இடுகைகள்

இந்திய மண்ணில் ஜனநாயக சிந்தனைகளை ஊன்றியவர்! - நேருவின் போராட்டகால சிந்தனைகள்

படம்
  நேருவின் போராட்டகால சிந்தனைகள் தொகுப்பாசிரியர் அர்ஜூன் தேவ் நேஷனல் புக் டிரஸ்ட்  இந்த நூல் சுதந்திரத்திற்கு முந்தைய காலகட்டத்தைப் பற்றி பேசுகிறது. அந்த காலகட்டத்தில் உலகளவில் நடைபெற்ற பல்வேறு சம்பவங்கள் பற்றி நேரு தன் மனதில் தோன்றிய கருத்துகளை எழுதினார். பேசினார். அதன் ஒரு பகுதிதான் தொகுப்பாளர் அர்ஜூன் தேவால் தொகுக்கப்பட்டுள்ளது.  உலகளவில் நடைபெறும் போர், அரசியல் தந்திரங்கள், வல்லரசு தகராறுகள், பொருளாதார வளர்ச்சி என பல்வேறு விஷயங்களில் நேருவின் சிந்தனை ஆச்சரியம் தருகிறது. ஏறத்தாழ இந்தியாவின் முதல் பிரதமராக ஆன  உடனே இவரது சிந்தனைகள் அரசியல் கொள்கைகளாக வடிவம் பெற்றன. அதுவும் கூட நாட்டின் நலனை முன்வைத்துத்தான் . பொதுத்துறை நிறுவனங்கள் இன்று விற்கப்பட்டு வரும் நிலையில் அவர் அந்த நிறுவனங்களை தொடங்கியது மக்களை ஏழ்மையில் வீழ்த்த பிரதமர் மோடிக்கு பொருளாதார ஆலோசனை கூறிய அடிபொடிகள் கூக்குரலிடுகின்றனர்.  அன்று அரசு முழுப்பொறுப்பில் தனது நிதி முதலீட்டைக் கொண்டு அரசு நிறுவனங்களைத் தொடங்கியிருக்காவிட்டால் மக்களுக்கு பெரும்பாலான சேவைகள் சென்றே சேர்ந்திருக்கிறது. இன்று பொதுதுறை நிறுவனங்களிடமிருந்து

விவசாயிகள் போராட்டமும், உள்குத்து அரசியலும்!

படம்
  விவசாயிகள் போராட்டமும், உள்குத்து அரசியலும் கடந்த சில மாதங்களாக பாஜக அரசு ஆளும் ஹரியானாவில் விவசாயிகள் போராட்டம் வேகம் பெற்றுள்ளது. இதனை முடக்க அந்த மாநில அரசு இணையத்தை துண்டித்தது. தங்களது உரிமைகளுக்காக போராடிய மக்கள் மீது, தேச துரோக வழக்கு போடப்பட்டது. தடியடி நடத்தி விவசாயிகளை காவல்துறையினர் தாக்கினர். ஆனாலும் கூட விவசாயிகளின் போராட்டம் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.  ஹரியானா முதல்வர் எம்எல் கட்டார், உள்துறை அமைச்சர் அனில் விஜ் ஆகியோர் இதெல்லாம் பஞ்சாப்பில் ஆளும் காங்கிரஸ் அரசின் சதி என ஊடகங்களில் பேட்டி தட்டி விட்டுக்கொண்டிருக்கின்றனர்.  என்னதான் பிரச்னை? ஹரியானா அரசு, ஜாட் அல்லாதவர்களின் வாக்குகளை கணக்கு செய்து போராட்டத்தை முக்க நினைக்கிறது. ஒருவகையில் இப்படி போராட்டத்தை முடக்குவதும் கூட பிரித்து ஆளும் தந்திரம்தான். பின்னாளில் இவர்கள் ஜாட் இனத்தவர், ஜாட் அல்லாதவர் என வாக்குவங்கி பிரியும் என்கிறார் அரசியல் செயல்பாட்டாளர் பிரமோத் குமார். மத்திய அரசும் தன் பங்குக்கு விவசாயிகள் போராட்டத்தை தீவிரவாத த்துடன் இணைத்து பார்த்து பேசி வருகிறது. ராம் ராம் என்று கூறுபவர்களை எப்படி நீங்கள் காலி

மனதை ரிலாக்ஸ் செய்யும் ஆப்கள்!

