பெண்களை அடைத்து வைத்து மாரத்தான் வல்லுறவு கொண்ட குற்றவாளி
டெக்சாஸின் எல்பாசோ எல்லை அருகே உள்ள இடம்தான், சியூடாட் ஜூவாரெஸ். மெக்சிகோவில் உள்ள இந்தப் பகுதியில்தான் அதிகளவு பெண்கள் கொலை செய்யப்பட்டு இருக்கின்றனர். இங்கு, கொலை, வல்லுறவு காரணமாக நடைபெறும் குற்றங்கள் அதிகம். 1990ஆம்ஆண்டில், தொடர் கொலைகாரர்களின் விளையாட்டு மைதானம் என மெக்சிகோவின் ஜூவாரெஸ் அழைக்கப்பட்டது. இங்கு, போதைப்பொருட்களின் புழக்கம் அதிகம். மேலும் இது தொடர்பாக இங்கு நடைபெறும் வன்முறைக் குற்றங்களின் எண்ணிக்கையும் அதிகம். 2003ஆம் ஆண்டு எல்பாசோ டைம்ஸ் என்ற பத்திரிகை, இங்கு ஆண்டுக்கு 340 கொலைகள் நடைபெறுவதாக கூறியது. ஆம்னஸ்டி இன்டர்நேஷனல் அமைப்பு, கொலையாகும் நபர்களின் எண்ணிக்கை 370 என எண்ணிக்கையை உயர்த்திக் கூறியது. தொடர் கொலைகாரர்களின் நிலம், மைதானம் என கூறினாலும் இங்கு நடைபெறும் கொலைகளுக்கு எந்த கொலைகார ர்களும் பொறுப்பே ஏற்கவில்லை. காவல்துறையினர் சந்தேகப்படும் ஆட்களையெல்லாம் பிடித்து சிறையில் வைத்திருந்தனர். ஆனாலும் ஜூவாரெஸில் உள்ள பெண்கள் தெருக்களில் இறங்கே நடுங்கும் நிலைதான் அங்கிருந்தது. குற்றங்கள் குறையவே இல்லை. தொண்ணூறுகளில் கொல்லப்பட்டவர்களில் முக்கியமான