சட்டம் என்பது கற்களில் பொறிக்கப்பட்டதல்ல; மக்கள் அதனை புரிந்துகொள்ள முடியும்
சட்டம் என்பது கற்களில் பொறிக்கப்பட்டதல்ல; மக்கள் அதனை புரிந்துகொள்ள முடியும் கோர்ட் பட இயக்குநர் சைதன்யா தம்ஹனே ஆங்கில மூலம்: மாணிக் சர்மா தமிழில்: வின்சென்ட் காபோ கோர்ட் படத்தில் நாராயண் காம்ளே எனும் சமூக செயல்பாட்டாளர் தன் அறுபது வயதில் மும்பை தெருக்களில் சிறுநாடக இசைக்குழுவிற்கு தலைமை தாங்கி நகரத்தின் தொழிலாளர்கள் பிரச்சனைகளை அனைவரும் அறியும் விதமாக செயல்பாடுகளை மேற்கொள்கிறார். காம்ளே தனது பாடல்களினால் மலமள்ளும் தொழிலாளர் ஒருவரை தற்கொலைக்கு தூண்டியதாக அவர் மீது குற்றம் சாட்டி வழக்கு பதிவுசெய்யப்படுகிறது. அடுத்து அவ்வழக்கின் விசாரணை, அதில் அதில் பங்கேற்கும் விசித்திரமான மனிதர்களான அரசு வழக்குரைஞர் (நியூடன்) நீதிபதி (சதவர்தே), பிரதிவாதி தரப்பு வழக்குரைஞர் (வினய் வோரா) ஆகியோரின் வாழ்க்கையை பின் தொடர்கிறது கதை. கடந்த ஒரு ஆண்டாக பல்வேறு விருதுகளையும், பாராட்டுக்களையும் பெற்றுவரும் கோர்ட் படமானது அண்மையில் தேசியவிருதினையும் வென்றுள்ளது. கோர்ட் படத்தினை உருவாக்கும் முன் என்ன செய்து கொண்டிருந்தீர்கள்? ஆங்கிலப்பட்டதாரியான நான் எனது பதின