படம்
  போர்ட்டல் இயற்கையான அழகிய காட்சிகள் எப்போதும் மனதை ரிலாக்ஸ் செய்யும். அப்படி உலகம் முழுக்க உள்ள அனைத்து அழகான அருவி, மலைத்தொடர், புல்வெளி ஆகியவற்றை இந்த ஆப்பில் பார்த்து ரசிக்கலாம். பக்கத்தில் எரிச்சலூட்டும் நண்பர்களின் பேச்சிலிருந்து கொஞ்சம் தள்ளியிருக்க முடியும்.  இந்த ஆப் ஆண்ட்ராய்ட் , ஆப்பிளிலும் இலவசமாக கிடைக்கிறது.  ஸ்மைலிங் மைண்ட் உங்கள் குடும்பமே மன அழுத்தத்தில் தவித்தாலும் இந்த ஆப், உங்களை அதிலிருந்து மீட்கும். தியானம் செய்வதற்கான ஏராளமான விஷயங்கள் இதில் உள்ளன. அதைப் பயன்படுத்தி தினந்தோறும் ஆப்பை திறந்து வைத்து உழைத்தால் மன அமைதி கிடைக்க வாய்ப்புள்ளது.  பிக்மென்ட் தினத்தந்தி தங்க மலரில் வரும் வண்ணமடிக்கும் பகுதிதான். ஆனாலும் மன அழுத்தத்தை சிறப்பாக போக்குகிறது. ஆப்பை திறக்கிறீர்கள். பூசணி, பப்பாளி என இஷ்டம் போல பெயிண்டை சிதறடித்து வண்ணம் பூசலாம். மெல்ல கஷ்டங்கள் குறையும் வாய்ப்பிருக்கிறது.  டோகா லைப் வேர்ல்ட் இது ஒரு பொம்மை வீடு. இங்கு ஏராளமான கதை மாந்தர்கள் உண்டு. இங்குள்ள சில டாஸ்க்குகளை முடித்தால் சுவாரசியமாக பொழுது போக்கும். வீட்டையே இரண்டாக மாற்றும் குழந்தைகளுக்கு இந்த ஆ

பொய் சொல்வதை எப்படி கண்டுபிடிப்பது?

படம்
  குற்றத்தை ஒப்புக்கொள்ளுவார்களா? சாதாரணமாக நாம் செய்த தவறுகளைக் கூட ஈகோ பார்த்து நானா, செய்யவேயில்லையே என கூறுவோம். வேறுவழியின்றி அதனை நிரூபித்தால் இதற்காகத்தான் செய்தேன் என்று கூறுவதுதானே உலக வழக்கம். இந்தவகையில் சீரியல் கொலைகார ர்களைப் பொறுத்தவரை குற்றம் செய்த உணர்ச்சிகள் இருக்காது. காவல்துறையினர் கடுமையாக முயற்சி செய்து தந்திரங்கள் செய்து அவர்களை விசாரணையால் மிரட்டலாம். அதில் பிடிபட்டுவிடுவோம் என்ற பயத்தை உணர்ந்தால் அவர்களே நான் தான் கொலைகாரன் என்று ஒப்புக்கொள்வார்கள். அப்படியில்லாதபோது எளிதில் தங்களை காவல்துறையில் ஒப்படைக்க மறுப்பார்கள்.  என்னதான் குற்றங்களை செய்தாலும் கூட காவல்துறை அதில் பெரிய ஈடுபாடு எடுத்து அதனை கண்டுபிடிக்க முயற்சி செய்யாதபோது யாருக்குமே போரடிக்குமே? மேலும் சீரியல் கொலைகார ர்களுக்கு தாங்கள் செய்த பல்வேறு விஷயங்களை உலகம் அறிந்துகொள்ளவேண்டுமென நினைப்பு வேறு இருக்கும். இதனால் காவல்துறையில் தானாகவே சரண்டர் ஆவது நடைபெறும். இதனால் பெரும்பாலான குற்றவாளிகள் நாடு முழுக்க பரபரப்பான செய்தியாகி பிரபலம் ஆன கதைகளும் உண்டு.  பொய் சொல்லச் சொல்லாதே ஒருவர் உண்மை பேசுகிறாரா, அல்

காவல்துறையோடு பூனை - எலி விளையாட்டு!

