கொரோனா காலத்தில் மனவலிமையோடு இருப்பதுதான் கடினம்! - மலைக்கா அரோரா , இந்தி திரைப்பட நடிகை
மலைக்கா அரோரா - விக்கிப்பீடியா மலைக்கா அரோரா இந்தி திரைப்பட நடிகை கோவிட் -19 பாதிப்பு இன்னும் நீங்காத நிலையில் டிவி நிகழ்ச்சி படப்பிடிப்புக்கு சென்றுள்ளீர்கள். அந்த அனுபவம் எப்படியிருந்தது? இந்த கடினமான சூழலில் அனைவரும் அதனை மறக்க வேலைக்கு சென்றுதானே ஆகவேண்டும்? நாங்கள் நடத்திய படப்பிடிப்பில் பார்வையாளர்கள் கிடையாது. முழுக்க பாதுகாப்பு விதிமுறைகளை கடைபிடித்து படப்பிடிப்பை நடத்தினோம். இப்போது எனது பையில் முக கவசங்கள், சானிடைசர்கள், மருந்துகள்தான் அதிகம் உள்ளன. உங்களை எப்போதும் துரத்தியபடி இருக்கும் பத்திரிகையாளர்கள் இல்லாமல் இருப்பதை எப்படி உணர்கிறீர்கள். அதனை சினிமா வாழ்க்கையின் ஒரு பகுதியாகவே உணர்கிறேன். சினிமா மட்டுமல்ல பத்திரிகை துறையும் கூட நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளது. அவர்களின் வேலைகளும் கூட இனிமேல் முன்பு போல இருக்காது. இந்த உண்மை எனக்கு அவர்கள்மேல் அனுதாபத்தை ஏற்படுத்துகிறது. உங்கள் தோழிகளை இந்த நேரத்தில் சந்தித்தீர்களா? நான் கரீனா, கரிஷ்மா, அம்ரிதா ஆகியோரை வீடியோகால் மூலம் சந்தித்து பேசிக்கொண்டிருக்கிறேன். நாங்கள் உணவு சமைப்பது பற்றி பல்வேறு விஷயங்களைப் பற்