மதிப்பெண்ணை அள்ளி வழங்கிய ஆசிரியர்!
பிச்சை எடுக்கும் தடகள வீரர்! மத்தியப்பிரதேசத்தை சேர்ந்த மாற்றுத்திறனாளி வீரர், அரசு வேலை தராமல் புறக்கணித்ததால் தெருவில் பிச்சை எடுக்கும் பரிதாபத்திற்கு ஆளாகியுள்ளார். ம.பியைச் சேர்ந்த மன்மோகன்சிங் லோதி, மாற்றுத்திறனாளி தடகள வீரர். கடந்தாண்டு குஜராத்தின் அகமதாபாத்தில் நடைபெற்ற சிறப்பு ஒலிம்பிக் போட்டியின் நூறு மீட்டர் போட்டியில் ஓடி வெள்ளி வென்றுள்ளார். “பத்து ஆண்டுகளுக்கு முன்பு விபத்தில் எனது வலது கையை இழந்துவிட்டேன். அரசு வேலை கிடைத்தால் எனது குடும்பத்தை காப்பாற்றமுடியும்” என மெல்லிய குரலில் பேசுகிறார் லோதி. அரசின் இரவுக்காப்பகங்களில் தங்கி அரசின் வேலைக்கு முயற்சித்தவர், முதல்வர் சிவராஜ்சிங் சௌகானை பலமுறை சந்தித்து மனுகொடுத்தும் வேலை கிடைக்கவில்லையாம். “எங்களுடைய துறை விதிப்படி லோதிக்கு வேலை தருவது இயலாத ஒன்று. சமூகநீதித்துறையில் அவர் முயற்சிக்கலாம்.” என்கிறார் விளையாட்டுத்துறையின் கூடுதல் இயக்குநர் வினோத் பிரதான். திறமைக்கு இதுதான் அங்கீகாரமா? 2 இஸ்ரோவின் 19 திட்டங்கள்! மனிதர்களை விண்ணுக்கு அனுப்பும் இஸ்ரோவின் லட்சியத்திற்கு தூரம் அதிகம். அடுத்து