படம்
  காவல்துறையோடு பூனை - எலி விளையாட்டு என்பது எளிதானது கிடையாது. அதற்கு மனதளவில் சிறப்பாக தயார் செய்திருக்க வேண்டும். இலையெனில் காவல்துறை சும்மா இருக்குமா? சென்னை போலீஸ் போல கையில் மாவுக்கட்டு போடும் வாய்ப்பு அதிகம். ஆனாலும் கூட இதிலும் செம சவாலான ஆட்கள் உண்டு.  ஜேக் தி ரிப்பர், ஸோடியாக் கில்லர், பெர்க்கோவிட்ஸ் ஆகியோர் தான் செய்கிறோம் என்று தெரியாமலேயே காவல்துறைக்கு பல துப்புகளை கொடுத்து குழப்பினார்கள். இதேபோல இன்னொருவர்  இல்லாமல் கொஞ்சமேனும் புத்திசாலித்தனமாக யோசித்தார் என்றால் அது ஜான் முகமது, ஜான் மால்வோ என்ற இருவர்தான். இவர்கள் கொலைகளை பல்வேறு மாகாணங்களில் செய்துவிட்டு தப்பிச்சென்றார்கள். ஆனாலும் காவல்துறையை பிடிக்க முடியுமா என சவால்விட்டதால் அவர்கள் சூடானார்கள். முகமதின் அழைப்பு ஒன்றை பின்தொடர்ந்து சென்று கொலைகாரர்கள் இருவரையும் பிடித்தனர். அதோடு அவர்களின் ஃபன் பண்றோம் திட்டம் நின்றுபோனது.  இவர்களை சாதாரணமாக நினைத்து விட முடியாது. இவர்களை என்று இங்கு கூறியது, சீரியல் கொலைகாரர்களைத்தான். காவல்துறை விசாரணையில் கூட தகவல்களை மாற்றிக் கூறி விசாரணையை மாற்றும் முயற்சியையும் செய்வார்கள். ஆ

காவல்துறையை குழப்பும் கொலையாளிகள்!

படம்
  தடயமே இல்லாமல் கொல்! நீங்கள் எங்கு சென்றாலும் உங்களில் ஒரு பகுதியை பழைய இடத்தில் விட்டுச்செல்கிறீர்கள் என்று அழகான தியரி ஒன்றை  சொல்வார்கள். குற்றங்களைப் பொறுத்தவரை இந்த தியரி பொருந்தாது. கொலையாளி, கொலைக்கான திட்டமிடலை முன்னமே செய்துவிடுவதால், பெரியளவு ஆதாரங்கள் கொலை நடந்த இடத்தில் கிடைக்காது.  சீரியல் கொலைகார ர் தலை வழுக்கையாக இருக்கலாம். தொப்பி போட்டிருக்கலாம். கையில் க்ளவுஸ் இருக்கலாம். இதனால் முடியோ, கைரேகையோ கிடைக்காது. அவர் கொலை மட்டும்தான் செய்கிறார் என்றால் பிற சமாச்சாரங்கள் ஏதும் கிடைக்காது. வல்லுறவு செய்தாலும் கூட ஆணுறையைப் பயன்படுத்திவிட்டு அதனை சரியானபடி அவர் தூக்கியெறிந்திருக்கலாம். மேலும் கொலையின்போது அணிந்திருந்த உடையைக் கூட அவர் தீவைத்து கொளுத்தியிருக்கவும் வாய்ப்புள்ளது.  குழப்ப குருமா காவல்துறையைப் பொறுத்தவரை அவர்களாகவே குற்றவாளியைத் தேடிக் கண்டுபிடித்து சட்டத்தின் கையில் ஒப்படைப்பது என்பது அரிதானது. ஆனால் அதிலும் சின்சியராக உழைக்கும் அதிகாரி இருந்தால் என்ன செய்வது? இதனால் அவர்களை குழப்ப வேறு ஒருவரின் முடி, விந்தணு, ரத்தம் ஆகியவற்றை கொலை நடந்த இடத்தில் கலந்துவிட்டு

கொலையாளியை பிடிக்க உதவும் டிஎன்ஏ!

