றைப் பற்றி ஆழமாக கற்றேன். இதற்குப் பிறகு எனக்கு மணமானது. ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு மணவாழ்க்கை கெட்டுப்போனது. எனவே, நான் எங்கள் வாழ்க்கையை பிறருக்கு முன் வைக்கத் தொடங்கினேன். அப்படித்தான் காதல் உறவு பயிற்சியாளராக மாறினேன்.  2012இல் உலகம் முழுக்க டேட்டிங் ஆப்களின் மீதான மோகம் பெருகத் தொடங்கியது. நானும் பிஏ இந்தி படிப்பை கைவிட்டு பாலுறவு மற்றும் காதல் உறவு பற்றிய ஆராய்ச்சிக்கு மாறினேன்.  இந்தியர்கள் தங்கள் உறவில் எந்த

உலக நாடுகளை அச்சுறுத்திய காசநோய் வரலாறு!

படம்
  பான்டம் பிளேக் வித்யா கிருஷ்ணன் பெங்குவின் ஹவுஸ்  பத்தொன்பதாம் நூற்றாண்டில் உலக நாடுகளை அச்சுறுத்திய காசநோய் எப்படி பரவியது, லட்சக்கணக்கான மக்களைக் கொன்றது என்பதைப் பற்றி எழுதியுள்ளார் வித்யா. நியூயார்க்கின் குடிசைகள் தொடங்கி நியூயார்க் வரை காசநோய் பாதிப்பு இருந்தது. கைவைத்திய மருந்துகள் முதல் ஆங்கிலமருத்துவ ஆராய்ச்சிகள் வரை காசநோயை அழிக்கும் பல்வேறு முயற்சிகளை நூல் ஆசிரியர் கூறுகிறார்.  வயலெட்ஸ் கியூங் சூக் சின் ஹாசெட் 699 1970ஆம் ஆண்டு தென்கொரியாவில் நடைபெறும் கதை. சான், தனியாக வாழ்ந்து வரும் நபர். அவருக்கு நாமே என்ற என்ற பெண் ஸ்னேகிதி கிடைக்கிறார். சானுக்கு அவளை மிகவும் பிடித்துப்போகிறது. ஆனால் திடீரென ஒருநாள் மாலை அவளை நாமே நிராகரிக்கிறாள். பெண்ணின் மனம், ஆசை, சமூகத்தின் பல்வேறு கட்டுப்பாடுகள் என நிறைய விஷயங்களை நூலில் கியூங் பேசுகிறார்.  மேட் இன் ஃப்யூச்சர் பிரசாந்த் குமார் பெங்குவின் ராண்டம் ஹவுஸ்  ரூ.499 மார்க்கெட்டிங் தொடர்பான நூல் இது. இதில் எதிர்காலத்தில் மார்க்கெட்டிங்கை எப்படி செய்வது என பல்வேறு ஆலோசனைகளை சொல்லுகிறார் பிரசாந்த் குமார். ஊடகம், எழுத்து, பல்வேறு செல்வாக்கு ச

அறிவியலாளர்களுக்குக் கூட பாலுறவு பற்றி பேச கூச்சமும், தயக்கமும் இருக்கிறது! - பிரான்ஸ் டி வால், மானுடவியலாளர்

படம்
  ஃபிரான்ஸ் டி வால் (Frans de waal) பேராசிரியர், எமோரி பல்கலைக்கழகம், ஜார்ஜியா. பொதுவாக மனிதக்குரங்குகளைப் பற்றி நாம் கேள்விப்படும் செய்திகள் பாலுறவு மற்றும் சண்டை சம்பந்தமாகவே இருக்கும். அதன் வாழ்க்கையில் வேறு விஷயங்களைப் பற்றி அதிகம் கேள்விப்பட்டிருக்க மாட்டோம். இதுபற்றிய ஆராய்ச்சியில் தான் பேராசிரியர் ஃபிரான்ஸ் டி வால் ஈடுபட்டிருக்கிறார். போனபோ, சிம்பன்சி ஆகியவற்றுக்கும் மனிதர்களுக்கும்  நிறைய வேறுபாடுகள் இருக்கிறதென கூறுகிறார். பிறர் மீதான கரிசனம், கூட்டு முயற்சி ஆகிய இயல்புகளைக் கொண்டதாக மனித குரங்கு உள்ளது என்று கூறுகிறார். பாலின அடையாளங்கள் பற்றி டிஃப்ரன்ட் வாட் ஏப்ஸ் கேன் டீச் அஸ் அபவுட் ஜென்டர் என்ற நூலை எழுதியிருக்கிறார். அவரிடம் பேசினோம்.  கலாசாரம் சார்ந்து பாலின அடையாளங்கள் மாறுவதாக எப்படி கூறுகிறீர்கள். டோனா என்று சிம்பன்சியை உங்கள் கருத்துக்கு ஆதரவாக கூறுகிறீர்கள். இதைப்பற்றி விளக்குங்கள்.  டோனா, ஒரு பெண் சிம்பன்சி. ஆனால் ஆணைப் போன்ற உடல் அமைப்பு. பெரும்பாலான நேரங்களில் ஆண்களோடு சுற்றிக்கொண்டிருப்பாள். பாலின அடிப்படையில் பெண் என்றாலும் பெரும்பாலான நேரங்களில் ஆண்போலவே செயல