படம்
  சீரியல் கொலைகாரர்களை  பிடிக்க முடியாதா? பிடிக்க முடியாது என்று இல்லை. ஒருவர் செய்தாரா என்று உறுதி செய்தால்தானே அவரைப் பிடிக்க முடியும். இதனால் மதிப்புக்குரிய காவல்துறையினர் சீரியல் கொலைகார ர்களை உடனே வலைவீசி பிடிக்க முடிவதில்லை.  ஒருவர் கொலை செய்திருக்கிறார் என்றால் குறைந்தபட்சம் அவரை சந்தேகப்படக்கூட சில காரணங்கள் ஏதாவது தேவை. எதுவுமே இல்லாமல் ஒருவரை எப்படி சந்தேகப்பட்டு கைது செய்யமுடியும். இதில் சீரியல் கொலைகார ர்கள் சற்று புத்திசாலிகள்தான். முந்தைய பகுதியில் போலீஸ்காரர் வேலைக்கு போகும் வழியில் பெண்களை பிடித்து கட்டி வைத்துவிட்டு மாலையில் வந்து வல்லுறவு செய்வதை கூறியிருந்தோம் அல்லவா? இதனை அலிபி என்பார்கள். நான் இந்த கடத்தல், கொலை நடந்த நேரம் இங்கு இருந்தேன் என ஆதாரத்தை அவர்கள் பதிவு செய்துவிட்டால் அவர்களை நாம் சந்தேகப்படமுடியாது.  இப்படிப்பட்டவர்களை சந்தேகப்பட்டாலும் கூட அவர்கள், விசாரணையில் நல்லவர்களாகவே நடிப்பார்கள். உடல்களை மறைத்து வைப்பவர்களையும் காவல்துறையினர் கண்டுபிடித்து குற்றவாளிக் கூண்டில் ஏற்றமுடியாது. நெடுங்காலம் உடல் பதுக்கி வைக்கப்பட்டிருந்தால் அதில் உள்ள தடயங்கள் அழிந

ஸ்ட்ரீமிங் சேவைகளுக்கான சிறந்த ஆப்கள் 2021!

படம்
கிளிப்ஸ் ஆப்பிளில் பயன்படுத்தும் வீடியோ எடிட்டர். இதனைப் பயன்படுத்தி எளிதாக வீடியோக்களை எடுக்கலாம். உங்களை புகைப்படம் எடுத்து, அதன் பின்னணியை ஆக்மெண்ட் ரியாலிட்டி முறையில் கூட மாற்றிக்கொள்ளலாம்.  ஷோமேக்ஸ் படங்களைப் பார்க்கும் சேவை இது. மொபைலா, டிவியா என முடிவு செய்து பணத்தை சந்தா வாக கட்டிக்கொள்ளலாம். ஆண்ட்ராய்ட், ஆப்பிள் என எதிலும் படங்களைப் பார்க்கலாம்.  டேஸ்டி சமையலறையில் பயன்படும் ஆப். இதை வைத்து 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட சமையல் குறிப்புகளை பயன்படுத்தலாம். அதன் வடிவம் எப்படி வரவேண்டும் என்பதைக்கூட இந்த ஆப் கூறுகிறது. ஆண்ட்ராய்ட், ஆப்பிளில் இலவசமாக பயன்படுத்தலாம்.  ஜஸ்ட் வாட்ச் தென் ஆப்பிரிக்காவிலிருந்து வீடியோ சேவைகளை வழங்கும் ஆப். பல்வேறு சேவைகளை ஒருங்கிணைத்து ஒன்றாக வழங்குகிறது. உங்களுக்கு எது தேவையோ அதை பார்க்கலாம். இலவசமான ஆப்தான்.  ரேவ் டிவி தொடர்களைப் பார்ப்பது, பிறகு அதைப்பற்றி விவாதிப்பது என அனைவருக்கும் பிடித்ததுதானே அதைத்தான் இந்த ஆப்பில் செய்யப்போகிறீர்கள். இதனால் உலகத்திற்கு நாம் பார்த்து ரசித்த விஷயங்களை சொல்லலாம் என நினைத்தவர்கள் ஏமாற மாட்டார்கள்.  லூம்  ஆப்பிளில் மட்

ஸ்மார்ட் வாட்சுகளுடன் இணையும் ஆப்கள் 2021

படம்
  இன்ஃபினிட்டி லூப் ஸ்மார்ட் வாட்ச்ச்சில் இந்த விளையாட்டை இணைத்து விளையாடலாம்.. பொழுதுபோகாமல், மீட்டிங்கில் சோர்வாகி உட்கார்ந்திருக்கும்போது கூட விளையாட்டை விளையாடலாம்.  பிஎஃப்டி இதில் வாட்சின் வடிவத்தை விதம் விதமாக மாற்றி அமைத்துக்கொள்ளலாம். பார்க்கவும் அழகாக இருக்கிறது. நேரம் தொடர்பான பல்வேறு மாறுதல்களை ஆப் அனுமதிகிறது.  சாம்சங் பே காசை பிறருக்கு அனுப்பும் வசதி,  அனைத்து போன்களிலும் உள்ளது. சாம்சங்கும் தொடங்கியுள்ளது. இதில் சொல்ல என்ன இருக்கிறது? பிபி லாஸ்ட் போன் அலர்ட் ஐபோனை எங்கோ வைத்துவிட்டீர்கள். அதனை எப்படி பெறுவது என தெரியவில்லை. இந்த ஆப் இருந்தால் குரல்வழிச்செய்தி, அலாரம் ஒலிக்கச்செய்து போனைப் பெறலாம். வீட்டிலுள்ள வை ஃபையில் போனை இணைக்கவேண்டுஃ. லைஃப்சம் உணவு, அதன் கலோரி பற்றி கவலைப்பட்டு தொப்பையை தட்டிக்கொண்டிருக்கும் நபர் என்றால் உங்களுக்காகவே இந்த ஆப். பயன்படுத்தி கலோரியை அளவிட்டு ஆரோக்கியம் காக்கலாம். 

வன்முறையைக் கொண்டாடும் தீவிரவாத இயக்கங்கள்

படம்
  தாலிபன் ஆப்கானிஸ்தானை ஆளுகின்ற தீவிரவாதக் குழு. மதநம்பிக்கைப்படி ஆட்சி நடத்துபவர்கள். இவர்களுக்கு எதிராக இருந்த பஞ்ஷிர் பகுதியையும் நவீன ஆயுதங்களோடு, ராணுவப் பயிற்சியோடு கையகப்படுத்திவிட்டனர்.  இவர்களை ஊக்குவிப்பது பாகிஸ்தான் நாடு. தாலிபன் அமைப்பைச் சேர்ந்த தலைவர்களை பாகிஸ்தானின் க்வெட்டா நகரில் சுலபமாக சந்திக்கலாம்.  ஹபிபுல்லா அகுந்த்ஸாடா, மொகமது ஹசன் அகுந்த், அப்துல் கானி பாரதர் ஆகியோர் தாலிபன் அமைப்பின் முக்கியமான தலைவர்கள்.  ஹக்கானி குழு பாகிஸ்தானின் ஐஎஸ்ஐ ஆதரவு பெற்ற குழு. இப்போது தாலிபனில் முக்கியமான அங்கம்.  தாலிபன், அல்கொய்தா ஆகிய இரு தீவிரவாத இயக்கங்களையும் இக்குழு ஒருங்கிணைக்கிறது.  இதனை தொடங்கியவர் ஜலாலுதீன் ஹக்கானி. அவரின் மகன் சிராஜூதீன் இக்குழுவின் முக்கியமான தலைவர். புதிய தாலிபன் அரசில் இவரும் முக்கியமான அங்கம். அதாவது அமைச்சராக பதவி ஏற்றிருக்கிறார்.  வடக்கு கூட்டணி தாலிபன்களுக்கு சிம்ம சொப்பனமாக விளங்கும் கூட்டணி. பஸ்துன் இஸ்லாமிய கூட்டணி. எப்போதும் தாலிபன்களுக்கு எதிராகவே செயல்படுவார்கள். பஞ்சிர் பள்ளத்தாக்கிலிருந்து தாலிபன்களை எதிர்க்கிறார்கள். இவர்களை தாக்கி பகுதிய

வர்த்தக மையத் தாக்குதலை மையமாக கொண்ட திரைப்படங்கள்!

படம்
  யுனைடெட் 93 தீவிரவாதிகள் கடத்திய நான்காவது விமானத்தில் பயணித்த பயணிகள் பற்றியது. ஏறத்தாழ அவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் விதமான படம். இந்த விமானத்தையும் ஏதாவது கட்டிடத்தில் செலுத்தி வெடிக்க வைப்பதுதான் திட்டம். ஆனால் அதனை மக்கள் நெஞ்சுரத்தோடு போராடி முறியடித்தனர். பால் கிரீன்கிராஸ் என்பவரின் படம் இது.  வேர்ல்ட் டிரேட் சென்டர் அமெரிக்க தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களை மீட்கும் இரு வீரர்களைப் பற்றிய கதை இது. ஆலிவர் ஸ்டோன் படத்தை இயக்கியிருந்தார்.  ஜீரோ டார்க் தேர்டி அல்கொய்தா தலைவர் பின்லேடனை வேட்டையாடிய சம்பவத்தை தழுவிய படம் இது. 2012ஆம் ஆண்டு கேத்தரின் பிக்யிலோ எடுத்த திரைப்படம்.